02-09-2005, 07:13 AM
<b>ICC உலக11 அணிக்கு எதிரான சூப்பர் தொடரில் விளையாட ஆஸி. தகுதி</b>!
ஐசிசி சூப்பர் தொடரில்' விளையாடும் வாய்ப்பை உறுதி செய்து கொண்டுள்ளது உலக சாம்பியன் ஆஸ்திரேலியா.
வரும் ஏப்ரல் 1-ம் தேதிக்குள் நடைபெறும் போட்டிகளின் அடிப்படையில் உலகில் தலைசிறந்து விளங்கும் அணிக்கும், ஐசிசி உலக லெவன் அணிக்கும் இடையே "ஐசிசி சூப்பர் தொடர்' ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.
3 ஒருதின ஆட்டங்களும் ஒரு டெஸ்ட் போட்டியும் அதில் அடங்கும். அதில் விளையாடப்போகும் பெருமை எந்த நாட்டு அணிக்கு என்ற ஆவல் ரசிகர்களிடம் மோலோங்கியிருந்தது.
தற்போது அந்த வாய்ப்பை ஆஸ்திரேலியா அணி உறுதிசெய்து கொண்டுள்ளதாக ஐசிசி செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான சமீபத்திய ஒருதினத் தொடரை 2-0 என வென்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணி சூப்பர் தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத் தொடர் வெற்றியால் கிடைத்த புள்ளிகளையும் சேர்த்து மொத்தம் 137 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலியா. தரநிலைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 17 புள்ளிகள் குறைவாக இரண்டாம் இடத்தில் உள்ளது நியூஸிலாந்து.
இதற்கிடையே நியூஸிலாந்தில் வரும் பிப்ரவரியில் நடைபெறும் ஒருதினத் தொடரில் 5 ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்துவிட்டாலும், நியூஸிலாந்து அணியால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைக் கைப்பற்ற முடியாது என்ற விவரமும் உறுதியாகியுள்ளது.
அதாவது, நியூஸிலாந்து 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுவிட்டாலும் 129 புள்ளிகளையே சேர்த்திருக்கும். அதே சமயம் ஆஸ்திரேலியா ஒருபுள்ளி கூடுதலாகப் பெற்றிருக்கும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் போட்டி: அதேசமயம், ஐசிசி உலக லெவன் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியே விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது.
ஒருதினத் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் அந்த அணி கைப்பற்றியதே காரணம்.
ஐசிசி சூப்பர் தொடரில்' விளையாடும் வாய்ப்பை உறுதி செய்து கொண்டுள்ளது உலக சாம்பியன் ஆஸ்திரேலியா.
வரும் ஏப்ரல் 1-ம் தேதிக்குள் நடைபெறும் போட்டிகளின் அடிப்படையில் உலகில் தலைசிறந்து விளங்கும் அணிக்கும், ஐசிசி உலக லெவன் அணிக்கும் இடையே "ஐசிசி சூப்பர் தொடர்' ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.
3 ஒருதின ஆட்டங்களும் ஒரு டெஸ்ட் போட்டியும் அதில் அடங்கும். அதில் விளையாடப்போகும் பெருமை எந்த நாட்டு அணிக்கு என்ற ஆவல் ரசிகர்களிடம் மோலோங்கியிருந்தது.
தற்போது அந்த வாய்ப்பை ஆஸ்திரேலியா அணி உறுதிசெய்து கொண்டுள்ளதாக ஐசிசி செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான சமீபத்திய ஒருதினத் தொடரை 2-0 என வென்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணி சூப்பர் தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத் தொடர் வெற்றியால் கிடைத்த புள்ளிகளையும் சேர்த்து மொத்தம் 137 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலியா. தரநிலைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 17 புள்ளிகள் குறைவாக இரண்டாம் இடத்தில் உள்ளது நியூஸிலாந்து.
இதற்கிடையே நியூஸிலாந்தில் வரும் பிப்ரவரியில் நடைபெறும் ஒருதினத் தொடரில் 5 ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்துவிட்டாலும், நியூஸிலாந்து அணியால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைக் கைப்பற்ற முடியாது என்ற விவரமும் உறுதியாகியுள்ளது.
அதாவது, நியூஸிலாந்து 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுவிட்டாலும் 129 புள்ளிகளையே சேர்த்திருக்கும். அதே சமயம் ஆஸ்திரேலியா ஒருபுள்ளி கூடுதலாகப் பெற்றிருக்கும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் போட்டி: அதேசமயம், ஐசிசி உலக லெவன் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியே விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது.
ஒருதினத் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் அந்த அணி கைப்பற்றியதே காரணம்.

