02-08-2005, 04:28 PM
போராளிகளின் உடலங்களை ஒப்படைப்பதில்
சீறிலங்காப் படையினர் திட்டமிட்டு இழுத்தடிப்பு
பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்டு பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் லெப்டினட் கேணல் இ.கௌசல்யன் மற்றும் 4 போராளிகள் உட்பட்ட ஐவரின் பிரேத பரிசோதனைகளை மட்டக்களப்பு வைத்தியசாலையில் நடத்துமாறு பொலன்னறுவை மாவட்ட நீதிபதி திருமதி சிவபாதசுந்தரம் இன்று மாலை உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து இந்த உடலங்கள் தற்போது பொலன்னறுவை வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் வழித்துணையுடன் இராணுவ பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த உடலங்கள் மீதான பிரேத பரிசோதனை பொலன்னறுவை வைத்தியசாலையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் பதில் சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனை நடத்த முடியாது என இறுதி நேரத்தில் அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது சிறீலங்கா பொலிசாரின் திட்டமிட்டு இழுத்தடிக்கும் செயல் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த முடிவு அறிவிக்கப்பட்டிருந்தால் பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரனைகளில் இத்தகைய தாமதங்கள் ஏற்பட்டிருக்க மாட்டாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு நகர அரசியல் துறைப் பொறுப்பாளர் விதிமாறன் மற்றும் உயிரிழந்த போராளிகளின் உறவினர்கள் ஆகியோர் கண்காணிப்புக் குழுவினரின் உதவியுடன் வைத்தியசாலைக்குச் சென்று உடலங்களை அடையாளம் காட்டினார்கள்.
இலங்கை நேரப்படி மாலை 5.30ற்கு இந்த உடலங்கள் அங்கிருந்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
எமது செய்தியாளரின் தகவலின் படி இரவு 7.00 மணிக்கும் 7.30ற்குமிடையில் இவை வந்து சேரும் என்றும்ää அதன்பின்பு மரண விசாரனைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று காலை மரணமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகத்தின் உடலம் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இன்றிரவு மரண விசாரணையின் பின்பு அவரது சொந்த இடமான திருக்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படவிருக்கின்றது.
இந்த சம்பவத்தின்போது காயமடைந்த விடுதலைப் புலிப் போராளி வினோதன்ää முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மெய்க் காப்பாளர்களான 2 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் குறிப்பிட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்களில் ஒருவர் இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள தகவலின் படிää நான்கு முதல் ஐந்து பேர் வரை தமது வாகனத்தை வழிமறித்து துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக தெரிவித்தார்.
இருப்பினும் இது தொடர்பாக வெளியாகியுள்ள மற்றொரு தகவலொன்றின் படி இவர்களது வாகனத்தை மற்றுமொரு வாகனத்தில் பின்தொடர்ந்த கொலையாளிகள் முன்னால் சென்று வழிமறித்து துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும்ää
இந்த நபர்கள் இராணுவச் சீருடை போன்று உடையணிந்திருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
Puthinam
சீறிலங்காப் படையினர் திட்டமிட்டு இழுத்தடிப்பு
பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்டு பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் லெப்டினட் கேணல் இ.கௌசல்யன் மற்றும் 4 போராளிகள் உட்பட்ட ஐவரின் பிரேத பரிசோதனைகளை மட்டக்களப்பு வைத்தியசாலையில் நடத்துமாறு பொலன்னறுவை மாவட்ட நீதிபதி திருமதி சிவபாதசுந்தரம் இன்று மாலை உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து இந்த உடலங்கள் தற்போது பொலன்னறுவை வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் வழித்துணையுடன் இராணுவ பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த உடலங்கள் மீதான பிரேத பரிசோதனை பொலன்னறுவை வைத்தியசாலையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் பதில் சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனை நடத்த முடியாது என இறுதி நேரத்தில் அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது சிறீலங்கா பொலிசாரின் திட்டமிட்டு இழுத்தடிக்கும் செயல் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த முடிவு அறிவிக்கப்பட்டிருந்தால் பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரனைகளில் இத்தகைய தாமதங்கள் ஏற்பட்டிருக்க மாட்டாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு நகர அரசியல் துறைப் பொறுப்பாளர் விதிமாறன் மற்றும் உயிரிழந்த போராளிகளின் உறவினர்கள் ஆகியோர் கண்காணிப்புக் குழுவினரின் உதவியுடன் வைத்தியசாலைக்குச் சென்று உடலங்களை அடையாளம் காட்டினார்கள்.
இலங்கை நேரப்படி மாலை 5.30ற்கு இந்த உடலங்கள் அங்கிருந்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
எமது செய்தியாளரின் தகவலின் படி இரவு 7.00 மணிக்கும் 7.30ற்குமிடையில் இவை வந்து சேரும் என்றும்ää அதன்பின்பு மரண விசாரனைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று காலை மரணமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகத்தின் உடலம் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இன்றிரவு மரண விசாரணையின் பின்பு அவரது சொந்த இடமான திருக்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படவிருக்கின்றது.
இந்த சம்பவத்தின்போது காயமடைந்த விடுதலைப் புலிப் போராளி வினோதன்ää முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மெய்க் காப்பாளர்களான 2 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் குறிப்பிட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்களில் ஒருவர் இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள தகவலின் படிää நான்கு முதல் ஐந்து பேர் வரை தமது வாகனத்தை வழிமறித்து துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக தெரிவித்தார்.
இருப்பினும் இது தொடர்பாக வெளியாகியுள்ள மற்றொரு தகவலொன்றின் படி இவர்களது வாகனத்தை மற்றுமொரு வாகனத்தில் பின்தொடர்ந்த கொலையாளிகள் முன்னால் சென்று வழிமறித்து துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும்ää
இந்த நபர்கள் இராணுவச் சீருடை போன்று உடையணிந்திருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

