02-08-2005, 04:23 PM
லெப். கேணல் கௌசல்யன் உட்பட்ட போராளிகளின் வித்துடல்கள்
கொக்கட்டிச்சோலையில் மக்கள் வணக்கத்துக்காக வைக்கப்படும்
பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை நாமல்கம பிள்ளையாரடியில் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் போராளிகள் நால்வர் உட்பட ஜவரின் மரண விசாரணைகள் இன்று நண்பகல் நடைபெறவிருக்கின்றது.
தற்போது பொலன்னறுவை வைத்தியசாலையில் இவர்களின் உடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.
விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் இ.கௌசல்யன் எனப்படும் இளையதம்பி லிங்கராஜாää மேஜர் புகழன்ää மேஜர் செந்தமிழ்ää 2ம் லெப். விதிமாறன் ஆகியோருடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பனர் சந்திரநேரு அரியநாயகத்தின் சாரதி கே.விநாயகமூர்த்தி ஆகியோரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகம் மற்றும் அவரது மெய்காப்பாளர்களான 2 பொலிஸ் கான்ஸ்டபிளும்ää போராளியான வினோதனும் இச்சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் காயங்களுக்குள்ளாகி பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சத்திர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்ட சந்திரநேரு அரியநாயகம் தற்போது உடல் நிலை தேறி வருகின்றார்.
ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இராணுவ கட்டுப்பாட்டிற்குட்பட்ட பிரதேசத்தில் அதுவும் பிரதான நெடுஞ்சாலையொன்றில் இடம்பெற்ற இந்த சம்பவத்திற்கு கருணா குழுவினரே பொறுப்பு என படைத்தரப்பு சந்தேகம் தெரிவிக்கின்றது.
இருப்பினும் இச்சம்பவமானது இராணுவத்தினரின் ஒத்துழைப்பின்றி நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை என குற்றம் சுமத்தும் தமிழ்க் கட்சிகள் இதற்கான முழுப்பொறுப்பையும் சிறீலங்கா அரசாங்கம் தான் எற்க வேண்டும்.
இவர்களின் இந்த பயணம் பற்றி இராணுவ புலனாய்வு அறிந்து தகவல் வழங்கியிருக்கின்றது என்றும் தமிழ்க் கட்சிகள் மத்தியில் சந்தேகங்களும் நிலவுகின்றன.
உயிரிழந்தவர்களின் உடலங்கள் இன்று பிற்பகல் மட்டக்களப்பிற்கு எடுத்து வரப்படவுள்ளது.
விடுதலைப் புலிப் போராளிகளின் வித்துடல்கள் நேரடியாக கொக்கட்டிச்சோலையிலுள்ள மாவட்ட செயலகத்திற்கு கொண்டு செல்லப்படும்.
போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரின் பாதுகாப்புடன் வித்துடல்களை எடுத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொன்டுள்ளனர்.
லெப். கேணல் கௌசல்யன் விடுதலைப்புலிகளின் நீண்டகால உறுப்பினர்களில் ஒருவர்.
கடந்த ஒரு வார காலமாக வன்னியில் தங்கியிருந்து ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் மீள்கட்டுமாணப் பணிகளை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்களில் கலந்து கொண்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Puthinam
கொக்கட்டிச்சோலையில் மக்கள் வணக்கத்துக்காக வைக்கப்படும்
பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை நாமல்கம பிள்ளையாரடியில் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் போராளிகள் நால்வர் உட்பட ஜவரின் மரண விசாரணைகள் இன்று நண்பகல் நடைபெறவிருக்கின்றது.
தற்போது பொலன்னறுவை வைத்தியசாலையில் இவர்களின் உடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.
விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் இ.கௌசல்யன் எனப்படும் இளையதம்பி லிங்கராஜாää மேஜர் புகழன்ää மேஜர் செந்தமிழ்ää 2ம் லெப். விதிமாறன் ஆகியோருடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பனர் சந்திரநேரு அரியநாயகத்தின் சாரதி கே.விநாயகமூர்த்தி ஆகியோரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகம் மற்றும் அவரது மெய்காப்பாளர்களான 2 பொலிஸ் கான்ஸ்டபிளும்ää போராளியான வினோதனும் இச்சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் காயங்களுக்குள்ளாகி பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சத்திர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்ட சந்திரநேரு அரியநாயகம் தற்போது உடல் நிலை தேறி வருகின்றார்.
ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இராணுவ கட்டுப்பாட்டிற்குட்பட்ட பிரதேசத்தில் அதுவும் பிரதான நெடுஞ்சாலையொன்றில் இடம்பெற்ற இந்த சம்பவத்திற்கு கருணா குழுவினரே பொறுப்பு என படைத்தரப்பு சந்தேகம் தெரிவிக்கின்றது.
இருப்பினும் இச்சம்பவமானது இராணுவத்தினரின் ஒத்துழைப்பின்றி நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை என குற்றம் சுமத்தும் தமிழ்க் கட்சிகள் இதற்கான முழுப்பொறுப்பையும் சிறீலங்கா அரசாங்கம் தான் எற்க வேண்டும்.
இவர்களின் இந்த பயணம் பற்றி இராணுவ புலனாய்வு அறிந்து தகவல் வழங்கியிருக்கின்றது என்றும் தமிழ்க் கட்சிகள் மத்தியில் சந்தேகங்களும் நிலவுகின்றன.
உயிரிழந்தவர்களின் உடலங்கள் இன்று பிற்பகல் மட்டக்களப்பிற்கு எடுத்து வரப்படவுள்ளது.
விடுதலைப் புலிப் போராளிகளின் வித்துடல்கள் நேரடியாக கொக்கட்டிச்சோலையிலுள்ள மாவட்ட செயலகத்திற்கு கொண்டு செல்லப்படும்.
போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரின் பாதுகாப்புடன் வித்துடல்களை எடுத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொன்டுள்ளனர்.
லெப். கேணல் கௌசல்யன் விடுதலைப்புலிகளின் நீண்டகால உறுப்பினர்களில் ஒருவர்.
கடந்த ஒரு வார காலமாக வன்னியில் தங்கியிருந்து ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் மீள்கட்டுமாணப் பணிகளை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்களில் கலந்து கொண்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

