02-07-2005, 03:54 PM
<span style='font-size:25pt;line-height:100%'>சிங்கள நாளேடுகளில் வெளிவந்த செய்தி .........</span>
ஹெலிகொப்டரைப் பாரமெடுக்க இருந்தவர் பூசகர்
கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுவதற்கென வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரண உதவிப் பொருட்களுடன் சட்டவிரோதமாக இந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டிருந்த இரண்டு ஹெலிகொப்டர்களில் ஒன்றைப் பாரமெடுக்கவிருந்த அரசு சார்பற்ற நிறுவனமொன்றின் பணிப்பாளர், யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பூசகர் என்பது மேற்படி ஹெலிகொப்டரைப் பொறுப்பெடுக்கக் கொடுக்கப்பட்ட விபரங்களிலிருந்தும், விசாரணைகளிலிருந்தும் தெரியவந்திருப்பதாக இரகசிய பொலிஸ் தரப்பினர் கூறியுள்ளனர்.
இதற்கேற்ப, மேற்படி ஹெலிகொப்டர் பற்றிய விடயத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் ஏதேனும், தொடர்புள்ளதா என்ற விபரங்களை அறிந்துக் கொள்வதற்காக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக சிரேஷ்ட இரகசியப் பொலிஸ் பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் "லங்காதீப"வுக்கு கூறினார்.
மேற்படி சர்ச்சைக்குரிய அரசு சார்பற்ற நிறுவனத்தின் தலைமை அலுவலகம் தெஹிவளை பிரதேசத்தில் அமைந்துள்ளது. கடல்கோள் நிவாரணப் பொருட்களுடன் கொண்டுவரப்பட்ட "பெல்" ரக ஹெலிகொப்டரைப் பொறுப்பெடுக்க குறித்த நிறுவனமே நியமிக்கப்பட்டிருந்தது.
அந்த அரசு சார்பற்ற நிறுவனத்தின் பணிப்பாளராகிய பூசகர் தற்போது யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியிலேயே வசித்து வருவதாகவும், இரகசிய பொலிஸ் அதிகாரிகளால் முன் அறிவிப்புக் கொடுக்கப்பட்டு கடந்த 2 ஆம் திகதி பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று அங்கு சென்று குறித்த அப்பூசகரிடம் விசாரணைகளை மேற்கொண்டு அவருடைய வாக்குமூலங்களைப் பதிவுசெய்து கொண்டதாகவும் தெரியவருகிறது. அத்துடன், மேலதிக விசாரணைகளுக்காக அவரைக் கொழும்புக்கு கூட்டிவந்துள்ளதாகவும் இரகசிய பொலிஸ் தரப்பு செய்திகள் கூறுகின்றன.
குறித்த ஹெலிகொப்டரை இந்நாட்டுக்கு கொண்டுவந்தவர்கள் அது சட்டவிரோதமானது என்று அறியாமலிருக்க இடமில்லையென்றும், குறித்த அரசு சார்பற்ற நிறுவனத்தின் அங்கத்தவர்கள் இந்நாட்டவர்களே என்பதால் ஹெலிகொப்டர்களை இறக்குமதி செய்வதற்குக் கடைப்பிடிக்கவேண்டிய சட்டபூர்வ முறைகளை அறிந்துகொள்ளாமலிருக்க நியாயமில்லையென்றும், அதனால், இது சந்தேகத்துக்குரிய செயற்பாடே என்றும் இரகசிய பொலிஸ் தரப்பு சுட்டிக் காட்டியுள்ளது.
இதுபற்றி வேறும் சில அரசு சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த நபர்களிடமும் இரகசிய பொலிஸ் தரப்பு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கடல்கோள் நிவாரணப் பொருட்களுடன் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து இந்த நாட்டுக்குச் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட இரண்டாவது ஹெலிகொப்டர் பற்றியும் விசாரணைகளை இரகசிய பொலிஸ் தரப்பு ஆரம்பித்துள்ளது. இந்த ஹெலிகொப்டரைப் பாரமெடுக்க நியமிக்கப்பட்டிருந்தவர் அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவரென்றும், இது பற்றியும் வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்தரப்பு கூறியுள்ளது.
மேற்படி இரண்டு ஹெலிகொப்டர்களும் தற்போது பாதுகாப்பு அமைச்சுப் பிரிவின் பொறுப்பிலுள்ளன. இதுபற்றி இரகசிய பொலிஸ் தரப்பினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-லங்காதீப 4/2/2005-
ஹெலிகொப்டரைப் பாரமெடுக்க இருந்தவர் பூசகர்
கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுவதற்கென வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரண உதவிப் பொருட்களுடன் சட்டவிரோதமாக இந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டிருந்த இரண்டு ஹெலிகொப்டர்களில் ஒன்றைப் பாரமெடுக்கவிருந்த அரசு சார்பற்ற நிறுவனமொன்றின் பணிப்பாளர், யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பூசகர் என்பது மேற்படி ஹெலிகொப்டரைப் பொறுப்பெடுக்கக் கொடுக்கப்பட்ட விபரங்களிலிருந்தும், விசாரணைகளிலிருந்தும் தெரியவந்திருப்பதாக இரகசிய பொலிஸ் தரப்பினர் கூறியுள்ளனர்.
இதற்கேற்ப, மேற்படி ஹெலிகொப்டர் பற்றிய விடயத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் ஏதேனும், தொடர்புள்ளதா என்ற விபரங்களை அறிந்துக் கொள்வதற்காக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக சிரேஷ்ட இரகசியப் பொலிஸ் பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் "லங்காதீப"வுக்கு கூறினார்.
மேற்படி சர்ச்சைக்குரிய அரசு சார்பற்ற நிறுவனத்தின் தலைமை அலுவலகம் தெஹிவளை பிரதேசத்தில் அமைந்துள்ளது. கடல்கோள் நிவாரணப் பொருட்களுடன் கொண்டுவரப்பட்ட "பெல்" ரக ஹெலிகொப்டரைப் பொறுப்பெடுக்க குறித்த நிறுவனமே நியமிக்கப்பட்டிருந்தது.
அந்த அரசு சார்பற்ற நிறுவனத்தின் பணிப்பாளராகிய பூசகர் தற்போது யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியிலேயே வசித்து வருவதாகவும், இரகசிய பொலிஸ் அதிகாரிகளால் முன் அறிவிப்புக் கொடுக்கப்பட்டு கடந்த 2 ஆம் திகதி பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று அங்கு சென்று குறித்த அப்பூசகரிடம் விசாரணைகளை மேற்கொண்டு அவருடைய வாக்குமூலங்களைப் பதிவுசெய்து கொண்டதாகவும் தெரியவருகிறது. அத்துடன், மேலதிக விசாரணைகளுக்காக அவரைக் கொழும்புக்கு கூட்டிவந்துள்ளதாகவும் இரகசிய பொலிஸ் தரப்பு செய்திகள் கூறுகின்றன.
குறித்த ஹெலிகொப்டரை இந்நாட்டுக்கு கொண்டுவந்தவர்கள் அது சட்டவிரோதமானது என்று அறியாமலிருக்க இடமில்லையென்றும், குறித்த அரசு சார்பற்ற நிறுவனத்தின் அங்கத்தவர்கள் இந்நாட்டவர்களே என்பதால் ஹெலிகொப்டர்களை இறக்குமதி செய்வதற்குக் கடைப்பிடிக்கவேண்டிய சட்டபூர்வ முறைகளை அறிந்துகொள்ளாமலிருக்க நியாயமில்லையென்றும், அதனால், இது சந்தேகத்துக்குரிய செயற்பாடே என்றும் இரகசிய பொலிஸ் தரப்பு சுட்டிக் காட்டியுள்ளது.
இதுபற்றி வேறும் சில அரசு சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த நபர்களிடமும் இரகசிய பொலிஸ் தரப்பு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கடல்கோள் நிவாரணப் பொருட்களுடன் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து இந்த நாட்டுக்குச் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட இரண்டாவது ஹெலிகொப்டர் பற்றியும் விசாரணைகளை இரகசிய பொலிஸ் தரப்பு ஆரம்பித்துள்ளது. இந்த ஹெலிகொப்டரைப் பாரமெடுக்க நியமிக்கப்பட்டிருந்தவர் அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவரென்றும், இது பற்றியும் வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்தரப்பு கூறியுள்ளது.
மேற்படி இரண்டு ஹெலிகொப்டர்களும் தற்போது பாதுகாப்பு அமைச்சுப் பிரிவின் பொறுப்பிலுள்ளன. இதுபற்றி இரகசிய பொலிஸ் தரப்பினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-லங்காதீப 4/2/2005-
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

