Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலத்தில் தமிழ் சந்ததி
#10
tamilini Wrote:ம் இந்தக்கதையை சு}ரியனில் வாசித்தன் அக்கா அப்ப தில்லை நாயகி நீங்களா..? நல்ல வித்தியாசமான கதை ஒன்று.. அவசியமான ஒரு நல்ல கரு.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

:roll:

இந்தக்கதையில வித்தியாசமாக ஒன்றுமில்ல. இதுதான் எமது சனத்தின் வெளினாட்டு மோகம். பெத்த தாயையும் தாய் மொழியையும் மறப்பவர்கள் அல்லது தெரியாதவர்களை எப்படி ஒரு இனமாக அடையாளப்படுத்துவதென்பதுதான் இங்கு சிலரிடையே நடக்கும் விவாதம்.
எனக்கும் தெரிஞ்சு ஒருவரின் மகன் ஆங்கிலத்தில படித்து (தமிழ் என்டால் என்னன்டு கேட்பார்கள்)டொக்டராகி வெளியிலவந்து எங்கேயோ இன்ரவியூவிற்கு போனவராம். எல்லாம் முடிஞ்சு கடைசியில நீங்கள் எந்த நாடு என்டு கேட்க இவரும் தான் இலங்கைத்தமிழன் என்டாராம் அப்ப அவங்கள் கேட்டாங்களாம் நீங்களும் தமிழ்ப் புலியோ என்டு(சும்மா பகிடிக்கு) இவர் உடனே சொன்னாராம் எனக்கு அவங்களைப்பற்றி தெரியாதென்டு. பின்பு தனக்கு தாய் மொழியும் தெரியாதென்றும் சொன்னாராம். அவர்களும் இவரைப்பார்த்துவிட்டு ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு போகச்ச்சொன்னார்களாம்.ஆனால் இவருக்கு அது அவங்கட நக்கல் என்டது நல்லா விளங்கிட்டுது. இப்படியான கேசுகள் ஆயிரக்கணக்கில் கிடக்குது. ஆனால் என்னைப்பொறுத்தவரை இதில் தாய் தகப்பனைத்தவிர வேறு யாரையும் குறை கூற முடியாது(சில கேசுகளைத்தவிர).

நான் ஜெர்மனியில் ஒரு சிறுமியிடம் பேசும்போது தனக்கு தமிழ் தெரியாதென்டு விலாசமாச் சொன்னா(இவ்வளவிற்கும் ஒரு சிறுமி) பிறகு அச்சிறுமியின் தாயிடம் பேசும்போது அவர் சொன்னார் தன்ர பிள்ளை நல்லாத்தமிழ் பேசுவா என்டு. உன்மையில் அச் சிறுமி நல்லாத்தமிழி ல் பிறகு பேசினாள். இதற்கெல்லாம் காரணத்தை என்னென்டு சொல்லுறது.

சில பெற்றோர் தங்கட பிள்ளைகளுக்கு தமிழ் தெரியக்கூடாதென்பதில குறியா இருப்பார்கள். இதில் வருத்தப்படவேண்டியதென்னென்றால் அப்பெற்றொரும் ஒழுங்காக ஆங்கிலம் பேசமாட்டார்கள் (தயவு செய்து இதைப்பார்ப்பவர்கள் என்னை தப்பாக என்ன வேண்டாம் நான் யாரையும் தாக்குவதற்காக இதை எழுதவில்லை எனெனில் நானும் அரைகுறைதான்).இப்படியான கேசுகள கோயில்களில் அடிக்கடி காணக்கூடியதாகவிருக்கும். இப்படி பிள்ளைகளை வளர்ப்பதால் தாங்களும் தங்களை ஏமாற்றி தங்கட பிள்ளைகளையும் எமாற்றுகிறார்கள் என்பதை அறியாமலேயே காலத்தை முடித்துவிடுகிறார்கள்.
Reply


Messages In This Thread
[No subject] - by shiyam - 02-05-2005, 04:27 AM
[No subject] - by Mathuran - 02-05-2005, 07:35 AM
[No subject] - by Mathan - 02-05-2005, 12:40 PM
[No subject] - by vasanthan - 02-05-2005, 04:19 PM
[No subject] - by shanmuhi - 02-06-2005, 09:40 PM
[No subject] - by tamilini - 02-06-2005, 09:44 PM
[No subject] - by shanmuhi - 02-06-2005, 09:47 PM
[No subject] - by Niththila - 02-06-2005, 11:26 PM
[No subject] - by paandiyan - 02-07-2005, 06:32 AM
[No subject] - by Mathan - 02-07-2005, 06:29 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)