02-06-2005, 09:19 AM
Vaanampaadi Wrote:இதயநோயை தொலைவிலிருந்து ரிமோட் மூலம் இயக்கி குணப்படுத்தும் கருவியினை அமெரிக்காவில் கண்டறிந்துள்ளனர்.
ஆட்ரியல் பைப்ரிலேஷன் எனப்படும் இதய நோய் உள்ளவர்கள் இதயம் திடீரென்று தாறுமாறhக துடிக்க ஆரம்பிக்கும். இதனால் ரத்த அழுத்தம் ;அதிகமாகி பக்கவாதம் ஏற்படும். மாரடைப்பு வந்து உயிர் போவதற்கும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய நிலையில் மருத்துவ மனைக்கு வரும் நோயாளிக்கு மின்சார ஷாக் கொடுத்து சிகிச்சை செய்யப்படும். அந்தச் சமயத்தில் நோயாளிக்கு பயங்கர வலி ஏற்படும். மேலும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுவராவிடில் உயிர் பிழைப்பது கடினம். அமெரிக்காவில் உள்ள வடகரோலினா மாநிலத்தில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் இந்த நோய்க்கு புதிய வகை எலக்ட்ரானிக் கருவி கண்டுபிடித்துள்ளார்கள். பேஸ் மேக்கர் போல் இந்த கருவியை இதயத்தில் பொருத்திக் கொள்ள வேண்டும். இந்தக் கருவிபொருத்தப்பட்ட நோயாளியின் இதயம் தாறுமாறhக துடிக்க ஆரம்பிப்பதற்கு முன் குறிப்பிட்ட சிக்னல்களை இந்தக் கருவி வெளியே அனுப்பும். சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் இதனை கண்காணித்து வரும் டாக்டர்கள் அங்கிருந்த படியே ரிமோட் மூலம் சிறிய அளவு மின்சார ஷாக்கை இதயத்தில் பொருத்தப்பட்ட கருவி மூலம் பாயச் செய்வார்கள். இதனால் இதயம் சீராக இயங்க ஆரம்பிக்கும். இதய நோயாளிகள் மத்தியில் இந்தக் கருவிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Dinakaran
<b>******************************************************************
வானம்பாடி முன்னரே நீங்கள் வழங்கிய இந்த தகவல் களத்தில் வழங்கப்பட்டிருந்ததால் அந்த தலைப்பு நீக்கப்பட்டுள்லது.
கவிதன்</b>
[b][size=18]

