02-06-2005, 04:09 AM
எதிர்மறையான முடிவுகளைத்தான் சிறீலங்கா அரசு நோர்வே அனுசரணையாளரிடம் தெரிவித்திருக்கிறது -சு.ப.தமிழ்ச்செல்வன்
எங்கள் ஆலோசனைக்கு எதிர்மறையான முடிவுகளைத்தான் தங்கள் கருத்துக்களாக நோர்வே அனுசரணையாளர்களூடாக எமக்குத் தெரியப்படுத்தியுள்ளார்கள் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இன்று சிறீலங்காவிற்கான நோர்வேத் தூதுவரை சந்தித்த பின்னர் ஊடகவியாலளர்களுக்கு வழங்கிய பேட்டியின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த பேட்டியின்போது சு.ப.தமிழ்ச்செல்வன் வழங்கிய பதில்கள் வருமாறு:
கேள்வி:- இன்றைய சந்திப்புத் தொடர்பாக?
பதில்;:- இன்று நோர்வே சிறிலங்காத் தூதுவருடனான சந்திப்பு ஆழிப்பேரலை இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்;ட பேரழிவினால் பாதிக்கப்பட்;ட எமது மக்களின் உடனடி மனிதாபிமான உதவிகள் நிவாரணப்பணிகள் மீள்கட்டுமாணப் பணிகளை முன்னெடுப்பது புலிகளும் சிறீலங்கா அரசம் இணைந்து ஒரு பொதுக்கட்டமைப்பினை நிறுவுவது தொடர்பாக கடந்த காலங்களில் உரையாடப்பட்டு வந்தது.
நோர்வே அனுசரணையாளர்கள் என்ற வகையிலும்䤠அதில் நோர்வேத் தூதுவர்; ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்; என்ற வகையிலும் தீர்மானங்களை எடுப்பதற்கும் நடைமுறைச் சிக்கல் தொடர்பாக இன்று கலந்துரையாடியுள்ளார்.
குறிப்பாக இன்றைய சந்திப்பில் எம்மால் தெளிவுபடுத்தப்பட்ட விடயம் ஆழிப்பேரலை அனர்த்தம் நடந்து ஒரு மாதம் கடந்து விட்டது. எம்மக்களுக்;கான நிவாரண மீள் கட்டுமாணப்பணிகளை முன்னெடுப்பதற்கு சர்வதேச உதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு எவ்வித கட்டமைப்புக்களையும் நிறுவுவதற்கான எவ்விதமான ஆக்கப10ர்வமான நடைமுறைகள் எதுவும் எட்டப்படாது䤠எமது மக்கள் மத்தியில் விரக்தி நிலையையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது என்பதை நோர்வேத் தூதுவருக்கு எடுத்துக்கூறியுள்ளோம்.
விரைவாக சர்வதேச உதவிகள் எமது பகுதிகளுக்கு திருப்ப வேண்டும் என்பதனையும் இதில் வலியுறுத்தியுள்ளோம். எங்களால் கொடுக்கப்பட்ட ஆலோசனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. இந்த வகையில் பொதுக்கட்டமைப்பினை நிறுவுவது எந்தளவு சாத்தியம் என்பது பற்றிக் கூற முடியாதுள்ளது. ஏனெனில் அரசாங்கம் புதிய நிபந்தனைகளை விதித்துக் கொண்டிருப்பதாக தெரிகிறதே தவிர பொதுக்கட்டமைப்பினை நிறுவுவதற்கு மனப்ப10ர்வமாக செயற்படுவதாக தெரியவில்லை.
சர்வதேச உதவிகளை விரைந்து நடைமுறை ஒழுங்குகளுக்கு ஏற்ப எமது மக்களுக்கு பகிர்ந்தளிக்க நேரடியாகக் கிடைக்கக்கூடிய வகைகளை சர்வதேச சமூகம் பரீசிலிக்க வேண்டும் என்பதனையும் இன்றைய சந்திப்பில் வலியுறுத்தியுள்ளோம்.
கேள்வி:- அரசு ஏதாவது புதிய செய்திகள் அனுப்பி வைத்துள்ளதா?
பதில்:- ஏற்கனவே எமது வடக்கு கிழக்கு தாயகப் பிரதேசத்தினுடைய நிவாரணப்பணிகள் மீள்கட்டுமாணப் பணிகள் அபிவிருத்தி நடவடிக்கைகளை குறிப்பாக ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட கரையோரப் பகுதிகளையும் அங்கு வசிக்கும் மக்களுக்கு உதவுவதற்கான ஆலோசனைகளை நோர்வே அனுசரணையாளர்கள் மூலமாக அரசுக்கு அனுப்பியிருந்தோம்.
எங்கள் ஆலோசனைக்கு எதிர்மறையான முடிவுகளைத்தான் தங்கள் கருத்துக்களாக அனுசரணையாளர்களூடாக எமக்குத் தெரியப்படுத்தியுள்ளார்கள். அரசின் முடிவுகள் எமக்கு அதிர்ச்சி தருபவையாக உள்ளது. நடைமுறைச் சாத்தியமற்ற முடிவுகளை அரசு தெரியப்படுத்திக் கொண்டிருப்பது இணக்கப்பாட்டிற்கு வந்து செயற்பாடுகளை மந்தப்படுத்தும் நோக்கோடுதான் அரசு செயற்படுவதாக எம்மால் உணர முடிகின்றது என்பதை இன்றைய சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளோம். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச உதவிகள் ஏனைய வழிமுறைகள் ஊடாகவே வந்து சேரவேண்டும். அதற்கு உரிய வாய்ப்பினை எற்படுத்த வேண்டும் என்பது தான் எமது நிலைப்பாடாக உள்ளது.
கேள்வி:- எந்த வகையில் புலிகளுக்கும் அரசுக்கும் தற்போது முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன?
பதில்:- பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். சர்வதேச உதவிகளை தமிழர் தாயகத்திற்கு கொண்டு வருவதற்கு ஒரு நடுநிலையான சர்வதேச நிறுவனமே உதவிப்பொருட்களை பகிர்ந்தளிக்க பொறுப்பாக இருக்க வேண்டும். வட கிழக்கிற்கான பாதுகாவலனாக நிவாரண மீள்கட்டுமான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஒரு சர்வதேச நிறுவனம் இருக்க வேண்டும் என்பதனை நாம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம். அவ்வாறான ஒரு அமைப்பினூடாகத்தான் சர்வதேச உதவிகள் எமது பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதனை கடந்த கால அனுபவங்களின் அடிப்படையிலும் எம்மால் வலியுறுத்தப்பட்ட விடயம் ஆகும்.
அரசு எமது முடிவுகளை கவனத்தில் எடுத்ததாகத் தெரியவில்லை. மேலும் வட கிழக்கிலே முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமும் சில மாவட்டங்களில் பேணப்பட வேண்டும் என்பதனையும் நாம் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு பல்வேறுபட்ட விடயங்கள் கட்டமைப்பிலே உள்வாங்கப்பட வேண்டிய பிரதிநிதித்துவம் சம்பந்தமாக தமிழர் தாயகத்திற்கான மீள்கட்டுமாண நிவாரணப்பணிகளை மேற்கொள்வதற்கான நிதியத்தின் பாதுகாவலனாக நியமிக்கப்படும் விடயங்களிலும் பல சிக்கல்கள் இருப்பதாகவே எமக்கு தெரிகின்றது.
கேள்வி:- சிரான் அமைப்பு போன்று தான் இவ்வமைப்பிற்கு ஏற்படும் என்று நீங்கள் நம்புகின்றீர்களா?
பதில்:- எங்களைப் பொறுத்த வரையில் இதுவொரு உண்மையிலே இயற்கைப் பேரனர்த்தத்தால் பாரியளவு மனிதாபிமான நெருக்கடியைச் சந்திக்கும். மக்களுக்கு உடனடி மனிதாபிமான புனர்வாழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது அவசியமானது. சிறீலங்காவில் மட்டுமல்ல. தென்னாசியா முழுவதுமே பேரிழப்பினைச் சந்தித்துள்ளது. மனிதாபிமான உதவியை சந்தித்து நிற்கும் சூழலில் இலங்கைத் தீவிலேயும் தமிழர் தாயகம் தான் கூடுதல் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது.
சர்வதேச உதவிகள் எமது பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பது ஒரு மனிதாபிமான தேவையாக உள்ளது. மனிதாபிமானத் தேவைகள் எழுந்து நிற்கும் சூழலில் கடந்த காலத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் போல் தீர்வு காணப்படாமல் போன விடயங்கள்; போல் இந்த மனிதாபிமான உதவிகளையும் இழுத்தடிக்க முடியாது. உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தியுள்ளோம் முடிவுகள் எப்படி போகும் என்பதை எம்மால் கூறமுடியாது. நடமுறையில் அரசாங்கம் ஒத்துழைப்பு தராத நிலைதான் இன்று வரையுள்ளது.
கேள்வி:- அரசு எடுத்திருக்கும் முடிவுகள் தங்களுக்கு நம்பிக்கை இழக்கச் செய்துள்ளதா?
பதில்:- நிச்சயமாக அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதாகவும் தாம் பேசிக்கொண்டிருப்பதாகவும் ஒருதோற்றப்பாட்டை காட்டி வருகிறதே தவிர ஒரு கட்டமைப்பினை நிறுவி விரைந்து மக்களுடைய மனிதாபிமான நெருக்கடிக்கு தீர்வுகாண அரசு முயற்சி எடுப்பதாகத் தெரியவில்லை.
பொய்யான தோற்றப்பாட்டை உருவாக்கி சர்வதேச உதவிகளை கவர்ந்திழுக்கும் ஒரு முயற்சியில் தான் அரசு இறங்கியுள்ளதே தவிர பாதிக்கப்பட்ட மக்கள் உதவிகள் புரிய வேண்டும் என்பதில் அரசு அக்கறை செலுத்தவில்லை. அரசின் போக்கு எமக்கு நம்பிக்கை தருவதாகத் தெரியவில்லை.
கேள்வி:- உதவி வழங்கும் நாடுகளின் நிலைப்பாடு எப்படி உள்ளது.?
பதில்:- சர்வதேச நிறுவனங்கள் முழு அளவிலான அழுத்தத்தைப் பிரயோகித்துக் கொள்கின்றார்கள். இரண்டு தரப்பும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பினை உருவாக்குவதன் ஊடாகவே சரியான வகையில் சர்வதேச உதவிகள் சரியான முறையில் சேர்க்கப்படும் என்பது ஒரு எண்ணப்பாடாகவும் விருப்பமாகவும் உள்ளது.
ஆனால் பொதுக்கட்டமைப்புக்களுக்கான உருவாக்கத்திற்கான சூழல் உருவாக்கப்படவில்லை. இனி சிறீலங்கா அரசினை நம்பிக் கொண்டிருக்க முடியாது என்பதனையும் சர்வதேச சமூகத்திடம் கூறி வருகின்றோம். சர்வதேச உதவிகள் நேரடியாக இங்கு கொண்டு வரக்கூடிய வழிமுறைகளை சர்வதேச சமூகம் கண்டறிய வேண்டும் என்பதனை யதார்த்தத்தின் அடிப்படையில் எம்மால் வலியுறுத்தப்பட்டது.
கேள்வி:- சர்வதேச உதவிகள் நேரடியாக வரக்கூடிய சூழல் உள்ளதா?
பதில்:- சர்வதேச சமூகத்திடம் ஒரு பாரிய பொறுப்பு உள்ளது. ஒரு மனித இனம் பேரிழிவினைச் சந்திக்கும் நிலையில் உதவிகள் செய்ய வேண்டும் என்பது சர்வதேச சமூகத்தின் கடமையும் பொறுப்புமாகும். அந்த வகையில் பேரழிவைச் சந்தித்து நிற்கும் எமது மக்களுக்கு சர்வதேச சமூகம் நேரடியாக உதவிபுரியும் என நம்புகிறோம். அதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகின்றோம்.
கேள்வி:- ஆழிப்பேரலையின் பின்பு சிறுவர்களை புலிகள் இணைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
பதில்:- சிறுவர்களை இணைக்கிறோம் என குற்றம் சாட்டுகிறார்களே தவிர இந்தப் பேரனர்த்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான சிறுவர்களை தமிழீழ விடுதலைப்புலிகள் புனர்வாழ்வுப் பணிகளிளும் மறுவாழ்வுப் பணிகளிளும் ஈடுபடுத்தியுள்ளதை குற்றம் சாட்டுபவர்கள் திரும்பிக்கூடப் பார்க்காதவர்களாக உள்ளனர்.
தற்போது கூட ஆழிப்பேரலையினால் ஆயிரக்கணக்கான சிறார்கள் பெற்றோர்களை இழந்து எந்தவித உதவிகளும் கிடைக்காத நிலையில் பரிதவித்த நிலையி;ல் உள்ளனர். அச்சிறார்களுக்கு ஆக்கப10ர்வ உதவிகள் புரியாமல் விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டுவதிலும் சேறு பூசுவதிலும் பொய்ப்பரப்புரை செய்வதிலும் சில அமைப்புக்கள் ஈடுபட்டுள்ளனர் இது எமக்கு மிகுந்த கவலையைத் தருகிறது என்றார்.
Puthinam
எங்கள் ஆலோசனைக்கு எதிர்மறையான முடிவுகளைத்தான் தங்கள் கருத்துக்களாக நோர்வே அனுசரணையாளர்களூடாக எமக்குத் தெரியப்படுத்தியுள்ளார்கள் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இன்று சிறீலங்காவிற்கான நோர்வேத் தூதுவரை சந்தித்த பின்னர் ஊடகவியாலளர்களுக்கு வழங்கிய பேட்டியின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த பேட்டியின்போது சு.ப.தமிழ்ச்செல்வன் வழங்கிய பதில்கள் வருமாறு:
கேள்வி:- இன்றைய சந்திப்புத் தொடர்பாக?
பதில்;:- இன்று நோர்வே சிறிலங்காத் தூதுவருடனான சந்திப்பு ஆழிப்பேரலை இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்;ட பேரழிவினால் பாதிக்கப்பட்;ட எமது மக்களின் உடனடி மனிதாபிமான உதவிகள் நிவாரணப்பணிகள் மீள்கட்டுமாணப் பணிகளை முன்னெடுப்பது புலிகளும் சிறீலங்கா அரசம் இணைந்து ஒரு பொதுக்கட்டமைப்பினை நிறுவுவது தொடர்பாக கடந்த காலங்களில் உரையாடப்பட்டு வந்தது.
நோர்வே அனுசரணையாளர்கள் என்ற வகையிலும்䤠அதில் நோர்வேத் தூதுவர்; ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்; என்ற வகையிலும் தீர்மானங்களை எடுப்பதற்கும் நடைமுறைச் சிக்கல் தொடர்பாக இன்று கலந்துரையாடியுள்ளார்.
குறிப்பாக இன்றைய சந்திப்பில் எம்மால் தெளிவுபடுத்தப்பட்ட விடயம் ஆழிப்பேரலை அனர்த்தம் நடந்து ஒரு மாதம் கடந்து விட்டது. எம்மக்களுக்;கான நிவாரண மீள் கட்டுமாணப்பணிகளை முன்னெடுப்பதற்கு சர்வதேச உதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு எவ்வித கட்டமைப்புக்களையும் நிறுவுவதற்கான எவ்விதமான ஆக்கப10ர்வமான நடைமுறைகள் எதுவும் எட்டப்படாது䤠எமது மக்கள் மத்தியில் விரக்தி நிலையையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது என்பதை நோர்வேத் தூதுவருக்கு எடுத்துக்கூறியுள்ளோம்.
விரைவாக சர்வதேச உதவிகள் எமது பகுதிகளுக்கு திருப்ப வேண்டும் என்பதனையும் இதில் வலியுறுத்தியுள்ளோம். எங்களால் கொடுக்கப்பட்ட ஆலோசனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. இந்த வகையில் பொதுக்கட்டமைப்பினை நிறுவுவது எந்தளவு சாத்தியம் என்பது பற்றிக் கூற முடியாதுள்ளது. ஏனெனில் அரசாங்கம் புதிய நிபந்தனைகளை விதித்துக் கொண்டிருப்பதாக தெரிகிறதே தவிர பொதுக்கட்டமைப்பினை நிறுவுவதற்கு மனப்ப10ர்வமாக செயற்படுவதாக தெரியவில்லை.
சர்வதேச உதவிகளை விரைந்து நடைமுறை ஒழுங்குகளுக்கு ஏற்ப எமது மக்களுக்கு பகிர்ந்தளிக்க நேரடியாகக் கிடைக்கக்கூடிய வகைகளை சர்வதேச சமூகம் பரீசிலிக்க வேண்டும் என்பதனையும் இன்றைய சந்திப்பில் வலியுறுத்தியுள்ளோம்.
கேள்வி:- அரசு ஏதாவது புதிய செய்திகள் அனுப்பி வைத்துள்ளதா?
பதில்:- ஏற்கனவே எமது வடக்கு கிழக்கு தாயகப் பிரதேசத்தினுடைய நிவாரணப்பணிகள் மீள்கட்டுமாணப் பணிகள் அபிவிருத்தி நடவடிக்கைகளை குறிப்பாக ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட கரையோரப் பகுதிகளையும் அங்கு வசிக்கும் மக்களுக்கு உதவுவதற்கான ஆலோசனைகளை நோர்வே அனுசரணையாளர்கள் மூலமாக அரசுக்கு அனுப்பியிருந்தோம்.
எங்கள் ஆலோசனைக்கு எதிர்மறையான முடிவுகளைத்தான் தங்கள் கருத்துக்களாக அனுசரணையாளர்களூடாக எமக்குத் தெரியப்படுத்தியுள்ளார்கள். அரசின் முடிவுகள் எமக்கு அதிர்ச்சி தருபவையாக உள்ளது. நடைமுறைச் சாத்தியமற்ற முடிவுகளை அரசு தெரியப்படுத்திக் கொண்டிருப்பது இணக்கப்பாட்டிற்கு வந்து செயற்பாடுகளை மந்தப்படுத்தும் நோக்கோடுதான் அரசு செயற்படுவதாக எம்மால் உணர முடிகின்றது என்பதை இன்றைய சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளோம். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச உதவிகள் ஏனைய வழிமுறைகள் ஊடாகவே வந்து சேரவேண்டும். அதற்கு உரிய வாய்ப்பினை எற்படுத்த வேண்டும் என்பது தான் எமது நிலைப்பாடாக உள்ளது.
கேள்வி:- எந்த வகையில் புலிகளுக்கும் அரசுக்கும் தற்போது முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன?
பதில்:- பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். சர்வதேச உதவிகளை தமிழர் தாயகத்திற்கு கொண்டு வருவதற்கு ஒரு நடுநிலையான சர்வதேச நிறுவனமே உதவிப்பொருட்களை பகிர்ந்தளிக்க பொறுப்பாக இருக்க வேண்டும். வட கிழக்கிற்கான பாதுகாவலனாக நிவாரண மீள்கட்டுமான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஒரு சர்வதேச நிறுவனம் இருக்க வேண்டும் என்பதனை நாம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம். அவ்வாறான ஒரு அமைப்பினூடாகத்தான் சர்வதேச உதவிகள் எமது பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதனை கடந்த கால அனுபவங்களின் அடிப்படையிலும் எம்மால் வலியுறுத்தப்பட்ட விடயம் ஆகும்.
அரசு எமது முடிவுகளை கவனத்தில் எடுத்ததாகத் தெரியவில்லை. மேலும் வட கிழக்கிலே முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமும் சில மாவட்டங்களில் பேணப்பட வேண்டும் என்பதனையும் நாம் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு பல்வேறுபட்ட விடயங்கள் கட்டமைப்பிலே உள்வாங்கப்பட வேண்டிய பிரதிநிதித்துவம் சம்பந்தமாக தமிழர் தாயகத்திற்கான மீள்கட்டுமாண நிவாரணப்பணிகளை மேற்கொள்வதற்கான நிதியத்தின் பாதுகாவலனாக நியமிக்கப்படும் விடயங்களிலும் பல சிக்கல்கள் இருப்பதாகவே எமக்கு தெரிகின்றது.
கேள்வி:- சிரான் அமைப்பு போன்று தான் இவ்வமைப்பிற்கு ஏற்படும் என்று நீங்கள் நம்புகின்றீர்களா?
பதில்:- எங்களைப் பொறுத்த வரையில் இதுவொரு உண்மையிலே இயற்கைப் பேரனர்த்தத்தால் பாரியளவு மனிதாபிமான நெருக்கடியைச் சந்திக்கும். மக்களுக்கு உடனடி மனிதாபிமான புனர்வாழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது அவசியமானது. சிறீலங்காவில் மட்டுமல்ல. தென்னாசியா முழுவதுமே பேரிழப்பினைச் சந்தித்துள்ளது. மனிதாபிமான உதவியை சந்தித்து நிற்கும் சூழலில் இலங்கைத் தீவிலேயும் தமிழர் தாயகம் தான் கூடுதல் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது.
சர்வதேச உதவிகள் எமது பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பது ஒரு மனிதாபிமான தேவையாக உள்ளது. மனிதாபிமானத் தேவைகள் எழுந்து நிற்கும் சூழலில் கடந்த காலத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் போல் தீர்வு காணப்படாமல் போன விடயங்கள்; போல் இந்த மனிதாபிமான உதவிகளையும் இழுத்தடிக்க முடியாது. உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தியுள்ளோம் முடிவுகள் எப்படி போகும் என்பதை எம்மால் கூறமுடியாது. நடமுறையில் அரசாங்கம் ஒத்துழைப்பு தராத நிலைதான் இன்று வரையுள்ளது.
கேள்வி:- அரசு எடுத்திருக்கும் முடிவுகள் தங்களுக்கு நம்பிக்கை இழக்கச் செய்துள்ளதா?
பதில்:- நிச்சயமாக அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதாகவும் தாம் பேசிக்கொண்டிருப்பதாகவும் ஒருதோற்றப்பாட்டை காட்டி வருகிறதே தவிர ஒரு கட்டமைப்பினை நிறுவி விரைந்து மக்களுடைய மனிதாபிமான நெருக்கடிக்கு தீர்வுகாண அரசு முயற்சி எடுப்பதாகத் தெரியவில்லை.
பொய்யான தோற்றப்பாட்டை உருவாக்கி சர்வதேச உதவிகளை கவர்ந்திழுக்கும் ஒரு முயற்சியில் தான் அரசு இறங்கியுள்ளதே தவிர பாதிக்கப்பட்ட மக்கள் உதவிகள் புரிய வேண்டும் என்பதில் அரசு அக்கறை செலுத்தவில்லை. அரசின் போக்கு எமக்கு நம்பிக்கை தருவதாகத் தெரியவில்லை.
கேள்வி:- உதவி வழங்கும் நாடுகளின் நிலைப்பாடு எப்படி உள்ளது.?
பதில்:- சர்வதேச நிறுவனங்கள் முழு அளவிலான அழுத்தத்தைப் பிரயோகித்துக் கொள்கின்றார்கள். இரண்டு தரப்பும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பினை உருவாக்குவதன் ஊடாகவே சரியான வகையில் சர்வதேச உதவிகள் சரியான முறையில் சேர்க்கப்படும் என்பது ஒரு எண்ணப்பாடாகவும் விருப்பமாகவும் உள்ளது.
ஆனால் பொதுக்கட்டமைப்புக்களுக்கான உருவாக்கத்திற்கான சூழல் உருவாக்கப்படவில்லை. இனி சிறீலங்கா அரசினை நம்பிக் கொண்டிருக்க முடியாது என்பதனையும் சர்வதேச சமூகத்திடம் கூறி வருகின்றோம். சர்வதேச உதவிகள் நேரடியாக இங்கு கொண்டு வரக்கூடிய வழிமுறைகளை சர்வதேச சமூகம் கண்டறிய வேண்டும் என்பதனை யதார்த்தத்தின் அடிப்படையில் எம்மால் வலியுறுத்தப்பட்டது.
கேள்வி:- சர்வதேச உதவிகள் நேரடியாக வரக்கூடிய சூழல் உள்ளதா?
பதில்:- சர்வதேச சமூகத்திடம் ஒரு பாரிய பொறுப்பு உள்ளது. ஒரு மனித இனம் பேரிழிவினைச் சந்திக்கும் நிலையில் உதவிகள் செய்ய வேண்டும் என்பது சர்வதேச சமூகத்தின் கடமையும் பொறுப்புமாகும். அந்த வகையில் பேரழிவைச் சந்தித்து நிற்கும் எமது மக்களுக்கு சர்வதேச சமூகம் நேரடியாக உதவிபுரியும் என நம்புகிறோம். அதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகின்றோம்.
கேள்வி:- ஆழிப்பேரலையின் பின்பு சிறுவர்களை புலிகள் இணைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
பதில்:- சிறுவர்களை இணைக்கிறோம் என குற்றம் சாட்டுகிறார்களே தவிர இந்தப் பேரனர்த்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான சிறுவர்களை தமிழீழ விடுதலைப்புலிகள் புனர்வாழ்வுப் பணிகளிளும் மறுவாழ்வுப் பணிகளிளும் ஈடுபடுத்தியுள்ளதை குற்றம் சாட்டுபவர்கள் திரும்பிக்கூடப் பார்க்காதவர்களாக உள்ளனர்.
தற்போது கூட ஆழிப்பேரலையினால் ஆயிரக்கணக்கான சிறார்கள் பெற்றோர்களை இழந்து எந்தவித உதவிகளும் கிடைக்காத நிலையில் பரிதவித்த நிலையி;ல் உள்ளனர். அச்சிறார்களுக்கு ஆக்கப10ர்வ உதவிகள் புரியாமல் விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டுவதிலும் சேறு பூசுவதிலும் பொய்ப்பரப்புரை செய்வதிலும் சில அமைப்புக்கள் ஈடுபட்டுள்ளனர் இது எமக்கு மிகுந்த கவலையைத் தருகிறது என்றார்.
Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

