02-05-2005, 07:04 PM
[size=13] <b>ராமகிருஷ்ணா - திரைவிமர்சனம் - குமுதம்</b>
இந்த முறை கிராமத்துப் பக்கம் போயிருக்கிறார் அகத்தியன். அம்மா திடீரென்று இறந்து போனதால் அநாதை போல் உணரும் பணக்கார இளைஞர் ஆகாஷ். அம்மாவின் அறிவுரைப்படி கிராமத்துக்கு சாதாரண படிப்பறிவில்லாத ராமகிருஷ்ணனாய் திரும்புகிறார். அங்கே அவருக்கு நேரும் அனுபவங்கள்தான் கதை.
கிராமத்தில் நுழைந்ததுமே சார்லியின் வா மச்சான் என்று கூப்பிடும் அன்பு ஹீரோவை நெகிழ வைக்கிறது. எதிர்பாராமல் இரண்டு பெண்களையும் சந்திக்கிறார்.
அட... அட... அட... ஹீரோயின் ஸ்ரீதேவிகா ஆகட்டும், கரகாட்டக்காரி வாணி ஆகட்டும், டபுள்மீனிங் டயலாக்குகளை சகட்டுமேனிக்கு அள்ளிவிடுகிறார்கள். பல இடங்களில் இயல்பான கிராமத்துப் பச்சை தென்பட்டாலும், சில சமயம் எல்லைமீறும்போது, யூ டூ அகத்தியன்? என்று கேட்கத் தோன்றுகிறது.
சார்லி அண்ட் கோவின் காமெடி சிரிக்க வைத்தாலும், நீளம் அதிகமோ என்கிற உணர்வு எழாமல் இல்லை.
கிராமத்தில் தன்னுடைய அம்மாவின் ஃப்ளாஷ்பேக்கை ஹீரோ நிச்சயம் தெரிந்துகொள்ளப் போகிறார் என்பது முன்பே தெரிந்துவிடுகிறது. விஜயகுமாரை சரண்யா எதற்காகப் பிரிந்தார் என்கிற காரணத்தை வலுவாகச் சொல்லாததால் அவர்களின் பிணைப்பு பற்றி ஏதும் புரியவில்லை.
ஜெய்ஆகாஷ் துடிப்பான நடிப்பை சுறுசுறுப்பாகக் காட்டியிருக்கிறார்.
ஸ்ரீதேவிகா வித்தியாசமான தோற்றம். ஜெய்ஆகாஷை பளிச்பளிச் என்ற வார்த்தைகளால் அவர் சாடி கிண்டலடிப்பது மிளகாய்க்கடி.
தேவாவின் இசையில் விருப்பமில்லையா? பாடலில் இளமை ஊஞ்சலாடுகிறது.
விஜயகுமார் இறந்தபிறகு, என்னவோ பரபரப்பாக நடக்கப் போகிறது என்று எதிர்பார்த்தால் எல்லாமே புஸ்ஸென்று போகிறது.
அதுவும் கடைசி கல்யாணக் காட்சியில், ஏதோ போருக்குச் செல்பவர்போல் ஜெய்ஆகாஷ் முழுநீளத்துக்கு வசனம் பேசிப் பேசியே கொல்கிறார்.
கிராமத்து பாஸஞ்சர் வண்டி.
++++++++++++
நெல்லை மாவட்டத்தின் பல இடங்களிலும், சென்னை, குலுமனாலி, லண்டன் ஆகிய இடங்களில் சுமார் எழுபது சீன்களை, எண்பது நாட்களில் எடுத்திருக்கிறார்கள்.
ஹீரோ ஜெய்ஆகாஷ் படத்தின் கேரக்டர் போலவே லண்டனில் பிறந்து வளர்ந்தவர். இந்தப் படத்திற்காக முதல்முறையாக வேஷ்டி கட்டி இருக்கிறார். அதேபோல் சிலம்புச் சண்டை கற்று, க்ளைமாக்ஸ் காட்சியில் அசத்தியிருக்கிறார்.
ஹீரோயின் ஸ்ரீதேவிகா கேரளாவைச் சேர்ந்தவர். இன்னொரு ஹீரோயின் வாணி. அகத்தியன் இயக்கிய தெலுங்குப் படத்தில் ஹீரோயினாக நடித்தவர். தமிழ்நாடு கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பெண்.
நடிகர் விஜயகுமார் இந்த வயதிலும் டூப் இல்லாமல் சண்டை போட்டு கலக்கியிருக்கிறார். ஃபைட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் நன்கு சிலம்பு தெரிந்தவர் என்பதால் கேரக்டருக்காக அவரை வில்லனாக நடிக்க வைத்துவிட்டார்களாம்.
பெய்யுமானம்மா பாடல் காட்சியில் பலவிதமான கிராமத்துக் கலைகளை பயன்படுத்தி, அந்தப் பாடலை மட்டும் பன்னிரண்டு நாட்கள் எடுத்திருக்கிறார்கள். டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் பாடலை இயக்கியதோடு தானும் ஆடிப் பாடியிருக்கிறார்.
கிங் படஇயக்குநர் சாலமன் இந்தப் படத்திற்காக காமெடி ட்ராக் இணைந்து செய்திருக்கிறார். பரவை முனியம்மா எப்போதும் மேடைகளில் பாடும் பாடல்களை படத்திலும் பாட வைத்திருக்கிறார்கள்.
சென்னை துறைமுக பகுதியில் ஹ§ண்டாய் கார்கள் ஏற்றுமதி பகுதியில் ஸ்பெஷலாக பெர்மிஷன் வாங்கி ஷ¨ட்டிங் நடத்தியிருக்கிறார்கள். அதேபோல் லண்டனிலும் ஒரு பாடல் காட்சியை படமாக்கியிருக்கிறார்கள்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பக்கம் பாடல் காட்சி ஷ¨ட்டிங் நடக்கும்போது அங்குள்ள அட்டைகள் ஹீரோ மற்றும் படக்குழுவினரின் ரத்தத்தைக் குடித்து அட்டகாசம் செய்திருக்கின்றன.
இந்த முறை கிராமத்துப் பக்கம் போயிருக்கிறார் அகத்தியன். அம்மா திடீரென்று இறந்து போனதால் அநாதை போல் உணரும் பணக்கார இளைஞர் ஆகாஷ். அம்மாவின் அறிவுரைப்படி கிராமத்துக்கு சாதாரண படிப்பறிவில்லாத ராமகிருஷ்ணனாய் திரும்புகிறார். அங்கே அவருக்கு நேரும் அனுபவங்கள்தான் கதை.
கிராமத்தில் நுழைந்ததுமே சார்லியின் வா மச்சான் என்று கூப்பிடும் அன்பு ஹீரோவை நெகிழ வைக்கிறது. எதிர்பாராமல் இரண்டு பெண்களையும் சந்திக்கிறார்.
அட... அட... அட... ஹீரோயின் ஸ்ரீதேவிகா ஆகட்டும், கரகாட்டக்காரி வாணி ஆகட்டும், டபுள்மீனிங் டயலாக்குகளை சகட்டுமேனிக்கு அள்ளிவிடுகிறார்கள். பல இடங்களில் இயல்பான கிராமத்துப் பச்சை தென்பட்டாலும், சில சமயம் எல்லைமீறும்போது, யூ டூ அகத்தியன்? என்று கேட்கத் தோன்றுகிறது.
சார்லி அண்ட் கோவின் காமெடி சிரிக்க வைத்தாலும், நீளம் அதிகமோ என்கிற உணர்வு எழாமல் இல்லை.
கிராமத்தில் தன்னுடைய அம்மாவின் ஃப்ளாஷ்பேக்கை ஹீரோ நிச்சயம் தெரிந்துகொள்ளப் போகிறார் என்பது முன்பே தெரிந்துவிடுகிறது. விஜயகுமாரை சரண்யா எதற்காகப் பிரிந்தார் என்கிற காரணத்தை வலுவாகச் சொல்லாததால் அவர்களின் பிணைப்பு பற்றி ஏதும் புரியவில்லை.
ஜெய்ஆகாஷ் துடிப்பான நடிப்பை சுறுசுறுப்பாகக் காட்டியிருக்கிறார்.
ஸ்ரீதேவிகா வித்தியாசமான தோற்றம். ஜெய்ஆகாஷை பளிச்பளிச் என்ற வார்த்தைகளால் அவர் சாடி கிண்டலடிப்பது மிளகாய்க்கடி.
தேவாவின் இசையில் விருப்பமில்லையா? பாடலில் இளமை ஊஞ்சலாடுகிறது.
விஜயகுமார் இறந்தபிறகு, என்னவோ பரபரப்பாக நடக்கப் போகிறது என்று எதிர்பார்த்தால் எல்லாமே புஸ்ஸென்று போகிறது.
அதுவும் கடைசி கல்யாணக் காட்சியில், ஏதோ போருக்குச் செல்பவர்போல் ஜெய்ஆகாஷ் முழுநீளத்துக்கு வசனம் பேசிப் பேசியே கொல்கிறார்.
கிராமத்து பாஸஞ்சர் வண்டி.
++++++++++++
நெல்லை மாவட்டத்தின் பல இடங்களிலும், சென்னை, குலுமனாலி, லண்டன் ஆகிய இடங்களில் சுமார் எழுபது சீன்களை, எண்பது நாட்களில் எடுத்திருக்கிறார்கள்.
ஹீரோ ஜெய்ஆகாஷ் படத்தின் கேரக்டர் போலவே லண்டனில் பிறந்து வளர்ந்தவர். இந்தப் படத்திற்காக முதல்முறையாக வேஷ்டி கட்டி இருக்கிறார். அதேபோல் சிலம்புச் சண்டை கற்று, க்ளைமாக்ஸ் காட்சியில் அசத்தியிருக்கிறார்.
ஹீரோயின் ஸ்ரீதேவிகா கேரளாவைச் சேர்ந்தவர். இன்னொரு ஹீரோயின் வாணி. அகத்தியன் இயக்கிய தெலுங்குப் படத்தில் ஹீரோயினாக நடித்தவர். தமிழ்நாடு கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பெண்.
நடிகர் விஜயகுமார் இந்த வயதிலும் டூப் இல்லாமல் சண்டை போட்டு கலக்கியிருக்கிறார். ஃபைட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் நன்கு சிலம்பு தெரிந்தவர் என்பதால் கேரக்டருக்காக அவரை வில்லனாக நடிக்க வைத்துவிட்டார்களாம்.
பெய்யுமானம்மா பாடல் காட்சியில் பலவிதமான கிராமத்துக் கலைகளை பயன்படுத்தி, அந்தப் பாடலை மட்டும் பன்னிரண்டு நாட்கள் எடுத்திருக்கிறார்கள். டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் பாடலை இயக்கியதோடு தானும் ஆடிப் பாடியிருக்கிறார்.
கிங் படஇயக்குநர் சாலமன் இந்தப் படத்திற்காக காமெடி ட்ராக் இணைந்து செய்திருக்கிறார். பரவை முனியம்மா எப்போதும் மேடைகளில் பாடும் பாடல்களை படத்திலும் பாட வைத்திருக்கிறார்கள்.
சென்னை துறைமுக பகுதியில் ஹ§ண்டாய் கார்கள் ஏற்றுமதி பகுதியில் ஸ்பெஷலாக பெர்மிஷன் வாங்கி ஷ¨ட்டிங் நடத்தியிருக்கிறார்கள். அதேபோல் லண்டனிலும் ஒரு பாடல் காட்சியை படமாக்கியிருக்கிறார்கள்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பக்கம் பாடல் காட்சி ஷ¨ட்டிங் நடக்கும்போது அங்குள்ள அட்டைகள் ஹீரோ மற்றும் படக்குழுவினரின் ரத்தத்தைக் குடித்து அட்டகாசம் செய்திருக்கின்றன.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

