Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"TRO" இவர்களுக்கும் உதவ வேண்டும்?
#1
அண்மையில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போதோ அல்லது அதன் முன் ஏற்பட்ட போர் அழிவுகளின் போதோ ஈழத்தமிழினத்திற்கு "TRO" அமைப்பானது செய்த நிவாரண, புணருத்தாரண சேவைகள் அளப்பரியது. குறிப்பாக கிழக்கு மாகாண மக்களுக்கு "கருணா என்ற பெயரில்" இலங்கைப் இராணுவ புலனாய்வுத் துறையினர் நடாத்தும் கொலை வெறியாட்டங்கள், தொண்டர்களுக்கு விடுக்கப்படும் கொலைப் பயமுறுத்தல்கள் மத்தியிலும் இவர்களது தொண்டுகள் சொல்லில் வடிக்க இயலாதவை.

குறிப்பாக புலம் பெயர் நாடுகளிலிருந்து தமிழ் வைத்திய நிபுணர்களை அழைத்துச் சென்று பாதிக்கப்பட்ட எம்முடன் பிறப்புக்களின் அக, புற காயங்களுக்கு வைத்தியம் செய்வது அளப்பரிய சேவையாகும்.

ஆனால் தாயகத்தில் மட்டுமல்ல புலத்திலும் எம்மவர்களில் சிலர் மனோவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு உதவ "TRO" முன்வருமா?

இவர்கள் போன்றோர்கள், போராட்ட ஆரம்ப காலத்தில் மாற்று இயக்கங்களின் பெயர்களீலும், பின் காலத்திற்கு காலம் ஜனநாயகம், மாற்றுக் கருத்துக்கள், .... இன்று சுனாமியுடனும் வலம் வருகிரார்கள். உண்மையிலேயே மனோவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட இவர்களும் எம்மினத்தின் ஓரங்கங்களே! இவர்களையும் அரவணைத்து, பாதுகாத்து, மனோவியல் ரீதியில் வைத்திய சேவையை வழங்க "TRO" நிச்சயம் முன் வர வேண்டும்?

1) புலத்தில் இவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும்.
2) இவர்களுக்கான புனருத்தாரண நிதியம் ஆரம்பிக்கப் பட வேண்டும்.
3) இவர்களைப் பராமரிக்க புலத்தில் ஒவ்வொரு நாடுகளிலும் மனோவியல் புணர்வாழ்வு இல்லங்கள் ஆரம்பிக்கப் ப்ட வேண்டும்.
4) இவர்கள் பூரணமாக சுகமடைந்ததன் பின்னர் எம் சமூகத்தினால் தொடர்ந்தும் அரவணைக்கப் பட வேண்டும்.

இது போன்ற நாலம்ச திட்டத்தின் அடிப்படையில் இவர்களுக்கான புனர்வாழ்வு புலத்தில் உடன் ஆரம்பிக்கப் பட வேண்டும். இல்லையேல் இன்று வானொலிகள், இணையங்கள் என்றலையும் இவர்களின் மனைவி, பிள்ளைகள். சுற்றம், சூழல் என்பனவைகளும் பாதிக்கப் படக்கூடிய சூழ்நிலைகள் அதிகமாகவேயுள்ளன.

பல சேவைப் பழுக்களுக்கு மத்தியில் எனது இக்கோரிக்கையை புலம் பெயர்தமிழர்கள் அணைவரின் கோரிக்கையாக "TRO" இதை கவனத்திலெடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். ஆரம்பத்தில் பெரியளவில் இவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கை கஸ்டமாயின் ஆக கூடுதாலாக மனோவியல் ரீதியில் பாதிக்கபட்ட, குறிப்பாக லண்டன் ராமராஜ் குடும்பம், டென்மார்க் குமாரதுரை குடும்பம், ஜேர்மனி ஜெமினி, சன்முகதாசன், சுவீடன் கே ரி ராஜசிங்கம், இவர்களோடு நிமோ, விக்டர், .... போன்றோரையும் கனடாவில் டேவிட்சன், டி பி எஸ் ஜெயராஜ், .. போன்றவர்கலையும், அவுஸ்ரேலியாவில் நாகராசா, நடராசா, முருகமூர்த்தி, .. போன்ற அதிகளவில் பாதிக்கப்பட்டவரையேனும் கவனத்திலெடுக்க வேண்டும்.

இவர்களின் மனோவியல் பாதிப்புகளைப் போக்க புலத்தில் உள்ல எம் தமிழ் வைத்தியர்கள் மூலம் "TRO" நிச்சயமாக செயற்பட வேண்டியது காலத்தின் தேவையுமாகும்.
"
"
Reply


Messages In This Thread
"TRO" இவர்களுக்கும் உதவ வேண்டும்? - by Nellaiyan - 02-04-2005, 09:41 PM
[No subject] - by cannon - 02-04-2005, 10:20 PM
[No subject] - by sethu - 02-04-2005, 10:33 PM
[No subject] - by Niththila - 02-04-2005, 10:39 PM
[No subject] - by shiyam - 02-05-2005, 04:22 AM
[No subject] - by hari - 02-05-2005, 06:39 AM
[No subject] - by kavithan - 02-05-2005, 07:29 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)