08-17-2003, 05:44 PM
நிழல் யுத்தம் பார்த்தேன்....
பல குடும்பங்களிடையே நிலவி பாரிய விரிசல்களின் அடிக்கல்லாக இருக்கும் சிறியது போன்ற ஒரு பெரிய பிரச்சினையை
கருப்பொருளாக்கி பொருத்தமான நடிகர்களை தேர்ந்து நடிக்கவைத்திருக்கிறார் அஜீவன்.
நாயகி...கணவனில் சந்தேகப்படும் போது வெளிப்படுத்தும் முகபாவமும் நாயகனின் இயல்பான நடிப்பும் பாராட்டுக்குரியவை.கணவனிடம் கோயிலுக்குப் போகவேண்டுமென்று சொல்ல அவன் பதிலேதும் சொல்லாமல் செல்ல ; தன் வார்த்தையை கணவன் உதாசீனம் செய்வதாக எண்ணி தனியாக அவள் இரண்டொரு வார்த்தைகளை புலம்புகிறாள். யாருமேயில்லாத அந்த இடத்தில்..அவள் மனதில் எண்ணுவதை வாயசைவில்லாமல் ஒலியை பின்னணியில் இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். விபத்து நடைபெறுவதாக நாயகி கனவு காண்பதனூடாக நாயகி தனது தவறை உணர்ந்ததையும் கலவரத்துடன் கணவனருகில் வந்து அவன் முகத்தில் இருசொட்டுக் ; கண்ணீர் சிந்தி அவன் மேலுள்ள நேசத்தை வெளிப்படுத்தியதும் அருமை.விபத்தும் அது படமாக்கப் பட்ட கோணமும் அற்புதமானது. யதார்த்தமான உரையாடல் இதமான இசைக் கோர்ப்பு. மிகத் தரமான ஒளிப்பதிவாளராக படத்தொகுப்பாளராக மிளிர்கிறார் அஜீவன்.புகலிட திரைத்துறைக்கு இன்னும் இன்னும் நல்ல படைப்புகளை அஜீவன் தருவார் என்ற நம்பிக்கையை தந்திருக்கிறார். வாழ்த்துகள்..
பல குடும்பங்களிடையே நிலவி பாரிய விரிசல்களின் அடிக்கல்லாக இருக்கும் சிறியது போன்ற ஒரு பெரிய பிரச்சினையை
கருப்பொருளாக்கி பொருத்தமான நடிகர்களை தேர்ந்து நடிக்கவைத்திருக்கிறார் அஜீவன்.
நாயகி...கணவனில் சந்தேகப்படும் போது வெளிப்படுத்தும் முகபாவமும் நாயகனின் இயல்பான நடிப்பும் பாராட்டுக்குரியவை.கணவனிடம் கோயிலுக்குப் போகவேண்டுமென்று சொல்ல அவன் பதிலேதும் சொல்லாமல் செல்ல ; தன் வார்த்தையை கணவன் உதாசீனம் செய்வதாக எண்ணி தனியாக அவள் இரண்டொரு வார்த்தைகளை புலம்புகிறாள். யாருமேயில்லாத அந்த இடத்தில்..அவள் மனதில் எண்ணுவதை வாயசைவில்லாமல் ஒலியை பின்னணியில் இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். விபத்து நடைபெறுவதாக நாயகி கனவு காண்பதனூடாக நாயகி தனது தவறை உணர்ந்ததையும் கலவரத்துடன் கணவனருகில் வந்து அவன் முகத்தில் இருசொட்டுக் ; கண்ணீர் சிந்தி அவன் மேலுள்ள நேசத்தை வெளிப்படுத்தியதும் அருமை.விபத்தும் அது படமாக்கப் பட்ட கோணமும் அற்புதமானது. யதார்த்தமான உரையாடல் இதமான இசைக் கோர்ப்பு. மிகத் தரமான ஒளிப்பதிவாளராக படத்தொகுப்பாளராக மிளிர்கிறார் அஜீவன்.புகலிட திரைத்துறைக்கு இன்னும் இன்னும் நல்ல படைப்புகளை அஜீவன் தருவார் என்ற நம்பிக்கையை தந்திருக்கிறார். வாழ்த்துகள்..
-

