02-04-2005, 04:05 PM
பெற்றோரை கண்டறியும் மரபணு பரிசோதனை புதனன்று நடைபெறும்
ஆழிப்பேரலையினால் அநாதரவான நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் பராமரிப்பிலுள்ள நான்கு மாத குழந்தையின் பெற்றோரை கண்டறிவதற்கான மரபணு பரிசோதனை எதிர்வரும் புதன்கிழமை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையின் வைத்திய ஆய்வுகூடமொன்றில் நடைபெறவுள்ளது.
பேராசிரியை டாக்டர் மாலா குணரட்ன இந்த மரபணு பரிசோதனையை நடத்துவார் என நீதிமன்றம் நேற்று சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் முற்பகல் 10 மணிக்கு குழந்தையின் மாதிரி இரத்தம் பெறுவதற்கு அங்கு ஆஜர்படுத்த வேண்டும் என்று வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் மாதிரி இரத்தத்தை பெறுவதற்காக உரிமை கோரும் பெற்றோரும் அங்கு ஆஜராக வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பெற்றோருக்கும் கல்முனை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக கல்முனை வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் அம்புலன்ஸ் வண்டியில் பராமரிப்பாளர் மற்றும் தாதியொருவரின் உதவியுடன் குழந்தை கொண்டு செல்லப்பட்ட வேண்டும். இவர்களுடன் நீதிமன்றப் பதிவாளர்ää சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்ää ஆகியோரும் செல்ல வேண்டும்.
கல்முனை பொலிசாருக்கு பிறப்பித்த உத்தரவில் குழந்தையை கொண்டு செல்வதற்கான பாதுகாப்பு ஒழுங்குகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
இந்த மரபணு பரிசோதனைக்கான செலவுகளையும் பெற்றோர் என உரிமை கோருபவர்களுக்கான போக்குவரத்து செலவுகளையும் யுனிசெப் பெர்றுப்பேற்க முன்வந்துள்ளது.
வைத்திய ஆய்வு கூடத்தில் குழந்தையினதும்ää அதற்கு உரிமை கோரும் பெற்றோரினதும் மாதிரி இரத்தம் பெறப்படும் போது யுனிசெப் பிரதிநிதியொருவர் பிரசன்னமாகியிருப்பதற்கும் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இதேவேளை நேற்று முன்தினம் கல்முனை வைத்தியசாலையில் இடம்பெற்ற அத்துமீறல் சம்பவங்கள் தொடர்பாக கைதாகி நேற்றிரவு பினையில் விடுதலை செய்யப்பட்ட குழந்தைக்கு உரிமை கோரும் பெற்றோர்களான ஜெயராஜா ஜூனித்தா தம்பதிகள் நேற்று கல்முனை நீதிமன்றத்தில் மீன்டும் ஆஜரானார்கள்.
இவர்களை எச்சரித்த நீதவான் எம்.பி.மொகைதீன் வாரத்தில் 3 தடவைகள் மட்டுமே குழந்தையை பார்வையிட முடியும் என்றும் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில் தற்போது வைத்தியசாலையில் உள்ள இந்த குழந்தைக்கு தற்போது விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதினம்
ஆழிப்பேரலையினால் அநாதரவான நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் பராமரிப்பிலுள்ள நான்கு மாத குழந்தையின் பெற்றோரை கண்டறிவதற்கான மரபணு பரிசோதனை எதிர்வரும் புதன்கிழமை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையின் வைத்திய ஆய்வுகூடமொன்றில் நடைபெறவுள்ளது.
பேராசிரியை டாக்டர் மாலா குணரட்ன இந்த மரபணு பரிசோதனையை நடத்துவார் என நீதிமன்றம் நேற்று சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் முற்பகல் 10 மணிக்கு குழந்தையின் மாதிரி இரத்தம் பெறுவதற்கு அங்கு ஆஜர்படுத்த வேண்டும் என்று வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் மாதிரி இரத்தத்தை பெறுவதற்காக உரிமை கோரும் பெற்றோரும் அங்கு ஆஜராக வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பெற்றோருக்கும் கல்முனை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக கல்முனை வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் அம்புலன்ஸ் வண்டியில் பராமரிப்பாளர் மற்றும் தாதியொருவரின் உதவியுடன் குழந்தை கொண்டு செல்லப்பட்ட வேண்டும். இவர்களுடன் நீதிமன்றப் பதிவாளர்ää சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்ää ஆகியோரும் செல்ல வேண்டும்.
கல்முனை பொலிசாருக்கு பிறப்பித்த உத்தரவில் குழந்தையை கொண்டு செல்வதற்கான பாதுகாப்பு ஒழுங்குகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
இந்த மரபணு பரிசோதனைக்கான செலவுகளையும் பெற்றோர் என உரிமை கோருபவர்களுக்கான போக்குவரத்து செலவுகளையும் யுனிசெப் பெர்றுப்பேற்க முன்வந்துள்ளது.
வைத்திய ஆய்வு கூடத்தில் குழந்தையினதும்ää அதற்கு உரிமை கோரும் பெற்றோரினதும் மாதிரி இரத்தம் பெறப்படும் போது யுனிசெப் பிரதிநிதியொருவர் பிரசன்னமாகியிருப்பதற்கும் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இதேவேளை நேற்று முன்தினம் கல்முனை வைத்தியசாலையில் இடம்பெற்ற அத்துமீறல் சம்பவங்கள் தொடர்பாக கைதாகி நேற்றிரவு பினையில் விடுதலை செய்யப்பட்ட குழந்தைக்கு உரிமை கோரும் பெற்றோர்களான ஜெயராஜா ஜூனித்தா தம்பதிகள் நேற்று கல்முனை நீதிமன்றத்தில் மீன்டும் ஆஜரானார்கள்.
இவர்களை எச்சரித்த நீதவான் எம்.பி.மொகைதீன் வாரத்தில் 3 தடவைகள் மட்டுமே குழந்தையை பார்வையிட முடியும் என்றும் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில் தற்போது வைத்தியசாலையில் உள்ள இந்த குழந்தைக்கு தற்போது விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

