02-04-2005, 04:45 AM
பொதுக் கட்டமைப்பும் ஜே.வி.பியின் எதிர்ப்பும்
அனர்த்த நிவாரணப் பணிகளை விடுதலைப்புலிகளுடன் இணைந்து அரசு மேற்கொள்வதற்கு ஜே.வி.பி.யினர் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றனர்.
அனர்த்த நிவாரணமாக வழங்கப்படும் சர்வதேச உதவிகள் பாதிப்புற்ற சகல பிரதேசங்களுக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
இதே கருத்தையே விடுதலைப்புலிகளும்ää தமிழ் மக்களும்ää தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிவாரணப் பகிர்வு முறையாக மேற்கொள்ளப்படுவதனால் விடுதலைப்புலிகள் சிறிலங்கா அரசு இணைந்து ஒரு நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
அதன் மூலம் புனர்வாழ்வு புனரமைப்புப் பணிகளை மேற்கொ ள்ளவேண்டும்.
அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினர் தேசியத் தலைவரைச் சந்தித்து கலந்துரையாடிய போது இந்த விபரம் ஆராயப்பட்டது.
தமிழர் தாயகத்தில் நடந்த ஆழிப்பேரலை அனர்த்தமே அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. அதிகளவிலான மக்கள் உயிரிழந்துள்ளனர். அதிக சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.
பல தமிழ் பேசும் கிராமங்களை கடல் காவு கொண்டு விட்டது. அதேவேளை முல்லைத்தீவு மாவட்டம் விடுதலைப்புலிகளின் நிர்வாகப் பகுதியாகும். தமிழர் தாயகத்தில் நடந்த அனர்த்தம் மக்கள் அவல நிலைää மீள்குடியேற்றம்ää தொழில்வாய்ப்பு போன்ற பணிகளை முன்னெடுத்துச் செல்வதனால் விடுதலைப்புலிகளின் ஒத்துழைப்பு கண்டிப்பாகத் தேவை.
விடுதலைப்புலிகளை ஓரங்கட்டிவிட்டு அரசாலோ அல்லது வேறு சக்திகளாலோ மேற்கொள்ள முடியாது.
அதன் மூலம் முறையான உதவிகள் தமிழ் பேசும் சமூகத்துக்கு கிடைக்கமாட்டாது.
ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்த நாளிலிருந்து இற்றைவரைக்கும் இரவு பகல் பாராது விடுதலைப்புலிகள் முழு அர்ப்பணிப்புடன் துயர் துடைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் அனர்த்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அனர்த்தம் நிகழ்ந்த பிற்பாடு அதிகம் பாதிப்புற்ற அம்பாறை மாவட்டத்திற்கு துயர் துடைப்பு மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்காக விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவர் அவர்கள் பெரும் தொகை நிதி வழங்கியிருந்தார் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம்.
ஆனால் பேரினவாதக் கட்சியான ஜே.வி.பி. இனவாதத்தை விதைத்து வருகிறது.
தமிழர் தாயக மக்களுக்கு எதிர்காலத்தில் சர்வதேச உதவிகள் கிடைப்பதற்கு இவை தடையாக இருக்கின்றன. விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையிலான சமாதான பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஜே.வி.பி. தடைக்கல்லாகச் செயற்பட்டது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஜே.வி.பி. பிரதான பாத்திரத்தை வகித்து வருவதால் ஜனாதிபதியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு இவை பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தற்போது சர்வதேச ரீதியாக சிறிலங்கா அரசுக்கு கிடைக்கும் உதவிகள் தமிழர் தாயகத்துக்கு கிடைத்து விடக்கூடாது என்பதிலும்ää விடுதலைப்புலிகளுடன் எந்தவிதமான கூட்டுறவையும் வைத்து பொதுக் கட்டமைப்பை உருவாக்கக் கூடாது எனவும் ஜே.வி.பி.யினர் அரசுக்கு இறுக்கமாகத் தெரிவித்துள்ளது.
அதனை மீறினால் அரசுடனான கூட்டு முகாமிலிருந்து வெளியே றிவிடும் சூழல் உருவாகலாம் எனவும் மறைமுகமாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படாமல் இருக்கும் இன்றைய நிலையில் அனர்த்த நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்கு அரசு விடுதலைப்புலிகள் இணைந்த ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாகுமானால் எதிர்காலத்தில் சமாதானத்துக்கான அடித்தளமாக அது அமைவதுடன் புரிந்துணர்வையும் ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் ஜே.வி.பி.யின் இன்றைய போக்கு இந்த கட்டமைப்பை செம்மையோடு உருவாக்க உதவுமா என்பது கேள்விக்குறி.
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்
அனர்த்த நிவாரணப் பணிகளை விடுதலைப்புலிகளுடன் இணைந்து அரசு மேற்கொள்வதற்கு ஜே.வி.பி.யினர் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றனர்.
அனர்த்த நிவாரணமாக வழங்கப்படும் சர்வதேச உதவிகள் பாதிப்புற்ற சகல பிரதேசங்களுக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
இதே கருத்தையே விடுதலைப்புலிகளும்ää தமிழ் மக்களும்ää தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிவாரணப் பகிர்வு முறையாக மேற்கொள்ளப்படுவதனால் விடுதலைப்புலிகள் சிறிலங்கா அரசு இணைந்து ஒரு நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
அதன் மூலம் புனர்வாழ்வு புனரமைப்புப் பணிகளை மேற்கொ ள்ளவேண்டும்.
அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினர் தேசியத் தலைவரைச் சந்தித்து கலந்துரையாடிய போது இந்த விபரம் ஆராயப்பட்டது.
தமிழர் தாயகத்தில் நடந்த ஆழிப்பேரலை அனர்த்தமே அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. அதிகளவிலான மக்கள் உயிரிழந்துள்ளனர். அதிக சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.
பல தமிழ் பேசும் கிராமங்களை கடல் காவு கொண்டு விட்டது. அதேவேளை முல்லைத்தீவு மாவட்டம் விடுதலைப்புலிகளின் நிர்வாகப் பகுதியாகும். தமிழர் தாயகத்தில் நடந்த அனர்த்தம் மக்கள் அவல நிலைää மீள்குடியேற்றம்ää தொழில்வாய்ப்பு போன்ற பணிகளை முன்னெடுத்துச் செல்வதனால் விடுதலைப்புலிகளின் ஒத்துழைப்பு கண்டிப்பாகத் தேவை.
விடுதலைப்புலிகளை ஓரங்கட்டிவிட்டு அரசாலோ அல்லது வேறு சக்திகளாலோ மேற்கொள்ள முடியாது.
அதன் மூலம் முறையான உதவிகள் தமிழ் பேசும் சமூகத்துக்கு கிடைக்கமாட்டாது.
ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்த நாளிலிருந்து இற்றைவரைக்கும் இரவு பகல் பாராது விடுதலைப்புலிகள் முழு அர்ப்பணிப்புடன் துயர் துடைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் அனர்த்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அனர்த்தம் நிகழ்ந்த பிற்பாடு அதிகம் பாதிப்புற்ற அம்பாறை மாவட்டத்திற்கு துயர் துடைப்பு மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்காக விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவர் அவர்கள் பெரும் தொகை நிதி வழங்கியிருந்தார் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம்.
ஆனால் பேரினவாதக் கட்சியான ஜே.வி.பி. இனவாதத்தை விதைத்து வருகிறது.
தமிழர் தாயக மக்களுக்கு எதிர்காலத்தில் சர்வதேச உதவிகள் கிடைப்பதற்கு இவை தடையாக இருக்கின்றன. விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையிலான சமாதான பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஜே.வி.பி. தடைக்கல்லாகச் செயற்பட்டது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஜே.வி.பி. பிரதான பாத்திரத்தை வகித்து வருவதால் ஜனாதிபதியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு இவை பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தற்போது சர்வதேச ரீதியாக சிறிலங்கா அரசுக்கு கிடைக்கும் உதவிகள் தமிழர் தாயகத்துக்கு கிடைத்து விடக்கூடாது என்பதிலும்ää விடுதலைப்புலிகளுடன் எந்தவிதமான கூட்டுறவையும் வைத்து பொதுக் கட்டமைப்பை உருவாக்கக் கூடாது எனவும் ஜே.வி.பி.யினர் அரசுக்கு இறுக்கமாகத் தெரிவித்துள்ளது.
அதனை மீறினால் அரசுடனான கூட்டு முகாமிலிருந்து வெளியே றிவிடும் சூழல் உருவாகலாம் எனவும் மறைமுகமாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படாமல் இருக்கும் இன்றைய நிலையில் அனர்த்த நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்கு அரசு விடுதலைப்புலிகள் இணைந்த ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாகுமானால் எதிர்காலத்தில் சமாதானத்துக்கான அடித்தளமாக அது அமைவதுடன் புரிந்துணர்வையும் ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் ஜே.வி.பி.யின் இன்றைய போக்கு இந்த கட்டமைப்பை செம்மையோடு உருவாக்க உதவுமா என்பது கேள்விக்குறி.
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

