02-03-2005, 12:09 PM
KULAKADDAN Wrote:[quote=kuruvikal]இட்லி ஓக்கே...இட்லிக்கு தொட்டுக்க பரும்பு சாம்பார் செய்வது எப்படி என்று தெரியுமா...தெரிஞ்சதச் சொல்லுறர்..பல்நோக்கு கலவை.......... :wink:
எங்களுக்கு இந்த தேக்கரண்டி மேசைக்கரண்டி எல்லாம் எடுத்து நிறுத்துச் செய்ய நேரமில்லை...இதோ இலகு வழி... (ஒரு மூன்று நாலு பேருக்குகந்தது)
சில்வர் கப்பால ஒரு கப் மைசூர் பருப்பை எடுத்துக் கழுவி பாத்திரத்தில் இட்டு ஓரளவு நசிபடக் கூடிய வரை அவிய விடுங்கள்...தேவையானால் ஒன்று இரண்டு உருளைக்கிழங்குகளை. கரட்களை சிறிதாக வெட்டி பருப்புடன் சேர்த்து அவிய விடலாம் (உப்புச் சேர்க்க வேண்டாம்)
அதேவேளை... செத்தல் மிளகாய் ( நாலைந்து) சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள்..தேவையான அளவு வெங்காயம், ஒரு சில பூடு...பிறம்பாக வெட்டி வைத்துக்கொள்ளுங்கள்...சிறிதளவு மஞ்சள் பொடி...மிளகாய்ப்பொடி...சிறிதளவு தாழிப்புக் கலவை...(கடுகு சீரகம் அதுகள் கலந்தது...கடையில விக்குது)...சிறிதளவு சாம்பார் மசாலாத் தூள்.. ஆகியவற்றையும் எடுத்து தயாராக வைத்து விட்டு...
ஒரு பானில் மரக்கறி எண்ணெய் சிறிதளவு எடுத்து சூடிகாட்டிய பின் தாழிப்புக் கலவையை இட்டு பொன்னிறம் வரும் வரை தாழிக்கவும்
(கடுகு வெடிக்கும் கவனம் - இது சிறிது நேரத்துக்குள் நடந்திடும்) உடனவே வெட்டிய மிளகாய் வெங்காயம் பூடு போன்றவற்றைப் போட்டு வதக்குங்கள்...ஓரளவு வதங்கியதும் சிறிதளவு மிளகாய்த்தூள்...அதைவிடக் குறைய மஞ்சள் தூள்...சாம்பார் மசாலாத்தூள் இட்டு கலவுங்கள்...சிறிது நேரத்துக்கு அவற்றைக் கிளறிய(மிளகாய்த்தூள் மணம் போகும் வரை) பின்னர்... அவற்றை அவியவிட்ட பருப்பு, உருளைக்கிழங்கு...கரட் கொண்ட கலவையுள் சேருங்கள்...( அவை அவிந்த நீரோடேயே) பின் இந்த தாழிப்புக் கலவை பருப்புக் கலவையை நன்கு கலக்கி ஒன்று சேர்த்த பின் தேவையான அளவு உப்பை இட்டு குறிப்பிட்ட நேரத்துக்கு வேகவிடுங்கள்....அப்பப்ப ருசி பாத்துக்கங்க...சரியான ருசி வந்ததும் இறக்கி..இட்லியோட தொட்டுக்கங்க...!
இது...இட்லிக்கு மட்டுமல்ல...சோறு பாண் பிட்டு என்று எல்லாத்துக்கும் உதவும்...செய்வதும் இலகு...ஒரு 20 நிமிடம் போதும்...! :wink:
ஆமா பாலை காணேல்ல
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:
----------


