02-02-2005, 12:36 AM
ஆராவது கண்ணீர் வடிச்சபடி மூக்கு உறிஞ்சிக்கொண்டு இருக்கிறதா கேள்ளிப்படோணும்...
'ஆராவது கண்ணீர் வடிச்சபடி மூக்கு உறிஞ்சிக்கொண்டு இருக்கிறதா கேள்ளிப்படோணும்... எனக்குக்கெட்ட கோபம் வந்திடும்..."
எல்லாருக்கும் வணக்கம்! வணக்கம் என்ன கனகாலமா ஆளையே காணேல்லை... வாகனக்காரங்கள் ஆராவது ஆத்திரத்தில் ஒரேயடியா அடிச்சு நொருக்கிப் போட்டாங்களாக்கும் எண்டு நினைச்சிருப்பியளாக்கும். என்னை அறிஞ்சவை தெரிஞ்சவையள் காணிற நேரமெல்லாம் கேட்பினம் 'என்ன அப்பு எழுதிறதை விட்டிட்டியள். நொட்டை தாங்கேலாமல் ஆராவது வெருட்டிப்போட்டாங்களோ? எண்டு. ம்...ம்... அடுத்தவங்கள் வெருட்ட மருண்டு போற ஆளில்லை இந்த ஏரம்பர்! எட நல்ல விசயத்தை துணிச்சு சொல்லிறதுக்கு, அதுகும் வன்னியில நான் ஏன் பயப்பிட வேணுமென்டு கேட்கிறன்.
உதுக்கு மேல நடந்ததைப் பற்றிக் கதைக்கிற தருணமும் இல்லை இப்ப. ஏனெண்டால் எங்கட இனம் பெரிசா ஒரு அழிவைச் சந்திச்சிருக்கு. கன சனத்தை நாங்கள் இழந்திருக்கிறோம்.! சொத்த, பத்தெண்டு காலாகாலமாச் சேர்த்ததையும் சுனாமி அள்ளிக்கொண்டு போட்டிது. அவனவன் அங்கையிஞ்சை உதவி செய்ய ஆலாப்பறக்கிற நேரத்தில எங்கட 'சிங்கிடி நோணா" தமிழாக்களின்ரை சடலங்களுக்குப் பக்கத்தில நிண்டுகொண்டு, போறவாற நாடுகளையெல்லாம் இழுத்திழுத்து ஒப்பாரி வைச்சுக் கொண்டிருக்கிறா. என்னடா! எங்கையிருந்து உப்பிடி ஒரு ஞானம் பிய்ச்சுக் கொண்டு வந்திச்செண்டு பார்த்தால், பிணங்களின்ரை தொகையைக் காட்டி சர்வதேச சமூகத்துக்கு முன்னால பிழைப்பு நடத்தலாம் எண்டிற கேவலமான புத்திதான் பாருங்கோ அது! சே.... உதுகும் ஒரு பிழைப்பே! எந்தக்கேவலமான பிழைப்பும், உந்தளவுக்கு கேவலம் இல்லை! தங்கட இனவாதப் போக்கின்ரை வன்முறையால கன வருசங்களாகப் பாதிக்கப்பட்ட சனத்துக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்யிறத்துக்கான 'சிரான்' ஜயும் உருப்படவிடேல்லை, 'இடைக்காலத்தீர்வுதிட்ட"த்தையும் ஏற்றுக்கொள்ளேல்லை. இப்ப என்னடாண்டால கலைச்சுக்கலைச்சுப் பிடிச்சு கைகுடுக்கிறா. கோபால் பற்பொடிக்கு மாதிரி ஈ-யெண்டு போஸ் வேற குடுக்கிறா! இழப்பைப் பொறுத்தவரை இனசனம் பார்க்ககூடாது. உண்மையைச் சொல்லப் போனால் இன்னுமொரு தரையிறக்கத்தை அனுமதிக்கக்கூடாதெண்டு கரையெல்லாம் முகாம் அடிச்சு நிண்டு, அலையடிச்சதில செத்துப் போட்டினம். சண்டையில சாகிறது வேற, இது வேற! நினைச்சா ஏதோ மனசில வேதனையாகத்தான் கிடக்கும். எங்கட மனம் இப்படிப் பாடுபட, 'கோல்" ஜயும், ஹம்பான்ரோட்டை' யையும் காட்டி, அங்கதான் முழு இழப்பும் எண்டு சொல்லிறதோட, வாற உதவிப்பொருள்களில ஆறிலொரு பங்கை மட்டுந்தான் தாங்கள் எடுக்கிறம், மிச்சத்தையெல்லாம் புலியளிட்டைக் குடுகிறம் எண்டு அண்டாப்புளுகை எல்லோ அவிழ்த்து விடிறா. இஞ்சை அவையின்ர வந்து குவியிற லட்சணத்தை ஒருக்கால் பார்ப்போமெண்டால் பிபிசி இன்ரை கமராவயர் காலியில சிக்குப்பட்டுக் போய்க் கிடக்கு. எங்கட செய்தியாளர்மாரும். பேய்க்காயள். அன்றாடம் தேவையான பொருட்களெல்லாம் வன்னி மற்றும் யாழ்ப்பாணம் பகுதியில தவறாமல் கிடைக்கிறது. ஆனால் அது எங்கையிருந்து கிடைக்கிதெண்டு கேட்டால் 'அறிஞ்சு கொள்ளேலாமல்' கிடக்கிதாம். தயவுசெய்து உந்த 'விலாங்குபம்மாத்து' விளையாட்டுக்களை கொஞ்சம் ஒத்தியாவது போடுங்கோ! எங்கட தலையளைக் காட்டி எடுக்கிற பிச்சையை வைச்சே, எங்கட தலையளிலை குண்டுகளைக் கொட்டக்கூடிய 'நோணா"வின்ர நோகாத நகர்வுகளுக்கு தெரியாமல் கூட ஒத்துழைச்சு, பாதிக்கப்பட்ட சனத்தின்ர பழியை வாங்கிக்கொள்ள வேண்டாம்! அந்த வெள்ளைக் காரத்தங்கச்சி பிரான்சிஸ் ஹரிசன் தன்னோட வேலையைத்தரமாச் செய்யிது. அந்தளவுக்கொண்டாலும் செய்யாட்டி தமிழனா இருந்து என்ன அர்த்தம்? நீங்கள் சொல்லிறது வெறுமனே செய்தி மாத்திரமல்ல. இஞ்சை நொந்துபோயிருக்கிற எங்கட சனத்தின்ரை நிலைமை எண்டதையும் மனசில வைச்சுச் செயற்படுங்கோ! மற்றது இன்னுமொரு விசயம் நாங்கள் கி.பி. 2005 இலும். பிரபாகரனுக்குப்பின் 51ஆம் ஆண்டிலையும் இருகிறம். அப்பிடியிருக்க பன்னாட்டு சேவையில கிடைச்ச ஒரு வாய்ப்பில அதேன் இயக்கத்தைக் குறிப்பிடிறதுக்கு Rebel (கலகக்காரர்கள், கிளிர்ச்சியாளர்கள்) எண்டு பாவிக்கிற பழக்கம்? விடுதலைப்புலிகளின்ர மாவீரர் தினம் பற்றியும் குறிப்படிறனீங்கள். சனத்தின்ர விடிவு இயக்கத்துக்கான சர்வதேச அங்கீகாரத்திலையும் தான் தங்கியிருக்கு. அதுக்காக நாணொணடும் பரணிபாடச்சொல்லிச் சொல்லேல்லை. மனச் சாட்சியோட பாதிக்கப்படிற மக்களின்ர குரலா வெளியுலகத்துக்கு ஒலிக்கிற ஒரு பத்திரிகையாளனாக இருந்தால் போதும். தயவுசெய்து 'விறகு நெருப்பில' மட்டும் குளிர்காயவும்! மற்றது பாருங்கோ, உந்த உலக நாடெல்லாம் கண்ட கிண்ட பிரச்சினைக்கெல்லாம் விசாரணைக்கமிசனுள் வைப்பினம். எங்கட நாட்டிலையும் காணாமல் போன பட்டியலில் உப்பிடியானகன 'கமிசனுகள்" இருக்கினம். வெளிநாட்டுக்காரைக் கொண்ட அப்பிடி ஒண்டை வைச்சு, உந்த நிவாரணப்பொரட்கள பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய்ச் சேர்றதை உறுதி செய்யேலாதோ?
என்னவோங்கோ! முதல் தொங்கிக்கொண்டிருந்த 4.5 பில்லியன் உதவியையும் இப்படியாவது (இன,மத, போதமில்லாமல் எல்லாற்றை சடலங்களையும் வைச்சு, அழுது காட்டி) எடுத்து ராணுவத் தேவையளை பூர்த்திசெய்து, வீர 'துட்ட'கைமுனுக்களின் கைகளில நாட்டை விளையாடக்குடுக்கத்தான் அலுவல்கள் நடக்கிது. அதுக்காகத்தான் அந்தப் பொறுப்பும் ராணுவத்திட்டை குடுக்கப்பட்டிருக்கு. இப்போதைக்கு ஆமியின்ரை சாப்பாட்டுத் தேவையளையாவது நிவாரணத்தில இருந்து எடுத்தாலே, அவாவின்ரை கஜானாவின்ர கஷ்ரம் ஓரளவுக்கு எண்டாலும்தீரும் தானே! என்னவோ ஒண்டு சொல்லிறன். ஆராவது ஒரு நாடு நல்ல உள்ளத்தோட உதவி செய்ய முன்வந்தால், அதை ஏற்றுக் கொண்டு உறவாக இருக்கோணுமே தவிர அதுக்காக மற்றாக்களின்ரை கையளையே நம்பியிருக்கக்கூடாது. எங்களின்ரை பலம், நாங்கள் ஒவ்வொருவரும் தான்! அதிலையும் வெளியால வாழிற எங்கட சனம் தங்கட கடமைக்கு மேலாலயே செய்யிறது நீங்களெல்லாம் அறிஞ்சியிருபியள்தானே! சில ஆக்கள் நினைப்பீங்கள். 'ஏதோ தாய்-தகப்பனுகள் தங்கட மனச்சாட்சிக்குச் செய்யினம். அடுத்த தலைமுறைக்கு சமூகம் கைமாறேக்கிள்ளை நிலைமை மாறிடும்' எண்டு. அது பிழையுங்கோ! இன உணர்வு மனச்சாட்சியில தங்கியிருக்கேல்லை. இழக்கப்படிற ஒவ்வொரு ஈழத்தமிழன்ரை உயிராலையும், எங்கட தலைவரின்ரை நெறிகாட்டலாலையும் இன உணர்வு சகலதுமாய் வியாபிச்சிருக்கு. உதாரணத்துக்கு ஒரு சம்பவம் நான் சொல்லிறன். எனக்குத் தெரிஞ்ச ஒரு தம்பி வெளியால போய்க்கனகாலம் ஆயிட்டிது. அவருக்கு போகேக்கிள்ளை கைக்குழந்தையா ஒரு பொம்பிளைப்பிள்ளை இருந்தது. இப்ப கிட்டடியில அவற்றை இடத்தில இருந்து வேற ஒரு தம்பி வந்து என்னைச் சந்திச்சுது. உங்களுக்குத் தெரியும்தானே, உந்த விடுப்பக் கேட்கிறதெண்டால் எனக்கும் அல்வா மாதிரி எண்டு. அப்பை நானும் விளா வாரியா விசயங்களைக் கேட்டன். கீழ்ப்பந்திக்கு வாங்கோ, வடிவாய்ச் சொல்லிறன்!
கை;குழந்தையா போன் அந்தச் சின்னன் இப்ப பதினைச்சு வயசு, பத்தாம் வகுப்பு முடிச்சு, பல்-டொக்ரரா வரப்படிக்கிதாம். அப்படிப் படிக்கேக்கிள்ளை போக்குவரத்து, அதுஇதுககெண்டு உதவித்தொகை கிடைக்குமாம்! தன்ர முதலாவது சம்பளம் நாட்டுக்குத்தான் எண்டு சொல்லி, எடுத்து வைச்சுக்குடுத்திச்சாம்! தகப்பன் குடுக்கிறதுக்கு மேலாக அவாவும் தன்னோட கையிருப்பைப் பொறுத்து அப்படியே இயக்கத்துக்கும், புனர்வாழ்வுக்கழகத்துக்கும் தொடர்ந்தும் குடுத்துக் கொண்டு வாறாவாம்! உண்மையில அந்த வீட்டில வயசுக்கு வந்த இரண்டு பொம்பிளைப் பிள்ளையள் இருக்கினம். ஆம்பிளைப்பிள்ளையள் இல்லை. அப்படியிருந்தும் தங்களைப் பற்றி நினை;காமால் நாட்டைப்பற்றி நினைக்கிற அப்பிடியான சனம் இருக்கேக்கிள்ளை எங்களுக்கென்ன யோசனை!! அதுசரி, நீங்கள் யோசிக்கிறது. விளங்கிது. அங்கை எங்கட சனம் எப்பிடியெல்லாம் கஷ்டப்பட்டு உழைச்சுக் கொண்டிருக்க, இஞ்சை வேலைவெட்டி ஒண்டும் செய்யாமல், நோகாமல் இருந்து கொண்டு, ரெலிபோண் அடிச்சு காசனுப்பச் சொல்லிறதும், அந்தக் காசில் மோட்டர்சைக்கிள் வாங்கி பெற்றோலும் விட்டுக் கொண்டு, நேரகாலம் தெரியாமல் பெட்டையளுக்குப் பின்னால் சுத்திறதுகளும் எங்கட சந்ததியள் எண்ட தானே நீங்கள் யோசிக்கிறீயள். இனத்துக்கு அது குறுகிய காலப் பிரச்சினை பாருங்கோ! அவையளுக்கு கழுத்தை நீட்டிற ஆக்களுக்குத்தான் அது நீண்டகாலப் பிரச்சினை. ஆரோ சிலர் தங்களை ஏதோ பெரிய வைஜந்திமாலா, பட்டம்மா, சரோஜாதேவி.. சீச்சீ ! நான் என்ர காலத்திலேயே நிக்கிறன். இப்ப ஆரது? உந்த என்ன பேர்... அதுகும் அயத்துப் போச்சு.. ஆ.... சோனியா அகர் வாலோ.... ஆட்டுவாலோ எண்ட நினைப்பிலை, இரவல் பெற்றோலிலை ஓடிற TVS களுக்கு கழுத்தை நீட்டினால் அது தனிப்பட்ட பிரச்சினை தானேங்கோ. சே! எங்கையோ தொடங்கி புனர்வாழ்வு வரைக்கும் வந்திட்டன். எதிலை விட்டனான்? ஆ. அப்பிடி கனக்க வெளிநாட்டு விசயங்கள் வைச்சிருக்கிறன். பேந்து பேந்து தாறன்.
அப்பிடி ஆயிரம் விசயங்கள் இருக்கு கதைக்கிறதுக்கு பத்தாக் குறைக்கு எருமைமாடு வேற எனக்குக் கிட்ட வந்திட்டிது. ஜயோ.. என்ர பக்கத்துவீட்டுக்காரர் தங்களைத்தான் நான் சொல்லிறன் எண்டு கோவிக்கப்போயினம். சத்தியமா நான் அந்த எருமையளை சொல்லேல்லை. இயமன்ர எருமையைச் சொல்லிறன். சுனாமி அமளியோட பிறந்தநாளுகளையும் மறந்திட்டன். எத்தினையெண்டு முந்திச் சொன்னனான்?.... பாருங்கோ வயசு போறதால வாக்கும் மாறத்தொடங்கிட்டிது. ஆ.. எழுபத்தி மூண்டெண்டு சொன்ன ஞாபகம். அதோட ஓண்டைக் கூட்டிக் கொள்ளுங்கோ! அதாலதான் நேர காலத்துக்குள்ளை போய்ச்சேர்றதுக்கு முன்னால உங்களோட எவ்வள வைக்கதைக்கலாம் எண்டுதான் இறங்கிட்டன்.
நீங்கள் வேற பிரச்சினையளில் இருக்க. நான் வந்து என்ர கதையளைச் சொல்லிக்கொண்டிருக்கிறன. இண்டைக்கு முடிக்க முதல் ஒண்டைச்சொல்லிறன். நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்கவேண்டாம். முக்கியமாக ஒருத்தரும் நடந்ததை நினைச்சு கவலைப்பட்டக்கொண்டு இருக்கக்கூடாது. நாங்கள் ஒரு சின்ன இனமா இருக்கலாம். ஆனாலும் சிறுத்தை இனம் பாருங்கோ! மற்ற இனங்கள் மாதிரி இல்லாமல், உலகத்திலேயே எங்கட இனம் மட்டும் தான் இரண்டு சூரியனுக்கச் சொந்தக்காரர்.
இயற்கைச்சூரியன் ஒண்டு இனத்துக்கான சூரியன் மற்றவர். ஒண்டும் யோசிக்காமல் எதிர்காலத்தில் பற்றுறுதியோட இருக்கோணும். உலகநாடுகள் உதவுதோ இல்லையோ உங்கட இயக்கம் உங்களுக்காக இருக்கெண்டிறதை நினைவில வைச்சிருக்கோ! தலைவற்றை விருப்பப்படி தம்பி சூசை முன்னுக்கு நிண்டு எல்லாம் செய்து கொண்டிருக்கிறா முல்லைத்தீவுக்குப் போய்வாற சனங்கள் சொல்லுது. அதேமாதிரி மற்றமற்ற இடங்களிலையும் கெதியாத் தொடங்கிடும். நம்பிக்கையாக இருங்கோ! அதைவிட்டிட்டு ஆராவது இடம்பெயர்ந்தோருக்கான நிலையங்களில் கண்ணீர் வடிச்சபடி, மூக்கு உறிஞ்சிக்கொண்டு இருக்கிறதா கேள்ளிப்படோணும்... எனக்குக் கெட்டகோபம் வந்திடும். வந்து அலகு பேர்த்துப்போடுவன் பேர்த்து. சொல்லிப்போட்டன். ஓம்!
பொறுங்கோ! பொறுங்கோ! கடைசியாய்க் கிடைச்ச விசயங்கள் கொஞ்சம் கிடக்கு. ஆரோ ஒருத்தர் இந்தோனேசியாவில் நிண்டு சொல்லியிருக்கிறார். 'இனியெண்டாலும் 'ஆச்சே" இலையும், இலங்கையிலயும் பிரிவினை கோரிறதை விட்டிட்டு, சுமூகமாக வாழப்பார்ப்பினம் எண்ட நினைக்கிறேன்" எண்டு. இதென்ன கதை? நாங்களென்ன சுனாமிக்குத் தாற சோத்துப்பாசலுக்கும், சுடுதண்ணிப்போத்திலுக்காகவுமே போராடிறோம். எங்களை அவங்கள் மதிச்சா,இணைஞ்சிருப்பம். அதைவிட்டிட்டு மிதிக்க வெளிக்கிட்டா, பிரிஞ்சு போவோம்! அதைப் புரிஞ்சுகொள்ளாமல் உதென்ன கதை! இன்னுமொரு விசயம் பிள்ளையள். இதுவரை காலமா தமிழரின்ர இழப்புக்கள் வெளியுலகத்துக்குத் தெரியவந்தால்தான், அரசாங்கத்துக்கு சரியான சிக்கல்கள் வாறது. செம்மணிப்புதைகுழிகளையே நினைச்சுப்பாருங்கோவன்! ஆனால், இப்பயோ வெளியால தெரியரவரவரத்தான் அரசாங்கத்துக்கு வல சந்தோசமாம். ஒரேயடியா உத்தினை உயிருகளைக் கொடுத்த வேதனைக்கு மத்தியிலயும் இஞ்ச சனங்களும், இயக்கமும் சேர்ந்து மீட்டெடுத்த உடல்களுக்கு முன்னால நாங்கள் இடிஞ்சு போயிருக்க, தெற்கில அந்த கணக்கெடுப்பை வெளிநாடுகளுக்குக் காட்டியே காலியாக் கிடந்த கஜானாவை நிரப்பியத சந்திரிகா அரசு. உடலுகளைக் காட்டி உழைக்கிறதுக்கு வேற பேர் சொல்லிறவை. சே! அலை அடிச்சுப் பறிச்ச சனத்தின்ர வயித்தில அடிக்கிறதுகள் உருப்படாதுகள்.
வேற ஒரு விசயமும் எனக்கு துண்டற விளக்குதில்லை. எட ஈராக் விசயத்தில் தான் அமெரிக்கா சம்பந்தப்பட்டதால, ஆவெண்டு ஆராவது பார்த்துக்கொண்டிருந்தால், அதை ஏதோ ஏற்றுக்கொள்ளாமல். அது பெரிய சுப்பர் வல்லரசு. இதென்னடா வெண்டால் பொலிச்சி பிஸ்கற் மாதிரி ஒரு தீவு. அதிலை ஒரு பகுதியை மட்டும் கையில வைச்சிருக்கிற, பெரும்பாண்மையை இண்டுவரைக்கும் நிரூபிக்காத 25 கட்சியளின்ர கூட்டுக்கு ஒரு குடுமி. போயும் போயும் அப்பிடி யொண்டுக்கு ஒருத்தர் அடங்கித்தலையாட்டிருக்கிறார் எண்டால்... இதென்ன உலகம் பாருங்கோ? சமாதானத்திற்கான நோபல் பரிசு குடுத்தது உந்த அரசாங்கத்தோட சமாதானமாகப் போகிறதுக் கில்லை. இஞ்ச நாங்கள் ஒரேயடியாக ஆயிரமாயிரமாக் குடுத்துப்போட்டு இருக்கிறோம். கடைசி ஒருக்கால் எட்டிப்பார்த்து ஒரு ஆறுதல் வார்த்தை ஆவது!! கொலின் பவல் 4 மணித்தியாலத்தில பார்த்து முடிச்சதைப் பார்க்கிறதுக்கு 48 மணித்தியாலம் தேவையோ? தாங்கள் போய்கோவன் எண்டு சொல்லியும். அவர் தான் விரும்பவில்லை எண்டு ஜனாதிபதிச் செயலகம் விட்டதாகவும் தெரியேல்லை. நாட்டில சமாதானம் வந்தப் பிறகு எங்கட பக்கமும் வந்து ரொபி, சொக்ளேற் தாறதா சமாதானம் சொல்லியிருக்கிறீங்கள். சமாதானத்துக்கான நோபல் பரிசு உங்களுக்கு வலு பொருத்தம் தான்! ஆனாதாழ்மையான ஒரு வேண்டுகோள். தமிழ்ப்பிரதேசங்களைப் பார்க்கவே விடாத அரசாங்கம், நாளைக்குத் கிடைக்கிற உதவியை மட்டும் நியாயமா பகிர்த்தளிக்கும் எண்டு ஒருக்காலும் எதிர்பார்த்துப் போடாங்கோ!
ஈழநாதம்
'ஆராவது கண்ணீர் வடிச்சபடி மூக்கு உறிஞ்சிக்கொண்டு இருக்கிறதா கேள்ளிப்படோணும்... எனக்குக்கெட்ட கோபம் வந்திடும்..."
எல்லாருக்கும் வணக்கம்! வணக்கம் என்ன கனகாலமா ஆளையே காணேல்லை... வாகனக்காரங்கள் ஆராவது ஆத்திரத்தில் ஒரேயடியா அடிச்சு நொருக்கிப் போட்டாங்களாக்கும் எண்டு நினைச்சிருப்பியளாக்கும். என்னை அறிஞ்சவை தெரிஞ்சவையள் காணிற நேரமெல்லாம் கேட்பினம் 'என்ன அப்பு எழுதிறதை விட்டிட்டியள். நொட்டை தாங்கேலாமல் ஆராவது வெருட்டிப்போட்டாங்களோ? எண்டு. ம்...ம்... அடுத்தவங்கள் வெருட்ட மருண்டு போற ஆளில்லை இந்த ஏரம்பர்! எட நல்ல விசயத்தை துணிச்சு சொல்லிறதுக்கு, அதுகும் வன்னியில நான் ஏன் பயப்பிட வேணுமென்டு கேட்கிறன்.
உதுக்கு மேல நடந்ததைப் பற்றிக் கதைக்கிற தருணமும் இல்லை இப்ப. ஏனெண்டால் எங்கட இனம் பெரிசா ஒரு அழிவைச் சந்திச்சிருக்கு. கன சனத்தை நாங்கள் இழந்திருக்கிறோம்.! சொத்த, பத்தெண்டு காலாகாலமாச் சேர்த்ததையும் சுனாமி அள்ளிக்கொண்டு போட்டிது. அவனவன் அங்கையிஞ்சை உதவி செய்ய ஆலாப்பறக்கிற நேரத்தில எங்கட 'சிங்கிடி நோணா" தமிழாக்களின்ரை சடலங்களுக்குப் பக்கத்தில நிண்டுகொண்டு, போறவாற நாடுகளையெல்லாம் இழுத்திழுத்து ஒப்பாரி வைச்சுக் கொண்டிருக்கிறா. என்னடா! எங்கையிருந்து உப்பிடி ஒரு ஞானம் பிய்ச்சுக் கொண்டு வந்திச்செண்டு பார்த்தால், பிணங்களின்ரை தொகையைக் காட்டி சர்வதேச சமூகத்துக்கு முன்னால பிழைப்பு நடத்தலாம் எண்டிற கேவலமான புத்திதான் பாருங்கோ அது! சே.... உதுகும் ஒரு பிழைப்பே! எந்தக்கேவலமான பிழைப்பும், உந்தளவுக்கு கேவலம் இல்லை! தங்கட இனவாதப் போக்கின்ரை வன்முறையால கன வருசங்களாகப் பாதிக்கப்பட்ட சனத்துக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்யிறத்துக்கான 'சிரான்' ஜயும் உருப்படவிடேல்லை, 'இடைக்காலத்தீர்வுதிட்ட"த்தையும் ஏற்றுக்கொள்ளேல்லை. இப்ப என்னடாண்டால கலைச்சுக்கலைச்சுப் பிடிச்சு கைகுடுக்கிறா. கோபால் பற்பொடிக்கு மாதிரி ஈ-யெண்டு போஸ் வேற குடுக்கிறா! இழப்பைப் பொறுத்தவரை இனசனம் பார்க்ககூடாது. உண்மையைச் சொல்லப் போனால் இன்னுமொரு தரையிறக்கத்தை அனுமதிக்கக்கூடாதெண்டு கரையெல்லாம் முகாம் அடிச்சு நிண்டு, அலையடிச்சதில செத்துப் போட்டினம். சண்டையில சாகிறது வேற, இது வேற! நினைச்சா ஏதோ மனசில வேதனையாகத்தான் கிடக்கும். எங்கட மனம் இப்படிப் பாடுபட, 'கோல்" ஜயும், ஹம்பான்ரோட்டை' யையும் காட்டி, அங்கதான் முழு இழப்பும் எண்டு சொல்லிறதோட, வாற உதவிப்பொருள்களில ஆறிலொரு பங்கை மட்டுந்தான் தாங்கள் எடுக்கிறம், மிச்சத்தையெல்லாம் புலியளிட்டைக் குடுகிறம் எண்டு அண்டாப்புளுகை எல்லோ அவிழ்த்து விடிறா. இஞ்சை அவையின்ர வந்து குவியிற லட்சணத்தை ஒருக்கால் பார்ப்போமெண்டால் பிபிசி இன்ரை கமராவயர் காலியில சிக்குப்பட்டுக் போய்க் கிடக்கு. எங்கட செய்தியாளர்மாரும். பேய்க்காயள். அன்றாடம் தேவையான பொருட்களெல்லாம் வன்னி மற்றும் யாழ்ப்பாணம் பகுதியில தவறாமல் கிடைக்கிறது. ஆனால் அது எங்கையிருந்து கிடைக்கிதெண்டு கேட்டால் 'அறிஞ்சு கொள்ளேலாமல்' கிடக்கிதாம். தயவுசெய்து உந்த 'விலாங்குபம்மாத்து' விளையாட்டுக்களை கொஞ்சம் ஒத்தியாவது போடுங்கோ! எங்கட தலையளைக் காட்டி எடுக்கிற பிச்சையை வைச்சே, எங்கட தலையளிலை குண்டுகளைக் கொட்டக்கூடிய 'நோணா"வின்ர நோகாத நகர்வுகளுக்கு தெரியாமல் கூட ஒத்துழைச்சு, பாதிக்கப்பட்ட சனத்தின்ர பழியை வாங்கிக்கொள்ள வேண்டாம்! அந்த வெள்ளைக் காரத்தங்கச்சி பிரான்சிஸ் ஹரிசன் தன்னோட வேலையைத்தரமாச் செய்யிது. அந்தளவுக்கொண்டாலும் செய்யாட்டி தமிழனா இருந்து என்ன அர்த்தம்? நீங்கள் சொல்லிறது வெறுமனே செய்தி மாத்திரமல்ல. இஞ்சை நொந்துபோயிருக்கிற எங்கட சனத்தின்ரை நிலைமை எண்டதையும் மனசில வைச்சுச் செயற்படுங்கோ! மற்றது இன்னுமொரு விசயம் நாங்கள் கி.பி. 2005 இலும். பிரபாகரனுக்குப்பின் 51ஆம் ஆண்டிலையும் இருகிறம். அப்பிடியிருக்க பன்னாட்டு சேவையில கிடைச்ச ஒரு வாய்ப்பில அதேன் இயக்கத்தைக் குறிப்பிடிறதுக்கு Rebel (கலகக்காரர்கள், கிளிர்ச்சியாளர்கள்) எண்டு பாவிக்கிற பழக்கம்? விடுதலைப்புலிகளின்ர மாவீரர் தினம் பற்றியும் குறிப்படிறனீங்கள். சனத்தின்ர விடிவு இயக்கத்துக்கான சர்வதேச அங்கீகாரத்திலையும் தான் தங்கியிருக்கு. அதுக்காக நாணொணடும் பரணிபாடச்சொல்லிச் சொல்லேல்லை. மனச் சாட்சியோட பாதிக்கப்படிற மக்களின்ர குரலா வெளியுலகத்துக்கு ஒலிக்கிற ஒரு பத்திரிகையாளனாக இருந்தால் போதும். தயவுசெய்து 'விறகு நெருப்பில' மட்டும் குளிர்காயவும்! மற்றது பாருங்கோ, உந்த உலக நாடெல்லாம் கண்ட கிண்ட பிரச்சினைக்கெல்லாம் விசாரணைக்கமிசனுள் வைப்பினம். எங்கட நாட்டிலையும் காணாமல் போன பட்டியலில் உப்பிடியானகன 'கமிசனுகள்" இருக்கினம். வெளிநாட்டுக்காரைக் கொண்ட அப்பிடி ஒண்டை வைச்சு, உந்த நிவாரணப்பொரட்கள பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய்ச் சேர்றதை உறுதி செய்யேலாதோ?
என்னவோங்கோ! முதல் தொங்கிக்கொண்டிருந்த 4.5 பில்லியன் உதவியையும் இப்படியாவது (இன,மத, போதமில்லாமல் எல்லாற்றை சடலங்களையும் வைச்சு, அழுது காட்டி) எடுத்து ராணுவத் தேவையளை பூர்த்திசெய்து, வீர 'துட்ட'கைமுனுக்களின் கைகளில நாட்டை விளையாடக்குடுக்கத்தான் அலுவல்கள் நடக்கிது. அதுக்காகத்தான் அந்தப் பொறுப்பும் ராணுவத்திட்டை குடுக்கப்பட்டிருக்கு. இப்போதைக்கு ஆமியின்ரை சாப்பாட்டுத் தேவையளையாவது நிவாரணத்தில இருந்து எடுத்தாலே, அவாவின்ரை கஜானாவின்ர கஷ்ரம் ஓரளவுக்கு எண்டாலும்தீரும் தானே! என்னவோ ஒண்டு சொல்லிறன். ஆராவது ஒரு நாடு நல்ல உள்ளத்தோட உதவி செய்ய முன்வந்தால், அதை ஏற்றுக் கொண்டு உறவாக இருக்கோணுமே தவிர அதுக்காக மற்றாக்களின்ரை கையளையே நம்பியிருக்கக்கூடாது. எங்களின்ரை பலம், நாங்கள் ஒவ்வொருவரும் தான்! அதிலையும் வெளியால வாழிற எங்கட சனம் தங்கட கடமைக்கு மேலாலயே செய்யிறது நீங்களெல்லாம் அறிஞ்சியிருபியள்தானே! சில ஆக்கள் நினைப்பீங்கள். 'ஏதோ தாய்-தகப்பனுகள் தங்கட மனச்சாட்சிக்குச் செய்யினம். அடுத்த தலைமுறைக்கு சமூகம் கைமாறேக்கிள்ளை நிலைமை மாறிடும்' எண்டு. அது பிழையுங்கோ! இன உணர்வு மனச்சாட்சியில தங்கியிருக்கேல்லை. இழக்கப்படிற ஒவ்வொரு ஈழத்தமிழன்ரை உயிராலையும், எங்கட தலைவரின்ரை நெறிகாட்டலாலையும் இன உணர்வு சகலதுமாய் வியாபிச்சிருக்கு. உதாரணத்துக்கு ஒரு சம்பவம் நான் சொல்லிறன். எனக்குத் தெரிஞ்ச ஒரு தம்பி வெளியால போய்க்கனகாலம் ஆயிட்டிது. அவருக்கு போகேக்கிள்ளை கைக்குழந்தையா ஒரு பொம்பிளைப்பிள்ளை இருந்தது. இப்ப கிட்டடியில அவற்றை இடத்தில இருந்து வேற ஒரு தம்பி வந்து என்னைச் சந்திச்சுது. உங்களுக்குத் தெரியும்தானே, உந்த விடுப்பக் கேட்கிறதெண்டால் எனக்கும் அல்வா மாதிரி எண்டு. அப்பை நானும் விளா வாரியா விசயங்களைக் கேட்டன். கீழ்ப்பந்திக்கு வாங்கோ, வடிவாய்ச் சொல்லிறன்!
கை;குழந்தையா போன் அந்தச் சின்னன் இப்ப பதினைச்சு வயசு, பத்தாம் வகுப்பு முடிச்சு, பல்-டொக்ரரா வரப்படிக்கிதாம். அப்படிப் படிக்கேக்கிள்ளை போக்குவரத்து, அதுஇதுககெண்டு உதவித்தொகை கிடைக்குமாம்! தன்ர முதலாவது சம்பளம் நாட்டுக்குத்தான் எண்டு சொல்லி, எடுத்து வைச்சுக்குடுத்திச்சாம்! தகப்பன் குடுக்கிறதுக்கு மேலாக அவாவும் தன்னோட கையிருப்பைப் பொறுத்து அப்படியே இயக்கத்துக்கும், புனர்வாழ்வுக்கழகத்துக்கும் தொடர்ந்தும் குடுத்துக் கொண்டு வாறாவாம்! உண்மையில அந்த வீட்டில வயசுக்கு வந்த இரண்டு பொம்பிளைப் பிள்ளையள் இருக்கினம். ஆம்பிளைப்பிள்ளையள் இல்லை. அப்படியிருந்தும் தங்களைப் பற்றி நினை;காமால் நாட்டைப்பற்றி நினைக்கிற அப்பிடியான சனம் இருக்கேக்கிள்ளை எங்களுக்கென்ன யோசனை!! அதுசரி, நீங்கள் யோசிக்கிறது. விளங்கிது. அங்கை எங்கட சனம் எப்பிடியெல்லாம் கஷ்டப்பட்டு உழைச்சுக் கொண்டிருக்க, இஞ்சை வேலைவெட்டி ஒண்டும் செய்யாமல், நோகாமல் இருந்து கொண்டு, ரெலிபோண் அடிச்சு காசனுப்பச் சொல்லிறதும், அந்தக் காசில் மோட்டர்சைக்கிள் வாங்கி பெற்றோலும் விட்டுக் கொண்டு, நேரகாலம் தெரியாமல் பெட்டையளுக்குப் பின்னால் சுத்திறதுகளும் எங்கட சந்ததியள் எண்ட தானே நீங்கள் யோசிக்கிறீயள். இனத்துக்கு அது குறுகிய காலப் பிரச்சினை பாருங்கோ! அவையளுக்கு கழுத்தை நீட்டிற ஆக்களுக்குத்தான் அது நீண்டகாலப் பிரச்சினை. ஆரோ சிலர் தங்களை ஏதோ பெரிய வைஜந்திமாலா, பட்டம்மா, சரோஜாதேவி.. சீச்சீ ! நான் என்ர காலத்திலேயே நிக்கிறன். இப்ப ஆரது? உந்த என்ன பேர்... அதுகும் அயத்துப் போச்சு.. ஆ.... சோனியா அகர் வாலோ.... ஆட்டுவாலோ எண்ட நினைப்பிலை, இரவல் பெற்றோலிலை ஓடிற TVS களுக்கு கழுத்தை நீட்டினால் அது தனிப்பட்ட பிரச்சினை தானேங்கோ. சே! எங்கையோ தொடங்கி புனர்வாழ்வு வரைக்கும் வந்திட்டன். எதிலை விட்டனான்? ஆ. அப்பிடி கனக்க வெளிநாட்டு விசயங்கள் வைச்சிருக்கிறன். பேந்து பேந்து தாறன்.
அப்பிடி ஆயிரம் விசயங்கள் இருக்கு கதைக்கிறதுக்கு பத்தாக் குறைக்கு எருமைமாடு வேற எனக்குக் கிட்ட வந்திட்டிது. ஜயோ.. என்ர பக்கத்துவீட்டுக்காரர் தங்களைத்தான் நான் சொல்லிறன் எண்டு கோவிக்கப்போயினம். சத்தியமா நான் அந்த எருமையளை சொல்லேல்லை. இயமன்ர எருமையைச் சொல்லிறன். சுனாமி அமளியோட பிறந்தநாளுகளையும் மறந்திட்டன். எத்தினையெண்டு முந்திச் சொன்னனான்?.... பாருங்கோ வயசு போறதால வாக்கும் மாறத்தொடங்கிட்டிது. ஆ.. எழுபத்தி மூண்டெண்டு சொன்ன ஞாபகம். அதோட ஓண்டைக் கூட்டிக் கொள்ளுங்கோ! அதாலதான் நேர காலத்துக்குள்ளை போய்ச்சேர்றதுக்கு முன்னால உங்களோட எவ்வள வைக்கதைக்கலாம் எண்டுதான் இறங்கிட்டன்.
நீங்கள் வேற பிரச்சினையளில் இருக்க. நான் வந்து என்ர கதையளைச் சொல்லிக்கொண்டிருக்கிறன. இண்டைக்கு முடிக்க முதல் ஒண்டைச்சொல்லிறன். நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்கவேண்டாம். முக்கியமாக ஒருத்தரும் நடந்ததை நினைச்சு கவலைப்பட்டக்கொண்டு இருக்கக்கூடாது. நாங்கள் ஒரு சின்ன இனமா இருக்கலாம். ஆனாலும் சிறுத்தை இனம் பாருங்கோ! மற்ற இனங்கள் மாதிரி இல்லாமல், உலகத்திலேயே எங்கட இனம் மட்டும் தான் இரண்டு சூரியனுக்கச் சொந்தக்காரர்.
இயற்கைச்சூரியன் ஒண்டு இனத்துக்கான சூரியன் மற்றவர். ஒண்டும் யோசிக்காமல் எதிர்காலத்தில் பற்றுறுதியோட இருக்கோணும். உலகநாடுகள் உதவுதோ இல்லையோ உங்கட இயக்கம் உங்களுக்காக இருக்கெண்டிறதை நினைவில வைச்சிருக்கோ! தலைவற்றை விருப்பப்படி தம்பி சூசை முன்னுக்கு நிண்டு எல்லாம் செய்து கொண்டிருக்கிறா முல்லைத்தீவுக்குப் போய்வாற சனங்கள் சொல்லுது. அதேமாதிரி மற்றமற்ற இடங்களிலையும் கெதியாத் தொடங்கிடும். நம்பிக்கையாக இருங்கோ! அதைவிட்டிட்டு ஆராவது இடம்பெயர்ந்தோருக்கான நிலையங்களில் கண்ணீர் வடிச்சபடி, மூக்கு உறிஞ்சிக்கொண்டு இருக்கிறதா கேள்ளிப்படோணும்... எனக்குக் கெட்டகோபம் வந்திடும். வந்து அலகு பேர்த்துப்போடுவன் பேர்த்து. சொல்லிப்போட்டன். ஓம்!
பொறுங்கோ! பொறுங்கோ! கடைசியாய்க் கிடைச்ச விசயங்கள் கொஞ்சம் கிடக்கு. ஆரோ ஒருத்தர் இந்தோனேசியாவில் நிண்டு சொல்லியிருக்கிறார். 'இனியெண்டாலும் 'ஆச்சே" இலையும், இலங்கையிலயும் பிரிவினை கோரிறதை விட்டிட்டு, சுமூகமாக வாழப்பார்ப்பினம் எண்ட நினைக்கிறேன்" எண்டு. இதென்ன கதை? நாங்களென்ன சுனாமிக்குத் தாற சோத்துப்பாசலுக்கும், சுடுதண்ணிப்போத்திலுக்காகவுமே போராடிறோம். எங்களை அவங்கள் மதிச்சா,இணைஞ்சிருப்பம். அதைவிட்டிட்டு மிதிக்க வெளிக்கிட்டா, பிரிஞ்சு போவோம்! அதைப் புரிஞ்சுகொள்ளாமல் உதென்ன கதை! இன்னுமொரு விசயம் பிள்ளையள். இதுவரை காலமா தமிழரின்ர இழப்புக்கள் வெளியுலகத்துக்குத் தெரியவந்தால்தான், அரசாங்கத்துக்கு சரியான சிக்கல்கள் வாறது. செம்மணிப்புதைகுழிகளையே நினைச்சுப்பாருங்கோவன்! ஆனால், இப்பயோ வெளியால தெரியரவரவரத்தான் அரசாங்கத்துக்கு வல சந்தோசமாம். ஒரேயடியா உத்தினை உயிருகளைக் கொடுத்த வேதனைக்கு மத்தியிலயும் இஞ்ச சனங்களும், இயக்கமும் சேர்ந்து மீட்டெடுத்த உடல்களுக்கு முன்னால நாங்கள் இடிஞ்சு போயிருக்க, தெற்கில அந்த கணக்கெடுப்பை வெளிநாடுகளுக்குக் காட்டியே காலியாக் கிடந்த கஜானாவை நிரப்பியத சந்திரிகா அரசு. உடலுகளைக் காட்டி உழைக்கிறதுக்கு வேற பேர் சொல்லிறவை. சே! அலை அடிச்சுப் பறிச்ச சனத்தின்ர வயித்தில அடிக்கிறதுகள் உருப்படாதுகள்.
வேற ஒரு விசயமும் எனக்கு துண்டற விளக்குதில்லை. எட ஈராக் விசயத்தில் தான் அமெரிக்கா சம்பந்தப்பட்டதால, ஆவெண்டு ஆராவது பார்த்துக்கொண்டிருந்தால், அதை ஏதோ ஏற்றுக்கொள்ளாமல். அது பெரிய சுப்பர் வல்லரசு. இதென்னடா வெண்டால் பொலிச்சி பிஸ்கற் மாதிரி ஒரு தீவு. அதிலை ஒரு பகுதியை மட்டும் கையில வைச்சிருக்கிற, பெரும்பாண்மையை இண்டுவரைக்கும் நிரூபிக்காத 25 கட்சியளின்ர கூட்டுக்கு ஒரு குடுமி. போயும் போயும் அப்பிடி யொண்டுக்கு ஒருத்தர் அடங்கித்தலையாட்டிருக்கிறார் எண்டால்... இதென்ன உலகம் பாருங்கோ? சமாதானத்திற்கான நோபல் பரிசு குடுத்தது உந்த அரசாங்கத்தோட சமாதானமாகப் போகிறதுக் கில்லை. இஞ்ச நாங்கள் ஒரேயடியாக ஆயிரமாயிரமாக் குடுத்துப்போட்டு இருக்கிறோம். கடைசி ஒருக்கால் எட்டிப்பார்த்து ஒரு ஆறுதல் வார்த்தை ஆவது!! கொலின் பவல் 4 மணித்தியாலத்தில பார்த்து முடிச்சதைப் பார்க்கிறதுக்கு 48 மணித்தியாலம் தேவையோ? தாங்கள் போய்கோவன் எண்டு சொல்லியும். அவர் தான் விரும்பவில்லை எண்டு ஜனாதிபதிச் செயலகம் விட்டதாகவும் தெரியேல்லை. நாட்டில சமாதானம் வந்தப் பிறகு எங்கட பக்கமும் வந்து ரொபி, சொக்ளேற் தாறதா சமாதானம் சொல்லியிருக்கிறீங்கள். சமாதானத்துக்கான நோபல் பரிசு உங்களுக்கு வலு பொருத்தம் தான்! ஆனாதாழ்மையான ஒரு வேண்டுகோள். தமிழ்ப்பிரதேசங்களைப் பார்க்கவே விடாத அரசாங்கம், நாளைக்குத் கிடைக்கிற உதவியை மட்டும் நியாயமா பகிர்த்தளிக்கும் எண்டு ஒருக்காலும் எதிர்பார்த்துப் போடாங்கோ!
ஈழநாதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

