02-01-2005, 02:53 PM
மொழி ஒரு தேசியத்தின் மூச்சு..... அயர்லாந்து மக்களின் போராட்டத்தில் இருந்து ஒரு பார்வையும் சில பதிவுகளும்
ம.தனபாலசிங்கம் (அவுஸ்திரேலியா)
அயர்லாந்து மக்கள் தமது சுதந்திரத்திற்காக பல நூற்றாண்டுகளாகப் போராடினார்கள். இந்தப் போராட்டம் பல சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்ததை நாம் அறிவோம். இந்தப் போராட்டத்தின் ஒரு கட்டமாக 24 ஏப்பிரல் 1916 இல் அயர்லாந்து குடியரசுப் பிரகடனம் செய்யப்பட்டது. இதனை சிலுவையில் மரணித்த யேசநாதர் உயிர்த்து எழுந்த ஈஸ்ரருடன் தொடர்பு படுத்தி ஈஸ்ரர் எழுச்சி என்பர்.
இதில் பங்குகொண்ட புரட்சியாளர்களுள் பற்றிக் பியேஸ் இயேம்ஸ் கொனொலி மற்றும் பன்னிருவர் இராணுவ சட்டத்தின் கீழ் சுட்டுக்கொல்லப்பட்டனர். பற்றிக் பியேஸ் மே மாதம் 3ம் திகதி 1916ம் ஆண்டு அதிகாலை 3.30 மணியில் சுட்டு கொல்லப்பட்டார்.
குற்றவாளிக் கூண்டில் இருந்து மரணத்துக்கு முகம் கொடுத்த வேளையிலும் பியேஸ் தன்னை தண்டித்தோரை பார்த்து
'நாங்கள் தோற்றது போல் உள்ளது. நாங்கள் தோற்கவில்லை. போராட மறுப்பது தோற்பதாகும். போராடுவது என்பது வெற்றியாகும். எனக்கூறினான்."
போராட்டத்தின் வளர்ச்சியின் இன்னொரு படியாக 1920 இல் னுரடிடin தலைநகராகக் கொண்ட அயர்லாந்தின் பெரும்பகுதிகளுக்கு ஒரு பாராளுமன்றமும் டீநடகயளவ இனை தலைநகராகக் கொண்ட ஆறு மாவட்டங்களுக்கு ஒரு பாராளுமன்றமும் ஏற்படுத்தப்பட்டது.
இந்தப் பிரிவினையை சின் பென் (நாம் எமக்கு என்னும் அரசியல் இயக்கம்) ஏற்கமறுத்தனர். உள்நாட்டு யுத்தம் தொடர்ந்தபோதும் அயர்லாந்து தேசத்திற்கான அங்கீகாரத்தை டிசம்பர் 5ää 1922 இல் பிரித்தானிய பாராளுமன்றம் அங்கீகரித்தது.
கெரிலா கொமாண்டராகää அரசியல் கைதியாகää வெற்றிகண்ட புரட்சிவாதியாகää உள்நாட்டு யுத்தத்தில் தன்பக்கத்தில் திடமாக நின்ற எட்மொன் டி வலெறா (1882 1975) 1932 இல் ஒரு அரசாங்கத்தை அமைத்தார்.
இதன் பிரதம மந்திரியாக இருந்து படிப்படியாக பிரித்தானியாவுடனான தொடர்புகளை துண்டித்தார். முடிவாக 1937 இல் புதிய அரசியல் யாப்புடன் இறைமை கொண்ட ஜ்றிஸ் சனநாயக அரசு உருவாக்கப்பட்டது.
இந்த அரசு அயிறிஸ் தேசியத்தையும் கத்தோலிக்கத்தையும் தமது தனித்துவத்தை நிலைநிறுத்த இணைத்தது என சுழல குழளவநச என்னும் அயர்லாந்து வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுவர்.
அயர்லாந்து தேசம் எப்படி அமையவேண்டும் எனக் கனவுகண்ட டி வலெறா 'நாங்கள் விரும்பும் இலட்சிய அயர்லாந்தின் மக்கள் மண்ணில் நல்லவண்ணம் வாழ்வதற்காக மாத்திரமே பொருட்செல்வத்தை மதிப்பர்ää இவர்கள் குறைந்த சௌகரியங்களுடன் திருப்திகொண்டு தமது ஓய்வு நேரத்தை உயர்வான சிந்தனைகளுக்கு அர்ப்பணிப்பர்.
தேசத்தின் நாட்டுப்புறங்கள் கலகலப்பான குடிமனைகளையும்ää அதன் வயல்களிலும் கிராமங்களிலும் குத்தல்ää இடித்தல்ää கொழித்தல்ää புடைத்தலென படைப்போசையின் ஒலியும்ää குறும்பான சிறுவர்களின் குதூகலமும்ää உடற்பலம் மிக்க வாலிபத்தின் போட்டிகளும்ää வனிதையரின் சிரிப்பொலியும்ää நெருப்பு புகையும் அடுப்பங்கரை முதுமையின் அழகு கொட்டும் ஞானத்தின் அரங்காகவும் இருக்கும் எனக் கூறுகின்றார்.
டி வலெறா கூறும் உயர்ந்த சிந்தனைகளுள் மொழி முதல் இடத்தை பெறுகின்றது. (அவர் குறிக்கும் மொழி தொன்மையும்ää செம்மையும் கொண்ட அயர்லாந்தின் ஹேலிக் மொழியாகும்) எமக்கு எமது மொழிக்கு ஈடாக வேறு எந்த மொழியும் இல்லை. இது எங்களுடையதுää எங்களுக்கு மாத்திரமே. இது வெறும் குறியீட்டிற்கு அப்பாற்பட்டது. இது எமது தேசியத்தின் மிக முக்கியமான உறுப்பாகும்.
ஆயிரம்ää ஆயிரம் ஆண்டு காலமாக எமது மூதாதையினரின் சிந்தனைகளில் இது செப்பனிடப்பட்டது. அவர்களின் சிந்தனைகளும்ää அனுபவங்களும் இந்த மொழியில்தான் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.
அயர்லாந்தில் இன்று பேசப்படும் இந்த மொழி எமது மூதாதையர் பேசிய மொழியே. மூவாயிரம் ஆண்டுகால எமது வரலாற்றின் வாகனமாக விளங்கும் இந்த மொழி மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டதாகும்.
ஆழமான அனுபவ ஞானங்களையும்ää வாழ்வுபற்றிய பார்வையில் கிறிஸ்தவ ஆத்மானுபவங்களையும் சுமந்து நிற்கும் ஒரு தத்துவத்தின் வெளிப்பாடே எமது மொழி. இதனை இழப்பது என்பதை வெறும் கனவாகக் காண்பதுகூட தாங்கமுடியாததாகும். இதனை விட்டுப் பிரிவது என்பது எம்மில் இருந்து ஒரு பெரும் பாகத்தை விட்டுப் பிரிவது போலாகும். எமது பாரம்பரியத்தின் திறவுகோலை இழப்பது போலாகும். மரத்தில் இருந்து அதன் ஆணிவேரை தகர்ப்பதற்கு சமனாகும். மொழியின் இழப்புடன் பாதித்தேசத்திற்கு மேல் நாம் என்றுமே கட்டிஎழுப்ப கனவுகாண முடியாது" எனக்குறிப்பிடுகின்றார்.
இன்று அயர்லாந்தின் அரச கல்விக்கூடங்கள் யாவற்றிலும் அயர்லாந்து மொழி கற்பிக்கப்படுகின்றது. அத்தோடு சில அரச நிர்வாகப் பதவிகளுக்கு இந்த மொழி அறிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி போன்று தொன்மையும் செம்மையும் கொண்ட மொழியாக இருப்பினும்ää எமது சங்கப் பாணர்களை ஒத்த பாடுனர்களைக் கொண்ட மொழியாக இருப்பினும்ää தீதும் நன்றும் பிறர்தர வாராää என்பதையொத்த சான்றோர் வாக்கியங்களைக் கொண்டிருப்பினும்ää நூற்றாண்டுகால அந்நியர் ஆட்சியினால் அயர்லாந்து மொழி அதன் பாவனைத் தொடர்ச்சியை இழந்து விட்டது.
நூற்றாண்டுகாலமான ஆங்கிலமயமாக்கலும்ää எலிசபெத்தியரின் அமுக்கங்களும்ää அயர்லாந்து மொழியினை புறக்கணித்தன.
சுதந்திரப் போராட்டத்தின் உடன் நிகழ்ச்சியாக ஏற்பட்ட தேசியமும்ää மறுமலர்ச்சியும் அயர்லாந்து மொழிக்கு இன்று புதிய சக்தியை அளித்துள்ளது. இருப்பினும் ஒரு மொழியின் இருப்பு அதன் தொன்மையில் அல்ல அதனது தொடர்ச்சியில் தங்கியுள்ளது என்பதை அயர்லாந்து மொழியின் இன்றைய நிலைப்பாடு காட்டி நிற்கின்றது.
சீரிளமைத்திறம் கொண்ட தமிழ் மொழியோ அந்நியர் ஆட்சியின் அமுக்கங்களையும் தாண்டிää சிங்களம் மட்டும் என்ற கோசங்களுக்கும் மசுங்காதுää சுயநிர்ணயப் போராட்டம் வரித்துக்கொண்டுள்ள போர்க்குணத்தாலும்ää போரியலாலும் புதிய வீரியத்தை பெற்றுள்ளது எனலாம்.
புலம்பெயர்ந்த தமிழர்களின் புதிய அனுபவங்களும் தமிழ் இலக்கியத்திற்கு புதிய பாடு பொருட்களையும் அளித்துள்ளது எனலாம்.
பனையின் கீழ் வாழ்ந்தவர்கள் பனியின் கீழ் பெறும் அனுபவங்களும்ää போராளிக்கலைஞர்களின் ஆக்க இலக்கிய படைப்புக்களும் எமது மொழிக்கு புதியவை. இவற்றை உள்வாங்கி தமிழ் தேசியத்தின் மூச்சாக விளங்கும் எமது மொழி இன்றைய உலகமயமாக்கலுக்கும் வணிகமொழிக்கும் முகம் கொடுக்க நாம் உழைத்திடவேண்டும்.
'நன்மையும் அறிவும் எத்திசைத்தாயினும் யாவரே காட்டினும் மற்றவை தழுவி வாழ்வீராயின் அச்சமொன்றில்லை.." என்ற பாரதியின் குரல் என் காதில் விழுகின்றது.
ம.தனபாலசிங்கம் (அவுஸ்திரேலியா)
அயர்லாந்து மக்கள் தமது சுதந்திரத்திற்காக பல நூற்றாண்டுகளாகப் போராடினார்கள். இந்தப் போராட்டம் பல சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்ததை நாம் அறிவோம். இந்தப் போராட்டத்தின் ஒரு கட்டமாக 24 ஏப்பிரல் 1916 இல் அயர்லாந்து குடியரசுப் பிரகடனம் செய்யப்பட்டது. இதனை சிலுவையில் மரணித்த யேசநாதர் உயிர்த்து எழுந்த ஈஸ்ரருடன் தொடர்பு படுத்தி ஈஸ்ரர் எழுச்சி என்பர்.
இதில் பங்குகொண்ட புரட்சியாளர்களுள் பற்றிக் பியேஸ் இயேம்ஸ் கொனொலி மற்றும் பன்னிருவர் இராணுவ சட்டத்தின் கீழ் சுட்டுக்கொல்லப்பட்டனர். பற்றிக் பியேஸ் மே மாதம் 3ம் திகதி 1916ம் ஆண்டு அதிகாலை 3.30 மணியில் சுட்டு கொல்லப்பட்டார்.
குற்றவாளிக் கூண்டில் இருந்து மரணத்துக்கு முகம் கொடுத்த வேளையிலும் பியேஸ் தன்னை தண்டித்தோரை பார்த்து
'நாங்கள் தோற்றது போல் உள்ளது. நாங்கள் தோற்கவில்லை. போராட மறுப்பது தோற்பதாகும். போராடுவது என்பது வெற்றியாகும். எனக்கூறினான்."
போராட்டத்தின் வளர்ச்சியின் இன்னொரு படியாக 1920 இல் னுரடிடin தலைநகராகக் கொண்ட அயர்லாந்தின் பெரும்பகுதிகளுக்கு ஒரு பாராளுமன்றமும் டீநடகயளவ இனை தலைநகராகக் கொண்ட ஆறு மாவட்டங்களுக்கு ஒரு பாராளுமன்றமும் ஏற்படுத்தப்பட்டது.
இந்தப் பிரிவினையை சின் பென் (நாம் எமக்கு என்னும் அரசியல் இயக்கம்) ஏற்கமறுத்தனர். உள்நாட்டு யுத்தம் தொடர்ந்தபோதும் அயர்லாந்து தேசத்திற்கான அங்கீகாரத்தை டிசம்பர் 5ää 1922 இல் பிரித்தானிய பாராளுமன்றம் அங்கீகரித்தது.
கெரிலா கொமாண்டராகää அரசியல் கைதியாகää வெற்றிகண்ட புரட்சிவாதியாகää உள்நாட்டு யுத்தத்தில் தன்பக்கத்தில் திடமாக நின்ற எட்மொன் டி வலெறா (1882 1975) 1932 இல் ஒரு அரசாங்கத்தை அமைத்தார்.
இதன் பிரதம மந்திரியாக இருந்து படிப்படியாக பிரித்தானியாவுடனான தொடர்புகளை துண்டித்தார். முடிவாக 1937 இல் புதிய அரசியல் யாப்புடன் இறைமை கொண்ட ஜ்றிஸ் சனநாயக அரசு உருவாக்கப்பட்டது.
இந்த அரசு அயிறிஸ் தேசியத்தையும் கத்தோலிக்கத்தையும் தமது தனித்துவத்தை நிலைநிறுத்த இணைத்தது என சுழல குழளவநச என்னும் அயர்லாந்து வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுவர்.
அயர்லாந்து தேசம் எப்படி அமையவேண்டும் எனக் கனவுகண்ட டி வலெறா 'நாங்கள் விரும்பும் இலட்சிய அயர்லாந்தின் மக்கள் மண்ணில் நல்லவண்ணம் வாழ்வதற்காக மாத்திரமே பொருட்செல்வத்தை மதிப்பர்ää இவர்கள் குறைந்த சௌகரியங்களுடன் திருப்திகொண்டு தமது ஓய்வு நேரத்தை உயர்வான சிந்தனைகளுக்கு அர்ப்பணிப்பர்.
தேசத்தின் நாட்டுப்புறங்கள் கலகலப்பான குடிமனைகளையும்ää அதன் வயல்களிலும் கிராமங்களிலும் குத்தல்ää இடித்தல்ää கொழித்தல்ää புடைத்தலென படைப்போசையின் ஒலியும்ää குறும்பான சிறுவர்களின் குதூகலமும்ää உடற்பலம் மிக்க வாலிபத்தின் போட்டிகளும்ää வனிதையரின் சிரிப்பொலியும்ää நெருப்பு புகையும் அடுப்பங்கரை முதுமையின் அழகு கொட்டும் ஞானத்தின் அரங்காகவும் இருக்கும் எனக் கூறுகின்றார்.
டி வலெறா கூறும் உயர்ந்த சிந்தனைகளுள் மொழி முதல் இடத்தை பெறுகின்றது. (அவர் குறிக்கும் மொழி தொன்மையும்ää செம்மையும் கொண்ட அயர்லாந்தின் ஹேலிக் மொழியாகும்) எமக்கு எமது மொழிக்கு ஈடாக வேறு எந்த மொழியும் இல்லை. இது எங்களுடையதுää எங்களுக்கு மாத்திரமே. இது வெறும் குறியீட்டிற்கு அப்பாற்பட்டது. இது எமது தேசியத்தின் மிக முக்கியமான உறுப்பாகும்.
ஆயிரம்ää ஆயிரம் ஆண்டு காலமாக எமது மூதாதையினரின் சிந்தனைகளில் இது செப்பனிடப்பட்டது. அவர்களின் சிந்தனைகளும்ää அனுபவங்களும் இந்த மொழியில்தான் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.
அயர்லாந்தில் இன்று பேசப்படும் இந்த மொழி எமது மூதாதையர் பேசிய மொழியே. மூவாயிரம் ஆண்டுகால எமது வரலாற்றின் வாகனமாக விளங்கும் இந்த மொழி மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டதாகும்.
ஆழமான அனுபவ ஞானங்களையும்ää வாழ்வுபற்றிய பார்வையில் கிறிஸ்தவ ஆத்மானுபவங்களையும் சுமந்து நிற்கும் ஒரு தத்துவத்தின் வெளிப்பாடே எமது மொழி. இதனை இழப்பது என்பதை வெறும் கனவாகக் காண்பதுகூட தாங்கமுடியாததாகும். இதனை விட்டுப் பிரிவது என்பது எம்மில் இருந்து ஒரு பெரும் பாகத்தை விட்டுப் பிரிவது போலாகும். எமது பாரம்பரியத்தின் திறவுகோலை இழப்பது போலாகும். மரத்தில் இருந்து அதன் ஆணிவேரை தகர்ப்பதற்கு சமனாகும். மொழியின் இழப்புடன் பாதித்தேசத்திற்கு மேல் நாம் என்றுமே கட்டிஎழுப்ப கனவுகாண முடியாது" எனக்குறிப்பிடுகின்றார்.
இன்று அயர்லாந்தின் அரச கல்விக்கூடங்கள் யாவற்றிலும் அயர்லாந்து மொழி கற்பிக்கப்படுகின்றது. அத்தோடு சில அரச நிர்வாகப் பதவிகளுக்கு இந்த மொழி அறிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி போன்று தொன்மையும் செம்மையும் கொண்ட மொழியாக இருப்பினும்ää எமது சங்கப் பாணர்களை ஒத்த பாடுனர்களைக் கொண்ட மொழியாக இருப்பினும்ää தீதும் நன்றும் பிறர்தர வாராää என்பதையொத்த சான்றோர் வாக்கியங்களைக் கொண்டிருப்பினும்ää நூற்றாண்டுகால அந்நியர் ஆட்சியினால் அயர்லாந்து மொழி அதன் பாவனைத் தொடர்ச்சியை இழந்து விட்டது.
நூற்றாண்டுகாலமான ஆங்கிலமயமாக்கலும்ää எலிசபெத்தியரின் அமுக்கங்களும்ää அயர்லாந்து மொழியினை புறக்கணித்தன.
சுதந்திரப் போராட்டத்தின் உடன் நிகழ்ச்சியாக ஏற்பட்ட தேசியமும்ää மறுமலர்ச்சியும் அயர்லாந்து மொழிக்கு இன்று புதிய சக்தியை அளித்துள்ளது. இருப்பினும் ஒரு மொழியின் இருப்பு அதன் தொன்மையில் அல்ல அதனது தொடர்ச்சியில் தங்கியுள்ளது என்பதை அயர்லாந்து மொழியின் இன்றைய நிலைப்பாடு காட்டி நிற்கின்றது.
சீரிளமைத்திறம் கொண்ட தமிழ் மொழியோ அந்நியர் ஆட்சியின் அமுக்கங்களையும் தாண்டிää சிங்களம் மட்டும் என்ற கோசங்களுக்கும் மசுங்காதுää சுயநிர்ணயப் போராட்டம் வரித்துக்கொண்டுள்ள போர்க்குணத்தாலும்ää போரியலாலும் புதிய வீரியத்தை பெற்றுள்ளது எனலாம்.
புலம்பெயர்ந்த தமிழர்களின் புதிய அனுபவங்களும் தமிழ் இலக்கியத்திற்கு புதிய பாடு பொருட்களையும் அளித்துள்ளது எனலாம்.
பனையின் கீழ் வாழ்ந்தவர்கள் பனியின் கீழ் பெறும் அனுபவங்களும்ää போராளிக்கலைஞர்களின் ஆக்க இலக்கிய படைப்புக்களும் எமது மொழிக்கு புதியவை. இவற்றை உள்வாங்கி தமிழ் தேசியத்தின் மூச்சாக விளங்கும் எமது மொழி இன்றைய உலகமயமாக்கலுக்கும் வணிகமொழிக்கும் முகம் கொடுக்க நாம் உழைத்திடவேண்டும்.
'நன்மையும் அறிவும் எத்திசைத்தாயினும் யாவரே காட்டினும் மற்றவை தழுவி வாழ்வீராயின் அச்சமொன்றில்லை.." என்ற பாரதியின் குரல் என் காதில் விழுகின்றது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

