01-31-2005, 07:10 PM
சந்திரிகா எந்த வழியால் போகிறார்? - நிலாந்தன்
நீ எதையாவது புதிதாக உருவாக்க விரும்பினால் முதலில் ஏற்கனவே இருப்பதை அழித்துவிட வேண்டும் என்று ஜேர்மனிய தத்துவஞானியான நீட்N~ ஒரு முறை கூறியிருந்தார். இது இலங்கைத்தீவின் இப்போதுள்ள நிலைக்கு மிகப்பொருத்தமான ஒரு கூற்றகத்தெரிகிறது.
குறிப்பாக தென்னிலிங்கையின் கடலோரங்களை மீளவடிவமைக்கும் விடயத்தில் அரசாங்கம் முன்பு செய்யமுடியாதிருந்த ஒரு விடயத்தை சுனாமி செய்திருக்கிறது. என்றே செல்லவேண்டும். மேற்படி கடலோரக்கட்டுமானங்கள் பல சுமார் ஐம்பது வருடங்களுக்கு மேலாக மீள வடிவமைக்கப்படாதவைகளாய் இருந்தவை என்றும் அவற்றை சுனாமியின் பெயரால் இப்பொழுது புதிதாக கட்டியெழுப்ப ஒரு வாய்புக்கிடைத்திருக்கிறது என்று துறைசார் நிபுனர்கள் கூறுகிறார்கள்.
17ம் நூற்றாண்டில் லண்டன் மாநகரை சாம்பலக்கிய நெருப்பு எப்படி இப்போதுள்ள லண்டன் மாநகரை புதிதாக வடிவமைக்க உதவியதோ அப்படித்தான் இதுவும் என்று அவர்கள் கூறுகிறார்கள். 17ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ?லண்டன் நெருப்பு? அப்போதிருந்த பழைய மரக்கட்டடங்களை எரித்தழித்துவிட்டது. இது பின்பு புதிய லண்டன் மாநகரை கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்பைவழங்கியது.
இலங்கைத்தீவிலும் இப்படித்தான் சுனாமி ஆழிவின் பின் அசேநகமான கடலோரக் குடியிருப்புக்களையும் நகரங்கள் பட்டினங்களையும் புதிதாய் வடிவமைக்க ஒரு சந்தர்ப்பம்கிடைத்திருக்கிறது. அதுவும் வெளிநாட்டு காசிலேயே இதைச்செய்யக் கிடைத்திருப்பது என்பது ஒரு கூடுதல் அனுகூலம்தான்.
ஆசியாவின் சுனாமி எனப்படுவது எமது காலத்தில் நிகழ்ந்த மெய்யான பூகோல அனர்த்தம் என்று அழைக்கப்படுவதாக ஆர்தர்.சி.கிளாக் கூறுகிறார். சுனாமியின் வருகை பற்றிய தகவல்களை பரிமாறும் விடயத்தில் தகவல் யுகம் அல்லது பூகோள கிராமம் போன்ற படிமங்களை சு10ழ்திருந்த மாயைகள் பெருமளவுக்கு கலைந்துபோய் விட்ட போதிலும் கூட சுனாமிக்கு பிந்திய தகவல் பரிமாற்றத்தை பொறுத்தவரை உலகளாவிய தகவல்வலையமைப்பு மிகப்பெரியதொரு தொண்டை செய்திருக்கிறது என்பதையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.
சுனாமி அமிவின் புகைப்படங்கள் உலகமெலாம் பரவப்பரவ வந்துகுவியும் நிதியம் பூகோளமயப்பட்டதாக மாறலாயிற்று. ஆனால் இந்த நிதியை கையாள்வதற்குரிய நம்பகத் தன்மை மிக்கதும் எல்லாத்தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதுமாகிய ஒரு நிர்வாக் கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் இலங்கைத்தீவில் இப்பந்தி எழுதப்படும் நாள் வரையில் வெற்றிபெற்றிருப்பதாக தெரியவரவில்லை.
ஆனால் அதேசமயம் அரசாங்கம் தெற்கில் தனது சுனாமி அரசியலின் ஓர் அங்கமாக புதிய கடலோர குடியிருப்புக்களை வடிவமைக்கும் முயற்சிகளை தொடங்கியிருக்கிறது. இதற்காக தெரிவுசெய்யப்பட்ட மாவட்டம் எது என்பதிலும் சந்திரிகாவின் அரசியல் இருக்கிறது. அம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்~வின் கோடடைக்குள் வருகிறது. அதேசமயம் அது ஜே.வி.பியின் கோட்டையும் கூட. எனவே அம்hபாந்தோட்டையைத்தெரிவு செய்ததன் மூலம் சந்திரிகா ராஜபக்~வையும் ஜே.வி.பியையும் ஒதுக்க முயற்சிக்கிறாரா?
சுனாமியால் அவருக்கு கிடைத்த பெரிய ஆதாயங்களில் ஒன்று ஜே.வி.பியைக் கையாள்வதில் அவருக்கிருந்த பலதடைகளை சுனாமி அள்ளிக்கொண்டு போய்விட்டது. சுனாமிக்குப் பிந்திய ஸ்ரீலங்கா அரசியல் எனப்படுவது முன்னெப்போதும் காணப்பட்டிராத ஒரு நூதனமான கலவையாக மாறிவருகிறது.
ஒருபுறம் சந்திரிகா ஜே.வி.பியுடன் கூட்டுச்சேர்ந்திருக்கிறார். இன்னொருபுறம் அமெரிக்கத் துருப்புக்கள் நாட்டினுள் இறங்க அனுமதி கொடுத்திருக்கிறார். இதுதவிர இந்தியத் துருப்புக்களும் நாட்டினுள் இறங்க அனுமதி கொடுத்திருக்கிறார். இது தவிர இந்தியத் துருப்புக்களும் நாட்டில் உண்டு. அது ஒன்றைக்காட்டுகிறது. சுனாமிக்கு பிந்திய இலங்கைத்தீவின் அரசியலானது தற்கமயம் நிலவும் உலக ஒழுங்கை அதிகம் பிரதிபலிக்கும் ஒன்றாக மாறிவருகிறது. இதில் ஜே.வி.பி தான் ஒரு இடறல். ஆனால் அதுவும் பெருமளவுக்கு தணிந்து காணப்படுகிறது.
இப்படி பார்த்தால் முன்பு ரணில் விட்ட இடத்துக்கு சிட்டவாக சந்திரிகா வந்து கொண்டிருக்கிறார் எனலாமா? சிhதானத்தை கையாள்வதில் தான் அவருக்கும் ரணிலுக்கும் இடையில் சிலவேறுபாடுகள் உண்டு. மற்றும்படி பொருளாதார அர்த்தில் முழுக்கமுழுக்க ரணிலின் அலைவரிசையிலேயே சந்திரிகாவும் சிந்திக்கவேண்டிய ஒரு அரசியல் சு10ழலை சுனாமி கொண்டுவந்திருக்கிறது.
?ஸ்ரீலங்காவை மீளக்கட்டியெழுப்புவது? என்ற அரசாங்கத்தின் திட்டம் கிட்டத்தட்ட முன்பு ரணில் வைத்திருந்த ?ஸ்ரீலங்காவை மீட்பது? என்ற திட்டத்தின் சாயலை உடையதாகவே காணப்படுகிறது.
கடலோரங்களை மீளக்கட்டியெழுப்பும் விடயத்தில் சந்திரிகா முன்பு ரணில் விட்ட இடத்திலிருந்தா தொடங்கப்போகிறார்? என்ற சந்தேகம் தவிர்க்க இயலாதபடி எழுகிறது. ஏனெனில் மீளக்ககட்டியெழுப்புவதலுக்கான நிபுனத்துவ ஆலோசனைகளை நிதியுதவிகளை பெருமளவுக்கு மேற்கு நாடுகளே செய்ய முன்வந்துள்ளன. ஒன்றில் மேற்கு நாடுகள் நேரடியாகவோ அல்லது அவற்றின் ஆசிர்வாதத்துடன் உதவி வழங்கும் நிறுவனங்களோ தான் இந்த மீளக்ட்டியெழுப்பும் திட்டங்களின் பின்னால் இருப்பது தெரிகிறது. ஆயின் சந்திரிகா ரணிலின் ஸ்ரீலங்காவை மீட்பது என்ற நிகழ்ச்சித்திட்டத்தை திருடப்போகிறாரா?
இதனை இன்னும் சரியாக விளங்கிக்கொள்வதென்றால் முதலில் ரணிலின் ஸ்ரீலங்காவை மீட்பது என்ற திட்டத்தை சுருக்கமாக விளங்கிக் கொள்வது உதவியாயிருக்கும்.
முன்பு தனது பதவிக்காலத்தில் ரணில் முன்வைத்த இத்திட்டத்தின் படி சிங்களப் பகுதிகளிலுள்ள உட்கட்டுமானக் கட்டமைப்புகள் யாவும் பெருமெடுப்பில் மீளுருவாக்கம் செய்யப்படும். இது ஏழைகளுக்கு உதவும் திட்டம் என்று ரணில் சொல்லிவந்தார். ஆனால் அது உண்மையல்ல. உண்மைநிலை என்னவெனில் அது முதலீட்டாளர்களுக்கு உதவும் ஒரு திட்டமே. அத்திட்டத்தின் படி ஸ்ரீலங்காவின் உட்கட்டுமானங்கள் யாவும் புரட்சிகரமாக மாற்றப்படுவதன் மூலம் ஸ்ரீலங்காவை முதலீட்டாளர்களை கவரவல்ல ஒரு நாடாக மாற்றுவதே ரணில்䤠மொறகொட அரசின் இறுதி இலக்காய் இருந்தது.
ஒருபுறம் யுத்தமற்ற சு10ழலை பேணிக்கொண்டு இன்னொருபுறம் தென்னிலங்கையை முதலீட்டாளர்களின் கவர்சிக்கன்னியாக மாற்றும் மேற்படிதிட்டத்தை சிறிது கொச்சை வழக்கில் சொன்னால்? ஒரு பாலியல் தொழிலாளி தனது வாடிக்கையாளர்களை கவருவதற்காக தன்னை எப்பnயெல்லாம் அலங்கரித்து அழகுபடுத்திக்கொள்வாரோ அப்படித்தான் இதுவும் எனலாம்.
இப்பொழுது சந்திரிகாவும் அதேதிட்டத்தின் மாற்றொரு நகலையே கரையோரங்களில் பிரயோகிக்கப்போகிறார் போலதோன்றுகிறது.
உதவிவழங்கும் பன்னாட்டு நிறுவனங்கின் ஆலோசனைப்படி அவர் வடிவமைக்கப்போகும் கடலோரங்கள் நிச்சயமாக முதலீட்டாளர்களின் உல்லாசப் பயணிகளின் ருசி䤠ரசனை என்பவற்றை மனதில் வைத்து வடிவமைக்கப்படும் ஏது நிலைகளே அதிகம் தென்படுகின்றன.
கடந்த வாரம் ஜெனீவாவில் ஸ்ரீலங்காவின் நிதியமைச்சரை சந்தித்த அமெரிக்க அதிகாரிகள் ஒரு முக்கியமான விடயத்தை சொல்லியிருக்கிறார்கள். அதன்படி கடன்களை தள்ளுபடி செய்வதில் சில பிரச்சினைகள் இருப்பதாவும் இது தொடர்பாக ஐ.எம்.எவ் இன் நிகழ்ச்த்திட்டம் ஏதும் இல்லை என்றால் சுனாமியின் பின் கவர்சியாக அறிவிக்கப்பட்டது போல கடன்களை தாமதமாகச் செலுத்தலாம் என்ற சலுகையில் கையெழுத்திடும் நிலையில் தான் இல்லை என்று அமெரிக்கா கூறுகிறதாம்.
ஐ.எம்.எவ் இன் நிகழ்சித்திட்டம் என்று அவர்கள் எதைக்கருதுகிறார்கள் என்பது தெளிவில்லை. ஆனால் அது அநேகமாக மீள் கட்டமைப்பு பணிகளை உதவி வழங்கும் நிறுவனங்களின் விருப்பங்களுக்கேற்ப வடிவமைக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கே இட்டுச் செல்லமுடியும் என்று ஊகிக்கத்தக்கதாகத்தான் மேற்படி நிறுவனங்களின் கடந்த கால செயற்பாடுகள் காணப்படுகின்றன.
2000 ஆம் ஆண்டில் சந்திரிகா அரசாங்கம் உலக வங்கியுடன் செய்துகொண்ட ஒரு உடன்படிக்கையின் படி 20 பொதுசன நிறுவனங்களை மீளுருவாக்கம் செய்ய ஒப்புக்கொண்டது. ஆனால் அப்பொழுது காணப்பட்ட கடும் எதிர்ப்புக்காரணமாக அதை முழு அளவில் நடைமுறைப்படுத்தவில்லை. ஆயால் அப்பொழுது காணப்பட்ட கடும் எதிப்புக் காரணமாக அதை முழு அளவில் நடைமுறைப்படுத்தமுடியவிலலை. ஆனால் இப்பொழுது சுனாமி அரசியலில் சந்திர்கா அதிகம் அதிகம் விட்டுக்கொடுக்கத் தொடங்கிவிட்டார். சுனாமிக்கு முன்பு ஜே.வி.பியிடமிருந்து வரக்கூடிய எதிர்ப்புக்களையிட்டு அவர் தயங்கினார். ஆனால் சுனாமி வந்து அவருடைய வழிகளை இலவாக்கிக் கொடுத்திருக்கிறது.
கடந்தவாரம் கிடைத்த தகவல்களின் படி இலங்கை மின்சாரசபை䤠பெற்றோலியக் கூட்டுத்தாபனம்䤠தேசிய நீர்வழங்கல் அதிகாரசபை போன்றவை உதவி வழங்கும் நிறுவனங்களின் கைகளில் கொடுக்கப்படும் ஏது நிலைகள் தென்படுகின்றன.
எனவே சுனாமி அரசியலின் கீழ் சந்திரிகா சுனாமிக்கு முந்திய தனது அரசியலில் காணப்பட்ட வெற்றிடங்களை ஒவ்வொன்றாக நிரவிவருகிறார் என்றே தோன்றுகிறது. இப்படி பார்த்தால் அவருடைய மீளக்கட்டியெழுப்பும் திட்டம் முன்பு ரணில் வவைத்திருந்த திட்டத்தின் வேறொரு வடிவமாக அமையும் வாய்ப்புக்களே அதிகம் தென்படுகின்றன.
பொருளாதார வார்தைகளில் கூறின் ரணிலுக்கம சந்திரிக்காவுக்கும் ஏற்கனவே அதிக வித்தியாசம் இருக்கவில்லை. சுனாமிக்குப்பின் ஏற்கனவே இருந்த கொஞ்சநஞ்ச வித்தியாசங்களும் அள்ளுண்டு போவது தெரிகின்றது.
சந்திரிகா நம்புகின்றார் வெளிநாட்டுப்படைகள் நாட்டில் உள்ளவரை மீண்டும் ஒரு யுத்தம் வராது என்று. எனவே வெளிநாட்டுத் துருப்புக்களை வைத்திருப்பதன் மூலம் யுத்தமற்ற ஒரு நிலையை பேணும் அதேசமயம் மேற்ப்படி நாடுகளுக்கு விசுவாசமாக அவர்கள் விரும்பும் வடிவத்தில் நாட்டை மீளக்கட்டியெழுப்ப அவர் தயாராகிவருவதன் மூலம் தனது தனிப்பட்ட கனவுகளை நிறைவேற்றக்கிடைத்திருக்கும் ஒரு புதிய தெரிவை கையாளப்போகிறார் என்றே தோன்றுகிறது.
என்பதால்தான் அவர் அம்பாந்தோட்டையில் தனது மீளக்கட்டியெழும்பும் திட்டத்தை தொடக்கி வைத்த நிகழ்வில் உரையாற்றிய போது இனி ஐந்தாண்டுகளுக்கு தேர்தல் இல்லை என்று கூறினார்.
சுனாமிப்பேரழிவு பூகோள அளவில் ஒரு பேருண்மையை உணர்த்தியிருக்கிறது. மனிதனுடைய அறிவியல் வெற்றிகள் யாவும் பலசாலிகளான பணக்கார நாடுகளுக்கு சேவகம் செய்கின்றன என்பதே அது.
சுனாமி அரசியலிலும் இந்த பேருண்மையின் பிரதிபலிப்புக்களை காணமுடியம். சுனாமி அழிவின் பேரால் உதவிக்கு வந்த பலசாலி நாடுகள் வறியசிறியநாடுகளின் அரசியலை தமக்கு சேவகம்செய்யும் ஒன்றாக மாற்றிவருகின்றன. இதில் தமிழர்கள் கவணிக்க வேண்டியது என்னவெனில் சுனாமி அரசியலின் கீழ் வறியசிறியநாடுகளை தமது சேவகர்கயாய் மாற்றிவரும் பலசாலி நாடுகள் சிறிய போராடும் இனங்களின் விடயத்தில் எப்படி நடந்து கொள்ளப்போகின்றன என்பதையே.
நீ எதையாவது புதிதாக உருவாக்க விரும்பினால் முதலில் ஏற்கனவே இருப்பதை அழித்துவிட வேண்டும் என்று ஜேர்மனிய தத்துவஞானியான நீட்N~ ஒரு முறை கூறியிருந்தார். இது இலங்கைத்தீவின் இப்போதுள்ள நிலைக்கு மிகப்பொருத்தமான ஒரு கூற்றகத்தெரிகிறது.
குறிப்பாக தென்னிலிங்கையின் கடலோரங்களை மீளவடிவமைக்கும் விடயத்தில் அரசாங்கம் முன்பு செய்யமுடியாதிருந்த ஒரு விடயத்தை சுனாமி செய்திருக்கிறது. என்றே செல்லவேண்டும். மேற்படி கடலோரக்கட்டுமானங்கள் பல சுமார் ஐம்பது வருடங்களுக்கு மேலாக மீள வடிவமைக்கப்படாதவைகளாய் இருந்தவை என்றும் அவற்றை சுனாமியின் பெயரால் இப்பொழுது புதிதாக கட்டியெழுப்ப ஒரு வாய்புக்கிடைத்திருக்கிறது என்று துறைசார் நிபுனர்கள் கூறுகிறார்கள்.
17ம் நூற்றாண்டில் லண்டன் மாநகரை சாம்பலக்கிய நெருப்பு எப்படி இப்போதுள்ள லண்டன் மாநகரை புதிதாக வடிவமைக்க உதவியதோ அப்படித்தான் இதுவும் என்று அவர்கள் கூறுகிறார்கள். 17ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ?லண்டன் நெருப்பு? அப்போதிருந்த பழைய மரக்கட்டடங்களை எரித்தழித்துவிட்டது. இது பின்பு புதிய லண்டன் மாநகரை கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்பைவழங்கியது.
இலங்கைத்தீவிலும் இப்படித்தான் சுனாமி ஆழிவின் பின் அசேநகமான கடலோரக் குடியிருப்புக்களையும் நகரங்கள் பட்டினங்களையும் புதிதாய் வடிவமைக்க ஒரு சந்தர்ப்பம்கிடைத்திருக்கிறது. அதுவும் வெளிநாட்டு காசிலேயே இதைச்செய்யக் கிடைத்திருப்பது என்பது ஒரு கூடுதல் அனுகூலம்தான்.
ஆசியாவின் சுனாமி எனப்படுவது எமது காலத்தில் நிகழ்ந்த மெய்யான பூகோல அனர்த்தம் என்று அழைக்கப்படுவதாக ஆர்தர்.சி.கிளாக் கூறுகிறார். சுனாமியின் வருகை பற்றிய தகவல்களை பரிமாறும் விடயத்தில் தகவல் யுகம் அல்லது பூகோள கிராமம் போன்ற படிமங்களை சு10ழ்திருந்த மாயைகள் பெருமளவுக்கு கலைந்துபோய் விட்ட போதிலும் கூட சுனாமிக்கு பிந்திய தகவல் பரிமாற்றத்தை பொறுத்தவரை உலகளாவிய தகவல்வலையமைப்பு மிகப்பெரியதொரு தொண்டை செய்திருக்கிறது என்பதையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.
சுனாமி அமிவின் புகைப்படங்கள் உலகமெலாம் பரவப்பரவ வந்துகுவியும் நிதியம் பூகோளமயப்பட்டதாக மாறலாயிற்று. ஆனால் இந்த நிதியை கையாள்வதற்குரிய நம்பகத் தன்மை மிக்கதும் எல்லாத்தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதுமாகிய ஒரு நிர்வாக் கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் இலங்கைத்தீவில் இப்பந்தி எழுதப்படும் நாள் வரையில் வெற்றிபெற்றிருப்பதாக தெரியவரவில்லை.
ஆனால் அதேசமயம் அரசாங்கம் தெற்கில் தனது சுனாமி அரசியலின் ஓர் அங்கமாக புதிய கடலோர குடியிருப்புக்களை வடிவமைக்கும் முயற்சிகளை தொடங்கியிருக்கிறது. இதற்காக தெரிவுசெய்யப்பட்ட மாவட்டம் எது என்பதிலும் சந்திரிகாவின் அரசியல் இருக்கிறது. அம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்~வின் கோடடைக்குள் வருகிறது. அதேசமயம் அது ஜே.வி.பியின் கோட்டையும் கூட. எனவே அம்hபாந்தோட்டையைத்தெரிவு செய்ததன் மூலம் சந்திரிகா ராஜபக்~வையும் ஜே.வி.பியையும் ஒதுக்க முயற்சிக்கிறாரா?
சுனாமியால் அவருக்கு கிடைத்த பெரிய ஆதாயங்களில் ஒன்று ஜே.வி.பியைக் கையாள்வதில் அவருக்கிருந்த பலதடைகளை சுனாமி அள்ளிக்கொண்டு போய்விட்டது. சுனாமிக்குப் பிந்திய ஸ்ரீலங்கா அரசியல் எனப்படுவது முன்னெப்போதும் காணப்பட்டிராத ஒரு நூதனமான கலவையாக மாறிவருகிறது.
ஒருபுறம் சந்திரிகா ஜே.வி.பியுடன் கூட்டுச்சேர்ந்திருக்கிறார். இன்னொருபுறம் அமெரிக்கத் துருப்புக்கள் நாட்டினுள் இறங்க அனுமதி கொடுத்திருக்கிறார். இதுதவிர இந்தியத் துருப்புக்களும் நாட்டினுள் இறங்க அனுமதி கொடுத்திருக்கிறார். இது தவிர இந்தியத் துருப்புக்களும் நாட்டில் உண்டு. அது ஒன்றைக்காட்டுகிறது. சுனாமிக்கு பிந்திய இலங்கைத்தீவின் அரசியலானது தற்கமயம் நிலவும் உலக ஒழுங்கை அதிகம் பிரதிபலிக்கும் ஒன்றாக மாறிவருகிறது. இதில் ஜே.வி.பி தான் ஒரு இடறல். ஆனால் அதுவும் பெருமளவுக்கு தணிந்து காணப்படுகிறது.
இப்படி பார்த்தால் முன்பு ரணில் விட்ட இடத்துக்கு சிட்டவாக சந்திரிகா வந்து கொண்டிருக்கிறார் எனலாமா? சிhதானத்தை கையாள்வதில் தான் அவருக்கும் ரணிலுக்கும் இடையில் சிலவேறுபாடுகள் உண்டு. மற்றும்படி பொருளாதார அர்த்தில் முழுக்கமுழுக்க ரணிலின் அலைவரிசையிலேயே சந்திரிகாவும் சிந்திக்கவேண்டிய ஒரு அரசியல் சு10ழலை சுனாமி கொண்டுவந்திருக்கிறது.
?ஸ்ரீலங்காவை மீளக்கட்டியெழுப்புவது? என்ற அரசாங்கத்தின் திட்டம் கிட்டத்தட்ட முன்பு ரணில் வைத்திருந்த ?ஸ்ரீலங்காவை மீட்பது? என்ற திட்டத்தின் சாயலை உடையதாகவே காணப்படுகிறது.
கடலோரங்களை மீளக்கட்டியெழுப்பும் விடயத்தில் சந்திரிகா முன்பு ரணில் விட்ட இடத்திலிருந்தா தொடங்கப்போகிறார்? என்ற சந்தேகம் தவிர்க்க இயலாதபடி எழுகிறது. ஏனெனில் மீளக்ககட்டியெழுப்புவதலுக்கான நிபுனத்துவ ஆலோசனைகளை நிதியுதவிகளை பெருமளவுக்கு மேற்கு நாடுகளே செய்ய முன்வந்துள்ளன. ஒன்றில் மேற்கு நாடுகள் நேரடியாகவோ அல்லது அவற்றின் ஆசிர்வாதத்துடன் உதவி வழங்கும் நிறுவனங்களோ தான் இந்த மீளக்ட்டியெழுப்பும் திட்டங்களின் பின்னால் இருப்பது தெரிகிறது. ஆயின் சந்திரிகா ரணிலின் ஸ்ரீலங்காவை மீட்பது என்ற நிகழ்ச்சித்திட்டத்தை திருடப்போகிறாரா?
இதனை இன்னும் சரியாக விளங்கிக்கொள்வதென்றால் முதலில் ரணிலின் ஸ்ரீலங்காவை மீட்பது என்ற திட்டத்தை சுருக்கமாக விளங்கிக் கொள்வது உதவியாயிருக்கும்.
முன்பு தனது பதவிக்காலத்தில் ரணில் முன்வைத்த இத்திட்டத்தின் படி சிங்களப் பகுதிகளிலுள்ள உட்கட்டுமானக் கட்டமைப்புகள் யாவும் பெருமெடுப்பில் மீளுருவாக்கம் செய்யப்படும். இது ஏழைகளுக்கு உதவும் திட்டம் என்று ரணில் சொல்லிவந்தார். ஆனால் அது உண்மையல்ல. உண்மைநிலை என்னவெனில் அது முதலீட்டாளர்களுக்கு உதவும் ஒரு திட்டமே. அத்திட்டத்தின் படி ஸ்ரீலங்காவின் உட்கட்டுமானங்கள் யாவும் புரட்சிகரமாக மாற்றப்படுவதன் மூலம் ஸ்ரீலங்காவை முதலீட்டாளர்களை கவரவல்ல ஒரு நாடாக மாற்றுவதே ரணில்䤠மொறகொட அரசின் இறுதி இலக்காய் இருந்தது.
ஒருபுறம் யுத்தமற்ற சு10ழலை பேணிக்கொண்டு இன்னொருபுறம் தென்னிலங்கையை முதலீட்டாளர்களின் கவர்சிக்கன்னியாக மாற்றும் மேற்படிதிட்டத்தை சிறிது கொச்சை வழக்கில் சொன்னால்? ஒரு பாலியல் தொழிலாளி தனது வாடிக்கையாளர்களை கவருவதற்காக தன்னை எப்பnயெல்லாம் அலங்கரித்து அழகுபடுத்திக்கொள்வாரோ அப்படித்தான் இதுவும் எனலாம்.
இப்பொழுது சந்திரிகாவும் அதேதிட்டத்தின் மாற்றொரு நகலையே கரையோரங்களில் பிரயோகிக்கப்போகிறார் போலதோன்றுகிறது.
உதவிவழங்கும் பன்னாட்டு நிறுவனங்கின் ஆலோசனைப்படி அவர் வடிவமைக்கப்போகும் கடலோரங்கள் நிச்சயமாக முதலீட்டாளர்களின் உல்லாசப் பயணிகளின் ருசி䤠ரசனை என்பவற்றை மனதில் வைத்து வடிவமைக்கப்படும் ஏது நிலைகளே அதிகம் தென்படுகின்றன.
கடந்த வாரம் ஜெனீவாவில் ஸ்ரீலங்காவின் நிதியமைச்சரை சந்தித்த அமெரிக்க அதிகாரிகள் ஒரு முக்கியமான விடயத்தை சொல்லியிருக்கிறார்கள். அதன்படி கடன்களை தள்ளுபடி செய்வதில் சில பிரச்சினைகள் இருப்பதாவும் இது தொடர்பாக ஐ.எம்.எவ் இன் நிகழ்ச்த்திட்டம் ஏதும் இல்லை என்றால் சுனாமியின் பின் கவர்சியாக அறிவிக்கப்பட்டது போல கடன்களை தாமதமாகச் செலுத்தலாம் என்ற சலுகையில் கையெழுத்திடும் நிலையில் தான் இல்லை என்று அமெரிக்கா கூறுகிறதாம்.
ஐ.எம்.எவ் இன் நிகழ்சித்திட்டம் என்று அவர்கள் எதைக்கருதுகிறார்கள் என்பது தெளிவில்லை. ஆனால் அது அநேகமாக மீள் கட்டமைப்பு பணிகளை உதவி வழங்கும் நிறுவனங்களின் விருப்பங்களுக்கேற்ப வடிவமைக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கே இட்டுச் செல்லமுடியும் என்று ஊகிக்கத்தக்கதாகத்தான் மேற்படி நிறுவனங்களின் கடந்த கால செயற்பாடுகள் காணப்படுகின்றன.
2000 ஆம் ஆண்டில் சந்திரிகா அரசாங்கம் உலக வங்கியுடன் செய்துகொண்ட ஒரு உடன்படிக்கையின் படி 20 பொதுசன நிறுவனங்களை மீளுருவாக்கம் செய்ய ஒப்புக்கொண்டது. ஆனால் அப்பொழுது காணப்பட்ட கடும் எதிர்ப்புக்காரணமாக அதை முழு அளவில் நடைமுறைப்படுத்தவில்லை. ஆயால் அப்பொழுது காணப்பட்ட கடும் எதிப்புக் காரணமாக அதை முழு அளவில் நடைமுறைப்படுத்தமுடியவிலலை. ஆனால் இப்பொழுது சுனாமி அரசியலில் சந்திர்கா அதிகம் அதிகம் விட்டுக்கொடுக்கத் தொடங்கிவிட்டார். சுனாமிக்கு முன்பு ஜே.வி.பியிடமிருந்து வரக்கூடிய எதிர்ப்புக்களையிட்டு அவர் தயங்கினார். ஆனால் சுனாமி வந்து அவருடைய வழிகளை இலவாக்கிக் கொடுத்திருக்கிறது.
கடந்தவாரம் கிடைத்த தகவல்களின் படி இலங்கை மின்சாரசபை䤠பெற்றோலியக் கூட்டுத்தாபனம்䤠தேசிய நீர்வழங்கல் அதிகாரசபை போன்றவை உதவி வழங்கும் நிறுவனங்களின் கைகளில் கொடுக்கப்படும் ஏது நிலைகள் தென்படுகின்றன.
எனவே சுனாமி அரசியலின் கீழ் சந்திரிகா சுனாமிக்கு முந்திய தனது அரசியலில் காணப்பட்ட வெற்றிடங்களை ஒவ்வொன்றாக நிரவிவருகிறார் என்றே தோன்றுகிறது. இப்படி பார்த்தால் அவருடைய மீளக்கட்டியெழுப்பும் திட்டம் முன்பு ரணில் வவைத்திருந்த திட்டத்தின் வேறொரு வடிவமாக அமையும் வாய்ப்புக்களே அதிகம் தென்படுகின்றன.
பொருளாதார வார்தைகளில் கூறின் ரணிலுக்கம சந்திரிக்காவுக்கும் ஏற்கனவே அதிக வித்தியாசம் இருக்கவில்லை. சுனாமிக்குப்பின் ஏற்கனவே இருந்த கொஞ்சநஞ்ச வித்தியாசங்களும் அள்ளுண்டு போவது தெரிகின்றது.
சந்திரிகா நம்புகின்றார் வெளிநாட்டுப்படைகள் நாட்டில் உள்ளவரை மீண்டும் ஒரு யுத்தம் வராது என்று. எனவே வெளிநாட்டுத் துருப்புக்களை வைத்திருப்பதன் மூலம் யுத்தமற்ற ஒரு நிலையை பேணும் அதேசமயம் மேற்ப்படி நாடுகளுக்கு விசுவாசமாக அவர்கள் விரும்பும் வடிவத்தில் நாட்டை மீளக்கட்டியெழுப்ப அவர் தயாராகிவருவதன் மூலம் தனது தனிப்பட்ட கனவுகளை நிறைவேற்றக்கிடைத்திருக்கும் ஒரு புதிய தெரிவை கையாளப்போகிறார் என்றே தோன்றுகிறது.
என்பதால்தான் அவர் அம்பாந்தோட்டையில் தனது மீளக்கட்டியெழும்பும் திட்டத்தை தொடக்கி வைத்த நிகழ்வில் உரையாற்றிய போது இனி ஐந்தாண்டுகளுக்கு தேர்தல் இல்லை என்று கூறினார்.
சுனாமிப்பேரழிவு பூகோள அளவில் ஒரு பேருண்மையை உணர்த்தியிருக்கிறது. மனிதனுடைய அறிவியல் வெற்றிகள் யாவும் பலசாலிகளான பணக்கார நாடுகளுக்கு சேவகம் செய்கின்றன என்பதே அது.
சுனாமி அரசியலிலும் இந்த பேருண்மையின் பிரதிபலிப்புக்களை காணமுடியம். சுனாமி அழிவின் பேரால் உதவிக்கு வந்த பலசாலி நாடுகள் வறியசிறியநாடுகளின் அரசியலை தமக்கு சேவகம்செய்யும் ஒன்றாக மாற்றிவருகின்றன. இதில் தமிழர்கள் கவணிக்க வேண்டியது என்னவெனில் சுனாமி அரசியலின் கீழ் வறியசிறியநாடுகளை தமது சேவகர்கயாய் மாற்றிவரும் பலசாலி நாடுகள் சிறிய போராடும் இனங்களின் விடயத்தில் எப்படி நடந்து கொள்ளப்போகின்றன என்பதையே.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

