Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Àýʨ ¸ñÎ ¦ÅÇ¢§ÂȢ ÒÄ¢..
#1
<b>புனரமைப்பு கூட்டத்தில் ஜே.வி.பி. உறுப்பினர்: எதிர்ப்பு தெரிவித்து புலிகள் வெளிநடப்பு</b>
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணக் குழுக் கூட்டத்தில் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ச அழையா விருந்தாளியாக கலந்து கொண்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்து அக் கூட்டத்தில் கலந்து கொண்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் வெளியேறினர்.
சிறீலங்கா ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய மேற்படி குழுவில் பிரதேச செயலாளர் வி.கே.தவராஜா தலைமையில் பொலிஸ்ää இராணுவம்ää விசேட அதிரடிப்படைää விடுதலைப்புலிகள் மற்றும் மதப் பிரமுகர் என 6 பேர் அங்கம் வகிக்கின்றனர்.
நாளை நடைபெறவிருக்கும் அம்பாறை மாவட்ட ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக இன்று முற்பகல் இக் கூட்டம் கூட்டப்பட்டது.
கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் எதிர்பாராத வகையில் திடீரென ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ச அங்கு நுழைந்தார்.
விடுதலைப்புலிகள் தரப்பில் இக் கூட்டத்தில் கலந்து கொண்ட மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் கௌசல்யன் இதற்கு ஆட்சேபணை தெரிவித்தார்.
அப்போது ஜே.வி.பி. உறுப்பினரை நோக்கி அழைப்பின்றி எவ்வாறு கூட்டத்திற்கு வருகை தந்தீர்கள் என்று அவரை நோக்கி கௌசல்யன் கேள்வி எழுப்பினார்.
தான் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்ததாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
இதனையடுத்து விடுதலைப்புலிகள் இந்த கூட்டத்திலிருந்து வெளியேறி விட்டனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் இ.கௌசல்யன்ää
குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்கனவே ஒரு தடவை நிவாரண உதவி என்ற போர்வையில் இப் பகுதிக்கு வந்து இனவாத அடிப்படையில் பேசியுள்ளார்.
வடக்கு கிழக்கு பிரிக்கப்பட வேண்டும் என்று பிரச்சாரங்களையும் மேற்கொண்டுள்ளார். எமது தேசியத் தலைவரின் படங்களை அகற்ற வேண்டும் என்று அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அது மட்டுமன்றி குறிப்பிட்ட குழுவில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அங்கத்துவம் வழங்கப்படவில்லை. அதனை மீறி அவர் நடந்து கொண்டதால் நாம் வெளியேறினோம் என்றார்.
இது தொடர்பாக திருக்கோவில் பிரதேச செயலாளர் வி.கே.தவராஜாவிடம் கேட்ட போதுää
எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தான் அழைப்பு விடுக்கவில்லை என்பதைää குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினரிடம் தான் வலியுறுத்திக் கூறிய போதிலும் அதனை மீறும் வகையில் அவர் நடந்து கொண்டதாகக் கூறினார்.
விடுதலைப்புலிகள் வெளியேறினாலும் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினரும் அதில் கலந்து கொண்டுள்ளார்.
பிரதேச செயலகத்திலுள்ள தÁ¢ழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் அகற்றப்பட வேண்டும். இல்லையேல் ஒரு மாத காலத்திற்குள் இடமாற்றம் வழங்கப்படும் என அவர் பிரதேச செயலாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.
---------------------------------------------------------------------

þôÀÊ ¸¢Ç¢¦¿îº¢ìÌõ §À¡¸Ä¡§Á
[b]

,,,,.


Messages In This Thread
Àýʨ ¸ñÎ ¦ÅÇ¢§ÂȢ ÒÄ¢.. - by selvanNL - 01-31-2005, 02:00 PM
[No subject] - by Danklas - 01-31-2005, 02:31 PM
[No subject] - by sinnappu - 01-31-2005, 06:28 PM
[No subject] - by Nitharsan - 01-31-2005, 09:20 PM
[No subject] - by Niththila - 02-01-2005, 12:12 AM
[No subject] - by Danklas - 02-01-2005, 01:16 AM
[No subject] - by Niththila - 02-01-2005, 01:26 AM
[No subject] - by Danklas - 02-01-2005, 01:37 AM
[No subject] - by sinnappu - 02-01-2005, 05:32 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)