Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சொல்லத் தெரியவில்லை
#1
சொல்லத் தெரியவில்லை
ஆயிரம் சிறகுகள்
என் வாசல்
அனுப்பி வைத்தாய்
உணர்கிறேன்……..

பூமித் தோட்டம் எங்கும்
எத்தனை மனிதப் பூக்கள்.?
உன்னை மட்டும்
கண்கள் எப்படிக்
கண்டு கொண்டன…..?

மெல்ல மெல்ல
இந்த நட்புக்குள்
என் நான்-
தொலைந்து போகிறதே..
இதுவும் இதம் தான்…….

தினசரி உன் வருகை
தேவை ஆகிறதே
அனுதினம் உன் வார்த்தைகள்
அவசியம் ஆகிறதே………

தூரங்கள் தாண்டி
இதயம் தொட்டாய்
ஒரே திசையில் உன் சிந்தனை
உயிரையும் தொட்டாய்--------

முடியும் வரை
என்னுயிர் முடியும் வரை
உன் ஸ்நேகம் தொடரட்டும்
யாசிக்கும் மனம்.




--- மின்னஞ்சலில் வந்த கவிதை
.
.!!
Reply


Messages In This Thread
சொல்லத் தெரியவில்லை - by Thaya Jibbrahn - 01-29-2005, 05:36 AM
[No subject] - by kavithan - 02-02-2005, 09:04 AM
[No subject] - by KULAKADDAN - 02-03-2005, 01:28 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)