01-28-2005, 03:13 PM
எமது மக்களுக்கு உதவி கிட்டுவதற்காக இலங்கை அரசுடன் பேசிவருகின்றோம்
முல்லைத்தீவு நலன்புரி நிலையத்தில் பாலசிங்கம் தெரிவிப்பு ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக் கென உலகின் அனுதாபத்தால் கிடைத்த நிதிகள் எம் மக்களின் நல்வாழ்வுக்காகக் கிடைக்க வேண் டும்.அதற்காக இலங்கை அரசுடன் ஒருமட்டத் தில் புலிகள் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர். கொழும்பிலும் கிளிநொச்சியிலும் உள்ள சமா தான செயலகங்கள் இந்தப் பேச்சுக்களை நடத்தி வருகின்றன.
- இவ்வாறு தெரிவித்தார் விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம். ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற் றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளுக்கு நேற்று விஜயம் செய்த அவர் இயற்கை அனர்த்தம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார் திரு மதி அடேல் பாலசிங்கமும் உடன் வந்திருந்தார்.
வடமராட்சி கிழக்கில் ஆழியவளையில் இருந்து பாலசிங்கம் தம்பதியரை கடற்புலிகளின் படகில் ஏற்றிச்சென்ற தளபதி சூசை பாதிக்கப்பட்ட கரையோரப் பகுதிகளை கடலில் இருந்தவாறு அவர்களுக்குக் காண்பித்தார்.
ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களையும் பாலசிங்கம் தம்பதியர் நேரில்சந் தித்து ஆறுதல் கூறினர். முள்ளியவளை வித்தியா னந்தாக் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள் மத்தியில் உரையாற்றும் போதே பால சிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-
ஈழத்தமிழ் மக்களையும் உலகில் வாழும் தமிழ்மக்களையும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கிய துயரச் சம்பவம் ஆழிப்பேரலை அனர்த்தம். இப்படியான பேரழிவுகள் 5 ஆயிரம், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடக் கின்றன என வரலாறுகள் கூறுகின்றன.
ஆனால், சமீப காலத்தில் இப்படியான பெரிய அனர்த்தம் எதுவும் - தமிழீழ மண்ணில் நிகழ்ந்த தில்லை. எமது மக்களுக்கு மட்டுமல்ல. உலகத் தமிழினத்துக்கே பெரும் அதிர்ச்சியை இது கொடுத் துள்ளது.
அனர்த்தத்தால் மக்களுக்கு ஏற்பட்ட அழி வின் ஆழமான பரிமாணங்களை எல்லாம் நாம் அறிவோம். அதன் தாற்பரியத்தை வார்த்தை களால் கூறமுடியாது. ஆறுதல்கூடச் சொல்லமுடி யாத அளவுக்கு இந்தத் துயரம் உங்களை அழுத் தும் என்பது எங்களுக்குத் தெரியும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகத் தமிழ் மக் கள் என்ன செய்தார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை உங்களுக்கு எடுத்துக் கூறவே இங்கு வந்தேன்.
தலைவரின் அழைப்பின்பேரில் நான் இங்கு
வந்தேன். இலங்கை அரசு எமது மக்களுக்கு உதவி செய்வதில் என்னென்ன தடைகளையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்தி வருகின்றது என்பதை அறிந்து அதனைச் சர்வதேசத்துக் குத் தெரியப்படுத்துவதே எனது முக்கிய நோக்கம்.
நோர்வேயின் முக்கிய அமைச்சர்கள் இங்கு வந்து தலைவரைச் சந்தித்தபோது நானும் உட னிருந்தேன். எமது மக்களின் பிரச்சினைகளை எடுத்துவிளக்கி எமது பகுதிகளை மீளக் கட்டி யயழுப்ப உலக நாடுகளின் உதவி தேவை என நாம் வலியுறுத்தினோம்.
இப்போது தலைவரின் பிரதிநிதியாக உங் களைச் சந்திக்க இங்கு வந்துள்ளேன். இரு தினங்கள் தலைவருடன் பேசினேன். அவரின் ஆழமான உணர்வலைகளை என்னால் புரிய முடிந்தது.சகல இராணுவ , அரசியல் நடவடிக் கைகளையும் ஒத்திவைத்துவிட்டு பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புனர்வாழ்வு அளிப் பதற்காக முழுப் புலிகள் இயக்கத்தையும் அதனோ டிணைந்த சகல அமைப்புகளையும் இந்தப் பணி யில் அவர் இறக்கியுள்ளார்.
மக்களைக் காப்பாற்றவும் அவசர உதவிக ளைச் செய்யவும் எமது கடற்புலிகள், அரசியற் பிரிவு உட்பட அனைத்துப் படையணிகளும் தமி ழர் புனர்வாழ்வுக் கழகம் உட்பட சகல பிரிவுகளும் தலைவரால் மீட்புப் பணிக்கு அனுப்பப்பட்டுள் ளன. எமது விடுதலை இயக்கமே உங்களுக் குப் பேருதவி செய்து வருகின்றது என்று நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.
சர்வதேச மட்டத்திலும் இலங்கை அரசுடனும் பேச்சுக்களை நடத்தி உலகத் தலைவர்களை இங்கு அழைத்து அவர்களுடன் கலந்தாலோ சித்து பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை வளம் படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க எமது தலைமை முழு முயற்சிகளையும் செய்துவரு கின்றது. இந்தத் தகவலை உங்களுக்குச் சொல் லத்தான் இங்கு வந்திருக்கின்றேன்.
இந்தப் பாடசாலையில் - அகதி முகாமில் - நீங் கள் வாழ்க்கையைத் தொடர நாங்கள் அனும திக்கப் போவதில்லை.
வீடமைப்புத் திட்டத்தின் கீழ், உங்களை உங் கள் சொந்தக் காணியில் குடியமர்த்தவும் மீண் டும் தொழில்வாய்ப்பை உங்களுக்கு உருவாக் கித்தரவும் பெரியளவிலான புனர்நிர்மானத் திட்டத்துடன் எமது இயக்கம் முழுமையாக - முழு மூச்சுடன் - பணியாற்றி வருகின்றது என்ற செய் தியை உங்களுக்குச் சொல்லத்தான் வந்திருக் கின்றேன்.
இதற்காக கொழும்பு அரசுடனும் நாங்கள் ஒருமட்டத்தில் பேச்சு நடத்திக் கொண்டிருக்கின் றோம். வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்கள் ஏராளமான உதவிகளை நிதி உதவியோடு நிவாரணப் பொருள்களையும் வழங்கிக்கொண் டிருக்கிறார்கள். அந்தப் பொருள்கள் இங்கு வந்த டைந்ததும் எமது இயக்கத்தின் உப அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போன் றவை உங்க ளுக்கு அவற்றை வழங்கிக்கொண்டிருக்கின் றன.
அவசர கால உணவு, உடை மற்றும் மருந்து போன்ற அவசர உதவிகள் உங்களுக்குக் கிடைத்து வருகின்றன. ஆனால், இது ஆரம்பகால உதவி கள் மட்டுமே. இதை வைத்து கொண்டு வாழ்க் கையை நடத்த முடியாது என்று எங்களுக்குத் தெரியும்.
எனவே, புதிய வீடுகளை அமைப்பதற்கும் மீளமைப்பைத் துரிதப்படுத்தி அகதி முகாமில் இருந்து மக்களை அவர்களது சொந்த இடத் திற்கு திரும்பிச் செல்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
உலக நாடுகள் பெருமளவான உதவிகளைச் செய்ய வாக்களித்துள்ளன. ஆனால், இந்த உதவி கள் இலங்கை அரசு ஊடாகத்தான் வரவேண்டி யிருக்கின்றது. ஓர் அரசு என்ற ரீதியில் வெளி நாடுகள் உடனடியாக தமது உதவிகளை அர சுக்கே கொடுக்கும்.
இந்த அரசு உதவி நிதியை எடுத்து எமது மக் களுக்கு அதனை சரிவர பங்கிடுமோ என்பதில் எமக்கு சந்தேகம் என்று நாங்கள் கூறுகின் றோம்.
சிங்கள அரசு சுனாமி அனர்த்தத்தை தனது அரசியல் இலாபத்துக்காகப் பயன்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு என வழங்கப்பட்ட நிதி உதவியை வேறு வழிகளில் தனது அரசைப் பலப்படுத்தவும், தனது இராணுவ இயந்திரத் தைப் பலப்படுத்தவும், தமது அரசியல் அதிகாரத்தை நிலைப்படுத்தவும் பயன்படுத்தலாம் என்ற நோக்கில் அரசு செயற்படுகிறது.
நாங்கள் உலகநாடுகளிடம் ஒரு வேண்டு கோளை விடுத்துள்ளோம்.
வடக்கு - கிழக்கில் தான் பெரியளவில் அழிவு ஏற்பட்டிருக்கின்றது. வடக்கு - கிழக்கின் கரையோ ரப் பிரதேசந்தான் பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில்தான் 20 ஆயிரத்துக்கும் மேற் பட்ட மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எமது மீனவச் சமூகம் பெரும் துன்பத்துக்கு ஆளாகி வந்திருக்கின்றது. இராணுவம், கடற்படையின் ஒடுக்குமுறை காரணமாக எமது மீனவச் சமூகம் நீண்ட காலமாகப் பெரும் துன்ப, துயரங்களை அனுபவித்துள்ளது. சுமைகளோடு வாழ்ந்தது அந்த நிலையில் இப்போது ஆழிப்பேரலை அனர்த் தம் ஏற்பட்டுள்ளது.
மீனவச் சமூகத்தின் துன்ப வரலாறு ஆழிப் பேரலையுடன் வந்ததல்ல. தலைவர் சொல்லி யிருக்கிறார் முதலாவது ஆழிப்பேரலை இராணு வத்தால் ஏற்பட்டது என்று. இராணுவம், கடற்படை ஆகியவற்றின் கொடுமையால் பல்லாயிரக் கணக்கான மீனவர்கள் தமிழீழத்தில் கொல் லப்பட்டனர். மீனவத் தொழில்துறை பாதிக்கப் பட்டது. மீனவ மக்கள் சமாதானச் சூழலில் தமது வாழ்வை மீளக் கட்டியமைக்க முயன்றபோது இயற்கையின் அனர்த்தத்தால் இப்போது மீண் டும் ஒரு பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதைத்தான் இரண்டாவது ஆழிப் பேரலை என்று தலைவர் சொல்கிறார்.
நீண்டகாலமாகத் துன்பப்படும் இந்த மக்க ளுக்கு நிரந்தரமான வாழ்வை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் உலக நாடு களிடம் கோருகின்றோம்.
போராட்டம் என்ற வகையில் அரசியல் உரி மைக்காகப் போராடுவது வேறு. இது மக்களின் பொருளாதார வளத்துக்கான போராட்டம். இதில் நாங்கள் சிறிலங்கா அரசுடன் பேசி, அரசுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட பெருந்தொகை வெளி நாட்டு நிதியுதவிகள் எமது பாதிக்கப்பட்ட மக்க ளுக்கும் வந்து சேரும் வழிகளை அமைத்துக் கொடுக்கக்கூடிய கட்டமைப்பை உருவாக்குவ தற்குப் பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கின் றோம். பேச்சு ஒருமட்டத்தில் நடக்கின்றது. கொழும் பில் இருக்கும் சமாதானச் செயலகத்துக்கும் கிளி நொச்சியில் இருக்கும் சமாதானச் செயலகத்துக் கும் மத்தியில் பேச்சுக்கள் நடக்கின்றன.
நிவாரண உதவிகளை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சமத்துவமாகப் பகிர்ந்தளிப்பதற்கு இருதரப்பும் இணைக்கப்பாடு கண்டு ஒரு கட்ட மைப்பை உருவாக்குவதற்காகத் தான் பேச்சு நடக்கின்றது. இதிலும் எங்களுக்குச் சில சிக்கல் கள் இருக்கின்றன.
சந்திரிகா அரசின் நிர்வாகத்தின் கீழ் இந்தக் கட்டமைப்பைக் கொண்டுவருவது பிரச்சினைக் குரியது. தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதற் காக சந்திரிகா அம்மையார் அனர்த்தம் நிகழ்ந்த - பேரழிவு- சூழ்நிலையிலும் தனது அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள யோசிக்கிறார்.
ஆனால், தலைவர் பிரபாகரன் நோர்வே அமைச்சரிடம் கூறினார், இந்த நிதியுதவி எவை யும் எமது அமைப்பு ஊடாக வரத்தேவையில்லை. நீங்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமாவது உதவிகளைக் கொண்டு வந்து எமது மக்களுக்கு அந்தப் பணத்தை நேரடியாகக் கொடுத்து, அந் தத் திட்டங்களை நீங்களே நின்று செய்து மக்க ளின் வாழ்வை வளம்படுத்தினால் போதும் - என்று
விடுதலைப் புலிகளுக்கு இந்த நிதி வரவேண் டும் என்று நாங்கள் நிர்ப்பந்திக்கவில்லை. உல கத்தின் அனுதாபத்தால் வந்த நிதிகள் எமது மக் களின் நல்வாழ்வுக்காகக் கிடைக்க வேண்டும் என்பதுதான் எமது இயக்கத்தின் நிலைப்பாடு.
உங்கள் துயரமான மனநிலை எங்களுக்குப் புரிகின்றது. உங்கள் ஆழமான உணர்வலை கள் எங்களுக்குப் புரிகின்றன. கடலை, சமுத்திரத் தைத் திட்டிப் பயன் இல்லை. எந்தநேரமும் கடல் அமைதியாகத் தான் இருக்கின்றது. சூறாவளி ஏற்படும்போது கொந்தளிக்கும். இது கடற்றொழி லாளர் சகலருக்கும் தெரியும்.
கடலுக்குக் கீழ் பெரிய பூகம்பம் ஏற்பட்டுத் தான் அனர்த்தம் நிகழ்ந்தது - என்றார் பால சிங்கம்.
Jaffna Uthayan
முல்லைத்தீவு நலன்புரி நிலையத்தில் பாலசிங்கம் தெரிவிப்பு ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக் கென உலகின் அனுதாபத்தால் கிடைத்த நிதிகள் எம் மக்களின் நல்வாழ்வுக்காகக் கிடைக்க வேண் டும்.அதற்காக இலங்கை அரசுடன் ஒருமட்டத் தில் புலிகள் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர். கொழும்பிலும் கிளிநொச்சியிலும் உள்ள சமா தான செயலகங்கள் இந்தப் பேச்சுக்களை நடத்தி வருகின்றன.
- இவ்வாறு தெரிவித்தார் விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம். ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற் றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளுக்கு நேற்று விஜயம் செய்த அவர் இயற்கை அனர்த்தம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார் திரு மதி அடேல் பாலசிங்கமும் உடன் வந்திருந்தார்.
வடமராட்சி கிழக்கில் ஆழியவளையில் இருந்து பாலசிங்கம் தம்பதியரை கடற்புலிகளின் படகில் ஏற்றிச்சென்ற தளபதி சூசை பாதிக்கப்பட்ட கரையோரப் பகுதிகளை கடலில் இருந்தவாறு அவர்களுக்குக் காண்பித்தார்.
ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களையும் பாலசிங்கம் தம்பதியர் நேரில்சந் தித்து ஆறுதல் கூறினர். முள்ளியவளை வித்தியா னந்தாக் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள் மத்தியில் உரையாற்றும் போதே பால சிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-
ஈழத்தமிழ் மக்களையும் உலகில் வாழும் தமிழ்மக்களையும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கிய துயரச் சம்பவம் ஆழிப்பேரலை அனர்த்தம். இப்படியான பேரழிவுகள் 5 ஆயிரம், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடக் கின்றன என வரலாறுகள் கூறுகின்றன.
ஆனால், சமீப காலத்தில் இப்படியான பெரிய அனர்த்தம் எதுவும் - தமிழீழ மண்ணில் நிகழ்ந்த தில்லை. எமது மக்களுக்கு மட்டுமல்ல. உலகத் தமிழினத்துக்கே பெரும் அதிர்ச்சியை இது கொடுத் துள்ளது.
அனர்த்தத்தால் மக்களுக்கு ஏற்பட்ட அழி வின் ஆழமான பரிமாணங்களை எல்லாம் நாம் அறிவோம். அதன் தாற்பரியத்தை வார்த்தை களால் கூறமுடியாது. ஆறுதல்கூடச் சொல்லமுடி யாத அளவுக்கு இந்தத் துயரம் உங்களை அழுத் தும் என்பது எங்களுக்குத் தெரியும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகத் தமிழ் மக் கள் என்ன செய்தார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை உங்களுக்கு எடுத்துக் கூறவே இங்கு வந்தேன்.
தலைவரின் அழைப்பின்பேரில் நான் இங்கு
வந்தேன். இலங்கை அரசு எமது மக்களுக்கு உதவி செய்வதில் என்னென்ன தடைகளையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்தி வருகின்றது என்பதை அறிந்து அதனைச் சர்வதேசத்துக் குத் தெரியப்படுத்துவதே எனது முக்கிய நோக்கம்.
நோர்வேயின் முக்கிய அமைச்சர்கள் இங்கு வந்து தலைவரைச் சந்தித்தபோது நானும் உட னிருந்தேன். எமது மக்களின் பிரச்சினைகளை எடுத்துவிளக்கி எமது பகுதிகளை மீளக் கட்டி யயழுப்ப உலக நாடுகளின் உதவி தேவை என நாம் வலியுறுத்தினோம்.
இப்போது தலைவரின் பிரதிநிதியாக உங் களைச் சந்திக்க இங்கு வந்துள்ளேன். இரு தினங்கள் தலைவருடன் பேசினேன். அவரின் ஆழமான உணர்வலைகளை என்னால் புரிய முடிந்தது.சகல இராணுவ , அரசியல் நடவடிக் கைகளையும் ஒத்திவைத்துவிட்டு பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புனர்வாழ்வு அளிப் பதற்காக முழுப் புலிகள் இயக்கத்தையும் அதனோ டிணைந்த சகல அமைப்புகளையும் இந்தப் பணி யில் அவர் இறக்கியுள்ளார்.
மக்களைக் காப்பாற்றவும் அவசர உதவிக ளைச் செய்யவும் எமது கடற்புலிகள், அரசியற் பிரிவு உட்பட அனைத்துப் படையணிகளும் தமி ழர் புனர்வாழ்வுக் கழகம் உட்பட சகல பிரிவுகளும் தலைவரால் மீட்புப் பணிக்கு அனுப்பப்பட்டுள் ளன. எமது விடுதலை இயக்கமே உங்களுக் குப் பேருதவி செய்து வருகின்றது என்று நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.
சர்வதேச மட்டத்திலும் இலங்கை அரசுடனும் பேச்சுக்களை நடத்தி உலகத் தலைவர்களை இங்கு அழைத்து அவர்களுடன் கலந்தாலோ சித்து பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை வளம் படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க எமது தலைமை முழு முயற்சிகளையும் செய்துவரு கின்றது. இந்தத் தகவலை உங்களுக்குச் சொல் லத்தான் இங்கு வந்திருக்கின்றேன்.
இந்தப் பாடசாலையில் - அகதி முகாமில் - நீங் கள் வாழ்க்கையைத் தொடர நாங்கள் அனும திக்கப் போவதில்லை.
வீடமைப்புத் திட்டத்தின் கீழ், உங்களை உங் கள் சொந்தக் காணியில் குடியமர்த்தவும் மீண் டும் தொழில்வாய்ப்பை உங்களுக்கு உருவாக் கித்தரவும் பெரியளவிலான புனர்நிர்மானத் திட்டத்துடன் எமது இயக்கம் முழுமையாக - முழு மூச்சுடன் - பணியாற்றி வருகின்றது என்ற செய் தியை உங்களுக்குச் சொல்லத்தான் வந்திருக் கின்றேன்.
இதற்காக கொழும்பு அரசுடனும் நாங்கள் ஒருமட்டத்தில் பேச்சு நடத்திக் கொண்டிருக்கின் றோம். வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்கள் ஏராளமான உதவிகளை நிதி உதவியோடு நிவாரணப் பொருள்களையும் வழங்கிக்கொண் டிருக்கிறார்கள். அந்தப் பொருள்கள் இங்கு வந்த டைந்ததும் எமது இயக்கத்தின் உப அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போன் றவை உங்க ளுக்கு அவற்றை வழங்கிக்கொண்டிருக்கின் றன.
அவசர கால உணவு, உடை மற்றும் மருந்து போன்ற அவசர உதவிகள் உங்களுக்குக் கிடைத்து வருகின்றன. ஆனால், இது ஆரம்பகால உதவி கள் மட்டுமே. இதை வைத்து கொண்டு வாழ்க் கையை நடத்த முடியாது என்று எங்களுக்குத் தெரியும்.
எனவே, புதிய வீடுகளை அமைப்பதற்கும் மீளமைப்பைத் துரிதப்படுத்தி அகதி முகாமில் இருந்து மக்களை அவர்களது சொந்த இடத் திற்கு திரும்பிச் செல்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
உலக நாடுகள் பெருமளவான உதவிகளைச் செய்ய வாக்களித்துள்ளன. ஆனால், இந்த உதவி கள் இலங்கை அரசு ஊடாகத்தான் வரவேண்டி யிருக்கின்றது. ஓர் அரசு என்ற ரீதியில் வெளி நாடுகள் உடனடியாக தமது உதவிகளை அர சுக்கே கொடுக்கும்.
இந்த அரசு உதவி நிதியை எடுத்து எமது மக் களுக்கு அதனை சரிவர பங்கிடுமோ என்பதில் எமக்கு சந்தேகம் என்று நாங்கள் கூறுகின் றோம்.
சிங்கள அரசு சுனாமி அனர்த்தத்தை தனது அரசியல் இலாபத்துக்காகப் பயன்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு என வழங்கப்பட்ட நிதி உதவியை வேறு வழிகளில் தனது அரசைப் பலப்படுத்தவும், தனது இராணுவ இயந்திரத் தைப் பலப்படுத்தவும், தமது அரசியல் அதிகாரத்தை நிலைப்படுத்தவும் பயன்படுத்தலாம் என்ற நோக்கில் அரசு செயற்படுகிறது.
நாங்கள் உலகநாடுகளிடம் ஒரு வேண்டு கோளை விடுத்துள்ளோம்.
வடக்கு - கிழக்கில் தான் பெரியளவில் அழிவு ஏற்பட்டிருக்கின்றது. வடக்கு - கிழக்கின் கரையோ ரப் பிரதேசந்தான் பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில்தான் 20 ஆயிரத்துக்கும் மேற் பட்ட மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எமது மீனவச் சமூகம் பெரும் துன்பத்துக்கு ஆளாகி வந்திருக்கின்றது. இராணுவம், கடற்படையின் ஒடுக்குமுறை காரணமாக எமது மீனவச் சமூகம் நீண்ட காலமாகப் பெரும் துன்ப, துயரங்களை அனுபவித்துள்ளது. சுமைகளோடு வாழ்ந்தது அந்த நிலையில் இப்போது ஆழிப்பேரலை அனர்த் தம் ஏற்பட்டுள்ளது.
மீனவச் சமூகத்தின் துன்ப வரலாறு ஆழிப் பேரலையுடன் வந்ததல்ல. தலைவர் சொல்லி யிருக்கிறார் முதலாவது ஆழிப்பேரலை இராணு வத்தால் ஏற்பட்டது என்று. இராணுவம், கடற்படை ஆகியவற்றின் கொடுமையால் பல்லாயிரக் கணக்கான மீனவர்கள் தமிழீழத்தில் கொல் லப்பட்டனர். மீனவத் தொழில்துறை பாதிக்கப் பட்டது. மீனவ மக்கள் சமாதானச் சூழலில் தமது வாழ்வை மீளக் கட்டியமைக்க முயன்றபோது இயற்கையின் அனர்த்தத்தால் இப்போது மீண் டும் ஒரு பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதைத்தான் இரண்டாவது ஆழிப் பேரலை என்று தலைவர் சொல்கிறார்.
நீண்டகாலமாகத் துன்பப்படும் இந்த மக்க ளுக்கு நிரந்தரமான வாழ்வை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் உலக நாடு களிடம் கோருகின்றோம்.
போராட்டம் என்ற வகையில் அரசியல் உரி மைக்காகப் போராடுவது வேறு. இது மக்களின் பொருளாதார வளத்துக்கான போராட்டம். இதில் நாங்கள் சிறிலங்கா அரசுடன் பேசி, அரசுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட பெருந்தொகை வெளி நாட்டு நிதியுதவிகள் எமது பாதிக்கப்பட்ட மக்க ளுக்கும் வந்து சேரும் வழிகளை அமைத்துக் கொடுக்கக்கூடிய கட்டமைப்பை உருவாக்குவ தற்குப் பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கின் றோம். பேச்சு ஒருமட்டத்தில் நடக்கின்றது. கொழும் பில் இருக்கும் சமாதானச் செயலகத்துக்கும் கிளி நொச்சியில் இருக்கும் சமாதானச் செயலகத்துக் கும் மத்தியில் பேச்சுக்கள் நடக்கின்றன.
நிவாரண உதவிகளை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சமத்துவமாகப் பகிர்ந்தளிப்பதற்கு இருதரப்பும் இணைக்கப்பாடு கண்டு ஒரு கட்ட மைப்பை உருவாக்குவதற்காகத் தான் பேச்சு நடக்கின்றது. இதிலும் எங்களுக்குச் சில சிக்கல் கள் இருக்கின்றன.
சந்திரிகா அரசின் நிர்வாகத்தின் கீழ் இந்தக் கட்டமைப்பைக் கொண்டுவருவது பிரச்சினைக் குரியது. தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதற் காக சந்திரிகா அம்மையார் அனர்த்தம் நிகழ்ந்த - பேரழிவு- சூழ்நிலையிலும் தனது அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள யோசிக்கிறார்.
ஆனால், தலைவர் பிரபாகரன் நோர்வே அமைச்சரிடம் கூறினார், இந்த நிதியுதவி எவை யும் எமது அமைப்பு ஊடாக வரத்தேவையில்லை. நீங்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமாவது உதவிகளைக் கொண்டு வந்து எமது மக்களுக்கு அந்தப் பணத்தை நேரடியாகக் கொடுத்து, அந் தத் திட்டங்களை நீங்களே நின்று செய்து மக்க ளின் வாழ்வை வளம்படுத்தினால் போதும் - என்று
விடுதலைப் புலிகளுக்கு இந்த நிதி வரவேண் டும் என்று நாங்கள் நிர்ப்பந்திக்கவில்லை. உல கத்தின் அனுதாபத்தால் வந்த நிதிகள் எமது மக் களின் நல்வாழ்வுக்காகக் கிடைக்க வேண்டும் என்பதுதான் எமது இயக்கத்தின் நிலைப்பாடு.
உங்கள் துயரமான மனநிலை எங்களுக்குப் புரிகின்றது. உங்கள் ஆழமான உணர்வலை கள் எங்களுக்குப் புரிகின்றன. கடலை, சமுத்திரத் தைத் திட்டிப் பயன் இல்லை. எந்தநேரமும் கடல் அமைதியாகத் தான் இருக்கின்றது. சூறாவளி ஏற்படும்போது கொந்தளிக்கும். இது கடற்றொழி லாளர் சகலருக்கும் தெரியும்.
கடலுக்குக் கீழ் பெரிய பூகம்பம் ஏற்பட்டுத் தான் அனர்த்தம் நிகழ்ந்தது - என்றார் பால சிங்கம்.
Jaffna Uthayan
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

