01-28-2005, 05:09 AM
சுனாமியால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு இந்தியா உதவ வேண்டும்விடுதலைப்புலிகள் கோரிக்கை
கொழும்பு, ஜன. 28- ஈழத்தமிழர் பகுதியிலும் இந்தியா நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்று விடுதலைப்புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்தியா உள்பட பலநாடுகள் உதவி வருகின்றன. ஆனால் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மட்டும்தான் அந்த உதவிகள் செய்யப்படுகின்றன.
விடுதலைப்புலிகள் ஆளுகையில் உள்ள பகுதிகளும் சுனாமியால் பாதிக்கப்பட்ட போதிலும் அங்கு எந்த ஒருநாடும் உதவி முன்வரவில்லை. இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் அரசியல் பிhpவு தலைவர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது„-
சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகள் செய்யும் இந்தியா வடக்குப் பக்கமும் தனது கனிவான பார்வையை திருப்பவேண்டும். தெற்கிலும் கிழக்கிலும் மட்டும் உதவி செய்து கொண்டு இருக்கவேண்டாம். துயரப்பட்ட எங்கள் பகுதி மக்களுக்கும் இந்தியா கருணை காட்ட வேண்டும். உதவிகள் எந்த ரூபத்தில் வந்தாலும் அந்த நாங்கள் தடுக்கவில்லை. அரசு பிரதிநிதிகளுடன் இணைந்தே பணி செய்திருக்கிறேhம். இதற்காக அரசு உதவியை வரவேற்கிறேhம். தொழில்நுட்ப உதவியும் எங்களுக்கு தேவைப்படுகிறது. பல ஆண்டுகளாக அவதிப்படும் எங்களுக்கு இந்த பேரழிவு மேலும் துயரத்தை இழைத்துவிட்டது. தமிழ்நாட்டின் மீது இலங்கை அரசின் விரோத மனப்பான்மை தொடரத்தான் செய்கிறது. எங்கள் பகுதிக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அன்னானையும் கனடா பிரதமரையும் வரவிடாமல் இலங்கை அரசு தடுத்தது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. மேலும் பல உலகத்தலைவர்கள் இங்கு வர விருப்பம் தொpவித்தபோதிலும் இதை ஒரு மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசு அணுகவில்லை. இவ்வாறு கூறினார்.
புலிகளுடன் அரசு உடன்பாடில்லை
இலங்கையில் சுனாமியால் பாதித்த மக்களுக்கு சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகள் வழங்கும் நிவாரண உதவிகளை மக்களுக்கு பங்கிட்டு தர இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் இணைந்து செயல்படும் வகையில் பொதுவான ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்க யோசனை தொpவி;க்கப்பட்டது. இதை புலிகள் தலைவர் பிரபாகரன் வரவேற்றhர். இப்போது இதுகுறித்து இலங்கை வெளியுறவுத் துறை மந்திhp லஷ்மண் கதிர்காமர் கூறியது வருமாறு„-
பொது அமைப்பு குறித்து இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் தீவிரமாக பேச்சு நடத்தி வருகின்றனர். ஆனால் இன்னமும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Thanx: Dinakaran
கொழும்பு, ஜன. 28- ஈழத்தமிழர் பகுதியிலும் இந்தியா நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்று விடுதலைப்புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்தியா உள்பட பலநாடுகள் உதவி வருகின்றன. ஆனால் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மட்டும்தான் அந்த உதவிகள் செய்யப்படுகின்றன.
விடுதலைப்புலிகள் ஆளுகையில் உள்ள பகுதிகளும் சுனாமியால் பாதிக்கப்பட்ட போதிலும் அங்கு எந்த ஒருநாடும் உதவி முன்வரவில்லை. இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் அரசியல் பிhpவு தலைவர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது„-
சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகள் செய்யும் இந்தியா வடக்குப் பக்கமும் தனது கனிவான பார்வையை திருப்பவேண்டும். தெற்கிலும் கிழக்கிலும் மட்டும் உதவி செய்து கொண்டு இருக்கவேண்டாம். துயரப்பட்ட எங்கள் பகுதி மக்களுக்கும் இந்தியா கருணை காட்ட வேண்டும். உதவிகள் எந்த ரூபத்தில் வந்தாலும் அந்த நாங்கள் தடுக்கவில்லை. அரசு பிரதிநிதிகளுடன் இணைந்தே பணி செய்திருக்கிறேhம். இதற்காக அரசு உதவியை வரவேற்கிறேhம். தொழில்நுட்ப உதவியும் எங்களுக்கு தேவைப்படுகிறது. பல ஆண்டுகளாக அவதிப்படும் எங்களுக்கு இந்த பேரழிவு மேலும் துயரத்தை இழைத்துவிட்டது. தமிழ்நாட்டின் மீது இலங்கை அரசின் விரோத மனப்பான்மை தொடரத்தான் செய்கிறது. எங்கள் பகுதிக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அன்னானையும் கனடா பிரதமரையும் வரவிடாமல் இலங்கை அரசு தடுத்தது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. மேலும் பல உலகத்தலைவர்கள் இங்கு வர விருப்பம் தொpவித்தபோதிலும் இதை ஒரு மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசு அணுகவில்லை. இவ்வாறு கூறினார்.
புலிகளுடன் அரசு உடன்பாடில்லை
இலங்கையில் சுனாமியால் பாதித்த மக்களுக்கு சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகள் வழங்கும் நிவாரண உதவிகளை மக்களுக்கு பங்கிட்டு தர இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் இணைந்து செயல்படும் வகையில் பொதுவான ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்க யோசனை தொpவி;க்கப்பட்டது. இதை புலிகள் தலைவர் பிரபாகரன் வரவேற்றhர். இப்போது இதுகுறித்து இலங்கை வெளியுறவுத் துறை மந்திhp லஷ்மண் கதிர்காமர் கூறியது வருமாறு„-
பொது அமைப்பு குறித்து இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் தீவிரமாக பேச்சு நடத்தி வருகின்றனர். ஆனால் இன்னமும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Thanx: Dinakaran
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

