01-27-2005, 08:45 PM
சுருட்டும் முயற்சி....
வாய்ப்பைப் பயன்படுத்திச் சுருட்டிக் கொள்ளலாம் என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் முற்பட்டுள்ளது போல் தெரிகின்றது. சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து சிறிலங்காவிற்கு உதவ பல அரசுகள் முன்வந்துள்ள நிலையில் சுனாமி அனர்த்தத்தின் பெயரால் அதிகரித்த நிதியுத வியைப்பெற அரசாங்கம் முற்பட்டுள்ளதாக எண்ண வைக்கின்றது.
சுனாமி பாதிப்புக் குறித்து சிறிலங்கா அரசு போலியானதொரு மதிப்பீட்டு அறிக்கையையே வெளிப்படுத்த முற்பட்டுள்ளது என்பதை அரசாங்கத் தரப்புத் தகவல்களே அம்பலப்படுத்தி விடுபவையாக உள்ளன. எடுத்துக்காட்டாகää சுனாமி அனர்த்தத்தினால் இறந்தவர்கள் தொகை சுமார் 30ää000 ஆயிரம் பேர் என்றே முதலில் அறிவிக்கப்பட்டிருந்ததாயினும் ஒரு நாள் இரவில் இத்தொகை திடீரென 7000 பேரால் அதிகரித்திருந்தது. இதேபோன்றே அனர்த் தத்திற்கு உள்ளான பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்கான திட்டத்திற்கு முதலில் 15ää000 கோடி கோரிய அரசாங்கம் தற்பொழுது 35ää000 கோடி ரூபாய்களைக் கோருகின்றது.
அரசாங்கத்தின் இப்புள்ளி விபரங்களில் திடீரென ஏற்பட்ட மாற்றத்திற்கு உதவி வழங்குவோரிடம் இருந்து அதிகளவு நிதியுதவி களைப் பெற்றுக்கொள்வதே நோக்கமாகும். அல்லாதுவிடில் ஒரு வீதி திருத்துவதற்கு ஆறு தடவைகள் நிதியுதவி கோரி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கமாட்டாது.
அதாவதுää சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம்ää சுனாமி அனர்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழுந்துவிடலாம் எனத் திட்டமிடுவது போல் தெரிகின்றது. ஏற்கனவேää சுனாமி அனர்த்தத்திற்கு கிடைக்கப்பெற்ற நிதியுதவிகளால் ஏற்கனவே உருவாகியிருந்த தீவிர நெருக்கடியிலிருந்து அரசாங்கம் சற்று விடுதலை - அதாவது அரசின் மீதான நெருக்கடி சற்றுத் தளர்வடைந்துள்ளது என்றே கூறலாம்.
இந்நிலையில்தான்ää முற்றாக நெருக்கடியில் இருந்து விடுபடும் நோக்கில் இழப்பீடு தொடர்பான மதிப்பீட்டில் அதிகரிப்புச் செய்ய சனாதிபதி சந்திரிகாவின் ஆலோசனைக் குழு தீர்மானித்திருத்தல் வேண்டும். ஆனால்ää இது சாத்தியமானதொன்றாக இருக்குமா என்பது சந்தேகமே.
ஏனெனில்ää சிறிலங்காவிற்கு உதவி வழங்கும் நாடுகளும்ää நிதி அமைப்புக்களும் தமது மதிப்பீடு எதுவும் இன்றி நிதி உதவிகளை வாரி வழங்கிவிடப் போவதில்லை. உதவி வழங்குவோர் வாரி வழங்கினும்கூட அவற்றின் பயன்பாடு குறித்தும் அவதானம் செலுத்தாமல் இருக்கப்போவதில்லை.
இது ஒருபுறம் இருக்கத் தற்பொழுது அரசாங்கம் புனர்நிர்மாணப் பணிகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் இணைத்துக் கொள்வதற்குமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஊர்ஜிதப்படுத்தப்படும் பட்சத்தில் சர்வதேச நிதியுதவியில் அரசு கொண்டுள்ள அக்கறை இதன் மூலம் வெளிப்படும்.
அதாவதுää வெளிநாட்டு அரசுகளும் சரிää அரச சார்பற்ற நிதி நிறுவனங்களும் சரி சிறிலங்கா அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்க இணக்கம் தெரிவித்திருப்பினும் அவை வடக்கு-கிழக்கில் ஏற்பட்டுள்ள அழிவிற்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்துபவையாகவே உள்ளன. அதாவது தமது நிதியுதவி சகலருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என அவை கோருபவையாக உள்ளன. இவை நிதி உதவிக்கான நிபந்தனையாக இல்லாது போனாலும் அழுத்தம் கொடுக்கப்படும் ஒன்றாகவே உள்ளது.
இத்தகையதொரு சூழ்நிலை நிலவுகையில் தான்ää பெரும் நிதி எதிர்பார்க்கைகளுடன் கூடிய ஆட்சியாளர்கள் விடுதலைப் புலிகளையும் நிவாரணப் பணிகளில் இணைத்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டுள்ளனரோ என்ற சந்தேகம் எழுவதாகவுள்ளது. இவ்வாறு சந்தேகிப்பதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை. ஏனெனில்ää அரசாங்கம் நிவாரணப் பணிகளில் புலிகளை இணைப்பது பற்றிப் பேசுகையில் ஆயுதப் படைத்தரப்போ நிவாரணப் பணிகளில் கெடிபிடிகளை அதிகரித்துள்ளது. குறிப்பாகää அம்பாறை மாவட்டத்தில் அதிரடிப்படையினரின் அடாவடித்தனம் அதிகரிக் கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்ட முடியும்.
இந்நிலையில்ää நிவாரணப் பணி விடயத்தில் அரசாங்கத்துடன் இணைந்த செயற்பாடு குறித்து தீவிரமாகச் சிந்திக்க வேண்டியது அவசியமானதே. ஏனெனில் வெளிநாட்டு நிவாரண நிதி மூலம் அரசாங்கம் தனது நோக்கத்தை நிறைவு செய்வதையே இலக்காகக் கொண்டுள்ளது.
நன்றி: ஈழநாதம்
வாய்ப்பைப் பயன்படுத்திச் சுருட்டிக் கொள்ளலாம் என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் முற்பட்டுள்ளது போல் தெரிகின்றது. சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து சிறிலங்காவிற்கு உதவ பல அரசுகள் முன்வந்துள்ள நிலையில் சுனாமி அனர்த்தத்தின் பெயரால் அதிகரித்த நிதியுத வியைப்பெற அரசாங்கம் முற்பட்டுள்ளதாக எண்ண வைக்கின்றது.
சுனாமி பாதிப்புக் குறித்து சிறிலங்கா அரசு போலியானதொரு மதிப்பீட்டு அறிக்கையையே வெளிப்படுத்த முற்பட்டுள்ளது என்பதை அரசாங்கத் தரப்புத் தகவல்களே அம்பலப்படுத்தி விடுபவையாக உள்ளன. எடுத்துக்காட்டாகää சுனாமி அனர்த்தத்தினால் இறந்தவர்கள் தொகை சுமார் 30ää000 ஆயிரம் பேர் என்றே முதலில் அறிவிக்கப்பட்டிருந்ததாயினும் ஒரு நாள் இரவில் இத்தொகை திடீரென 7000 பேரால் அதிகரித்திருந்தது. இதேபோன்றே அனர்த் தத்திற்கு உள்ளான பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்கான திட்டத்திற்கு முதலில் 15ää000 கோடி கோரிய அரசாங்கம் தற்பொழுது 35ää000 கோடி ரூபாய்களைக் கோருகின்றது.
அரசாங்கத்தின் இப்புள்ளி விபரங்களில் திடீரென ஏற்பட்ட மாற்றத்திற்கு உதவி வழங்குவோரிடம் இருந்து அதிகளவு நிதியுதவி களைப் பெற்றுக்கொள்வதே நோக்கமாகும். அல்லாதுவிடில் ஒரு வீதி திருத்துவதற்கு ஆறு தடவைகள் நிதியுதவி கோரி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கமாட்டாது.
அதாவதுää சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம்ää சுனாமி அனர்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழுந்துவிடலாம் எனத் திட்டமிடுவது போல் தெரிகின்றது. ஏற்கனவேää சுனாமி அனர்த்தத்திற்கு கிடைக்கப்பெற்ற நிதியுதவிகளால் ஏற்கனவே உருவாகியிருந்த தீவிர நெருக்கடியிலிருந்து அரசாங்கம் சற்று விடுதலை - அதாவது அரசின் மீதான நெருக்கடி சற்றுத் தளர்வடைந்துள்ளது என்றே கூறலாம்.
இந்நிலையில்தான்ää முற்றாக நெருக்கடியில் இருந்து விடுபடும் நோக்கில் இழப்பீடு தொடர்பான மதிப்பீட்டில் அதிகரிப்புச் செய்ய சனாதிபதி சந்திரிகாவின் ஆலோசனைக் குழு தீர்மானித்திருத்தல் வேண்டும். ஆனால்ää இது சாத்தியமானதொன்றாக இருக்குமா என்பது சந்தேகமே.
ஏனெனில்ää சிறிலங்காவிற்கு உதவி வழங்கும் நாடுகளும்ää நிதி அமைப்புக்களும் தமது மதிப்பீடு எதுவும் இன்றி நிதி உதவிகளை வாரி வழங்கிவிடப் போவதில்லை. உதவி வழங்குவோர் வாரி வழங்கினும்கூட அவற்றின் பயன்பாடு குறித்தும் அவதானம் செலுத்தாமல் இருக்கப்போவதில்லை.
இது ஒருபுறம் இருக்கத் தற்பொழுது அரசாங்கம் புனர்நிர்மாணப் பணிகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் இணைத்துக் கொள்வதற்குமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஊர்ஜிதப்படுத்தப்படும் பட்சத்தில் சர்வதேச நிதியுதவியில் அரசு கொண்டுள்ள அக்கறை இதன் மூலம் வெளிப்படும்.
அதாவதுää வெளிநாட்டு அரசுகளும் சரிää அரச சார்பற்ற நிதி நிறுவனங்களும் சரி சிறிலங்கா அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்க இணக்கம் தெரிவித்திருப்பினும் அவை வடக்கு-கிழக்கில் ஏற்பட்டுள்ள அழிவிற்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்துபவையாகவே உள்ளன. அதாவது தமது நிதியுதவி சகலருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என அவை கோருபவையாக உள்ளன. இவை நிதி உதவிக்கான நிபந்தனையாக இல்லாது போனாலும் அழுத்தம் கொடுக்கப்படும் ஒன்றாகவே உள்ளது.
இத்தகையதொரு சூழ்நிலை நிலவுகையில் தான்ää பெரும் நிதி எதிர்பார்க்கைகளுடன் கூடிய ஆட்சியாளர்கள் விடுதலைப் புலிகளையும் நிவாரணப் பணிகளில் இணைத்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டுள்ளனரோ என்ற சந்தேகம் எழுவதாகவுள்ளது. இவ்வாறு சந்தேகிப்பதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை. ஏனெனில்ää அரசாங்கம் நிவாரணப் பணிகளில் புலிகளை இணைப்பது பற்றிப் பேசுகையில் ஆயுதப் படைத்தரப்போ நிவாரணப் பணிகளில் கெடிபிடிகளை அதிகரித்துள்ளது. குறிப்பாகää அம்பாறை மாவட்டத்தில் அதிரடிப்படையினரின் அடாவடித்தனம் அதிகரிக் கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்ட முடியும்.
இந்நிலையில்ää நிவாரணப் பணி விடயத்தில் அரசாங்கத்துடன் இணைந்த செயற்பாடு குறித்து தீவிரமாகச் சிந்திக்க வேண்டியது அவசியமானதே. ஏனெனில் வெளிநாட்டு நிவாரண நிதி மூலம் அரசாங்கம் தனது நோக்கத்தை நிறைவு செய்வதையே இலக்காகக் கொண்டுள்ளது.
நன்றி: ஈழநாதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

