01-27-2005, 08:37 PM
Mr and Mrs. Iyer
எனது பார்வையில் ஒரு தரமான திரைப்படம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேனோ அத்தனையும் கொண்டு வெளி வந்த திரைப்படம் Mr.and Mrs. Iyer.
பலதரப்பட்ட பயணிகளுடன் கல்கத்தா செல்லும் ஒரு பஸ் பயணத்துடன் திரைப்படம் ஆரம்பமாகின்றது. மற்றவர்களைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் லுாட்டி அடிக்கும் இளைஞர் யுவதிகள் கூட்டம், அமைதியாக அவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் ஒரு முஸ்லீம் முதிய தம்பதிகள், புதிதாகத் திருமணம் செய்த காதல் பறவைகள், இரண்டு சீக்கிய இளைஞர்கள் என்று பலருக்கிடையில் திரைப்படத்தின் நாயகி மீனாட்சி ஐயார் (கொங்கோனா சென்சர்மா) தனது 5மாதக் குழந்தை சந்தானத்துடன், நாயகன் ராஜா செளத்ரி (ராகுல் பொஸ்)முஸ்லீம் வனவிலங்குப் புகைப்படக் கலைஞர் என்று பயணம் ஆரம்பமாகின்றது.
கல்கத்தாவில் இருக்கும் கணவன் வீட்டிற்குத் திடீரென்று போக வேண்டி நேர்ந்ததால் தனது குழந்தையுடன் புறப்பட்டு விட்ட மீனாட்சியைப் பார்த்துக் கொள்ளுமாறு அவர்களின் பெற்றோர் ராஜா செளத்தியிடம் கேட்டுக்கொண்டதை இட்டு, அழும் குழந்தையை விளையாட்டுக்காட்டல், குழந்தையைத் துாங்க வைத்தல் போன்ற சின்னச்சின்ன உதவிகளை ராஜா செளத்ரி மீனாட்சிக்குச் செய்த போதும் தவிர்க்க முடியாத காரணங்களால் முன்பின் தெரியாத ஒரு முஸ்லீம் இளைஞனிடம் தாம் உதவி கேட்க நேரிட்டுவிட்டதே என்ற கடுப்புத்தான் அவள் முகத்தில் தெரிகின்றது. இரவு நேரம் பயணக்களைப்பில் அனைவரும் அயர்ந்து விட பஸ் நிறுத்தப்படுகின்றது. உள்ளூர் கலவரத்தால் பயணத்தைத் தொடர முடியாத நிலையில் பயத்துடன் பயணிகள் பஸ்ஸில் அமர்ந்திருக்க நெருப்புப் பந்தக்களுடன் இந்து தீவிர வாதிகள் பஸ்ஸில் நுழைந்து பயணிகளின் பெயர்களைக் கேட்டு முஸ்லீம்களை அடையாளம் காண முயல்கின்றார்கள். முஸ்லீம் இளைஞன் என்பதற்காய் ராஜா செளத்ரி கொடுத்த தண்ணீரைக் கூடக் குடிக்க விரும்பாத நிலையில் இருந்த மீனாட்சி தீவிர வாதிகள் அவர்கள் பெயரைக் கேட்ட போது திடமாக Mr. and Mrs Iyer என்று தங்களை அறிமுகப்படுத்தி அவன் கைகளைப் பிடித்துக் கொள்கின்றாள்.
இனவாதம் என்பது மொழி, மதம் என்று தலை துாக்கி ஆடினாலும் அதையும் மீறிய மனிதாபிமானம் இன்னும் இருக்கின்றது என்பதைத் தான் எந்த வித வன்முறைக் காட்சிகளையும் திரையில் கொண்டு வராமல், வன்முறையில் அதி உச்ச பாதிப்பையும் மனிதாபி மானத்தையும் படமாக்கி உள்ளார் அபர்ணா சென்.
அதன் பின்னர் ராஜா செளத்ரி, மீனாட்சிக்குள்ளான நட்பு நம்பிக்கை வளர்வதைக் கவிதையாக் காட்டி, இறுதியில் இந்தியக் கலாச்சாரத்தையும் மென்னையாகக் கேள்விக்குறியாக்கியுள்ளார் அபர்ணா சென்.
ஒரு வன்முறையாளன், வயோதிபன், வியாதிக்காறன் இப்படியான ஒருவனைக் கணவனாகக் கொண்ட ஒரு பெண் வேறு ஒருத்தன் மேல் காதல் வயப்படுவது என்பதைத் தான் நாம் திரையில் பார்த்திருக்கின்றோம். அன்பான படித்து நல்ல நிலையில் இருக்கும் ஒரு அழகான கணவனை மீனாட்சி கொண்டிருந்த போதும் சந்தர்பம் சூழ்நிலை புரிந்துணர்வு என்பன எவரையும் தடுமாற வைக்கும் என்பதை மீனாட்சி, ராஜா செளத்ரிக்கிடையில் ஏற்படும் உடல் ரீதி அற்ற அந்தக் காதல், நாம் பார்க்கும் இளசுகளின் காதலிலும் விட அழகாகக் காட்டப்பட்டிருக்கின்றது.
கொங்கோனா சென்சர்மா பதட்டம், வெறுப்பு, அழுகை, காதல் என்று தன் நடிப்பாற்றலைக் காட்டியிருந்த போதும், ராகுல் போஸ்ஸின் அந்த மின்னும் கண்களும் மெல்லிய புன்னகையும் எல்லாவற்றையும் மெளனமாகச் சொல்லி நிற்பதும் மனதை நிறைக்கின்றது.
சின்னதேவதையைப் போலவே இனக்கலவரத்தின் வன்முறை உச்சத்தை, வன்முறையைத் திரையில் கொண்டு வராமல் எம்மை உறைய வைத்த ஒரு திரைப்படம் இது.ஒட்டு மொத்தமாக ஒரு தரமான திரைப்படத்திற்கு என்னவெல்லாம் தேவையோ அவற்றைக் கொண்டுள்ளது இந்த Mr. and Mrs iyer திரைப்படம்.
Producer: N. Venkatesan Director: Aparna Sen Starring: Rahul Bose, Konkona Sensharma, Bharat Kaul Music: Ustad Zakir Hussain
Thanx: கறுப்பி
எனது பார்வையில் ஒரு தரமான திரைப்படம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேனோ அத்தனையும் கொண்டு வெளி வந்த திரைப்படம் Mr.and Mrs. Iyer.
பலதரப்பட்ட பயணிகளுடன் கல்கத்தா செல்லும் ஒரு பஸ் பயணத்துடன் திரைப்படம் ஆரம்பமாகின்றது. மற்றவர்களைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் லுாட்டி அடிக்கும் இளைஞர் யுவதிகள் கூட்டம், அமைதியாக அவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் ஒரு முஸ்லீம் முதிய தம்பதிகள், புதிதாகத் திருமணம் செய்த காதல் பறவைகள், இரண்டு சீக்கிய இளைஞர்கள் என்று பலருக்கிடையில் திரைப்படத்தின் நாயகி மீனாட்சி ஐயார் (கொங்கோனா சென்சர்மா) தனது 5மாதக் குழந்தை சந்தானத்துடன், நாயகன் ராஜா செளத்ரி (ராகுல் பொஸ்)முஸ்லீம் வனவிலங்குப் புகைப்படக் கலைஞர் என்று பயணம் ஆரம்பமாகின்றது.
கல்கத்தாவில் இருக்கும் கணவன் வீட்டிற்குத் திடீரென்று போக வேண்டி நேர்ந்ததால் தனது குழந்தையுடன் புறப்பட்டு விட்ட மீனாட்சியைப் பார்த்துக் கொள்ளுமாறு அவர்களின் பெற்றோர் ராஜா செளத்தியிடம் கேட்டுக்கொண்டதை இட்டு, அழும் குழந்தையை விளையாட்டுக்காட்டல், குழந்தையைத் துாங்க வைத்தல் போன்ற சின்னச்சின்ன உதவிகளை ராஜா செளத்ரி மீனாட்சிக்குச் செய்த போதும் தவிர்க்க முடியாத காரணங்களால் முன்பின் தெரியாத ஒரு முஸ்லீம் இளைஞனிடம் தாம் உதவி கேட்க நேரிட்டுவிட்டதே என்ற கடுப்புத்தான் அவள் முகத்தில் தெரிகின்றது. இரவு நேரம் பயணக்களைப்பில் அனைவரும் அயர்ந்து விட பஸ் நிறுத்தப்படுகின்றது. உள்ளூர் கலவரத்தால் பயணத்தைத் தொடர முடியாத நிலையில் பயத்துடன் பயணிகள் பஸ்ஸில் அமர்ந்திருக்க நெருப்புப் பந்தக்களுடன் இந்து தீவிர வாதிகள் பஸ்ஸில் நுழைந்து பயணிகளின் பெயர்களைக் கேட்டு முஸ்லீம்களை அடையாளம் காண முயல்கின்றார்கள். முஸ்லீம் இளைஞன் என்பதற்காய் ராஜா செளத்ரி கொடுத்த தண்ணீரைக் கூடக் குடிக்க விரும்பாத நிலையில் இருந்த மீனாட்சி தீவிர வாதிகள் அவர்கள் பெயரைக் கேட்ட போது திடமாக Mr. and Mrs Iyer என்று தங்களை அறிமுகப்படுத்தி அவன் கைகளைப் பிடித்துக் கொள்கின்றாள்.
இனவாதம் என்பது மொழி, மதம் என்று தலை துாக்கி ஆடினாலும் அதையும் மீறிய மனிதாபிமானம் இன்னும் இருக்கின்றது என்பதைத் தான் எந்த வித வன்முறைக் காட்சிகளையும் திரையில் கொண்டு வராமல், வன்முறையில் அதி உச்ச பாதிப்பையும் மனிதாபி மானத்தையும் படமாக்கி உள்ளார் அபர்ணா சென்.
அதன் பின்னர் ராஜா செளத்ரி, மீனாட்சிக்குள்ளான நட்பு நம்பிக்கை வளர்வதைக் கவிதையாக் காட்டி, இறுதியில் இந்தியக் கலாச்சாரத்தையும் மென்னையாகக் கேள்விக்குறியாக்கியுள்ளார் அபர்ணா சென்.
ஒரு வன்முறையாளன், வயோதிபன், வியாதிக்காறன் இப்படியான ஒருவனைக் கணவனாகக் கொண்ட ஒரு பெண் வேறு ஒருத்தன் மேல் காதல் வயப்படுவது என்பதைத் தான் நாம் திரையில் பார்த்திருக்கின்றோம். அன்பான படித்து நல்ல நிலையில் இருக்கும் ஒரு அழகான கணவனை மீனாட்சி கொண்டிருந்த போதும் சந்தர்பம் சூழ்நிலை புரிந்துணர்வு என்பன எவரையும் தடுமாற வைக்கும் என்பதை மீனாட்சி, ராஜா செளத்ரிக்கிடையில் ஏற்படும் உடல் ரீதி அற்ற அந்தக் காதல், நாம் பார்க்கும் இளசுகளின் காதலிலும் விட அழகாகக் காட்டப்பட்டிருக்கின்றது.
கொங்கோனா சென்சர்மா பதட்டம், வெறுப்பு, அழுகை, காதல் என்று தன் நடிப்பாற்றலைக் காட்டியிருந்த போதும், ராகுல் போஸ்ஸின் அந்த மின்னும் கண்களும் மெல்லிய புன்னகையும் எல்லாவற்றையும் மெளனமாகச் சொல்லி நிற்பதும் மனதை நிறைக்கின்றது.
சின்னதேவதையைப் போலவே இனக்கலவரத்தின் வன்முறை உச்சத்தை, வன்முறையைத் திரையில் கொண்டு வராமல் எம்மை உறைய வைத்த ஒரு திரைப்படம் இது.ஒட்டு மொத்தமாக ஒரு தரமான திரைப்படத்திற்கு என்னவெல்லாம் தேவையோ அவற்றைக் கொண்டுள்ளது இந்த Mr. and Mrs iyer திரைப்படம்.
Producer: N. Venkatesan Director: Aparna Sen Starring: Rahul Bose, Konkona Sensharma, Bharat Kaul Music: Ustad Zakir Hussain
Thanx: கறுப்பி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

