01-27-2005, 07:19 PM
<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->சுனாமி அனர்த்த நேரத்தில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா விழா நடத்தினார்.
சரியாக ஒரு மாதத்துக்கு முன்பு... மதியம் தாண்ட பயமும், சோகமும் கப்பிய உணர்ச்சியுள் ஈழத்து மக்கள் அனைவரும் விழுகின்றனர். கடற்கோள் ஏற்படுத்திவிட்ட மரணங்கள் தந்த சோகம்... இங்கேயும் கடல் பொங்குமோ என்ற பயம்.. அடுத்து எங்கே செல்வது என்று தெரியாமல் திகைப்பு... இவ்வாறு ஒன்றுமே முடியாத அவல நிலையில் முழு ஈழமும் கலங்கிக் கொண்டிருக்கிறது. நேரம் ஆக ஆக இறந்தோர் தொகை படிப்படியாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
தலைநகர் கொழுப்பு நேரடியாக கடுமையாகப் பாதிக்கப்படவில்லை என்றாலும், தாக்கம் இல்லாமலில்லை. மட்டக்குளியில் தமிழ்க் கல்வியாளர் சார்ந்த க.வை.தனேஸ்வரன் உள்ளிட்ட சிலரை கடல் பலியெடுத்துக் கொண்டுவிட்டிருந்தது.
வெள்ளவத்தையில் கடல் புகையிரதத் தடம் தாண்டி பொங்கி எட்டிப் பார்த்தபடியிருந்தது. வெள்ளவத்தை கடற்கரை வாழ் மக்கள் இடம்பெயரத் தொடங்கிவிட்டிருந்தனர். தொலைக்காட்சிகளுக்கு முன்னால் விழித்துக் கொண்டிருந்தும், வீதிக்கு வந்து நிகழ்கால நிலைமையை அவதானிப்பதுமாக மக்கள் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
அதே வெள்ளவத்தையில் உள்ள தமிழ்ச் சங்க மண்டபத்தில் அதே அந்த தத்தளிக்கும் வேளையில் ஒரு மலர் வெளியீடு நடந்து கொண்டிருந்தது. அங்கே மல்லிகையின் 40 ஆவது ஆண்டு மலரை வெளியிட்டுக் கொண்டிருந்தார் பிரபல எழுத்தாளர் டொமினிக் ஜீவா. நவீன எழுத்தளார்களுள் ஓரளவு சமுதாயத் தொடர்பு கொண்டவர் அவர் என்றும், பல்கலைக்கழகப் பட்டத்தையே மறுத்த ஆளுமையாளர் அவர் என்றும் நினைத்த நினைப்பெல்லாம் அந்த வெளியீட்டு விழாவில் தூர எறிந்து கொண்டிருந்தார்.
'மானுடம் எழுதுகிறோம்\" என்று மார்தட்டிக் கம்பீரமாக முழங்குகிற மல்லிகை ஆசிரியரால் இந்த மனுக்குல அவல நேரத்தில் எப்படி விழா நடத்த முடிந்தது? என்பது பாரிய கேள்விதான். இதில் நோக்கப்பட வேண்டிய இன்னுமொரு அம்சம், விழாவுக்கு இந்த அனர்த்த வேளையிலும் 50 பேரளவில் கலந்து விட்டிருந்தார்கள் என்பது. அவர்கள் பாவம், என்ன செய்வார்கள், மல்லிகையில் கட்டுரை போட்ட, அட்டைப்படம் போட்டதற்கு வேறு எப்படித்தான் நன்றிக் கடன் காட்டுவார்கள்?
வந்தவர்களை ஏமாற்ற விரும்பாத மல்லிகையின் பண்பாடு (?) விழாவை நடாத்தி முடித்துவிட்டது. சரி கொடிய அனர்த்தத்தின் முழு பூதாகர அவலமும் வெளிப்பட்டு விட்ட இன்றைய நிலையில், அடுத்த 'மல்லிகை\" இதழில் தான் தவிர்க்க முடியாமல் விழா நடத்த நேர்ந்து விட்டது குறித்த வருத்தத்தை ஆசிரியர் தெரிவிப்பார் என்றால்... கதையை விடுங்கள். எந்த இடர் தொடர்ந்து வந்துற்றாலும் மல்லிகையைத் தொடர்ந்து வெளியிடுவது குறித்து நெஞ்சு நிமிர்த்துகிற ஆசிரியர், இந்த கடற்கோள் அனர்த்த வேளையிலும் மலர் வெளியிட்டது குறித்து பெருமிதப்பட்டு, வீரப்பிரதாபம் எழுதிக் காட்டியுள்ளார்.
அவருக்கும், அவருக்கு கடன்பட்ட அந்த ஜம்பதின்மருக்கும் ஒரு மரபுத் தமிழ் இலக்கண அறிவரை ஒன்று (இறையானர் களவியலுரைகாரருக்கும் உண்டே முட்டை அடி);\" தமிழ் என் நுதலிற்றோ? எனின், தமிழ் அன்பு நுதலிற்று\" இதன் பொருள் என்ன தெரிகிறதோ, இதோ:-'தமிழ் மொழி உங்களுக்கு எதனைச் சொல்லித் தருகிறது? வேறெதனையுமில்லை. அன்பினையே சொல்லித்தருகிறது\".
இந்த மரபு அறிவுரை வாசித்த கையொடு, மானுடத்துக்கு எழுதும் நவீன எழுத்தாளருடைய ஆசிரியர் தலையங்கத்தையும் வாசிக்க வேண்டும். 'மிக்க மனநிறைவுடன் நிகழ்ந்த மல்லிகையின் நாற்பதாவது ஆண்டு மலர் வெளீயிட மிகச் சிறப்புடன் நடந்து முடிந்ததில் எமக்கெல்லாம் பரிபூரண திருப்தி.... யாரெல்லாம் மல்லிகையின் உழைப்பை மதித்து விழாவில் கலந்து கொண்டார்களோ அவர் அத்தனை பேரையும் மல்லிகை என்றும் நினைவில் வைத்திருக்கும். அவர்களை காலமறிந்து கௌரவிக்கும்(?)
தினக்குரல்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
:roll: :roll: :evil: :evil:
சரியாக ஒரு மாதத்துக்கு முன்பு... மதியம் தாண்ட பயமும், சோகமும் கப்பிய உணர்ச்சியுள் ஈழத்து மக்கள் அனைவரும் விழுகின்றனர். கடற்கோள் ஏற்படுத்திவிட்ட மரணங்கள் தந்த சோகம்... இங்கேயும் கடல் பொங்குமோ என்ற பயம்.. அடுத்து எங்கே செல்வது என்று தெரியாமல் திகைப்பு... இவ்வாறு ஒன்றுமே முடியாத அவல நிலையில் முழு ஈழமும் கலங்கிக் கொண்டிருக்கிறது. நேரம் ஆக ஆக இறந்தோர் தொகை படிப்படியாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
தலைநகர் கொழுப்பு நேரடியாக கடுமையாகப் பாதிக்கப்படவில்லை என்றாலும், தாக்கம் இல்லாமலில்லை. மட்டக்குளியில் தமிழ்க் கல்வியாளர் சார்ந்த க.வை.தனேஸ்வரன் உள்ளிட்ட சிலரை கடல் பலியெடுத்துக் கொண்டுவிட்டிருந்தது.
வெள்ளவத்தையில் கடல் புகையிரதத் தடம் தாண்டி பொங்கி எட்டிப் பார்த்தபடியிருந்தது. வெள்ளவத்தை கடற்கரை வாழ் மக்கள் இடம்பெயரத் தொடங்கிவிட்டிருந்தனர். தொலைக்காட்சிகளுக்கு முன்னால் விழித்துக் கொண்டிருந்தும், வீதிக்கு வந்து நிகழ்கால நிலைமையை அவதானிப்பதுமாக மக்கள் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
அதே வெள்ளவத்தையில் உள்ள தமிழ்ச் சங்க மண்டபத்தில் அதே அந்த தத்தளிக்கும் வேளையில் ஒரு மலர் வெளியீடு நடந்து கொண்டிருந்தது. அங்கே மல்லிகையின் 40 ஆவது ஆண்டு மலரை வெளியிட்டுக் கொண்டிருந்தார் பிரபல எழுத்தாளர் டொமினிக் ஜீவா. நவீன எழுத்தளார்களுள் ஓரளவு சமுதாயத் தொடர்பு கொண்டவர் அவர் என்றும், பல்கலைக்கழகப் பட்டத்தையே மறுத்த ஆளுமையாளர் அவர் என்றும் நினைத்த நினைப்பெல்லாம் அந்த வெளியீட்டு விழாவில் தூர எறிந்து கொண்டிருந்தார்.
'மானுடம் எழுதுகிறோம்\" என்று மார்தட்டிக் கம்பீரமாக முழங்குகிற மல்லிகை ஆசிரியரால் இந்த மனுக்குல அவல நேரத்தில் எப்படி விழா நடத்த முடிந்தது? என்பது பாரிய கேள்விதான். இதில் நோக்கப்பட வேண்டிய இன்னுமொரு அம்சம், விழாவுக்கு இந்த அனர்த்த வேளையிலும் 50 பேரளவில் கலந்து விட்டிருந்தார்கள் என்பது. அவர்கள் பாவம், என்ன செய்வார்கள், மல்லிகையில் கட்டுரை போட்ட, அட்டைப்படம் போட்டதற்கு வேறு எப்படித்தான் நன்றிக் கடன் காட்டுவார்கள்?
வந்தவர்களை ஏமாற்ற விரும்பாத மல்லிகையின் பண்பாடு (?) விழாவை நடாத்தி முடித்துவிட்டது. சரி கொடிய அனர்த்தத்தின் முழு பூதாகர அவலமும் வெளிப்பட்டு விட்ட இன்றைய நிலையில், அடுத்த 'மல்லிகை\" இதழில் தான் தவிர்க்க முடியாமல் விழா நடத்த நேர்ந்து விட்டது குறித்த வருத்தத்தை ஆசிரியர் தெரிவிப்பார் என்றால்... கதையை விடுங்கள். எந்த இடர் தொடர்ந்து வந்துற்றாலும் மல்லிகையைத் தொடர்ந்து வெளியிடுவது குறித்து நெஞ்சு நிமிர்த்துகிற ஆசிரியர், இந்த கடற்கோள் அனர்த்த வேளையிலும் மலர் வெளியிட்டது குறித்து பெருமிதப்பட்டு, வீரப்பிரதாபம் எழுதிக் காட்டியுள்ளார்.
அவருக்கும், அவருக்கு கடன்பட்ட அந்த ஜம்பதின்மருக்கும் ஒரு மரபுத் தமிழ் இலக்கண அறிவரை ஒன்று (இறையானர் களவியலுரைகாரருக்கும் உண்டே முட்டை அடி);\" தமிழ் என் நுதலிற்றோ? எனின், தமிழ் அன்பு நுதலிற்று\" இதன் பொருள் என்ன தெரிகிறதோ, இதோ:-'தமிழ் மொழி உங்களுக்கு எதனைச் சொல்லித் தருகிறது? வேறெதனையுமில்லை. அன்பினையே சொல்லித்தருகிறது\".
இந்த மரபு அறிவுரை வாசித்த கையொடு, மானுடத்துக்கு எழுதும் நவீன எழுத்தாளருடைய ஆசிரியர் தலையங்கத்தையும் வாசிக்க வேண்டும். 'மிக்க மனநிறைவுடன் நிகழ்ந்த மல்லிகையின் நாற்பதாவது ஆண்டு மலர் வெளீயிட மிகச் சிறப்புடன் நடந்து முடிந்ததில் எமக்கெல்லாம் பரிபூரண திருப்தி.... யாரெல்லாம் மல்லிகையின் உழைப்பை மதித்து விழாவில் கலந்து கொண்டார்களோ அவர் அத்தனை பேரையும் மல்லிகை என்றும் நினைவில் வைத்திருக்கும். அவர்களை காலமறிந்து கௌரவிக்கும்(?)
தினக்குரல்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
:roll: :roll: :evil: :evil:
. .
.
.

