01-27-2005, 07:04 PM
புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் இணக்கப்பாடுகள் ஏற்ப்படவில்லை
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் இதுவரை இணக்கப்பாடுகள் எதுவும் ஏற்ப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் லஷ்மன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.நேற்று இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கை குழுவின் செய்தியாளர் மகாநாட்டில் கருத்து வெளியிடும் போது அமைச்ர் கதிர்காமர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயல்படுவது குறித்து பேச்சுக்கள் நடத்தப்டுகின்றன ஆனால் இதுவரை இந்த விடயம் தொடர்பில் எந்தவிதமான ஒப்பந்தங்களும் கைச்சாதடதிடப்படவில்லை என்றும் அவர் தெரவித்துள்ளார்.
தமது விருப்பு வெறுப்புகளை கைவிட்டு நாட்டு நலன் குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் கதிர்காமர் குறிப்பிட்டுள்ளார்.
சில சந்தர்ப்பங்களில் விருப்பமில்லாதவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டி ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இங்கு கருத்து வெளியிட்ட ஹரீம் பீரிஸ் எந்த ஒரு சர்வதேச உதவியும் விடுதலைப் புலிகளுக்கும் நேரடியாக வழங்கப்படமாட்டாது விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் வேலைக்கான உடன்பாடு தொடர்பாகவே பேச்சுக்ள் நடத்தப்படுகின்ற என்றும் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத எந்த ஒரு அமைப்பின் ஊடாகவும் வெளிநாட்டு உதவிகள் கையாளப்பட முடியாது என்றும் அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு ஒரு பொழுதும் மாற்றமடையாது என்றும் ஹரிம் பீரிஸ் குறிப்பிட்டார்.
Puthinam
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் இதுவரை இணக்கப்பாடுகள் எதுவும் ஏற்ப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் லஷ்மன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.நேற்று இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கை குழுவின் செய்தியாளர் மகாநாட்டில் கருத்து வெளியிடும் போது அமைச்ர் கதிர்காமர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயல்படுவது குறித்து பேச்சுக்கள் நடத்தப்டுகின்றன ஆனால் இதுவரை இந்த விடயம் தொடர்பில் எந்தவிதமான ஒப்பந்தங்களும் கைச்சாதடதிடப்படவில்லை என்றும் அவர் தெரவித்துள்ளார்.
தமது விருப்பு வெறுப்புகளை கைவிட்டு நாட்டு நலன் குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் கதிர்காமர் குறிப்பிட்டுள்ளார்.
சில சந்தர்ப்பங்களில் விருப்பமில்லாதவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டி ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இங்கு கருத்து வெளியிட்ட ஹரீம் பீரிஸ் எந்த ஒரு சர்வதேச உதவியும் விடுதலைப் புலிகளுக்கும் நேரடியாக வழங்கப்படமாட்டாது விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் வேலைக்கான உடன்பாடு தொடர்பாகவே பேச்சுக்ள் நடத்தப்படுகின்ற என்றும் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத எந்த ஒரு அமைப்பின் ஊடாகவும் வெளிநாட்டு உதவிகள் கையாளப்பட முடியாது என்றும் அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு ஒரு பொழுதும் மாற்றமடையாது என்றும் ஹரிம் பீரிஸ் குறிப்பிட்டார்.
Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

