01-26-2005, 03:52 PM
பிரிட்டிஷ் உயரதிகாரியிடம் தமிழ்க்கூட்டமைப்பு வேண்டுகோள்
கடற்கோள் அனர்த்தத்தால் மிக மோசமான அழிவுகளை எதிர்கொண்டுள்ள தமிழ்ப் பிரதேசங்களில் புனரமைப்பு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தனியான கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதன் மூலமே அரசின் மோசடி நடவடிக்கைகளை தடுக்க முடியுமென்றும் எனவே, அதற்குரிய நடவடிக்கைகளை பிரிட்டனும் சர்வதேச சமூகமும் மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழத் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகொள் விடுத்துள்ளது.
இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரியான சைமன் பொன்டை நேற்று செவ்வாய்கிழமை காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் சந்தித்த போதே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
பிரிடிட்ஷ் தூதரகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது தமிழ்க்கூட்டமைப்பு பிரதிநிதிகள் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக தெரிவிக்கையில் கூறியதாவது:-
கடற்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகள், மீள்குடியேற்றம், அபிவிருத்தி போன்றவற்றுக்கான சகல அலுவலகங்களும் மத்தியிலேயே தான் அமைக்கப்பட்டுள்ளன.
மிக மோசமான இழப்புக்களை எதிர்கொண்ட தமிழ்ப்பிரதேசங்களின் மக்களினது அல்லது அங்குள்ள பிரதிநிதிகளினதோ பங்களிப்பு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகங்களினால் பெறப்படவில்லை. இதுவோர் பாரபட்சமான தன்னிச்சையான நடவடிக்கையாகும்.
மூன்றில் இரண்டு பங்கு கடற்கரைப் பிரதேசம் வடக்கு.கிழக்கிலேயே பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சர்வதேச சமூகத்தின் உதவிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
வடக்கு,கிழக்கில் அரச இயந்திரம் முழுமையாக செயற்பட முடியாத நிலையே உள்ளது. எனவே, வடக்கு,கிழக்குக்கு தனியான கட்டமைப்பைபொன்று உருவாக்கப்பட்டு அதற்கூடாக புனரமைப்பு நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஏனெனில், தென்னிலங்கையில் பாதிக்கப்பட்ட இடங்களில் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் அரச தரப்பினர் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்களை தொடர்ந்தும் புறக்கணித்த வண்ணமேயுள்ளனர்.
கடற்கோள் அனர்த்தம் அரசுக்கு நல்லதோர் சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. வடக்கு,கிழக்கில் முன்னெடுக்கப்பட வேண்டிய புனரமைப்பு நிவாரணப் பணிகளில் விடுதலைப் புலிகளையும் இணைத்துக் கொள்வதன் மூலம் இரு தரப்புக்குமிடையே பரஸ்பரம் புரிந்துணர்வை உருவாக்க முடியும் என்றும் தமிழ்க்கூட்டமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
தினக்குரல்
கடற்கோள் அனர்த்தத்தால் மிக மோசமான அழிவுகளை எதிர்கொண்டுள்ள தமிழ்ப் பிரதேசங்களில் புனரமைப்பு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தனியான கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதன் மூலமே அரசின் மோசடி நடவடிக்கைகளை தடுக்க முடியுமென்றும் எனவே, அதற்குரிய நடவடிக்கைகளை பிரிட்டனும் சர்வதேச சமூகமும் மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழத் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகொள் விடுத்துள்ளது.
இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரியான சைமன் பொன்டை நேற்று செவ்வாய்கிழமை காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் சந்தித்த போதே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
பிரிடிட்ஷ் தூதரகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது தமிழ்க்கூட்டமைப்பு பிரதிநிதிகள் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக தெரிவிக்கையில் கூறியதாவது:-
கடற்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகள், மீள்குடியேற்றம், அபிவிருத்தி போன்றவற்றுக்கான சகல அலுவலகங்களும் மத்தியிலேயே தான் அமைக்கப்பட்டுள்ளன.
மிக மோசமான இழப்புக்களை எதிர்கொண்ட தமிழ்ப்பிரதேசங்களின் மக்களினது அல்லது அங்குள்ள பிரதிநிதிகளினதோ பங்களிப்பு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகங்களினால் பெறப்படவில்லை. இதுவோர் பாரபட்சமான தன்னிச்சையான நடவடிக்கையாகும்.
மூன்றில் இரண்டு பங்கு கடற்கரைப் பிரதேசம் வடக்கு.கிழக்கிலேயே பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சர்வதேச சமூகத்தின் உதவிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
வடக்கு,கிழக்கில் அரச இயந்திரம் முழுமையாக செயற்பட முடியாத நிலையே உள்ளது. எனவே, வடக்கு,கிழக்குக்கு தனியான கட்டமைப்பைபொன்று உருவாக்கப்பட்டு அதற்கூடாக புனரமைப்பு நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஏனெனில், தென்னிலங்கையில் பாதிக்கப்பட்ட இடங்களில் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் அரச தரப்பினர் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்களை தொடர்ந்தும் புறக்கணித்த வண்ணமேயுள்ளனர்.
கடற்கோள் அனர்த்தம் அரசுக்கு நல்லதோர் சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. வடக்கு,கிழக்கில் முன்னெடுக்கப்பட வேண்டிய புனரமைப்பு நிவாரணப் பணிகளில் விடுதலைப் புலிகளையும் இணைத்துக் கொள்வதன் மூலம் இரு தரப்புக்குமிடையே பரஸ்பரம் புரிந்துணர்வை உருவாக்க முடியும் என்றும் தமிழ்க்கூட்டமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

