01-26-2005, 03:49 PM
சுனாமி அரசியலா? அரசியல் சுனாமியா?
அமெரிக்க மக்களை கிலிகொள்ள வைத்த செப்ரெம்பர்11 தாக்குதலுக்குப்பின் எப்படி உலக ஒழுங்கமைப்பில் 9-11 க்குமுன் 9-11 க்குப் பின் என்று நோக்கப்பட்டதோ அதேபோல் தென்னாசியாவில் ஏற்பட்ட நிலநிடுக்க ஆழிப்பேரலை அனர்த்தத்திற்குப்பின் ஏற்ப்பட்ட நிகழ்வுகளை சுனனாமிக்குமுன் சுனாமிக்குபின் என ஆய்வாளார்கள் நோக்குகிறார்கள்.
உலகின் பல்வேறுநாடுகளிலும் ஏற்ப்பட்ட பிரச்சினைகளை தனது இராணுவ பொருளாதார நலன் களுக்காக தமக்கு சாதகமாக பயன்படுத்த எண்ணி தூபம் போட்டு வளர்த்து வந்த வல்லரசு நாடுகள் 9-11 க்கு பின் 'தன் வினை தன்னைச்சுடும்" என்பதை உணர்ந்து தமது 'இராஜதந்திரங்களை' மாற்றிக்கொண்டதுடன் தமது கதவுகளையும் இறுக சாத்திக்கொண்டது.
அதன் விளைவாக தாம் 'பயங்கரவாதிகள்' என கருதும் எவருக்கெதிராகவும் சட்டவரப்பற்ற நடவடிக்கை எடுப்பது ஏனைய உலக அரசாங்களுடன் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிரான போரை விஸ்த்தரிப்பது
எதிர்காலத்தில் தமக்கு சவாலாக வரக்கூடியவர்களை கண்காணிப்பது போன்ற நிகழ்ச்சி நிரல்கள் வகுக்கப்பட்டன செயற்படுத்தப்பட்டன.
இதனால் உண்மையாகவே விடுதலை வேண்டி நீண்டகாலமாக போராடிவரும் சில விடுதலை அமைப்புக்கள் பாதிக்கப்பட்டதும் இந்த வல்லரசுகளின் மறைமுக கண்காணிப்பு நாடுகளினது உதவியுடன் சமாதான தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.சில நாடுகளில் உள்நாட்டு ஆயுதப்போராட்டங்கள் மூலமே தமது கால்களை பதிக்கலாம் என கனவுகண்ட வல்லரசுகள் பின்னர் அப்போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரவேண்டிய நிர்ப்பந்தத்தில் சமாதான தரகர்களையும் சர்வதேச ஊடகங்களையும் யன்படுத்தினாலும் தற்காலிகமாகவே தமது |கனவை| மறந்திருந்தன.இப்போ அங்கே ஏற்பட்ட சுனாமி தென்னாசியாவின் கதவுகளை அகலதிறந்துள்ளது. மனிதாபிமான உதவிகள் என்ற போர்வையில் சில உபத்திரவங்களும் தரையிறக்கப்பட்டுள்ளன.
இலங்கைத்தீவை பொறுத்தவரை சுனாமி அரசியல் ஐ.நா செயலாலரின் இலங்கை விஜயம் ஜேவிபியின் யாழ் விஜயம் நிவாரணபங்கீட்டில் பாரபட்சம் இராணுவம் வலிந்து அகதிகள் முகாமின் நிர்வாகத்தை எடுக்க முனைந்தமை என்பவற்றில் வெளிப்பட்டது.சுனாமி அரசியல் மூலம் பயன்பெற நினைத்த இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகள் இப்போ ஒரு அரசியல் சுனாமியையே இப்பிராந்தியத்திற்கு வரவழைத்திருக்கிறது.
அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளின் தரையிறக்கத்துடன் ஆரம்பமாகியுள்ள இவ் அரசியல் சுனாமி முழுத்தீவின் இறைமைக்கே கேள்விக்குறியாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கண்கெட்டபின்னே சூரிய நமஸ்காரம்| பண்ணும் இந்தியா இந்த விடயத்தில் தாமதமாகவே தன்னை சுதாகரித்துக்கொண்டு சீனாவுடன் தனது உறவுகளை பலப்படுத்தும் இராஜதந்திர முயற்சிகளில் இறங்கியுள்ளது.ஆனால் எதுபற்றியும் கவலைப்படாத இலங்கை ஆட்சியாளர்கள் எரிகிற வீட்டில் பிடுங்கிறது லாபம்| என்ற மனப்போக்கில் நாட்டை அடகுவைக்க எந்த வல்லரசுடனும் பேரம் பேசவும் தயார் என்ற நிலைப்பாட்டிலேயே செயற்படுகிறார்கள்.
சிங்களதேசம் இதுகுறித்து சிறிதும் வெட்கம் கொள்வதற்கு மாறாக இந்த அரசியல் சுனாமியால் எப்படி தமிழர் தேசத்தின் கோரிக்கையை முற்றாக மூழ்கடிப்பது என்பதிலேயே முனைப்பாக உள்ளது.தமிழ் மக்களாகிய நாங்கள் இந்த அரசியல் சுனாமிபற்றி விழிப்புடன் இருப்பதும் நமது தலைவிதியை நாமே நிர்ணயித்துக்கொள்ளும் உரிமைக்கு பங்கம் நேர்ந்து விடாது பார்த்துக்கொள்வதும் எமது தலையாய கடமையாகும்.
தமிழத் தேசியம் மக்கள் போராட்டம் உலகத்தமிழர் ஆதரவு என்பவை முன் எப்போதும் இல்லாதவாறு தமது பலத்தை வெளிப்படுத்தி எமது இனத்தின் கவசமாக உள்ளவர்களின் கவசமாக செயற்படவேண்டிய மிகமுக்கிய தருணம் இது. செயற்படுவோம்..!
- மு.விஜயராகவன் (இலண்டன்)
அமெரிக்க மக்களை கிலிகொள்ள வைத்த செப்ரெம்பர்11 தாக்குதலுக்குப்பின் எப்படி உலக ஒழுங்கமைப்பில் 9-11 க்குமுன் 9-11 க்குப் பின் என்று நோக்கப்பட்டதோ அதேபோல் தென்னாசியாவில் ஏற்பட்ட நிலநிடுக்க ஆழிப்பேரலை அனர்த்தத்திற்குப்பின் ஏற்ப்பட்ட நிகழ்வுகளை சுனனாமிக்குமுன் சுனாமிக்குபின் என ஆய்வாளார்கள் நோக்குகிறார்கள்.
உலகின் பல்வேறுநாடுகளிலும் ஏற்ப்பட்ட பிரச்சினைகளை தனது இராணுவ பொருளாதார நலன் களுக்காக தமக்கு சாதகமாக பயன்படுத்த எண்ணி தூபம் போட்டு வளர்த்து வந்த வல்லரசு நாடுகள் 9-11 க்கு பின் 'தன் வினை தன்னைச்சுடும்" என்பதை உணர்ந்து தமது 'இராஜதந்திரங்களை' மாற்றிக்கொண்டதுடன் தமது கதவுகளையும் இறுக சாத்திக்கொண்டது.
அதன் விளைவாக தாம் 'பயங்கரவாதிகள்' என கருதும் எவருக்கெதிராகவும் சட்டவரப்பற்ற நடவடிக்கை எடுப்பது ஏனைய உலக அரசாங்களுடன் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிரான போரை விஸ்த்தரிப்பது
எதிர்காலத்தில் தமக்கு சவாலாக வரக்கூடியவர்களை கண்காணிப்பது போன்ற நிகழ்ச்சி நிரல்கள் வகுக்கப்பட்டன செயற்படுத்தப்பட்டன.
இதனால் உண்மையாகவே விடுதலை வேண்டி நீண்டகாலமாக போராடிவரும் சில விடுதலை அமைப்புக்கள் பாதிக்கப்பட்டதும் இந்த வல்லரசுகளின் மறைமுக கண்காணிப்பு நாடுகளினது உதவியுடன் சமாதான தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.சில நாடுகளில் உள்நாட்டு ஆயுதப்போராட்டங்கள் மூலமே தமது கால்களை பதிக்கலாம் என கனவுகண்ட வல்லரசுகள் பின்னர் அப்போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரவேண்டிய நிர்ப்பந்தத்தில் சமாதான தரகர்களையும் சர்வதேச ஊடகங்களையும் யன்படுத்தினாலும் தற்காலிகமாகவே தமது |கனவை| மறந்திருந்தன.இப்போ அங்கே ஏற்பட்ட சுனாமி தென்னாசியாவின் கதவுகளை அகலதிறந்துள்ளது. மனிதாபிமான உதவிகள் என்ற போர்வையில் சில உபத்திரவங்களும் தரையிறக்கப்பட்டுள்ளன.
இலங்கைத்தீவை பொறுத்தவரை சுனாமி அரசியல் ஐ.நா செயலாலரின் இலங்கை விஜயம் ஜேவிபியின் யாழ் விஜயம் நிவாரணபங்கீட்டில் பாரபட்சம் இராணுவம் வலிந்து அகதிகள் முகாமின் நிர்வாகத்தை எடுக்க முனைந்தமை என்பவற்றில் வெளிப்பட்டது.சுனாமி அரசியல் மூலம் பயன்பெற நினைத்த இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகள் இப்போ ஒரு அரசியல் சுனாமியையே இப்பிராந்தியத்திற்கு வரவழைத்திருக்கிறது.
அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளின் தரையிறக்கத்துடன் ஆரம்பமாகியுள்ள இவ் அரசியல் சுனாமி முழுத்தீவின் இறைமைக்கே கேள்விக்குறியாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கண்கெட்டபின்னே சூரிய நமஸ்காரம்| பண்ணும் இந்தியா இந்த விடயத்தில் தாமதமாகவே தன்னை சுதாகரித்துக்கொண்டு சீனாவுடன் தனது உறவுகளை பலப்படுத்தும் இராஜதந்திர முயற்சிகளில் இறங்கியுள்ளது.ஆனால் எதுபற்றியும் கவலைப்படாத இலங்கை ஆட்சியாளர்கள் எரிகிற வீட்டில் பிடுங்கிறது லாபம்| என்ற மனப்போக்கில் நாட்டை அடகுவைக்க எந்த வல்லரசுடனும் பேரம் பேசவும் தயார் என்ற நிலைப்பாட்டிலேயே செயற்படுகிறார்கள்.
சிங்களதேசம் இதுகுறித்து சிறிதும் வெட்கம் கொள்வதற்கு மாறாக இந்த அரசியல் சுனாமியால் எப்படி தமிழர் தேசத்தின் கோரிக்கையை முற்றாக மூழ்கடிப்பது என்பதிலேயே முனைப்பாக உள்ளது.தமிழ் மக்களாகிய நாங்கள் இந்த அரசியல் சுனாமிபற்றி விழிப்புடன் இருப்பதும் நமது தலைவிதியை நாமே நிர்ணயித்துக்கொள்ளும் உரிமைக்கு பங்கம் நேர்ந்து விடாது பார்த்துக்கொள்வதும் எமது தலையாய கடமையாகும்.
தமிழத் தேசியம் மக்கள் போராட்டம் உலகத்தமிழர் ஆதரவு என்பவை முன் எப்போதும் இல்லாதவாறு தமது பலத்தை வெளிப்படுத்தி எமது இனத்தின் கவசமாக உள்ளவர்களின் கவசமாக செயற்படவேண்டிய மிகமுக்கிய தருணம் இது. செயற்படுவோம்..!
- மு.விஜயராகவன் (இலண்டன்)
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

