01-25-2005, 09:43 AM
தமிழ் இலக்கியம்
விக்கிபீடியாவிடமிருந்து விடுதலை மனப்பாங்கொடு உருவான கலைக்களஞ்சியம்.
தமிழ் இலக்கிய மரபுகளின்படி, தற்போது கிடைக்கக்கூடிய சான்றுகள் காட்டுகின்ற காலக்கணக்குகளுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கிய வளம் உள்ள மொழியாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. தொல்பழங்காலத்தில், அக்காலப் பாண்டிய அரசர்களின் ஆதரவில், ஒன்றுக்குப்பின் ஒன்றாக மூன்று தமிழ்ச்சங்கங்கள் தமிழாராய்ந்ததாகவும், அக்காலத்தில் தமிழிலக்கியங்கள் பல இயற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என அழைக்கப்படும் இம் முச்சங்கங்கள் சார்ந்த இலக்கியங்களிலே கடைச்சங்க நூல்கள் மட்டுமே தற்போது கிடைப்பதாகச் சொல்லுகிறார்கள். முன்னிரண்டு சங்கங்களையும் சேர்ந்த நூல்கள், அக்காலங்களில் ஏற்பட்ட கடல்கோள்களின்போது, நாட்டின் பெரும்பகுதியுடன் சேர்ந்து அழிந்து போனதாம். எனினும், முதலிரு சங்கங்கள் இருந்ததுபற்றியோ அல்லது அக்காலத்தில் இலக்கியங்கள் இருந்ததுபற்றியோ போதிய உறுதியான ஆதாரங்கள் எதுவுமில்லை.
எனினும், கிடைக்கக்கூடிய உறுதியான சான்றுகளின் அடிப்படையில், தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுக்குக் குறையாத பழமை வாய்ந்தது எனக் கூறமுடியும். தற்போது கிடைக்கும் தமிழ் இலக்கிய நூல்களிற் சில கிறீஸ்து சகாப்தத்துக்கு முற்பட்டவை என்பது சில ஆராய்ச்சியாளர்கள் முடிபு.
தமிழ் இலக்கியங்களை அவை எழுதப்பட்ட காலத்தின் அடிப்படையில் கீழ்கண்டவாறு பிரிப்பர்.
சங்க இலக்கியம் - வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் கடைச்சங்க காலம் (சுமார் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு) வரை
இடைக்கால இலக்கியம் - இவற்றில் அனேகம் சிற்றிலக்கியங்கள், பக்தி மார்க்க நூல்கள்
இக்கால இலக்கியம் - பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து தற்காலம் வரை.்
மேலும்....
விக்கிபீடியாவிடமிருந்து விடுதலை மனப்பாங்கொடு உருவான கலைக்களஞ்சியம்.
தமிழ் இலக்கிய மரபுகளின்படி, தற்போது கிடைக்கக்கூடிய சான்றுகள் காட்டுகின்ற காலக்கணக்குகளுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கிய வளம் உள்ள மொழியாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. தொல்பழங்காலத்தில், அக்காலப் பாண்டிய அரசர்களின் ஆதரவில், ஒன்றுக்குப்பின் ஒன்றாக மூன்று தமிழ்ச்சங்கங்கள் தமிழாராய்ந்ததாகவும், அக்காலத்தில் தமிழிலக்கியங்கள் பல இயற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என அழைக்கப்படும் இம் முச்சங்கங்கள் சார்ந்த இலக்கியங்களிலே கடைச்சங்க நூல்கள் மட்டுமே தற்போது கிடைப்பதாகச் சொல்லுகிறார்கள். முன்னிரண்டு சங்கங்களையும் சேர்ந்த நூல்கள், அக்காலங்களில் ஏற்பட்ட கடல்கோள்களின்போது, நாட்டின் பெரும்பகுதியுடன் சேர்ந்து அழிந்து போனதாம். எனினும், முதலிரு சங்கங்கள் இருந்ததுபற்றியோ அல்லது அக்காலத்தில் இலக்கியங்கள் இருந்ததுபற்றியோ போதிய உறுதியான ஆதாரங்கள் எதுவுமில்லை.
எனினும், கிடைக்கக்கூடிய உறுதியான சான்றுகளின் அடிப்படையில், தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுக்குக் குறையாத பழமை வாய்ந்தது எனக் கூறமுடியும். தற்போது கிடைக்கும் தமிழ் இலக்கிய நூல்களிற் சில கிறீஸ்து சகாப்தத்துக்கு முற்பட்டவை என்பது சில ஆராய்ச்சியாளர்கள் முடிபு.
தமிழ் இலக்கியங்களை அவை எழுதப்பட்ட காலத்தின் அடிப்படையில் கீழ்கண்டவாறு பிரிப்பர்.
சங்க இலக்கியம் - வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் கடைச்சங்க காலம் (சுமார் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு) வரை
இடைக்கால இலக்கியம் - இவற்றில் அனேகம் சிற்றிலக்கியங்கள், பக்தி மார்க்க நூல்கள்
இக்கால இலக்கியம் - பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து தற்காலம் வரை.்
மேலும்....

