01-25-2005, 05:14 AM
சுனாமியின் அநாதைகள் - நிலாந்தன்
சுனாமியினால் லாபம் அடைந்தது யார். நட்டமடைந்தது யார். என்று கணக்கெடுக்க வேண்டிய ஒரு கட்டத்திற்கு சுனாமி அரசியல் வந்துகொண்டிருக்கிறது. எப்பொழுது சுனாமி ஒரு அரசியலாகியதோ எப்பொழுது சுனாமிக்கு பிந்திய மனிதாபிமான பணிகளில் மனிதாபிமான விகிதச்செறிவு அருவருப்பூட்டும் அளவிற்க்கு அதிகரித்ததோ அப்பொழுதிருந்தே சுனாமியின் இலாப நட்டத்தை கணக்கெடுக்க வேண்டிய ஒரு தேவையும் தோன்றி விட்டது.
இதன்படி பார்த்தால் சுனாமியால் பெரும் லாபம் அடைந்தது முதலாவதாக அமெரிக்கா. இரண்டாவதாக சிறிலங்கா அல்லது சந்திரிக்கா. இதில் நட்டம் யாருக்கு என்றால் தமிழர்களுக்கே. இதைச் சிறிது விரிவாக பார்ப்போம்.
முதலாவதாக அமெரிக்காதான் சுனாமியின் பயனாளி. சிறுதொகைப் பணத்தை நிதியுதவியாகக் கொடுத்ததைத் தவிர மற்றெல்லா விதங்களிலிலும் அதற்க்கு வரவுதான். ஆம் அவர்கள் தந்ததை சிறுதொகை என்றே கூறவேண்டும். அவர்களைப் பொறுத்தவரை அது மிகச் சிறுதொகைதான். அதைக்கூட அவர்களின் மனிதாபிமான அரசியலுக்கு ஒரு முதலீடு என்று பார்த்தால் அதனை செலவுக்கணக்கில் போடமுடியாது. எனவே சுனாமியின் பெரியபயனாளி அமெரிக்காதான்
சுனாமியின் பெயரால் அமெரிக்கா இச்சிறுதீவில் தனது பிடியைமேலும் இறுக்கியிருக்கிறது. சாதாரண காலம் என்றால் இதைச்செய்யும் போது இந்தியாவிற்கு நோகாமல் செய்வது கடினம் ஆனால் சுனாமியின் பெயரால் அமெரிக்கா இலங்கைத்தீவில் உரிமை பராட்டுவதில் தனக்கு உருவாகியிருக்கும் புதிய வாய்ப்புக்களை ஆகக்கூடியபட்சம் பயன்படுத்தியிருக்கிறது. குறைந்த பட்சம் குறியீடகவேனும் அவர்கள் துருப்புக்களை இலற்கைத்தீவினுள் நகர்த்த முடிந்திருக்கிறது.
அண்மையில் அம்பாந்தோட்டையில் ஒரு கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க பேசியிருந்தார். இதில் அவர் ஜே.வி.பியை சுட்டாமல் சுட்டி சில கருத்துக்களைக் கூறியிருந்தார். நாட்டிலே தற்சமயம் தோன்றியுள்ள நிலை ஒரு அரசியல் யதார்த்தம் என்றும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்மென்றும் வெறுமனே அரசியல் கொள்கைகளை இறுக்கிப்பிடித்துக் கொண்டு தூதரகங்களுக்கு முன் ஊர்வலம் செய்வதால் பலனில்லை என்றும் தொனிபட ரணில் அதில் பேசியிருந்தார். இதன் அர்த்தம் என்வென்றால் ரணில் முன்பு அடிக்கடி சொல்லி வந்த சர்வதேச வலைப்பின்னல் இதுதான் என்பதே. இலங்கைத்தீவில் அமெரிக்காவின் பிடி இறுக இறுக அது ஒரு கட்டத்தில் யூ.என்.பிக்கு நன்மையாய் முடியுமென்று ரணில் நம்புகிறார் போலும்.
அவர் கூறியது போல சர்வதேச வலைப்பின்னல் இப்போது சந்திரிக்காவிற்கு கிடைக்கத் தொடங்கிவிட்டது. இதன் படி கூறின் சந்திரிகாவை சுனாமியின் இரண்டாவது பெரிய பயனாளி எனலாம்.
அமெரிக்காவுடன் நெருங்கி ஒத்துழைக்கும் போது இந்தியாவுடன் ஏற்ப்படக்கூடிய அசௌகரியங்களிலிருந்து சுனாமி சந்திரிகாவை பாதுகாத்திருக்கிறது மட்டுமல்ல் சுனாமி சந்திரிகாவை அவர் சிக்கித்தவித்து வந்த பொருளபதார பிரச்சனைகளிலிருந்தும் ஒப்பீட்டளவில் விடுவித்திருக்கிறது.
இந்தோனேசியாவில் விடுதலைக்காக போராடும் அசே மாநிலத்தில் நிவாரண உதவிகள் Nபுழு க்களினூடாக வழங்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு இந்தோனேசிய சனாதிபதி தன்னிடம் கேட்டதாக கொபி அனான் அண்மையில் கொழும்பில் வைத்து கூறியிருந்தார். ஆனால் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து அத்தகைய கோரிக்கை எதுவும் வரவில்லை என்றுமவர் தெரிவித்திருந்தார்.
இந்நிதியை கையாளும் விசயத்தில் இணையத்தளத்தை திறந்து அதில் எல்லாக்கணக்கு விபரங்கயையும் பதிவில் வைக்குமாறு உலகவங்கியின் தலைவர் அண்மையில் அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறியிருந்தார்.
ஆனால் இது விடயத்தில் அரசாங்கம் ஒளிவு மறைவு அற்ற தன்மையை நிரூபிக்கும் விதத்தில் இப்பந்தி எழுதப்படும் நாள்வரையில் எது வித நடவடிக்கையும் எடுத்தாக தெரியவில்லை.
சுனாமி நிதி இலங்கைத்தீவின் பொருளாதரத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்ப்படுத்த வல்லது. என்பதை விளங்கிக் கொள்வதற்க்கு அண்மைய நாட்களில் பொருளியல் நிபுனர்கள் பயன்படுத்தும் ஒரு சொற்றொடரை இங்கே சுட்டிக்காட்டலாம். னுருவுஊர் னுஐளுநுயுளுநு - டச் நோய் - என்பதே அந்த சொற்றொடர். சுனாமி நிதி இலங்கைத்தீவின் பொருளாதரத்தில் டச் நோயை கொண்டுவரக் கூடும் என்று மேற்;ப்படி பொருளியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். டச்சு நோய் எனப்படுவது 1960 களில் நெதர்லாந்தில் உண்டாகிய பொருளாதார வீக்கம் ஒன்றை குறிக்கப்பயன்படுத்தப்படும் ஓர் சொற்றொடராகும். நெதர்லாந்தில் 1960 களில் வடகடல் பிரதேசத்தில் பெருமளவு இயற்கை எரிவாயுப் படிவுகள் கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து டச்சுப் பொருளாதாரம் வேகமாக வீங்கியது. இதனால் டச்சு நாணயத்தின் பெறுமதி சடுதியாக உயர்ந்தது. ஆனால் அதேசமயம் எண்ணெய் அல்லாத அல்லாத ஏற்றுமதிக்குரிய உற்ப்பத்திப் பொருட்களை உற்ப்பத்தி செய்வதற்க்கான போட்டிகள் குறையத்தொடங்கின. இது போலவே சுனாமி நிதியும் இலங்கை நாணயத்தை எதிர்பாராத விதமாக பலப்படுத்தி -யிருந்தாலும் வரும் காலத்தில் இது என்னென்ன பக்கவிளைவுகளைக் கொண்டுவரக் கூடும் என்பது பற்றி சிந்திக்கவேண்டுமென்று மேற்ப்படி நிபுணர்கள் கூறுகிறார்கள். இங்கு முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது என்னவெனில் டச்நோய் வரக்கூடும் என்று சொல்யலுமளவிற்க்கு எதிர்பாராத பெருமளவு பெருமளவு நிதி கொழும்பில் வந்து குவிக்கிறது என்பதையே.
ஆனால் பொருளியலளர்கள் சற்றுக் கூடுதலாக கோட்பாட்டு ரீதியிலும் நீண்டகால நோக்கிலும் சிந்திப்பதாகவே தோன்றுகிறது.
மாறாக சந்திரிகா அவருக்கு முன்னிருந்த எந்தவொரு சிங்கள தலைவருமே அப்படி நீண்டகால நோக்கில் கோடப்பாட்டு விளக்கங்களுடன் சிந்திப்பவர்கள் அல்ல. அப்படி சிந்தித்திருந்தால் சந்திரிகாவை சுனாமியின் பயனாளி என்று சொல்லும் நிலை வந்திருக்காது.
அவருக்கு தேவை உடனடி நிவாரணம். அது வந்து குவிகிறது. அதை வைத்து இனி காலத்தை கடத்தலாம். ஒரு புறம் சுனாமியைக்காட்டி பட்ஜெட் வாக்குறுதியையும் ஏனைய வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் விடலாம். அத்தோடு எதிர்க்கட்சிகளின் வாயையும் ஏன் ஜே.வி.பியின் வாயையும்கூட மூடிவிடலாம். இன்னொரு புறம் சுனாமிநிதியை வைத்து நாட்டின் பொருளாதரத்தை ஒப்பீட்டளவில் மீட்கலாம். சந்திரிகாவை பொறுத்தவரை சுனாமி என்பது பிச்சைக்காரனுக்கு வந்த புண்ணிற்குசமம் அதைவைத்து அவர் எல்லாத்தரப்பiயும் குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு சமாளிக்கலாம்.
ஆனால் இதில் உள்ள பிரச்சனையான விடயம் என்னவென்றால் அவருடைய தனிப்பட்டநிகழ்சிநிரல் ஒன்றை சுனாமி அடுத்துக்கொண்டு போய்விடுமா என்பதுதான். அடுத்த ஆண்டுடன் அவருடைய பதவிக்காலம் முடிகிறது. அதற்க்கு பிறகும் நாட்டை ஆள்வது என்றால் அரசியலமைப்பில் ஏதாவது குறுக்குவழிகளை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு முதலில் எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து விலைக்கு வாங்கக்கூடிய எம்பிக்களை வாங்கி விடவேண்டும். இதைச்செய்யவில்லை என்றால் அடுத்த சனாதிபதி தேர்தலோடு சில சமயம் பண்டாரநாயக்காவின் ஆட்சி முnவுக்கு வரக்கூடும்.
எனவே இப்பொழுது சந்திரிகாவின் கவலையெல்லாம் அவருடைய தனிப்பட்ட கனவுகளை சுனாமி அடித்துக்கொண்டு போய்விடாதபடி பார்த்துக்கொள்ளுவதே. அல்லது இன்னும் சரியாகச் சொன்னால் சுனாமியை வைத்து அவருடைய தனிப்பட்ட கனவுகளை எப்படி நிறைவேற்றுவது என்பதே. இதற்காக எதிர்த்தரப்பிலிருந்து ஆட்களை விலைக்கு வாங்குவதற்கு சுனாமி நிவாரனத்தைக் கூட பாவிக்க கூடிய ஆளாவர்.
எனவே சுனாமியின் உடனடி பயனாளியாக அவர் காணப்பட்டாலும் சுனாமி அவருடைய தனிப்பட்ட கனவுகளையும் அள்ளிக் கொண்டுபோயிற்றா இல்லையா என்பதை வைத்தே சுனாமியால் அவர் பெறப்போகும் நிகர இலாபத்தை கணக்கிடலாம்.
இது வரையிலும் நாம் பார்த்தது சுனாமியினால் லாபமடையும் தரப்புக்களைப் பற்றியது. இனி நட்டமடைந்திருக்கும் தரப்பை பார்ப்போம்.
கடந்த இரண்டேமுக்கால் ஆண்டுகளாக சமாதானத்தின் அநாதைகளாக காணப்பட்ட தமிழர்களே சுனாமியின் அநாதைகளும் ஆகியிருக்கிறார்கள். சுனரி வந்து அவர்களுடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சேமிப்பை கரைத்துக் கொண்டு போகும் நிலை.
சுனாமிக்கு முன்பு தமிழ் அரசியலில் காணப்பட்ட அதே ஈருடகநிலை தான் சுனாமிக்கு பின்னும் தொடர்கிறது. சுனாமிக்கு பிந்திய அரசியலில் தமிழர்களுடைய சொந்த சேமிப்பு கரைந்து கொண்டே போகிறது என்பதே மெய். இது தவிர்க்க முடியாததும் கூட.
சர்வதேச உதவிகள் போதியளவு கிடைக்காத ஒரு நிலையில் தமது பலத்தில் அதுவும் அவர்களுடைய நவீன வரலாற்றில் முன் எப்பொழுதும் நிகழ்ந்திராத கடற்கோளின் இழப்புகளில் இருந்து மீண்டும் எழுவதற்கு தமது சொந்த சேமிர்ihயே செலவளிப்பது என்பது அதுவும் மீண்டும் ஒரு யுத்தம் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்புகளின் மத்தியில் அதைச் செய்வது என்பது ஒரு சிறிய இனம் எடுக்கக் கூடிய ஆகப் பெரிய ?ரிஸ்க்? தான்.
சர்வதேச சமூகத்தின் உதவி எனப்படுவது உத்தியோகபூர்வ வழிகள் ஊடாகவும்䤠நிறுவனமயப்பட்ட ஓர் ஒழுங்கிற்ககு ஊடாகவும் இது வரையிலும் தமிழர்களிடம் கையளிக்கப் படவில்லை. இத்தாலிய தூதரகம் கிளிநொச்சிக்கு வந்து நிவாரணப் பொருட்களை நேரடியாக புலிகளிடம் கையளித்தது போன்ற சில உதிரிச்சம்பவங்களைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியாக செயல் பூர்வமான நகர்வுகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே நிகழ்ந்திருக்கின்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் அலெசான்றோ பியோ கூறுகிறார்; புலிகளின் கோரிக்கைகளையும் ஆராய்ந்த பின்னரே இலங்கைக்கான மீள் கட்டுமானத்துக்கு உரிய தேவை மதிப்பீட்டை இறுதியாக்க முடியும் என்று.
ஆனாலும் சுனாமிக்கு பிந்திய தமிழ் அரசியலையம் ஒப்பிடுமிடத்து ஒன்று தெளிவாகத் தெரியம் நிலைமையில் பரவகமூட்டும் மாற்றம் ஏதும் இல்லை என்பதே அது. கடந்த சில தினங்களாக இலங்கைக்கு வந்து போகும் தலைவர்கள்䤠இராஜதந்திரிகள் மற்றும் உதவி வழங்கும் நிறுவனங்களின் பிரதானிகள் யார் யார் என்பதையும் அவர்கள் எங்கெங்கு விஜயம் செய்கிறார்கள் என்பதையும்䤠யார் யாரை சந்திக்கிறார்கள் என்பதையம் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியும். உலகம் தமிழர்களை எந்தளவு கோல்களால் அளக்கிறது என்பதே அது.
அண்மை நாட்களாக கொழும்புக்குவரும் உயர் தலைவர்கள்䤠முதன்னிலை பிரதானிகள் போன்றோர் வன்னிக்கு வருவதில்லை. அதே சமயம் உதவி வழங்கும் அமைப்புகளின் இரண்டாம் நிலை பிரதானிகள் அல்லது வெளிநாட்டு அமைச்சர்கள் போன்றோரே வன்னிக்கு வருகின்றார்கள்.
உதாரணமாக கொபிஅனான்䤠கொலிக் பவல் உலகவங்கியின் தலைவர் மற்றம் கனேடிய பிரதமர் போன்றோர் வன்னிக்கு வரவில்லை. அதுமட்டுமல்லாது அன்னை தெரோசாவின் தொண்டு நிறுவனத்தின் தலைவியாய் இருக்கும் ககோதரி நிர்மலா கூட வன்னிக்கு வராமலே போய்விட்டார்.
அதாவது சுனாமிக்கு முன் காணப்பட்ட அதே அரசியலின் நீட்சிதான் சுனாமிக்கு பிந்திய மனிதாபிமான அரசியலும் காணப்படுகிறது என்பதே. இப்படிப் பார்த்தால் தமிழர்கள் தமது சொந்த சேமிப்பை கரைத்துக் கொண்டிருக்கும் அதே சமயம் சுனாமியின் பெயரால் கொழும்பு உதவியைப் பெற்று வீங்கிவருகிறது. ஒருபுறம் தமிழர்களின் சேமிப்பு கரைகிறது. இன்னொரு புறம் கொழும்பின் சேமிப்பு பேரம் பேசும் சக்தியும் அதிகரிக்கிறது. இதனால் அங்கே டச்நோய் வந்து விடுமோ என்று அஞ்சும் ஓர் நிலை.
இது யுத்த நிறுத்த உடன்படிக்கையின் போது காணப்பட்ட வலுச்சமநிலையை குழப்பக்கூடிய ஓர் அம்சம். இது இப்பயே போனால் தமிழர்கள் சமாதானத்தின் அநாதைகளாகி விரக்தியுற்று சமாதானத்தில் நம்பிக்கை இழந்தது போலவே சுனாமியின் அநாதைகளுமாகி உலக சமூகத்திடம் நம்பிக்கை இழக்கும் ஓர் நிலை விரைவில் தோன்றக்கூடும். இத்தகையதொரு பின்னணியில் முன்பு ரணிலின் காலத்தில் எப்படி மேற்கு நாடுகளின் பிடி கொழும்பில் ஒப்பீட்டளவில் அதிகரித்து காணப்பட்டதோ அவ்வாறான ஓர் நிலை இப்பொழுது சுனாமிக்கு பின்பு வளர்ச்சி அடைந்து வருவது போல தோன்றுகிறது. இப்படி சந்திரிகாவை தமது செல்வாக்கு வலயத்திற்குள் கொண்டு வரும் முயற்சியில் மேற்கு நாடுகள் வெற்றிபெறுமாயிருந்தால் அவரை சமாதானத்தை நோக்கி நிர்ப்பந்திக்க வேண்டிய பொறும்பும் அவர்களுக்கு உண்டு.
இதன்படி இப்பொழுது சுனாமி அரசியலின் கீழ் சமாதானம் செய்வது என்பது தமிழர்கள் சுனாமியின் அநாதைகள் ஆகிவிடாதபடி பார்த்துக் கொள்வதிலிருந்துதான் அதாவது தழிழர்களுக்குரிய உதவிகள் உரிய வழிகள் ஊடாக உரியநேரத்தில் வழங்கப்படுவதில் இருந்தே தொடங்கப்பட வேண்டியிருக்கிறது.
Eelanaatham
சுனாமியினால் லாபம் அடைந்தது யார். நட்டமடைந்தது யார். என்று கணக்கெடுக்க வேண்டிய ஒரு கட்டத்திற்கு சுனாமி அரசியல் வந்துகொண்டிருக்கிறது. எப்பொழுது சுனாமி ஒரு அரசியலாகியதோ எப்பொழுது சுனாமிக்கு பிந்திய மனிதாபிமான பணிகளில் மனிதாபிமான விகிதச்செறிவு அருவருப்பூட்டும் அளவிற்க்கு அதிகரித்ததோ அப்பொழுதிருந்தே சுனாமியின் இலாப நட்டத்தை கணக்கெடுக்க வேண்டிய ஒரு தேவையும் தோன்றி விட்டது.
இதன்படி பார்த்தால் சுனாமியால் பெரும் லாபம் அடைந்தது முதலாவதாக அமெரிக்கா. இரண்டாவதாக சிறிலங்கா அல்லது சந்திரிக்கா. இதில் நட்டம் யாருக்கு என்றால் தமிழர்களுக்கே. இதைச் சிறிது விரிவாக பார்ப்போம்.
முதலாவதாக அமெரிக்காதான் சுனாமியின் பயனாளி. சிறுதொகைப் பணத்தை நிதியுதவியாகக் கொடுத்ததைத் தவிர மற்றெல்லா விதங்களிலிலும் அதற்க்கு வரவுதான். ஆம் அவர்கள் தந்ததை சிறுதொகை என்றே கூறவேண்டும். அவர்களைப் பொறுத்தவரை அது மிகச் சிறுதொகைதான். அதைக்கூட அவர்களின் மனிதாபிமான அரசியலுக்கு ஒரு முதலீடு என்று பார்த்தால் அதனை செலவுக்கணக்கில் போடமுடியாது. எனவே சுனாமியின் பெரியபயனாளி அமெரிக்காதான்
சுனாமியின் பெயரால் அமெரிக்கா இச்சிறுதீவில் தனது பிடியைமேலும் இறுக்கியிருக்கிறது. சாதாரண காலம் என்றால் இதைச்செய்யும் போது இந்தியாவிற்கு நோகாமல் செய்வது கடினம் ஆனால் சுனாமியின் பெயரால் அமெரிக்கா இலங்கைத்தீவில் உரிமை பராட்டுவதில் தனக்கு உருவாகியிருக்கும் புதிய வாய்ப்புக்களை ஆகக்கூடியபட்சம் பயன்படுத்தியிருக்கிறது. குறைந்த பட்சம் குறியீடகவேனும் அவர்கள் துருப்புக்களை இலற்கைத்தீவினுள் நகர்த்த முடிந்திருக்கிறது.
அண்மையில் அம்பாந்தோட்டையில் ஒரு கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க பேசியிருந்தார். இதில் அவர் ஜே.வி.பியை சுட்டாமல் சுட்டி சில கருத்துக்களைக் கூறியிருந்தார். நாட்டிலே தற்சமயம் தோன்றியுள்ள நிலை ஒரு அரசியல் யதார்த்தம் என்றும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்மென்றும் வெறுமனே அரசியல் கொள்கைகளை இறுக்கிப்பிடித்துக் கொண்டு தூதரகங்களுக்கு முன் ஊர்வலம் செய்வதால் பலனில்லை என்றும் தொனிபட ரணில் அதில் பேசியிருந்தார். இதன் அர்த்தம் என்வென்றால் ரணில் முன்பு அடிக்கடி சொல்லி வந்த சர்வதேச வலைப்பின்னல் இதுதான் என்பதே. இலங்கைத்தீவில் அமெரிக்காவின் பிடி இறுக இறுக அது ஒரு கட்டத்தில் யூ.என்.பிக்கு நன்மையாய் முடியுமென்று ரணில் நம்புகிறார் போலும்.
அவர் கூறியது போல சர்வதேச வலைப்பின்னல் இப்போது சந்திரிக்காவிற்கு கிடைக்கத் தொடங்கிவிட்டது. இதன் படி கூறின் சந்திரிகாவை சுனாமியின் இரண்டாவது பெரிய பயனாளி எனலாம்.
அமெரிக்காவுடன் நெருங்கி ஒத்துழைக்கும் போது இந்தியாவுடன் ஏற்ப்படக்கூடிய அசௌகரியங்களிலிருந்து சுனாமி சந்திரிகாவை பாதுகாத்திருக்கிறது மட்டுமல்ல் சுனாமி சந்திரிகாவை அவர் சிக்கித்தவித்து வந்த பொருளபதார பிரச்சனைகளிலிருந்தும் ஒப்பீட்டளவில் விடுவித்திருக்கிறது.
இந்தோனேசியாவில் விடுதலைக்காக போராடும் அசே மாநிலத்தில் நிவாரண உதவிகள் Nபுழு க்களினூடாக வழங்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு இந்தோனேசிய சனாதிபதி தன்னிடம் கேட்டதாக கொபி அனான் அண்மையில் கொழும்பில் வைத்து கூறியிருந்தார். ஆனால் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து அத்தகைய கோரிக்கை எதுவும் வரவில்லை என்றுமவர் தெரிவித்திருந்தார்.
இந்நிதியை கையாளும் விசயத்தில் இணையத்தளத்தை திறந்து அதில் எல்லாக்கணக்கு விபரங்கயையும் பதிவில் வைக்குமாறு உலகவங்கியின் தலைவர் அண்மையில் அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறியிருந்தார்.
ஆனால் இது விடயத்தில் அரசாங்கம் ஒளிவு மறைவு அற்ற தன்மையை நிரூபிக்கும் விதத்தில் இப்பந்தி எழுதப்படும் நாள்வரையில் எது வித நடவடிக்கையும் எடுத்தாக தெரியவில்லை.
சுனாமி நிதி இலங்கைத்தீவின் பொருளாதரத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்ப்படுத்த வல்லது. என்பதை விளங்கிக் கொள்வதற்க்கு அண்மைய நாட்களில் பொருளியல் நிபுனர்கள் பயன்படுத்தும் ஒரு சொற்றொடரை இங்கே சுட்டிக்காட்டலாம். னுருவுஊர் னுஐளுநுயுளுநு - டச் நோய் - என்பதே அந்த சொற்றொடர். சுனாமி நிதி இலங்கைத்தீவின் பொருளாதரத்தில் டச் நோயை கொண்டுவரக் கூடும் என்று மேற்;ப்படி பொருளியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். டச்சு நோய் எனப்படுவது 1960 களில் நெதர்லாந்தில் உண்டாகிய பொருளாதார வீக்கம் ஒன்றை குறிக்கப்பயன்படுத்தப்படும் ஓர் சொற்றொடராகும். நெதர்லாந்தில் 1960 களில் வடகடல் பிரதேசத்தில் பெருமளவு இயற்கை எரிவாயுப் படிவுகள் கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து டச்சுப் பொருளாதாரம் வேகமாக வீங்கியது. இதனால் டச்சு நாணயத்தின் பெறுமதி சடுதியாக உயர்ந்தது. ஆனால் அதேசமயம் எண்ணெய் அல்லாத அல்லாத ஏற்றுமதிக்குரிய உற்ப்பத்திப் பொருட்களை உற்ப்பத்தி செய்வதற்க்கான போட்டிகள் குறையத்தொடங்கின. இது போலவே சுனாமி நிதியும் இலங்கை நாணயத்தை எதிர்பாராத விதமாக பலப்படுத்தி -யிருந்தாலும் வரும் காலத்தில் இது என்னென்ன பக்கவிளைவுகளைக் கொண்டுவரக் கூடும் என்பது பற்றி சிந்திக்கவேண்டுமென்று மேற்ப்படி நிபுணர்கள் கூறுகிறார்கள். இங்கு முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது என்னவெனில் டச்நோய் வரக்கூடும் என்று சொல்யலுமளவிற்க்கு எதிர்பாராத பெருமளவு பெருமளவு நிதி கொழும்பில் வந்து குவிக்கிறது என்பதையே.
ஆனால் பொருளியலளர்கள் சற்றுக் கூடுதலாக கோட்பாட்டு ரீதியிலும் நீண்டகால நோக்கிலும் சிந்திப்பதாகவே தோன்றுகிறது.
மாறாக சந்திரிகா அவருக்கு முன்னிருந்த எந்தவொரு சிங்கள தலைவருமே அப்படி நீண்டகால நோக்கில் கோடப்பாட்டு விளக்கங்களுடன் சிந்திப்பவர்கள் அல்ல. அப்படி சிந்தித்திருந்தால் சந்திரிகாவை சுனாமியின் பயனாளி என்று சொல்லும் நிலை வந்திருக்காது.
அவருக்கு தேவை உடனடி நிவாரணம். அது வந்து குவிகிறது. அதை வைத்து இனி காலத்தை கடத்தலாம். ஒரு புறம் சுனாமியைக்காட்டி பட்ஜெட் வாக்குறுதியையும் ஏனைய வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் விடலாம். அத்தோடு எதிர்க்கட்சிகளின் வாயையும் ஏன் ஜே.வி.பியின் வாயையும்கூட மூடிவிடலாம். இன்னொரு புறம் சுனாமிநிதியை வைத்து நாட்டின் பொருளாதரத்தை ஒப்பீட்டளவில் மீட்கலாம். சந்திரிகாவை பொறுத்தவரை சுனாமி என்பது பிச்சைக்காரனுக்கு வந்த புண்ணிற்குசமம் அதைவைத்து அவர் எல்லாத்தரப்பiயும் குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு சமாளிக்கலாம்.
ஆனால் இதில் உள்ள பிரச்சனையான விடயம் என்னவென்றால் அவருடைய தனிப்பட்டநிகழ்சிநிரல் ஒன்றை சுனாமி அடுத்துக்கொண்டு போய்விடுமா என்பதுதான். அடுத்த ஆண்டுடன் அவருடைய பதவிக்காலம் முடிகிறது. அதற்க்கு பிறகும் நாட்டை ஆள்வது என்றால் அரசியலமைப்பில் ஏதாவது குறுக்குவழிகளை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு முதலில் எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து விலைக்கு வாங்கக்கூடிய எம்பிக்களை வாங்கி விடவேண்டும். இதைச்செய்யவில்லை என்றால் அடுத்த சனாதிபதி தேர்தலோடு சில சமயம் பண்டாரநாயக்காவின் ஆட்சி முnவுக்கு வரக்கூடும்.
எனவே இப்பொழுது சந்திரிகாவின் கவலையெல்லாம் அவருடைய தனிப்பட்ட கனவுகளை சுனாமி அடித்துக்கொண்டு போய்விடாதபடி பார்த்துக்கொள்ளுவதே. அல்லது இன்னும் சரியாகச் சொன்னால் சுனாமியை வைத்து அவருடைய தனிப்பட்ட கனவுகளை எப்படி நிறைவேற்றுவது என்பதே. இதற்காக எதிர்த்தரப்பிலிருந்து ஆட்களை விலைக்கு வாங்குவதற்கு சுனாமி நிவாரனத்தைக் கூட பாவிக்க கூடிய ஆளாவர்.
எனவே சுனாமியின் உடனடி பயனாளியாக அவர் காணப்பட்டாலும் சுனாமி அவருடைய தனிப்பட்ட கனவுகளையும் அள்ளிக் கொண்டுபோயிற்றா இல்லையா என்பதை வைத்தே சுனாமியால் அவர் பெறப்போகும் நிகர இலாபத்தை கணக்கிடலாம்.
இது வரையிலும் நாம் பார்த்தது சுனாமியினால் லாபமடையும் தரப்புக்களைப் பற்றியது. இனி நட்டமடைந்திருக்கும் தரப்பை பார்ப்போம்.
கடந்த இரண்டேமுக்கால் ஆண்டுகளாக சமாதானத்தின் அநாதைகளாக காணப்பட்ட தமிழர்களே சுனாமியின் அநாதைகளும் ஆகியிருக்கிறார்கள். சுனரி வந்து அவர்களுடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சேமிப்பை கரைத்துக் கொண்டு போகும் நிலை.
சுனாமிக்கு முன்பு தமிழ் அரசியலில் காணப்பட்ட அதே ஈருடகநிலை தான் சுனாமிக்கு பின்னும் தொடர்கிறது. சுனாமிக்கு பிந்திய அரசியலில் தமிழர்களுடைய சொந்த சேமிப்பு கரைந்து கொண்டே போகிறது என்பதே மெய். இது தவிர்க்க முடியாததும் கூட.
சர்வதேச உதவிகள் போதியளவு கிடைக்காத ஒரு நிலையில் தமது பலத்தில் அதுவும் அவர்களுடைய நவீன வரலாற்றில் முன் எப்பொழுதும் நிகழ்ந்திராத கடற்கோளின் இழப்புகளில் இருந்து மீண்டும் எழுவதற்கு தமது சொந்த சேமிர்ihயே செலவளிப்பது என்பது அதுவும் மீண்டும் ஒரு யுத்தம் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்புகளின் மத்தியில் அதைச் செய்வது என்பது ஒரு சிறிய இனம் எடுக்கக் கூடிய ஆகப் பெரிய ?ரிஸ்க்? தான்.
சர்வதேச சமூகத்தின் உதவி எனப்படுவது உத்தியோகபூர்வ வழிகள் ஊடாகவும்䤠நிறுவனமயப்பட்ட ஓர் ஒழுங்கிற்ககு ஊடாகவும் இது வரையிலும் தமிழர்களிடம் கையளிக்கப் படவில்லை. இத்தாலிய தூதரகம் கிளிநொச்சிக்கு வந்து நிவாரணப் பொருட்களை நேரடியாக புலிகளிடம் கையளித்தது போன்ற சில உதிரிச்சம்பவங்களைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியாக செயல் பூர்வமான நகர்வுகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே நிகழ்ந்திருக்கின்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் அலெசான்றோ பியோ கூறுகிறார்; புலிகளின் கோரிக்கைகளையும் ஆராய்ந்த பின்னரே இலங்கைக்கான மீள் கட்டுமானத்துக்கு உரிய தேவை மதிப்பீட்டை இறுதியாக்க முடியும் என்று.
ஆனாலும் சுனாமிக்கு பிந்திய தமிழ் அரசியலையம் ஒப்பிடுமிடத்து ஒன்று தெளிவாகத் தெரியம் நிலைமையில் பரவகமூட்டும் மாற்றம் ஏதும் இல்லை என்பதே அது. கடந்த சில தினங்களாக இலங்கைக்கு வந்து போகும் தலைவர்கள்䤠இராஜதந்திரிகள் மற்றும் உதவி வழங்கும் நிறுவனங்களின் பிரதானிகள் யார் யார் என்பதையும் அவர்கள் எங்கெங்கு விஜயம் செய்கிறார்கள் என்பதையும்䤠யார் யாரை சந்திக்கிறார்கள் என்பதையம் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியும். உலகம் தமிழர்களை எந்தளவு கோல்களால் அளக்கிறது என்பதே அது.
அண்மை நாட்களாக கொழும்புக்குவரும் உயர் தலைவர்கள்䤠முதன்னிலை பிரதானிகள் போன்றோர் வன்னிக்கு வருவதில்லை. அதே சமயம் உதவி வழங்கும் அமைப்புகளின் இரண்டாம் நிலை பிரதானிகள் அல்லது வெளிநாட்டு அமைச்சர்கள் போன்றோரே வன்னிக்கு வருகின்றார்கள்.
உதாரணமாக கொபிஅனான்䤠கொலிக் பவல் உலகவங்கியின் தலைவர் மற்றம் கனேடிய பிரதமர் போன்றோர் வன்னிக்கு வரவில்லை. அதுமட்டுமல்லாது அன்னை தெரோசாவின் தொண்டு நிறுவனத்தின் தலைவியாய் இருக்கும் ககோதரி நிர்மலா கூட வன்னிக்கு வராமலே போய்விட்டார்.
அதாவது சுனாமிக்கு முன் காணப்பட்ட அதே அரசியலின் நீட்சிதான் சுனாமிக்கு பிந்திய மனிதாபிமான அரசியலும் காணப்படுகிறது என்பதே. இப்படிப் பார்த்தால் தமிழர்கள் தமது சொந்த சேமிப்பை கரைத்துக் கொண்டிருக்கும் அதே சமயம் சுனாமியின் பெயரால் கொழும்பு உதவியைப் பெற்று வீங்கிவருகிறது. ஒருபுறம் தமிழர்களின் சேமிப்பு கரைகிறது. இன்னொரு புறம் கொழும்பின் சேமிப்பு பேரம் பேசும் சக்தியும் அதிகரிக்கிறது. இதனால் அங்கே டச்நோய் வந்து விடுமோ என்று அஞ்சும் ஓர் நிலை.
இது யுத்த நிறுத்த உடன்படிக்கையின் போது காணப்பட்ட வலுச்சமநிலையை குழப்பக்கூடிய ஓர் அம்சம். இது இப்பயே போனால் தமிழர்கள் சமாதானத்தின் அநாதைகளாகி விரக்தியுற்று சமாதானத்தில் நம்பிக்கை இழந்தது போலவே சுனாமியின் அநாதைகளுமாகி உலக சமூகத்திடம் நம்பிக்கை இழக்கும் ஓர் நிலை விரைவில் தோன்றக்கூடும். இத்தகையதொரு பின்னணியில் முன்பு ரணிலின் காலத்தில் எப்படி மேற்கு நாடுகளின் பிடி கொழும்பில் ஒப்பீட்டளவில் அதிகரித்து காணப்பட்டதோ அவ்வாறான ஓர் நிலை இப்பொழுது சுனாமிக்கு பின்பு வளர்ச்சி அடைந்து வருவது போல தோன்றுகிறது. இப்படி சந்திரிகாவை தமது செல்வாக்கு வலயத்திற்குள் கொண்டு வரும் முயற்சியில் மேற்கு நாடுகள் வெற்றிபெறுமாயிருந்தால் அவரை சமாதானத்தை நோக்கி நிர்ப்பந்திக்க வேண்டிய பொறும்பும் அவர்களுக்கு உண்டு.
இதன்படி இப்பொழுது சுனாமி அரசியலின் கீழ் சமாதானம் செய்வது என்பது தமிழர்கள் சுனாமியின் அநாதைகள் ஆகிவிடாதபடி பார்த்துக் கொள்வதிலிருந்துதான் அதாவது தழிழர்களுக்குரிய உதவிகள் உரிய வழிகள் ஊடாக உரியநேரத்தில் வழங்கப்படுவதில் இருந்தே தொடங்கப்பட வேண்டியிருக்கிறது.
Eelanaatham
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

