08-11-2003, 06:19 PM
அரசும் படையினரும காட்டி வரும் அதீத அக்கறை புலிகள் மத்தியில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
குரங்குப்பாஞ்சான் முகாம் விவகாரம் தற்போது நோர்வே அனுசரணையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இந்த முகாமை அகற்ற வேண்டுமெனக் கண்காணிப்புக் குழுவினர் விதித்திருந்த காலக்கொடு கடந்த புதன் கிழமையுடன் முடிவடைந்த நிலையில் இந்த முகாமை அகற்ற புலிகள் மறுததுவிட்டனர்.
கடந்த ஜூன் மாதம் விடுதலைப்புலிகள் குரங்குப்பாஞ்சன் மணிராசன்குளம் பகுதியில் புதிய முகாமொன்றை அமைத்ததாகப் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், இந்த முகாம் போர் நடைபெற்ற காலப் பகுதியிலேயே இருந்ததாகவும், இப்பகுதி தொடர்ந்தும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்து வருவதாகவும் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
படையினரின் பாதுகாப்புக்கோ, அல்லது வேறுவிதமாகவோ இந்த முகாம் எதுவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாத போதிலும், இந்த முகாமை அகற்ற வேண்டுமெனப் படையினர் நெருக்கடி nhடுத்து வந்தது புலிகள் தரப்பில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்த முகாமிலிருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்திலேயே படையினரின் முன்னரங்கக் காவல் நிலைகள் அமைந்துள்ளன.
யுத்த காலத்தில் நிறைவேற்ற முடியாத சிலவற்றை போர் நிறுத்த உடன்பாட்டைப் பயன்படுத்தி நிறைவேற்றுவதற்குப் படையினர் முற்படுவதாகப்புலிகள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. முன்னர் வடக்கு,கிழக்கில் பெரும் பாலான கடல் பிரதேசங்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலே இருந்தன.ஆனாலும், போர் நிறுத்த உடன் பாட்டுக்கு அமைய புலிகள் கடலில் இறங்குவதென்றாலும் கண்காணிப்புக் குழுவினரதும், கடற்படையினரதும் அனுமதி பெறப்பட வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது போன்றெ குரங்குப்பாஞ்சான் பகுதியில் புலிகள் போர்க் காலங்களில் அமைத்திருந்த இந்த முகாமை அகற்ற முடியாத படையினர் தற்போது மேற்படி பிரதேசம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே இருப்பதாகக் கூறி அதனை அகற்றுமாறு கண்காணிப்புக் குழுவை தொடர்ந்தும் வற்புறுத்தி வருகின்றனர். ஆனாலும் இதற்கு உடன் பட புலிகள் மறுத்துவிட்டனர்.
மேற்படி பிரதேசம் எவரது கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கின்றது என்பதை ஆராய்ந்து அறியாமல், புலிகள் இந்த முகாமை அகற்ற வேண்டுமென போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு அவசர அவசரமாக அறிவித்திருந்தது. அத்துடன், தங்களது இந்தத் தீர்ப்பை எவ்வித்த்திலும் மாற்றப் போவதில்லை எனவும், தங்களது இந்தத் தீர்ப்பு இறுதியானதெனவும் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தது.
ஆனாலும், கண்காணிப்புக் குழுவின் கோரிக்கைக்கு ஏற்ப விடுதலைப் புலிகள் உயர்மட்டக் குழுவொன்று மேற்படி பகுதிக்குச் சென்று ஆராய்ந்து அந்த முடிவைத் தங்கள் தலைமைப்பீடம் ஊடாகக் கண்காணிப்புக் குழுவிற்கு அறிவித்திருந்தது. குரங்குப்பாஞ்சானில் முகாம் அமைந்துள்ள பகுதி தங்களது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலேயே இருப்பதால் அதனை ஒரு போதும் அகற்றப் போவதில்லையெனப் புலிகள் அறிவித்திருந்தனர்.
திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை திருமலைத் துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே இருக்கின்றன. ஆனாலும், இவற்றைச் சுற்றி வளைத்து புலிகளின் முகாம்கள் அமைந்துள்ளன. இந்த குரங்குப்பாஞ்சான் முகாமும் அவ்வாறு சுற்றிவளைத்து அமைந்துள்ள புலிகளின் முகாம்களில் ஒன்றாகும்.
குரங்குப்பாஞ்சான் முகாமே தற்போது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பிரதேச எல்லைக்குச் சமீபமாக (9கிலோ மீற்றர்) இருப்பதால் இராணுவத்தினர் இந்த முகாம் குறித்து அச்சமடைந்துள்ளனர். 2000ம் ஆண்டு முற்பகுதியில் ஆனையிறவு படைத்தளத்தைக் கைப்பற்றிய பின்னர் விடுதலைப் புலிகள் யாழ். குடா நாட்டுக்குள் நுழைந்திருந்தனர்.
வன்னியில் பாரிய நிலப்பரப்புக்ளை படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து மீட்ட புலிகள் அதன் பின்னர் யாழ் நகர் நுழைவாசல் வரை சென்றிருந்தனர். ஆனாலும், அயல் நாடு ஒன்றின் கடும் நெருக்கடியால் பின்னர் புலிகள் தங்களது அடுத்த கட்ட நகர்வைத் தற்காலிகமாகக் கைவிட வேண்டியதொரு சூழ்நிலை எற்பட்டிருந்தது. இல்லையேல் யாழ். குடாநாடுகூட முற்றாக புலிகளின் கைகளில் வீழ்ந்திருக்கும்.
அவ்வாறான ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தால் புலிகளின் அடுத்த கட்ட தாக்குதல் திருமலை நகரை விடுவிப்பதாகவே அமைந்திருக்குமென அப்போது, முப்படைகளின் தளபதியும், ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்காவே வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருந்தார். இந்நிலையிலே புலிகளின் பார்வை தற்போது திருமலை நகரை நோக்கி இருப்பதாகவும், மீண்டும் ஒரு போர் வெடிக்குமானால் புலிகளின் முதல் தாக்குதல் திருமலை மாவட்டத்திலேயே இடம் பெறுமெனவும் படையினர் கருதுகின்றனர்.
இவ்வாறான ஒரு நிலையை குரங்குப்பாஞ்சான் பகுதியில் உள்ள முகாமும் உறுதிப்படுத்துவதாகக் கருதும் படையினர் திருமலை நகருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் புலிகளின் முகாம்கள் சிலவற்றை எப்படியாவது அகற்ற வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டிவருகின்றனர். இதன் ஒரு கட்டமாகவே குரங்குப்பாஞ்சான் முகாமை அப்புறப்படுத்துமாறு கண்காணிப்புக் குழவின் ஊடாக படையினர் புலிகளுக்கு அழுத்தங்களைக் கொடுக்க முற்பட்டுள்ளார்கள்……!
நன்றி : தினக்குரல் வார வெளியிடூ
சதித்திட்டம் யாருடையது? அமெரிக்காவா,பக்கத்து நாட்டினுடையதா?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
குரங்குப்பாஞ்சான் முகாம் விவகாரம் தற்போது நோர்வே அனுசரணையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இந்த முகாமை அகற்ற வேண்டுமெனக் கண்காணிப்புக் குழுவினர் விதித்திருந்த காலக்கொடு கடந்த புதன் கிழமையுடன் முடிவடைந்த நிலையில் இந்த முகாமை அகற்ற புலிகள் மறுததுவிட்டனர்.
கடந்த ஜூன் மாதம் விடுதலைப்புலிகள் குரங்குப்பாஞ்சன் மணிராசன்குளம் பகுதியில் புதிய முகாமொன்றை அமைத்ததாகப் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், இந்த முகாம் போர் நடைபெற்ற காலப் பகுதியிலேயே இருந்ததாகவும், இப்பகுதி தொடர்ந்தும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்து வருவதாகவும் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
படையினரின் பாதுகாப்புக்கோ, அல்லது வேறுவிதமாகவோ இந்த முகாம் எதுவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாத போதிலும், இந்த முகாமை அகற்ற வேண்டுமெனப் படையினர் நெருக்கடி nhடுத்து வந்தது புலிகள் தரப்பில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்த முகாமிலிருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்திலேயே படையினரின் முன்னரங்கக் காவல் நிலைகள் அமைந்துள்ளன.
யுத்த காலத்தில் நிறைவேற்ற முடியாத சிலவற்றை போர் நிறுத்த உடன்பாட்டைப் பயன்படுத்தி நிறைவேற்றுவதற்குப் படையினர் முற்படுவதாகப்புலிகள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. முன்னர் வடக்கு,கிழக்கில் பெரும் பாலான கடல் பிரதேசங்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலே இருந்தன.ஆனாலும், போர் நிறுத்த உடன் பாட்டுக்கு அமைய புலிகள் கடலில் இறங்குவதென்றாலும் கண்காணிப்புக் குழுவினரதும், கடற்படையினரதும் அனுமதி பெறப்பட வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது போன்றெ குரங்குப்பாஞ்சான் பகுதியில் புலிகள் போர்க் காலங்களில் அமைத்திருந்த இந்த முகாமை அகற்ற முடியாத படையினர் தற்போது மேற்படி பிரதேசம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே இருப்பதாகக் கூறி அதனை அகற்றுமாறு கண்காணிப்புக் குழுவை தொடர்ந்தும் வற்புறுத்தி வருகின்றனர். ஆனாலும் இதற்கு உடன் பட புலிகள் மறுத்துவிட்டனர்.
மேற்படி பிரதேசம் எவரது கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கின்றது என்பதை ஆராய்ந்து அறியாமல், புலிகள் இந்த முகாமை அகற்ற வேண்டுமென போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு அவசர அவசரமாக அறிவித்திருந்தது. அத்துடன், தங்களது இந்தத் தீர்ப்பை எவ்வித்த்திலும் மாற்றப் போவதில்லை எனவும், தங்களது இந்தத் தீர்ப்பு இறுதியானதெனவும் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தது.
ஆனாலும், கண்காணிப்புக் குழுவின் கோரிக்கைக்கு ஏற்ப விடுதலைப் புலிகள் உயர்மட்டக் குழுவொன்று மேற்படி பகுதிக்குச் சென்று ஆராய்ந்து அந்த முடிவைத் தங்கள் தலைமைப்பீடம் ஊடாகக் கண்காணிப்புக் குழுவிற்கு அறிவித்திருந்தது. குரங்குப்பாஞ்சானில் முகாம் அமைந்துள்ள பகுதி தங்களது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலேயே இருப்பதால் அதனை ஒரு போதும் அகற்றப் போவதில்லையெனப் புலிகள் அறிவித்திருந்தனர்.
திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை திருமலைத் துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே இருக்கின்றன. ஆனாலும், இவற்றைச் சுற்றி வளைத்து புலிகளின் முகாம்கள் அமைந்துள்ளன. இந்த குரங்குப்பாஞ்சான் முகாமும் அவ்வாறு சுற்றிவளைத்து அமைந்துள்ள புலிகளின் முகாம்களில் ஒன்றாகும்.
குரங்குப்பாஞ்சான் முகாமே தற்போது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பிரதேச எல்லைக்குச் சமீபமாக (9கிலோ மீற்றர்) இருப்பதால் இராணுவத்தினர் இந்த முகாம் குறித்து அச்சமடைந்துள்ளனர். 2000ம் ஆண்டு முற்பகுதியில் ஆனையிறவு படைத்தளத்தைக் கைப்பற்றிய பின்னர் விடுதலைப் புலிகள் யாழ். குடா நாட்டுக்குள் நுழைந்திருந்தனர்.
வன்னியில் பாரிய நிலப்பரப்புக்ளை படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து மீட்ட புலிகள் அதன் பின்னர் யாழ் நகர் நுழைவாசல் வரை சென்றிருந்தனர். ஆனாலும், அயல் நாடு ஒன்றின் கடும் நெருக்கடியால் பின்னர் புலிகள் தங்களது அடுத்த கட்ட நகர்வைத் தற்காலிகமாகக் கைவிட வேண்டியதொரு சூழ்நிலை எற்பட்டிருந்தது. இல்லையேல் யாழ். குடாநாடுகூட முற்றாக புலிகளின் கைகளில் வீழ்ந்திருக்கும்.
அவ்வாறான ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தால் புலிகளின் அடுத்த கட்ட தாக்குதல் திருமலை நகரை விடுவிப்பதாகவே அமைந்திருக்குமென அப்போது, முப்படைகளின் தளபதியும், ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்காவே வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருந்தார். இந்நிலையிலே புலிகளின் பார்வை தற்போது திருமலை நகரை நோக்கி இருப்பதாகவும், மீண்டும் ஒரு போர் வெடிக்குமானால் புலிகளின் முதல் தாக்குதல் திருமலை மாவட்டத்திலேயே இடம் பெறுமெனவும் படையினர் கருதுகின்றனர்.
இவ்வாறான ஒரு நிலையை குரங்குப்பாஞ்சான் பகுதியில் உள்ள முகாமும் உறுதிப்படுத்துவதாகக் கருதும் படையினர் திருமலை நகருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் புலிகளின் முகாம்கள் சிலவற்றை எப்படியாவது அகற்ற வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டிவருகின்றனர். இதன் ஒரு கட்டமாகவே குரங்குப்பாஞ்சான் முகாமை அப்புறப்படுத்துமாறு கண்காணிப்புக் குழவின் ஊடாக படையினர் புலிகளுக்கு அழுத்தங்களைக் கொடுக்க முற்பட்டுள்ளார்கள்……!
நன்றி : தினக்குரல் வார வெளியிடூ
சதித்திட்டம் யாருடையது? அமெரிக்காவா,பக்கத்து நாட்டினுடையதா?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

