01-18-2005, 09:35 PM
ரோம் நகரம் பற்றி எரிந்துகொண்டிருந்தபோது பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம் நீரோ மன்னன். இதுபோலத்தான் உங்களுடை கதையும் இருக்கு.
இங்கு பெற்றோர் பிள்ளைகளை இழந்தும்ää பிள்ளைகள் பெற்றோரை இழந்து அநாதைகளாகவும் பரிதவித்துக் கொண்டிருக்கும் பொழுது அவர்களை ஆறுதல்படுத்துவதற்கு எடுக்கக்கூடிய ஆக்கபூர்வமான ஏதாவது நடவடிக்கையைப் பற்றிப் பேசினால் பரவாயில்லை. சரி உதவிதான் செய்யாட்டிலும் உபத்திரவம் தராமல் ஒதுங்கியிருந்தால் அதுவே பெரிய காரியம்.
சின்னப் பிஞ்சுகள் ஒரு வயதுகூட நிரம்பாத பச்சிளம் பாலகர்களை எல்லாம் தாய்-தகப்பன் பறிகொடுத்திட்டுத் கதறிக்கொண்டிருக்குதுகள். இந்த நேரத்திலை நீங்கள் சனத்தொகையைப் பெருக்கவேணும் என்று கருத்து எழுதுகிறீர்கள். நேரிலை பார்த்திருந்தால் சிலவேளை நீங்கள் நிலைமையைப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறன். அந்தச் சின்னப் பிள்ளைகளின் உடல்களைத் தூக்கி எடுக்கும்பொழுது ஏதோ பொம்மைகள் மாதிரித்தான் இருந்தது. நேருக்கு நேராய்தான் பார்க்கவேண்டாம். இணையங்களில் வரும் படங்களைப் பார்க்கும்பொழுதாவது உங்களுக்கு வேற ஒன்றும் தோன்றாமல்ää குறைந்துபோன சனத்தொகையைப் பெருக்கும் நினைப்புத் தான் வருகின்றதா?
ஒரு விடயத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதாவது எங்களுடைய மக்களின் தற்போதைய உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதோடு மட்டும் நின்றுவிடாமல் நாங்கள் தொலைநோக்கோடு அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றியும் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியது உண்மை. அந்த வகையில நாங்கள் தற்போதைய நிலையில் கவனம் செலுத்த வேண்டிய துறைகள் நிறைய இருக்கின்றது. அவற்றைப் பற்றி ஏதாவது ஆக்கபூர்வமான கருத்துக்கள்ää அவற்றை செயற்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் இருந்தால் பரிமாறிக்கொள்ளுங்களேன்.
சனத்தொகைச் சமநிலை தொடர்பான விடயமும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியிருக்கலாம். ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல.
[size=18]பொருத்தமற்ற விடயங்களை பொருத்தமற்ற நேரங்களிலை கதைப்பதும் ஒரு முட்டாள்தனமான வேலையே. எனக்கு யாரிடமும் எந்த தனிப்பட்ட வருத்தமும் இல்லை.
இங்கு பெற்றோர் பிள்ளைகளை இழந்தும்ää பிள்ளைகள் பெற்றோரை இழந்து அநாதைகளாகவும் பரிதவித்துக் கொண்டிருக்கும் பொழுது அவர்களை ஆறுதல்படுத்துவதற்கு எடுக்கக்கூடிய ஆக்கபூர்வமான ஏதாவது நடவடிக்கையைப் பற்றிப் பேசினால் பரவாயில்லை. சரி உதவிதான் செய்யாட்டிலும் உபத்திரவம் தராமல் ஒதுங்கியிருந்தால் அதுவே பெரிய காரியம்.
சின்னப் பிஞ்சுகள் ஒரு வயதுகூட நிரம்பாத பச்சிளம் பாலகர்களை எல்லாம் தாய்-தகப்பன் பறிகொடுத்திட்டுத் கதறிக்கொண்டிருக்குதுகள். இந்த நேரத்திலை நீங்கள் சனத்தொகையைப் பெருக்கவேணும் என்று கருத்து எழுதுகிறீர்கள். நேரிலை பார்த்திருந்தால் சிலவேளை நீங்கள் நிலைமையைப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறன். அந்தச் சின்னப் பிள்ளைகளின் உடல்களைத் தூக்கி எடுக்கும்பொழுது ஏதோ பொம்மைகள் மாதிரித்தான் இருந்தது. நேருக்கு நேராய்தான் பார்க்கவேண்டாம். இணையங்களில் வரும் படங்களைப் பார்க்கும்பொழுதாவது உங்களுக்கு வேற ஒன்றும் தோன்றாமல்ää குறைந்துபோன சனத்தொகையைப் பெருக்கும் நினைப்புத் தான் வருகின்றதா?
ஒரு விடயத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதாவது எங்களுடைய மக்களின் தற்போதைய உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதோடு மட்டும் நின்றுவிடாமல் நாங்கள் தொலைநோக்கோடு அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றியும் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியது உண்மை. அந்த வகையில நாங்கள் தற்போதைய நிலையில் கவனம் செலுத்த வேண்டிய துறைகள் நிறைய இருக்கின்றது. அவற்றைப் பற்றி ஏதாவது ஆக்கபூர்வமான கருத்துக்கள்ää அவற்றை செயற்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் இருந்தால் பரிமாறிக்கொள்ளுங்களேன்.
சனத்தொகைச் சமநிலை தொடர்பான விடயமும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியிருக்கலாம். ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல.
[size=18]பொருத்தமற்ற விடயங்களை பொருத்தமற்ற நேரங்களிலை கதைப்பதும் ஒரு முட்டாள்தனமான வேலையே. எனக்கு யாரிடமும் எந்த தனிப்பட்ட வருத்தமும் இல்லை.
--
--
--

