Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுனாமி: நெஞ்சை நெருடும் சில சம்பவங்கள்
#7
நானும் சகோதரன்தான்

தாழையடி கடற்கரை

ஒரு அக்கா அலையின் தாக்கத்தில் மிகவும் மோசமாகக் காயமடைந்திருந்தா. அவரது தம்பி காலையில் நடந்த விபரீதத்தில் இறந்துவிட்டார். காயமடைந்திருந்த அக்காவை நண்பகல் அளவில் மீட்டு வைத்தியசாலைக்கு ஏற்ற முயற்சித்தோம். ஆனால் அவர் தம்பி.. தம்பி என்று புலம்பியபடி வரமறுத்து அழுதுகொண்டிருந்தார். அலையின் கொலைத்தாக்கத்தில் அவர் உடுத்தியிருந்த ஆடைகள்வேறு கிழிந்திருந்தன. ஆனாலும் வற்புறுத்தி தூக்கி வாகனத்தில் ஏற்றி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றோம்.

வைத்தியசாலையில் அக்கா இறங்குக்கோ என்றபோதுதான் அவர் தனது உடைகளைக் கவனித்து இறங்கிச் செல்வதற்குத் தயங்கினார். எங்களுக்கோ ஏனைய காயக்காரர்களையும் கொண்டுவரவேண்டும் என்ற அவசர நிலை. அப்போது அங்கு நின்ற ஒருவர் சொன்னார் -இறங்கு பிள்ளை நானும் உன்ரை சகோதரன் மாதிரித்தான் இறங்கி வா - என்று கூறி அக்காவை அழைத்துச் சென்றார். எங்களையும் அறியாமல் எங்கள் கண்களில் நீர் கோர்த்தது. மனிதாபிமானம் இன்னமும் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறது.
--
--
Reply


Messages In This Thread
[No subject] - by ¸ÅâÁ¡ý - 01-08-2005, 09:22 PM
[No subject] - by Nanthaa - 01-08-2005, 10:20 PM
[No subject] - by Double - 01-09-2005, 03:57 AM
[No subject] - by Thusi - 01-09-2005, 09:04 PM
[No subject] - by tamilini - 01-09-2005, 09:30 PM
[No subject] - by Thusi - 01-18-2005, 02:58 PM
[No subject] - by kuruvikal - 01-18-2005, 03:07 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)