01-17-2005, 09:16 PM
Nanthaa Wrote:அண்ணே டன் உமக்கேத்த நல்ல யோசினை கொண்டாத்திருக்கிறார் யூட்டண்ணே. வெழுத்து வாங்குங்கோ டன்கிளாசு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பெரும்பாலான தமிழ் மக்களுக்கு நந்தா ஒரு உதாரணம். நான் பிரச்சினைக்கு முன்வைத்த ஆலோசனை நிச்சயமாக சர்ச்சைக்குரியதுதான். பெருமளவு இந்துக்களை கொண்ட பாரம்பரிய கலாச்சாரத்தில் வாழும் தமிழ் சமுதாயத்துக்கு பல-தார விவாகம் ஏற்றுக்கொள்ள கடினமானது தான். அதற்காக பலதார விவாகம் இந்து மத்த்திலோ (முருகனுக்கு இரு மனைவியர், கருணாநிதிக்கும் இரு மனைவியர் இருந்தனர்) அல்லது தமிழர் மத்தியிலோ அறியப்படாதது அல்ல. மேலும் இளவயது விவாகம் தமிழர் மத்தியில் புதிதல்ல.
ஆனால் பிரச்சினைக்கு மாற்று தீர்வு வைப்பதற்கு பதிலாக அர்த்தமில்லாமல் பிதற்றுவதும், ஒப்பாரி வைப்பதும் எமது மக்களின் பெரும்பாலானவர்களுக்கு பழக்கமான, பிரச்சினைகளை கையாளும் வழியாக தெரிகிறது. இதற்கு நந்தாவின் பங்களிப்பு சிறந்த உதாரணம்.
மத்தய கிழக்கு கலாச்சாரத்தில் பெண்கள் சீதனம் கொடுத்து விவாகம் செய்வதில்லை. ஆண் தான் பெண்ணின் பெற்றோருக்கு தன்னிடம் பெண்ணையும் அவர்கள் பிள்ளைகளையும் வைத்து பராமரிக்க போதிய வளமிருக்கிறது என்று நிரூபித்து பணமும் பொருளும் கொடுத்து விவாகம் செய்ய வேண்டும். ஆகவே வளம் குறைந்த ஆண்கள் பல தார விவாகம் மட்டுமல்ல ஒரு தார விவாகம் கூட அங்கே செய்ய முடியாது. மேலும் வயது கூடிய பெண்களை வயது குறைந்த ஆண்கள் திருமணம் செய்வதும் சாதராணமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.
எமது பெண்களில் பலர் திருமணம் ஆகாமல் முதுமையடைந்து வருவதை இங்கு நோக்க வேண்டும். உங்கள் சகோதரிகளில் எத்தனை பேர் இதற்குள் அடங்குவர்?
இவ்வாறாக மேற்படி தீர்வு பற்றி எதுவித விளக்கமும் இல்லாமல், பல-தார விவாகம், பாலியல் கிளர்ச்சியை மட்டும் ஒரே ஒரு காரணியாக கொண்டிருப்பதாக பொருள்பட நந்தா எழுதுவது, பாலியல் தேவைகளுக்கு வடிகால் கிடைக்காத, பாலியல் பட்டினியில் வாடும் தமிழ் ஆண்களின் பிரதிநிதியாக அவரை அடையாளம் காட்டுகிறது.

