01-16-2005, 08:17 AM
விழியீர்ப்பு விசை
------------------------------------------------------
*காதலை எப்பொழுது சந்தித்தேனோ
அப்பொழுது தொடங்கியது என் வாழ்வு
என்றாலும்
வாழ்நாள் முடிவதற்குள்ளாவது
சந்தித்து விட வேண்டும்
என் காதலியை
*என்னிடம் கொட்டிக் கிடக்கும் காதலை
எதைக் கொடுத்தும் வாங்கிவிட முடியாது
காதலைத் தவிர
*எனக்குப் பெண் கிடைப்பது முக்கியமில்லை
என் காதலுக்கொரு
காதலி கிடைக்க வேண்டும்.
*என்னுடையது என்று நினைத்துத்தான்
இதுவரையில் வளர்த்து வந்தேன்.
ஆனால்
முதல்முறை உன்னைப் பா¡த்துமே
பழக்கப்பட்டவர் பின்னால் ஓடும் நாய்க்குட்டி மாதிரி
உன் பின்னால் ஓடுகிறதே
இந்த மனசு.
*சற்றுமுன் நீ நடந்துபோன
தடயம் எதுவுமின்றி
அமைதியாய்க் கிடக்கிறது வீதி.
எனினும் அதிகவேக ரயிலொன்று கடந்து போன தண்டவாளம் போல
இன்னும் அதிர்கிறது
என் இதயம்.
*கடிகாரத்தைத் திருடியவனையெல்லாம்
விரட்டிப் பிடித்திருக்கிறேன்.
என் இதயத்தைத் திருடிப்
போகிறாய்
பேசாமல் நின்றுகொண்டிருக்கிறேன்.
*உனக்குத் தெரியாமலேயே
உன்னை நேசிக்கும்படி
என்னை ஆக்கியது நீ தான்.
*சூரியன் வந்த பிறகு தான்
நீ வருகிறாய் என்றாலும்
நீ வரும்போது தான்
விழிக்கிறது இந்த வீதி.
*இந்த மலையைக் குடைந்து ரயில்பாதை அமைத்தவனுக்காவது தெரியுமா
உன் கல்மனசுக்குள்
நுழைவது எப்படி என்பது.
அலைகள்
------------------------------------------------------
*காதலை எப்பொழுது சந்தித்தேனோ
அப்பொழுது தொடங்கியது என் வாழ்வு
என்றாலும்
வாழ்நாள் முடிவதற்குள்ளாவது
சந்தித்து விட வேண்டும்
என் காதலியை
*என்னிடம் கொட்டிக் கிடக்கும் காதலை
எதைக் கொடுத்தும் வாங்கிவிட முடியாது
காதலைத் தவிர
*எனக்குப் பெண் கிடைப்பது முக்கியமில்லை
என் காதலுக்கொரு
காதலி கிடைக்க வேண்டும்.
*என்னுடையது என்று நினைத்துத்தான்
இதுவரையில் வளர்த்து வந்தேன்.
ஆனால்
முதல்முறை உன்னைப் பா¡த்துமே
பழக்கப்பட்டவர் பின்னால் ஓடும் நாய்க்குட்டி மாதிரி
உன் பின்னால் ஓடுகிறதே
இந்த மனசு.
*சற்றுமுன் நீ நடந்துபோன
தடயம் எதுவுமின்றி
அமைதியாய்க் கிடக்கிறது வீதி.
எனினும் அதிகவேக ரயிலொன்று கடந்து போன தண்டவாளம் போல
இன்னும் அதிர்கிறது
என் இதயம்.
*கடிகாரத்தைத் திருடியவனையெல்லாம்
விரட்டிப் பிடித்திருக்கிறேன்.
என் இதயத்தைத் திருடிப்
போகிறாய்
பேசாமல் நின்றுகொண்டிருக்கிறேன்.
*உனக்குத் தெரியாமலேயே
உன்னை நேசிக்கும்படி
என்னை ஆக்கியது நீ தான்.
*சூரியன் வந்த பிறகு தான்
நீ வருகிறாய் என்றாலும்
நீ வரும்போது தான்
விழிக்கிறது இந்த வீதி.
*இந்த மலையைக் குடைந்து ரயில்பாதை அமைத்தவனுக்காவது தெரியுமா
உன் கல்மனசுக்குள்
நுழைவது எப்படி என்பது.
அலைகள்
www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>

