01-16-2005, 01:16 AM
தருணம் பார்த்துக் காத்திருந்த அமெரிக்கா சுனாமியின் சாக்கில் இலங்கையிற் கால் வைத்து விட்டது. தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணப் பணிகளை மேற்கொள்கின்றார்கள். ஆனால் இப்பணிகள் முடிந்ததும் அவர்கள் செய்யப்போவது என்ன? இது எவரும் அறிந்த இரகசியம். இப்போது தமிழ்மக்கள் விடயத்தில் இந்தியா என்ன செய்யப்போகின்றது. தொடர்ந்தும் தனது குருட்டுத்தனமான இலங்கை தொடர்யான வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடிப்பதால் இந்தியா அடையப்போகும் நன்மைதான் என்ன? அமெரிக்க வருகையானது, இந்தியாவை இலங்கைத் தமிழர்கள் தொடர்பான ஒரு புதிய நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளியள்ளதா? இல்லையா? உங்கள் கருத்துக்களை தெளிவாக முன்வையுங்கள். தயவுசெய்து இவ்விவாதத்திற்குத் தேவையற்ற கருத்துக்களைத் தவிர்க்கவும்.

