01-13-2005, 10:09 AM
tsunami Wrote:மன்னிக்கவும்<span style='font-size:21pt;line-height:100%'>
நான் சொன்னதை களப்பொறுப்பாளர் பிழையாக விளங்கி இருக்கிறார் போல இருக்கு....
நாங்கள் எவ்வளவு திருத்தம் சொன்னாலும் தங்களை எல்லாம் தமிழ் அறிஞர் என்று சொல்லித்திரிகிறவை தங்களைத் திருத்த மாட்டினம்....
அப்படி ஏதாவது உருப்படியாக கலந்தாலோசிக்க வேண்டும் என்றால் அவைகளை முதலில் இணையத்தளங்களைப்பார்க்க சொல்லி ஒரு எழுத்து மூல விண்ணப்பம் விடுவம் (யாழ் இணையத்தளம் சார்பில்)
அல்லது அவைகளையும் கலந்தாலோசிக்க களத்திலை பங்குபற்ற அழைப்பு விடுவம்
இதுகள் ஒன்றையும் செய்யாது நாங்கள் கொஞ்சப்பேர் வெறுவாய் சப்புவதாய் தான் முடியும்
முதலில் யாழ் இணையத்தளம் அவர்களுக்கு ஒரு திறந்த அழைப்பு விடவேண்டும்
அதற்குப்பிறகு களத்தில் கதைக்கிறதுக்கு ஒரு விமோசனம் கிடைக்கும்
இந்த இணையத்தில் பெரிய தமிழ் அறிஞர் என்று சொல்லப்படுகிறவர்களை பகிரங்க அழைப்பு விட வேண்டும்.......
சுனாமி உங்களுடைய கருத்தை வரவேற்கிறேன். அப்படி செய்வது பிரயோசனமானபோதும் அதற்குரிய வாய்ப்புவளங்கள் அல்லாதபோது ஒரு விடயம் பற்றி கருத்தாடுவதன் மூலம் பலரின் கருத்தை அறிந்து சரிபிழைகளை எடைபோடமுடியும் என்றால் அவ்வாறு செய்வதில் தவறில்லையென நினைக்கிறேன்.
யாழ் இணையத்தளம் போதியளவு வாசகர்களை கொண்டிருக்கிறது. இணையத்தில் ஏற்படுகின்ற சிறுமாற்றமும் பிரயோசனமானது. இதன்மூலமமும் செய்வதற்கு நிறைய இருக்கின்றது என்பதை என்னைப்போல நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.</span>

