01-09-2005, 09:04 PM
செந்தளிர் இல்லம் - முல்லைத்தீவு
முல்லைத்தீவு நகர் பகுதியில் செந்தளிர் இல்லம் அமைந்திருந்தது. இந்து ஆதரவற்ற, பெற்றோரை இழந்த பிள்ளைகள் பராமரித்து வளர்க்கப்படுகிறார்கள். வசதி குறைந்த பெற்றோரும் இவ் இல்லத்தில் தங்கள் பிள்ளைகளை விடுவதுண்டு. ஏறக்குறைய இங்கு 120 பிள்ளைகள் தங்கியிருந்தார்கள்.
சுனாமிப் பேரலைகளின் தாக்கம் இப்பிஞ்சுகளையும் விட்டுவைக்கவில்லை. அலைகள் தாக்கியதை அறிந்து பராமரிப்பாளராக இருக்கும் அம்மா ஒருவர் மூன்று சிறுகுழந்தைகளை ஒன்றான அள்ளியெடுத்து அணைத்துக்கொண்டு ஓடிவந்து ஒரு உயரமான இடத்தில் அவற்றைவிட முயன்றபோதிலும் பரிதாபகரமாக தடுக்கிவிழுந்ததில் அந்த மூன்று பிள்ளைகளுடன் அந்த அம்மாவும் நீரில் பரிதவித்து இறந்துவிட்டார்கள். நீரலைகளின் தாக்கம் அடங்கிய பின்னர் ஒன்றையொன்று தழுவியபடி இறந்திருந்த மூன்று பிள்ளைகளினதும் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
அன்று விடுமுறை தினமாகையால் சில பிள்ளைகளை பெற்றோர் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இப்போது 20-30 வரையான பிள்ளைகளே எஞ்சியிருக்கிறார்கள். மற்றைய பிஞ்சுகள் யாவரும் அலையின் கோரப்பிடியில் சிக்கிப் பரிதவித்து இறந்துவிட்டார்கள்.
முல்லைத்தீவு நகர் பகுதியில் செந்தளிர் இல்லம் அமைந்திருந்தது. இந்து ஆதரவற்ற, பெற்றோரை இழந்த பிள்ளைகள் பராமரித்து வளர்க்கப்படுகிறார்கள். வசதி குறைந்த பெற்றோரும் இவ் இல்லத்தில் தங்கள் பிள்ளைகளை விடுவதுண்டு. ஏறக்குறைய இங்கு 120 பிள்ளைகள் தங்கியிருந்தார்கள்.
சுனாமிப் பேரலைகளின் தாக்கம் இப்பிஞ்சுகளையும் விட்டுவைக்கவில்லை. அலைகள் தாக்கியதை அறிந்து பராமரிப்பாளராக இருக்கும் அம்மா ஒருவர் மூன்று சிறுகுழந்தைகளை ஒன்றான அள்ளியெடுத்து அணைத்துக்கொண்டு ஓடிவந்து ஒரு உயரமான இடத்தில் அவற்றைவிட முயன்றபோதிலும் பரிதாபகரமாக தடுக்கிவிழுந்ததில் அந்த மூன்று பிள்ளைகளுடன் அந்த அம்மாவும் நீரில் பரிதவித்து இறந்துவிட்டார்கள். நீரலைகளின் தாக்கம் அடங்கிய பின்னர் ஒன்றையொன்று தழுவியபடி இறந்திருந்த மூன்று பிள்ளைகளினதும் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
அன்று விடுமுறை தினமாகையால் சில பிள்ளைகளை பெற்றோர் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இப்போது 20-30 வரையான பிள்ளைகளே எஞ்சியிருக்கிறார்கள். மற்றைய பிஞ்சுகள் யாவரும் அலையின் கோரப்பிடியில் சிக்கிப் பரிதவித்து இறந்துவிட்டார்கள்.
--
--
--

