08-09-2003, 01:39 PM
sOliyAn Wrote:பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை உதயா ஜூவலர்ஸ் ஆதரவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் கே.எஸ்.ராஜா என ஞாபகம்.. இது சரியா பிழையா என்பதை அறிந்தவர்கள்தான் கூறடவேண்டும்..
திரைவிருந்து என்ற நிகழ்ச்சிதான் கே.எஸ்.ராஜாவின் பிரபல்யமான நிகழ்ச்சி.
அந்நாட்களில் " வீட்டுக்கு வீடு வானோலிப் பெட்டிக்கருகில் அமர்ந்திருக்கும்...................
என்று தொடங்கி,
[b]திரைவிருந்து
என ரீங்காரமிட்ட கே.எஸ்.ராஜாவின் குரலுக்கு வசியமாகதவர்களே இல்லை.
அப்துல் ஹமீத் தொடக்கிய பாட்டுக்கு பாட்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபன வர்த்தக சேவை , இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபன சேவை 2 என மாறிய காலத்தில் நிறுத்தப்பட்டு உதயா ஜூவலர்ஸ் ஆதரவில் கே.எஸ்.ராஜா நடத்தினார்.பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டு லலிதா ஜூவலர்ஸ் ஆதரவில் மீண்டும் அப்துல் ஹமீத் தொடங்கினார்.
இதன் இடையே இலங்கையை விட்டு தமிழ்நாடு சென்று தற்காலிகமாக குடியேறிய கே.எஸ்.ராஜா
இந்திய வானோலியொன்றில் (விவித் பாரதியின் தேன் கிண்ணம்) இதே பாட்டுக்கு பாட்டைத் தொடங்கினார்.
ஆனால் அது பின்னர் அப்துல் ஹமீத் வசம் கைமாறியது..

