01-08-2005, 04:46 PM
சுனாமி: நெஞ்சை நெருடும் சில சம்பவங்கள்
இரு முறை உயிர்கொடுத்த தாயானாள்..
முல்லை நகர். டிசம்பர் 26 2004. சுனாமி ஆழிப் பேரலைகள் தாயகக் கரைகளைத் தாக்கி தாங்கொணாத் துயரை தமிழருக்குத் தருவதற்கென விரைந்து நகருள் நுழைகின்றன. தாயும் மகனும் வீட்டில் இருக்கின்றனர். தந்தை வெளியே போய்விட்டார்.
வீட்டினுள் நீர் புகுந்து நீர்மட்டம் உயர்ந்துகொண்டே போகிறது. தாய்க்கு நிலைமை விளங்குகிறது. மகனும் அவ்வளவு சிறியவனல்ல 10-12 வயது இருக்கும். நிலைமையின் விபரீதத்தைப் புரிந்துகொண்ட தாயுள்ளம் விரைந்து செயற்படுகிறது. மகனை தூக்கி வீட்டில் இருந்த உயர்ந்த சீமெந்து தட்டில் (பிளாற்) ஏற்றிவிடுகிறாள். மகன் ஏறவும் நீர்மட்டம் உயர்ந்து தாயை மூழ்கடிக்கிறது. பிறப்பின்போது உயிர்கொடுத்த அத்தாய் இப்போது இரண்டாம் முறையும் மகனுக்கு உயிர்கொடுத்து தான் மறைந்துவிட்டாள். தாயையும் இழந்து தந்தையையும் தொலைத்து இப்போது மகன் தனியனாகி..
இரு முறை உயிர்கொடுத்த தாயானாள்..
முல்லை நகர். டிசம்பர் 26 2004. சுனாமி ஆழிப் பேரலைகள் தாயகக் கரைகளைத் தாக்கி தாங்கொணாத் துயரை தமிழருக்குத் தருவதற்கென விரைந்து நகருள் நுழைகின்றன. தாயும் மகனும் வீட்டில் இருக்கின்றனர். தந்தை வெளியே போய்விட்டார்.
வீட்டினுள் நீர் புகுந்து நீர்மட்டம் உயர்ந்துகொண்டே போகிறது. தாய்க்கு நிலைமை விளங்குகிறது. மகனும் அவ்வளவு சிறியவனல்ல 10-12 வயது இருக்கும். நிலைமையின் விபரீதத்தைப் புரிந்துகொண்ட தாயுள்ளம் விரைந்து செயற்படுகிறது. மகனை தூக்கி வீட்டில் இருந்த உயர்ந்த சீமெந்து தட்டில் (பிளாற்) ஏற்றிவிடுகிறாள். மகன் ஏறவும் நீர்மட்டம் உயர்ந்து தாயை மூழ்கடிக்கிறது. பிறப்பின்போது உயிர்கொடுத்த அத்தாய் இப்போது இரண்டாம் முறையும் மகனுக்கு உயிர்கொடுத்து தான் மறைந்துவிட்டாள். தாயையும் இழந்து தந்தையையும் தொலைத்து இப்போது மகன் தனியனாகி..
--
--
--

