01-02-2005, 10:58 PM
இதனை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் "நூற்றுக்கணக்கில்" என்பதுதான் எம்மால் நம்புவது கொஞ்சம் கடினமாக உள்ளது. வதந்திகளுக்குள்ளே உண்மையை மக்களுக்கு தெரிவிப்பதே ஊடகங்களின் தலையாய பணிகளுள் ஒன்றாக இருக்க வேண்டும். ஊடகங்களே வதந்திகளை பரப்ப முற்படக்கூடாது. எங்கே நீங்கள் வாசித்த செய்திகளின் தொடர்களை (Link) இங்கே தாருங்கள் அதை வாசித்து நாங்களும் உண்மையை தெரிந்துகொள்ள ? மக்கள் மனதில் இணையங்களோ ஊடகங்களோ இடம் பிடிக்கவேண்டும் என்றால் ( உ+ம் தமிழ்நாதம், யாழ் இணையங்கள் போல்) மற்றவர்களும் உண்மையை தெரிவித்து + உடனடி செய்திகளை வெளியிட்டு இவ்வாறு தங்கள் திறமைகள் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடிக்க வேண்டும். எமக்கு எந்த இணையங்கள் மீதும் எந்த குறைகளும் கிடையாது. நாம் எல்லா ஊடகங்களையும் ஒரே மாதிரித்தான் நேசிக்கிறோம். அண்மையில் சுனாமி அழிவின் போது அனைத்து இணையங்களிலும் கிடைத்த செய்திகளை நாம் இங்கு ( யாழ்த்தளத்தில் ) தந்தோமல்லவா ? கிடைக்கும் செய்திகளை அவற்றின் உண்மைநிலை தெரியாது எடுத்த எடுப்பிலே பிரசுரித்து விடக்கூடாது. அவற்றின் உண்மை நிலையை உறுதி செய்த பின்னரே வெளியிடவேண்டும். இதனால் தான் "தமிழ்நாதம்" "யாழ்" இணையங்கள் எங்கள் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளன.

