12-31-2004, 05:08 PM
ஆமாம், நிச்சயமாக கனடா வாழ் நம் மக்களுக்கு அங்குள்ள எம் தாயகம் சார்ந்த ஊடகங்கள் இந்நிதி சேகரிப்பு தொடர்பான உண்மை நிலைமையை எடுத்துரைக்க வேண்டிய கடைமைப்பாட்டிலும் உள்ளார்கள். இது சம்பந்தமாக நடந்த உண்மைச் சம்பவத்தை இங்கு கூற விரும்புகிறேன். ...........
................... நேற்று முந்தினம் கனடாவில் இருக்கும் எனது நன்பனுடன் தொலைபேசியில் கதைக்க நேர்ந்தபோது, எனது நண்பன் தான் கனடாவிலியங்கும் "CTBC" வானொலியூடாக ஒரு குறித்த நிதியை கையளித்ததாக் குறிப்பிட்டான். அப்போது நான் அந்நிதி எப்படி அனுப்பப் போகிறார்கள் என்ற விபரத்தைக் கேட்டேன். அதற்கு அவரும் நிதியானது தமிழர் புனர்வாழ்வு நிறுவன மூலம்தான் எமது மக்களுக்கு அனுப்பப்படப் போவதாக தெரிவித்தான். நான் எனது நண்பனிடம் அச்செய்தியை உறுதி செய்யும்படி கூறியிருந்தேன்.அதன் பின் எனது நண்பன் குறிப்பிட்ட "CTBC" வானொலியின் வரவேற்புப் பகுதிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுதான் ஓர் நிதியுதவியை செய்யப் போவதாகவும், அந்நிதி எங்கு, எப்படி, யாருக்கு அனுப்பப் போகிறீர்களென்று கேட்டிருக்கிறான். அதற்கு அங்கு கடைமையில் இருந்த ஓர் சகோதரியானவர் "நாங்கள் யாருக்கு அனுப்புவதென்பதைப் பற்றி இன்னும் ஒரு முடிபும் எடுக்க விலையென்று" கூறியிருக்கிறார்! அதன் பின் எனது நண்பன் மேலதிகமான தகவல்களைப் பெற முற்படுகையில், உரையாடல் துண்டிக்கப்பட்டு, ஒலிப்பதிவு செய்யப்பட்ட வேறு செய்திகளைக் கேட்கும் வண்ணம் ஏதோ செய்திகள் தொலைபேசியில் கேட்க விட்டார்களாம். அதன் பின் தனது தொலைபேசியிலிருந்து குறிப்பிட்ட வானொலிக்கு அழைக்கப்படும் அழைப்புகளுக்கு எந்த பதிலளிக்கிறார்களில்லையாம்! இவ்வானொலியில் எனது நண்பன் தொடர்பு கொண்டதிலிருந்து முழு உரையாடல்களையும் ஒலிப்பதிவு செய்துள்ளான். மற்றும் வானொலி நிலைய தொலைபேசி இலக்கம் 4௪௪16 429 2822 என்னும் எண்ணில்தானாம் தொடர்பு கொண்டான்.
சிலவேலை குறிப்பிட்ட வானொலியில் அந்த நேரம் கடைமையாற்றிய சகோதரி தெரியாமல் விளக்கமளித்து விட்டாரோ தெரியாது?
எது எப்படியிருப்பினும் "CTBC" வானொலிக்கு ஓர் தாழ்மையான வேண்டுகோள் தயவு செய்து எம்மவர்களினால் எம்மவர்களிற்காக தரப்பட்ட நிதியை தயவு செய்து எம்மவர்களின் அவலங்களைப்போக்க எம்மவர் சார்ந்த நிறுவனத்திடமே ஒப்படைத்து விடுங்கள்.
_________________
"வலிமையே வாழ்வு"
................... நேற்று முந்தினம் கனடாவில் இருக்கும் எனது நன்பனுடன் தொலைபேசியில் கதைக்க நேர்ந்தபோது, எனது நண்பன் தான் கனடாவிலியங்கும் "CTBC" வானொலியூடாக ஒரு குறித்த நிதியை கையளித்ததாக் குறிப்பிட்டான். அப்போது நான் அந்நிதி எப்படி அனுப்பப் போகிறார்கள் என்ற விபரத்தைக் கேட்டேன். அதற்கு அவரும் நிதியானது தமிழர் புனர்வாழ்வு நிறுவன மூலம்தான் எமது மக்களுக்கு அனுப்பப்படப் போவதாக தெரிவித்தான். நான் எனது நண்பனிடம் அச்செய்தியை உறுதி செய்யும்படி கூறியிருந்தேன்.அதன் பின் எனது நண்பன் குறிப்பிட்ட "CTBC" வானொலியின் வரவேற்புப் பகுதிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுதான் ஓர் நிதியுதவியை செய்யப் போவதாகவும், அந்நிதி எங்கு, எப்படி, யாருக்கு அனுப்பப் போகிறீர்களென்று கேட்டிருக்கிறான். அதற்கு அங்கு கடைமையில் இருந்த ஓர் சகோதரியானவர் "நாங்கள் யாருக்கு அனுப்புவதென்பதைப் பற்றி இன்னும் ஒரு முடிபும் எடுக்க விலையென்று" கூறியிருக்கிறார்! அதன் பின் எனது நண்பன் மேலதிகமான தகவல்களைப் பெற முற்படுகையில், உரையாடல் துண்டிக்கப்பட்டு, ஒலிப்பதிவு செய்யப்பட்ட வேறு செய்திகளைக் கேட்கும் வண்ணம் ஏதோ செய்திகள் தொலைபேசியில் கேட்க விட்டார்களாம். அதன் பின் தனது தொலைபேசியிலிருந்து குறிப்பிட்ட வானொலிக்கு அழைக்கப்படும் அழைப்புகளுக்கு எந்த பதிலளிக்கிறார்களில்லையாம்! இவ்வானொலியில் எனது நண்பன் தொடர்பு கொண்டதிலிருந்து முழு உரையாடல்களையும் ஒலிப்பதிவு செய்துள்ளான். மற்றும் வானொலி நிலைய தொலைபேசி இலக்கம் 4௪௪16 429 2822 என்னும் எண்ணில்தானாம் தொடர்பு கொண்டான்.
சிலவேலை குறிப்பிட்ட வானொலியில் அந்த நேரம் கடைமையாற்றிய சகோதரி தெரியாமல் விளக்கமளித்து விட்டாரோ தெரியாது?
எது எப்படியிருப்பினும் "CTBC" வானொலிக்கு ஓர் தாழ்மையான வேண்டுகோள் தயவு செய்து எம்மவர்களினால் எம்மவர்களிற்காக தரப்பட்ட நிதியை தயவு செய்து எம்மவர்களின் அவலங்களைப்போக்க எம்மவர் சார்ந்த நிறுவனத்திடமே ஒப்படைத்து விடுங்கள்.
_________________
"வலிமையே வாழ்வு"
" "

