12-29-2004, 02:33 PM
மனிதாபிமான சேவைகளுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அழைப்பு
ஆசியாவின் தென்பகுதி மற்றும் தென் கிழக்குப் பகுதிகளில் சுனாமியினால் ஏற்பட்ட பாரிய அனர்த்தங்கள் இன்னமும் கணக்கிடப் படுகின்றன. சுனாமியனால் ஏற்பட்ட அனர்த்தங்களைவிட பாரியளவிலான அழிவுகள் ஏற்படும் அவல நிலை இன்னும் அங்கே இருக்கின்றது. தொற்று நோய்கள், பட்டினிச் சாவுகள் போன்றவை பெரும் சவாலாக உருவெடுக்க சாத்தியங்கள் அங்கே பெரிதும் காணப்படுகின்றது. இவற்றை தடுத்து நிறுத்த வேண்டிய பாரிய பொறுப்பு சகல மக்களுக்கும் உண்டு
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - சிறிலங்கா
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஒரு மனிதநேய அமைப்பாக தன்னை சிறிலங்காவில் பதிவு செய்து கடந்த 19 வருடங்களாக தனது சேவையை ஆற்றி வருகின்றது. கடந்த சில காலங்களாக தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பல உதவி நிறுவனங்களுடனும், அரசசார்பற்ற அமைப்புக்களுடனும், ஐக்கிய நாடுகளின் அமைப்புக்களுடனும் இணைந்து பாரிய அளவிளான மக்கள் நலன் பேணும் திட்டங்களை சிறிலங்காவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஆற்றி வருகின்றது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகமானது சிறிலங்காவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் எட்டு மாவட்டங்களிலும் தனது உபகட்டமைப்பை நிறுவி அவற்றை செவ்வனவே இயக்கி வருகின்றது. அத்துடன் 3500க்கு மேற்பட்ட ஊழியர்களை தன்னகத்தே கொண்டும் உள்ளது. இவர்களுக்கான மாத ஊதியத்தையும் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் வழங்கி வருவதையும் இங்கு குறிப்பிடல் வேண்டும்.
கடந்து வந்த 19 ஆண்டுகளில் தனது சேவையில் பலதரப்பட்ட அவசியத் தேவைகளுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் முகம் கொடுத்திருக்கின்றது. இருபது வருடங்களாக சிறிலங்காவில் நடந்த யுத்தத்தின் போதும் மக்களுடைய இன்னல்களைத் தீர்க்க பல வகைகளில் உதவியிருக்கின்றது. சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில், 1995 இல் பாரிய அளவிலான தமிழ் மக்கள் இடம் பெயர வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இவ்வாறு இடம் பெயர்ந்த மக்கள் தொகை 500,000க்கு அதிகமானது எனக் கணிக்கப்பட்டிருந்தது. அவ் இடம் பெயர்ந்த மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தனித்து நின்று உதவி செய்து அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்து, பெரியளவில் ஏற்ப்பட இருந்த மனித அழிவைக் காப்பாற்றியிருந்தது. இச் செயற்பாடானது இடம் பெயர்ந்த மக்களின் உண்மையான உடனடித் தேவைகளை அறிந்து அவற்றை நடைமுறைப் படுத்தக் கூடிய ஆற்றல் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு இருப்பதைக் காட்டி நின்றது. ஆகவே இப்பொழுதும் சுனாமி அவலத்தால் இடம் பெயர்ந்த மக்களுக்கான உடனடித் தேவைகளுக்கும் நிவாரணப் பணிகளுக்குமான சேவைகளைச் செய்ய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு போதுமான அனுபவங்களும், ஆற்றலும் இருக்கின்றது.
முழு அளவிலான அழிவுகளும், இழப்புக்களும் இதுவரை அறியப்பட முடியாவிட்டாலும், எடுக்கப்பட்ட கணிப்பின் பிரகாரம் 27.12.2004 இல் பின்வரும் இழப்புக்கள் பெறப்பட்டிருக்கின்றன.
இலங்கையின் கிழக்குப் பகுதிகளான மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகள் பெரும் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. மேற்குறிப்பிட்ட இடங்களில் கடல் அலையானது மூன்று கிலோமீற்றர் தூரத்துக்கும் அப்பால் நகரத்துக்குள் புகுந்து பாரிய சேதங்களை ஏற்படுத்தியிருந்தது.
கிடைக்கப் பெற்ற அறிக்கையின் பிரகாரம் 7400க்கு மேற்பட்ட உயிர் இழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. 11417க்கு மேற்ப்டவர்களுக்கு வெவ்வேறு விதமான உடற் தாக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஏறக்குறைய அரை மில்லியன் மக்களுக்கு மேலாக தங்கள் இருப்பிடங்களை விட்டு அயற் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடம் பெயர்ந்திருக்கிறார்கள்
பாதிப்புக்களின் அளவு
மாவட்டங்கள் இடம்பெயர்வு இறப்பு காயங்கள் நிலமை
அம்பாறை: Displaced - 20000, Deaths - 2200, Injured - 300, Situation - மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
மட்டக்களப்பு: Displaced - 118000, Deaths -1860, Injured -2100, Situation -மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது
திருகோணமலை: Displaced - 137000, Deaths -700, Injured -3400, Situation -மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது
முல்லைத்தீவு: Displaced - 97000, Deaths -1300, Injured -3800, Situation -மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது
யாழ்ப்பாணம்: Displaced - 110000, Deaths -1600, Injured -1800, Situation -மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது
மன்னார்: Displaced - 6000, Deaths - Nil, Injured -17, Situation -மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது
மொத்தம்: Displaced - 488000´, Deaths -7660, Injured -11417 .
மேற் தரப்பட்ட அறிக்கையானது தகவல்களின் அடிப்படையில் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கின்றது
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உடனடியான செயற்பாடுகள்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தனது மாவட்டக் கிளையினூடாகத் தொண்டர்களைத் திரட்டி உடனடியான தேவைகளை சமாளிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தொண்டர்கள் உள்ளூர் உதவி நிறுவனங்கள், சில சர்வதேச நிறுவனங்களின் தொண்டர்களூடாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவ பிரிவினூடாகவும் அவசியத் தேவைகளைக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
அவசியத் தேவையான உணவு, சுத்தமான நீர், மருத்துவத் தேவைகள் போன்றவற்றைக் கவனிப்பது. இறந்தவர்களின் உடல்களை அப்புறப் படுத்துவது போன்றவற்றிற்கு முக்கியம் தந்து வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றன.
தற்போதைய நிலமையில் பெரியளவிலான தேவைகள் இருக்கின்றன. ஆனாலும் ஒரு குறிப்பிட்ட அளவிலான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளக் கூடிய அளவிலேயே தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இருக்கின்றது. மேலும் தேவைகள் அதிகரிக்க்கும் வாய்ப்பிருப்பதால் உடனித் தேவைகளுக்கும் மேலதிக செயற் திட்டங்களுக்கும் உதவி நிறுவனங்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அழைப்பு விடுக்கின்றது.
சர்வதேச சமூகத்துக்கு தமிழர் புனாவாழ்வுக் கழகம் ஒரு அவசர அழைப்பு
வெல்லப் பட வேண்டிய இந்த சவாலை எதிர் கொள்ள தமிழர் புனாவாழ்வக் கழகத் தொண்டாகள், உள்நாட்டு உதவி நிறுவனங்களின் தொண்டர்கள் ஏற்கனவே தங்கள் உதவிகளையும், சேவைகளையும் வழங்கத் தொடங்கிவிட்டார்கள். அவற்றை நடைமுறைப்படுத்த அத்தியாவசியமானவற்றை சர்வதேச சமூகத்திடமிருந்து தமிழர் புனர் வாழ்வுக் கழகம் எதிர் பார்க்கின்றது.
வெளிநாடுகளில் செயற்படும் தனது 14 கிளைகளின் ஊடாகவும் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் நிதி உதவிகளையும், உடல் உதவிகளையும் கோரி இருக்கின்றது. அவை வெகு விரைவில் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பின்வருவன அவசரத் தேவைகளுக்காகக் கோரப்படுகின்றன.
1. உணவு (பால் மா, பதனிடப்பட்ட உணவு போன்றவை) 80,000 குடும்பங்களுக்கான மூன்று நேர உணவு இரண்டு கிழமைகளுக்கு
2. உணவு அல்லாதவை ( சமையல் அறைப் பொருட்கள்,
100 000பாய்கள் போன்றவை)
3. உடைகள் ( பிரத்தியேகமாக பெண்கள், குழந்தைகள்)
4. மருந்து வகைகள் (paracetamol, anti biotics, dressings, suture material, disposable syringes etc)
5. நீரைச் சுத்திகரிக்கும் மாத்திரைகள் ( 500 000) தண்ணீர் கொள்கலன்கள் (5லீற்றர்)
6. தற்காலிகக் கொட்டகைகள் (25,000கொட்டகைகள் குடும்பங்களுக்காகவும் 50 மருத்துவ வசதிகளுக்காகவும்)
7. மின் உற்பத்தி சாதனங்கள் (50)
மேற்குறிப்பிட்ட பொருட்களானது தண்ணீரினால் ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க பெரிதும் உதவும். தமிழர் புனர்வாழ்வுக் கழகமானது மேலே தரப்பட்டவற்றை உடனடியாக எதிர்பார்க்கின்றது. இவை மக்களின் அவசியத் தேவையாகின்றது.
இவ் அவசியத் தேவையை உடன் நடைமுறைப்படுத்த தமிழர் புனாவாழ்வுக் கழகத்திற்கு இரண்டு மில்லியன் டொலாகளுக்கு மேலாகத் தேவைப்படுகிறது என்று கணக்கிடப் பட்டிருக்கின்றது.
இந்த அவசியத் தேவைகளுக்கு சர்வதேச மக்களிடம் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவர்களது ஆதரவுக் கரங்களை வேண்டி நிற்கின்றது.
மேலதிக விபரங்களுக்கு.
00 94 112 693254 ( கொழும்பு)
00 94 21 228 3947 (கிளிநொச்சி)
cpara@hotmail.com
http://www.troonline.org/[/size]
Thanx: Chandravathana
ஆசியாவின் தென்பகுதி மற்றும் தென் கிழக்குப் பகுதிகளில் சுனாமியினால் ஏற்பட்ட பாரிய அனர்த்தங்கள் இன்னமும் கணக்கிடப் படுகின்றன. சுனாமியனால் ஏற்பட்ட அனர்த்தங்களைவிட பாரியளவிலான அழிவுகள் ஏற்படும் அவல நிலை இன்னும் அங்கே இருக்கின்றது. தொற்று நோய்கள், பட்டினிச் சாவுகள் போன்றவை பெரும் சவாலாக உருவெடுக்க சாத்தியங்கள் அங்கே பெரிதும் காணப்படுகின்றது. இவற்றை தடுத்து நிறுத்த வேண்டிய பாரிய பொறுப்பு சகல மக்களுக்கும் உண்டு
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - சிறிலங்கா
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஒரு மனிதநேய அமைப்பாக தன்னை சிறிலங்காவில் பதிவு செய்து கடந்த 19 வருடங்களாக தனது சேவையை ஆற்றி வருகின்றது. கடந்த சில காலங்களாக தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பல உதவி நிறுவனங்களுடனும், அரசசார்பற்ற அமைப்புக்களுடனும், ஐக்கிய நாடுகளின் அமைப்புக்களுடனும் இணைந்து பாரிய அளவிளான மக்கள் நலன் பேணும் திட்டங்களை சிறிலங்காவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஆற்றி வருகின்றது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகமானது சிறிலங்காவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் எட்டு மாவட்டங்களிலும் தனது உபகட்டமைப்பை நிறுவி அவற்றை செவ்வனவே இயக்கி வருகின்றது. அத்துடன் 3500க்கு மேற்பட்ட ஊழியர்களை தன்னகத்தே கொண்டும் உள்ளது. இவர்களுக்கான மாத ஊதியத்தையும் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் வழங்கி வருவதையும் இங்கு குறிப்பிடல் வேண்டும்.
கடந்து வந்த 19 ஆண்டுகளில் தனது சேவையில் பலதரப்பட்ட அவசியத் தேவைகளுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் முகம் கொடுத்திருக்கின்றது. இருபது வருடங்களாக சிறிலங்காவில் நடந்த யுத்தத்தின் போதும் மக்களுடைய இன்னல்களைத் தீர்க்க பல வகைகளில் உதவியிருக்கின்றது. சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில், 1995 இல் பாரிய அளவிலான தமிழ் மக்கள் இடம் பெயர வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இவ்வாறு இடம் பெயர்ந்த மக்கள் தொகை 500,000க்கு அதிகமானது எனக் கணிக்கப்பட்டிருந்தது. அவ் இடம் பெயர்ந்த மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தனித்து நின்று உதவி செய்து அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்து, பெரியளவில் ஏற்ப்பட இருந்த மனித அழிவைக் காப்பாற்றியிருந்தது. இச் செயற்பாடானது இடம் பெயர்ந்த மக்களின் உண்மையான உடனடித் தேவைகளை அறிந்து அவற்றை நடைமுறைப் படுத்தக் கூடிய ஆற்றல் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு இருப்பதைக் காட்டி நின்றது. ஆகவே இப்பொழுதும் சுனாமி அவலத்தால் இடம் பெயர்ந்த மக்களுக்கான உடனடித் தேவைகளுக்கும் நிவாரணப் பணிகளுக்குமான சேவைகளைச் செய்ய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு போதுமான அனுபவங்களும், ஆற்றலும் இருக்கின்றது.
முழு அளவிலான அழிவுகளும், இழப்புக்களும் இதுவரை அறியப்பட முடியாவிட்டாலும், எடுக்கப்பட்ட கணிப்பின் பிரகாரம் 27.12.2004 இல் பின்வரும் இழப்புக்கள் பெறப்பட்டிருக்கின்றன.
இலங்கையின் கிழக்குப் பகுதிகளான மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகள் பெரும் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. மேற்குறிப்பிட்ட இடங்களில் கடல் அலையானது மூன்று கிலோமீற்றர் தூரத்துக்கும் அப்பால் நகரத்துக்குள் புகுந்து பாரிய சேதங்களை ஏற்படுத்தியிருந்தது.
கிடைக்கப் பெற்ற அறிக்கையின் பிரகாரம் 7400க்கு மேற்பட்ட உயிர் இழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. 11417க்கு மேற்ப்டவர்களுக்கு வெவ்வேறு விதமான உடற் தாக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஏறக்குறைய அரை மில்லியன் மக்களுக்கு மேலாக தங்கள் இருப்பிடங்களை விட்டு அயற் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடம் பெயர்ந்திருக்கிறார்கள்
பாதிப்புக்களின் அளவு
மாவட்டங்கள் இடம்பெயர்வு இறப்பு காயங்கள் நிலமை
அம்பாறை: Displaced - 20000, Deaths - 2200, Injured - 300, Situation - மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
மட்டக்களப்பு: Displaced - 118000, Deaths -1860, Injured -2100, Situation -மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது
திருகோணமலை: Displaced - 137000, Deaths -700, Injured -3400, Situation -மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது
முல்லைத்தீவு: Displaced - 97000, Deaths -1300, Injured -3800, Situation -மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது
யாழ்ப்பாணம்: Displaced - 110000, Deaths -1600, Injured -1800, Situation -மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது
மன்னார்: Displaced - 6000, Deaths - Nil, Injured -17, Situation -மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது
மொத்தம்: Displaced - 488000´, Deaths -7660, Injured -11417 .
மேற் தரப்பட்ட அறிக்கையானது தகவல்களின் அடிப்படையில் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கின்றது
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உடனடியான செயற்பாடுகள்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தனது மாவட்டக் கிளையினூடாகத் தொண்டர்களைத் திரட்டி உடனடியான தேவைகளை சமாளிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தொண்டர்கள் உள்ளூர் உதவி நிறுவனங்கள், சில சர்வதேச நிறுவனங்களின் தொண்டர்களூடாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவ பிரிவினூடாகவும் அவசியத் தேவைகளைக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
அவசியத் தேவையான உணவு, சுத்தமான நீர், மருத்துவத் தேவைகள் போன்றவற்றைக் கவனிப்பது. இறந்தவர்களின் உடல்களை அப்புறப் படுத்துவது போன்றவற்றிற்கு முக்கியம் தந்து வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றன.
தற்போதைய நிலமையில் பெரியளவிலான தேவைகள் இருக்கின்றன. ஆனாலும் ஒரு குறிப்பிட்ட அளவிலான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளக் கூடிய அளவிலேயே தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இருக்கின்றது. மேலும் தேவைகள் அதிகரிக்க்கும் வாய்ப்பிருப்பதால் உடனித் தேவைகளுக்கும் மேலதிக செயற் திட்டங்களுக்கும் உதவி நிறுவனங்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அழைப்பு விடுக்கின்றது.
சர்வதேச சமூகத்துக்கு தமிழர் புனாவாழ்வுக் கழகம் ஒரு அவசர அழைப்பு
வெல்லப் பட வேண்டிய இந்த சவாலை எதிர் கொள்ள தமிழர் புனாவாழ்வக் கழகத் தொண்டாகள், உள்நாட்டு உதவி நிறுவனங்களின் தொண்டர்கள் ஏற்கனவே தங்கள் உதவிகளையும், சேவைகளையும் வழங்கத் தொடங்கிவிட்டார்கள். அவற்றை நடைமுறைப்படுத்த அத்தியாவசியமானவற்றை சர்வதேச சமூகத்திடமிருந்து தமிழர் புனர் வாழ்வுக் கழகம் எதிர் பார்க்கின்றது.
வெளிநாடுகளில் செயற்படும் தனது 14 கிளைகளின் ஊடாகவும் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் நிதி உதவிகளையும், உடல் உதவிகளையும் கோரி இருக்கின்றது. அவை வெகு விரைவில் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பின்வருவன அவசரத் தேவைகளுக்காகக் கோரப்படுகின்றன.
1. உணவு (பால் மா, பதனிடப்பட்ட உணவு போன்றவை) 80,000 குடும்பங்களுக்கான மூன்று நேர உணவு இரண்டு கிழமைகளுக்கு
2. உணவு அல்லாதவை ( சமையல் அறைப் பொருட்கள்,
100 000பாய்கள் போன்றவை)
3. உடைகள் ( பிரத்தியேகமாக பெண்கள், குழந்தைகள்)
4. மருந்து வகைகள் (paracetamol, anti biotics, dressings, suture material, disposable syringes etc)
5. நீரைச் சுத்திகரிக்கும் மாத்திரைகள் ( 500 000) தண்ணீர் கொள்கலன்கள் (5லீற்றர்)
6. தற்காலிகக் கொட்டகைகள் (25,000கொட்டகைகள் குடும்பங்களுக்காகவும் 50 மருத்துவ வசதிகளுக்காகவும்)
7. மின் உற்பத்தி சாதனங்கள் (50)
மேற்குறிப்பிட்ட பொருட்களானது தண்ணீரினால் ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க பெரிதும் உதவும். தமிழர் புனர்வாழ்வுக் கழகமானது மேலே தரப்பட்டவற்றை உடனடியாக எதிர்பார்க்கின்றது. இவை மக்களின் அவசியத் தேவையாகின்றது.
இவ் அவசியத் தேவையை உடன் நடைமுறைப்படுத்த தமிழர் புனாவாழ்வுக் கழகத்திற்கு இரண்டு மில்லியன் டொலாகளுக்கு மேலாகத் தேவைப்படுகிறது என்று கணக்கிடப் பட்டிருக்கின்றது.
இந்த அவசியத் தேவைகளுக்கு சர்வதேச மக்களிடம் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவர்களது ஆதரவுக் கரங்களை வேண்டி நிற்கின்றது.
மேலதிக விபரங்களுக்கு.
00 94 112 693254 ( கொழும்பு)
00 94 21 228 3947 (கிளிநொச்சி)
cpara@hotmail.com
http://www.troonline.org/[/size]
Thanx: Chandravathana
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

