Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இய்ற்கையின் சீற்றத்தால் எம் தாயகப்பூமி அழிப்பு
#34
இலங்கையில் மீட்புப்பணிகள்

கடற்கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இலங்கையின் வடகிழக்கு வடக்குப் பிரதேசங்கள் பேரழிவுக்குள்ளாகியிருக்கின்றன.போராளிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பிரதேசங்களாகையால் அரச இயந்திரத்தின் உதவி எட்டாத நிலையில் விடுதலைப்புலிப் போராளிகளுடன் மக்களும் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.


<img src='http://kavithai.yarl.net/archives/penpuli.jpg' border='0' alt='user posted image'>


யாழ்ப்பாணத்தில் மட்டும் 2000 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பெரும்பாலும் வடமராட்சி கிழக்கே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

<img src='http://kavithai.yarl.net/archives/vadamaraadsi.jpg' border='0' alt='user posted image'>

பருத்தித்துறையிலிருந்து வெற்றிலைக்கேணி,கட்டைக்காடு வரையான வடமராட்சி கிழக்குப் பிரதேசம் பெரும் அழிவுக்குள்ளாகியுள்ளது.வல்வெட்டித்துறையிலிருந்து பருத்தித்துறை வரையான பகுதியும் சிறிதளவு உயிர்ச்சேதத்தை எதிர்நோக்கியுள்ளது.பெரும்பாலான மீனவர் குடிசைகள் அழிக்கப்பட்டுள்ளன.வள்ளங்கள் வலைகள் போன்றவை வீதியில் தூக்கிவீசப்பட்டதால் சின்னாபின்னப்பட்டுப் போயுள்ளன.

முல்லைத்தீவில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.இதுவரை 1600 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.கிளிநொச்சி,புதுக்குடியிருப்பு,வவுனியா வைத்தியசாலைகள் இறந்தவர்களின் உடல்களால் நிரம்பி வழிகின்றன.தொற்றுநோய் அச்சம் காரணமாக சடலங்கள் அடையாளம் காணப்படாமலேயே புதைக்கப்படும் அவலம் நடக்கின்றது.

<img src='http://kavithai.yarl.net/archives/tepolice.jpg' border='0' alt='user posted image'>

கரையொதுங்கும் சடலங்கள் இன்னும் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை சுமாத்திரா பிரதேசத்தில் மீண்டும் நிலநடுக்கம் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் இலங்கையில் மீண்டும் சுனாமியின் தாக்கம் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.கடற்கரையை விட்டு மேட்டுப்பாங்கான இடத்திற்கு செல்லுமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

காலம் கடந்த எச்சரிக்கை என்றாலும் மேலதிக இழப்பைக் குறைக்க இது உதவு.மீண்டும் ஒரு சுனாமி கிழக்குப் பகுதியைத் தாக்கும் பட்சத்தில் நிலமை இன்னும் மோசமாகலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.மீட்புப்பணிகள் பாதிக்கப்படுவதோடு காயமடைந்து அங்கங்கே ஒதுங்கியுள்ளவர்கள் உயிரிழக்க நேரிடும் என்று அஞ்சப்படுகின்றது.

நோர்வே,ஐரோப்பிய ஒன்றியம்,அமெரிக்கா,அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்தும் இந்தியாவிடமிருந்தும் பலகோடி ரூபா பணமும் மருந்து,உணவு,பாவனைப்பொருட்களும் இலங்கை அரசாங்கத்திற்கு உதவியாக வழங்கப்பட்டபோதிலும் இதுவரை அரசாங்கத்தின் உதவி எதுவுமே வன்னிப்பிரதேசத்து மக்களுக்கு கிடைக்கவில்லை.

கிழக்கிலங்கையிலும் சிங்களவர்,முஸ்லிம்,தமிழர் வேறுபாடுகளின்றி புலிகளும் தமிழர் புனர்வாழ்வுக்கழகமும் இணைந்து மீட்புப்பணிகளிலும் நிவாரணப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.இங்கும் அரச இயந்திரத்தின் உதவிகள் போதுமான அளவில் எட்டப்படவில்லை.அரச ஊடகங்கள் தமிழர் பகுதிகளில் ஏற்பட்ட இழப்பை குறைத்தே தெரிவித்து வருகின்றன.நாட்டையே உலுக்கிய பேரழிவு கூட பேரினவாதிகளின் கண்ணைத் திறக்கவில்லை.

<img src='http://kavithai.yarl.net/archives/batti.jpg' border='0' alt='user posted image'>


வவுனியா நகரம் வன்னிப்பகுதி மக்களுக்கான மீட்புப்பணிகளுக்காக அதி உசார் நிலையில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.மூவின மக்களும் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தவர்களைப் பராமரிப்பதிலும் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதிலும் ஈடுபட்டுள்ளார்கள்.அரச சார்பற்ற நிறுவனங்கள் மக்களுடன் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

<img src='http://kavithai.yarl.net/archives/puli.jpg' border='0' alt='user posted image'>

http://kavithai.yarl.net/archives/002463.html#more
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by தமிழரசன் - 12-26-2004, 12:25 PM
[No subject] - by sinnappu - 12-26-2004, 12:40 PM
[No subject] - by sinnappu - 12-26-2004, 12:42 PM
[No subject] - by Sriramanan - 12-26-2004, 01:34 PM
[No subject] - by Nellaiyan - 12-26-2004, 01:36 PM
[No subject] - by Mohan - 12-26-2004, 04:27 PM
[No subject] - by tamilini - 12-26-2004, 04:45 PM
[No subject] - by KULAKADDAN - 12-26-2004, 06:22 PM
[No subject] - by cannon - 12-26-2004, 06:56 PM
[No subject] - by cannon - 12-26-2004, 07:05 PM
[No subject] - by Shan - 12-26-2004, 07:57 PM
[No subject] - by Mathan - 12-27-2004, 04:16 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 04:29 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 04:32 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 04:34 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 04:36 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 04:37 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 04:42 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 04:44 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 04:54 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 04:57 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 05:00 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 05:02 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 05:16 AM
[No subject] - by vasisutha - 12-27-2004, 05:34 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 05:54 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 05:57 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 06:15 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 06:24 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 06:26 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 08:28 PM
[No subject] - by Mathan - 12-27-2004, 08:39 PM
[No subject] - by sinnappu - 12-27-2004, 09:48 PM
[No subject] - by Aalavanthan - 12-28-2004, 01:08 AM
[No subject] - by KULAKADDAN - 12-28-2004, 01:22 AM
[No subject] - by Aalavanthan - 12-28-2004, 01:27 AM
[No subject] - by Mathan - 12-29-2004, 02:33 PM
[No subject] - by aswini2005 - 12-30-2004, 12:31 AM
[No subject] - by KULAKADDAN - 12-30-2004, 01:37 AM
[No subject] - by Mathan - 12-30-2004, 01:52 AM
[No subject] - by Mathan - 12-30-2004, 04:00 AM
[No subject] - by Mathan - 12-30-2004, 04:18 AM
[No subject] - by Shan - 12-30-2004, 12:48 PM
[No subject] - by Mathan - 12-30-2004, 04:30 PM
[No subject] - by Mathan - 12-30-2004, 04:34 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)