12-27-2004, 08:28 PM
உதவியை வேண்டும் இலங்கை
புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் இயற்கையின் சீற்றத்தால் அழிக்கப்பட்ட தமிழர் பிரதேசங்களை மீட்டெடுப்பதற்கு உதவி செய்துகொண்டிருக்கிறார்கள்.தாங்கள் வதியும் நாடுகளிலுள்ள தமிழர் புனர்வாழ்வுக்கழக கிளைகள் மூலமாகவோ அல்லது அமைப்புகள் மூலமாகவோ உதவிகளை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
புனர்வாழ்வுக்கழகம் விடுத்துள்ள அறிக்கையின்படி மீட்புப்பணிகளுக்கும் காயமடைந்தவர்களுக்கான மருத்துவப்பணிகளுக்கும்,உடமை இழந்தவர்களுக்கு ஆகக்குறைந்த தேவைகளான உணவு,உடுபுடவைகள் ஆகியவற்றை வழங்குவதற்கும் பாரியளவு நிதி தேவைப்படுகின்றது.
யாழ்,மட்டக்களப்பு மற்றும் தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் மீட்புப்பணிகளிலும் புனரமைப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.நிதியுதவி தவிர வேறுவகையான உதவிகள் எதுவுமே கையாலாகாத நிலையில் அவர்களது பணியைப் பாராட்டுவது தவிர வேறுவழி தெரியவில்லை.
நண்பர்கள் கூறியபடி உலர் உணவு வகைகள் பொதிசெய்யப்பட்டு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியிருக்கும் பாடசாலைகள்,கோவில்கள்,தேவாலயங்கள் தோறும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.கூடவே மீளவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் குடியமர்பவர்களுக்கு தற்காலிக கூடாரங்களை வழங்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதற்கெல்லாம் நிறைய நிதியுதவி தேவைப்படுகின்றது.
அரசாங்கத்திற்கூடாக அனுப்பப்படும் நிதியுதவி தமிழர் பிரதேசத்திற்கு முழுதாகப் போய்ச்சேரும் என்ற நம்பிக்கை பலருக்கும் இல்லை.சில வாரங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் நடைபெற்ற அனர்த்தத்திற்கு அரசாங்கம் காட்டிய பாராமுகம் இதனைத் தெளிவுபடுத்துகின்றது.ஆகவே தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஊடாகவும் பிற அரசசார்பற்ற அமைப்புகள் ஊடாகவும் உதவிகளை வழங்குவதே நல்லது.
வெளிநாடுகளில் வதிபவர்கள் இவ்வாறான நிறுவனங்களைத் தொடர்புகொண்டு உங்கள் நிதியுதவிகளைச் செய்யுங்கள்.தொடர்புகொள்ள இயலாத பட்சத்தில் இலங்கையில் வதியும் உங்கள் உறவினர்கள் ஊடாக நிதியை அனுப்பி உதனவி சரியா இடத்திற்குப் போய்ச்சேர்வதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்
நன்றி - ஈழநாதன்
புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் இயற்கையின் சீற்றத்தால் அழிக்கப்பட்ட தமிழர் பிரதேசங்களை மீட்டெடுப்பதற்கு உதவி செய்துகொண்டிருக்கிறார்கள்.தாங்கள் வதியும் நாடுகளிலுள்ள தமிழர் புனர்வாழ்வுக்கழக கிளைகள் மூலமாகவோ அல்லது அமைப்புகள் மூலமாகவோ உதவிகளை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
புனர்வாழ்வுக்கழகம் விடுத்துள்ள அறிக்கையின்படி மீட்புப்பணிகளுக்கும் காயமடைந்தவர்களுக்கான மருத்துவப்பணிகளுக்கும்,உடமை இழந்தவர்களுக்கு ஆகக்குறைந்த தேவைகளான உணவு,உடுபுடவைகள் ஆகியவற்றை வழங்குவதற்கும் பாரியளவு நிதி தேவைப்படுகின்றது.
யாழ்,மட்டக்களப்பு மற்றும் தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் மீட்புப்பணிகளிலும் புனரமைப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.நிதியுதவி தவிர வேறுவகையான உதவிகள் எதுவுமே கையாலாகாத நிலையில் அவர்களது பணியைப் பாராட்டுவது தவிர வேறுவழி தெரியவில்லை.
நண்பர்கள் கூறியபடி உலர் உணவு வகைகள் பொதிசெய்யப்பட்டு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியிருக்கும் பாடசாலைகள்,கோவில்கள்,தேவாலயங்கள் தோறும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.கூடவே மீளவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் குடியமர்பவர்களுக்கு தற்காலிக கூடாரங்களை வழங்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதற்கெல்லாம் நிறைய நிதியுதவி தேவைப்படுகின்றது.
அரசாங்கத்திற்கூடாக அனுப்பப்படும் நிதியுதவி தமிழர் பிரதேசத்திற்கு முழுதாகப் போய்ச்சேரும் என்ற நம்பிக்கை பலருக்கும் இல்லை.சில வாரங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் நடைபெற்ற அனர்த்தத்திற்கு அரசாங்கம் காட்டிய பாராமுகம் இதனைத் தெளிவுபடுத்துகின்றது.ஆகவே தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஊடாகவும் பிற அரசசார்பற்ற அமைப்புகள் ஊடாகவும் உதவிகளை வழங்குவதே நல்லது.
வெளிநாடுகளில் வதிபவர்கள் இவ்வாறான நிறுவனங்களைத் தொடர்புகொண்டு உங்கள் நிதியுதவிகளைச் செய்யுங்கள்.தொடர்புகொள்ள இயலாத பட்சத்தில் இலங்கையில் வதியும் உங்கள் உறவினர்கள் ஊடாக நிதியை அனுப்பி உதனவி சரியா இடத்திற்குப் போய்ச்சேர்வதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்
நன்றி - ஈழநாதன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

