Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"ஆதங்கங்களைத் தெரிவிப்போம்"
#1
தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்ட இயற்கையின் சீற்றத்தால் எமது தாயகப்பூமியே பாரியளவு உயிர், உடைமை, பொருட்சேதங்களை அடைந்துள்ளது. ஏறக்குறைய ஆறாயிரத்திற்கு அதிகமான எம்மிரத்தங்கள் கடலுக்குப் பலியாகியுள்ளனர், பல கரையோரக் கிராமங்கள் முற்றாக அழிந்துள்ளன, இன்னும் இறந்த உடலங்கள் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, இறந்தோர் தொகை பத்தாயிரத்தைத் தாண்டலாமென செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் இலங்கை சிங்கள ஏகாதிபத்திய அரசால் திட்டமிட்ட முறையில் ஈழப் பகுதிகளான வடக்குக் கிழக்கின் அழிவுகள் உலகிற்கு மறைக்கப்படுகிறது. இலங்கையில் அழிவுகளைக் காட்டிக் கொண்டிருக்கும் பி.பி.சி, சி.என்.என்,.... போன்ற உலக ஊடகங்கள் கூட வடக்குக் கிழக்கின் அழிவுகளை கட்டாமல் சிங்களப் பகுதிகளில் இடம்பெற்ற செய்திகளையே காட்டிய வண்ணம் உள்ளன. அவர்களின் செய்தியாளர்கள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கிறார்களோ? அண்றி வடக்குக் கிழக்கின் அழிவுச் செய்திகள் அவர்களுக்கும் மறைக்கப்படுகிறதோ? தெரியவில்லை. இங்கு புலம் பெயர்ந்த மக்களாகிய நாம், எமது நாடுகளிலுள்ள இப்படியான ஊடக நிறுவனங்களோடு பாரிய அளவில் தொடர்பு கொண்டு எமது ஆதங்கங்களையும், உண்மை நிலைமைகளையும் தெரித்தால் சிலவேளை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு?

இது சம்பந்தமாக பி.பி.சி நிறுவனத்தின் சர்வதேச செய்திப் பிரிவின் தொலைபேசி இலக்கம் கீழ் தரப்பட்டுள்ளது. இந்த இலக்கத்தில் தொடர்பு கொண்டு எமது தேசத்தின் உண்மை நிலைமையை அவர்களீற்கு எடுத்துரைப்போம்.

பி.பி.சி உலகச் சேவை தொலைபேசி இலக்கம்:
08700100222
"
"
Reply


Messages In This Thread
"ஆதங்கங்களைத் தெரிவிப்போம்" - by Nellaiyan - 12-27-2004, 09:48 AM
[No subject] - by tamilini - 12-27-2004, 06:26 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)