12-27-2004, 06:10 AM
அவசரப்பணிக்கு ஒன்றிணைவோம்
இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்பட்ட இலங்கைத்தீவு பேரனர்த்தத்தில் அழிந்து போயுள்ளது.
கடலோரக் கிராமங்களில் நிகழ்ந்த இந்தப் பேரனர்த்தத்தின் விளைவாக ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் உறவுகளை இழந்து பரிதவிப்புடன் காணப்படுகின்றனர்.
பல வைத்தியசாலைகளில் இறந்தோரின் நூற்றுக் கணக்கான சடலங்கள் குவிந்து கிடக்கின்றன.
பல கடலோரக் கிராமங்கள் முற்றாக நீரில் மூழ்கிவிட்டது. பல்லாயிரக் கணக்கான மக்கள் உடுத்த உடையுடன் அகதிகளாக இடம் பெயர்ந்து உயர்வான பிரதேசங்களில் தஞ்சம டைந்துள்ளனர்.
பாடசாலைகள் மத வழிபாட்டுத் தலங்கள் பொதுக் கட்டிடங்களில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்தப் பேரழிவில் பெரும் பாதிப்புக்குள்ளான பிரதேசம் தமிழர் தாயகம் என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியது அவசியம்.
போர் அனர்த்தத்தினால் உயிர் உடமைகளை இழந்து அதன் மீட்சிக்கான தவிப்புடன் இருக்கும் மக்களை இந்தப் பேரழிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை மக்கள் கண்டிராத இந்த உலக அழிவிற்கு ள்ளாகியிருக்கும் மக்களுக்கு மனிதாபிமானப் பணிகள் அவசர அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
நிலத்தில்ää நீரில் புதையுண்டு கிடக்கும் சடலங்களை மீட்பதற்கும் வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோருக்கு வைத்திய வசதிகளை வழங்குவதற்கும் மற்;றும் உதவிகளை வழங்குவதற்கும் உடனடியாக சர்வதேச சமூகம் உதவ வேண்டும்.
நேற்றைய அனர்த்தத்தில் தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த அழிவுகளில் இன மத பேதங்களை கடந்து தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் உயிரிழந்தனர்.
இவர்களை மீட்கும் பணியிலும்ää அவசர உதவிகளை வழங்கும் பணிகளிலும் சகல தரப்பினரும் ஈடுபட்டனர்.
ஆயினும் தமிழர் பிரதேசத்தின் இயற்கை அழிவுகளை ஊடகங்கள் முழுமையாக வெளிக்காட்டவில்லை. தென்பகுதியில் நடந்தவற்றுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இன்றைய இந்த அவல நிலையில் எவ்வித பக்கச்சார்பும் இன்றி அவசர வசதிகள் வழங்கப்பட வேண்டும். அது நிற்க தற்போது ஏற்பட்டுள்ள கோர நிகழ்வு மீண்டும் ஏற்படுமா என்ற பீதி மக்கள் மனங்களிலே நிரம்பியிருக்கின்றது.
இயற்கை அனர்த்தத்தினை முன் கூட்டியே அறிய முடியாத நிலையில் இனிமேல் இப்படி ஒரு கடல் கொந்தளிப்புக்குள் சிக்குண்டு மனித உயிர்கள் அழிந்து விடக் கூடாது என்பதில் எச்சரிக்கையுடனும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.
அதேவேளை இவ்வாறான ஒரு கடல் கொந்தளிப்பு மீண்டும் ஏற்படக் கூடிய சாத்தியமிருப்பதாக வரும் செய்திகளை அடுத்து கடலோரக் கிராம மக்கள் வேறு இடங்களுக்கு சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம். அதே சமயம் இன்னல்களுக்குள்ளாகி உயிர் உடமைகளை இழந்து தவிக்கும் மக்களுடன் நாமும் துக்கத்தை பகிர்ந்து கொள்கின்றோம்.
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்
இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்பட்ட இலங்கைத்தீவு பேரனர்த்தத்தில் அழிந்து போயுள்ளது.
கடலோரக் கிராமங்களில் நிகழ்ந்த இந்தப் பேரனர்த்தத்தின் விளைவாக ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் உறவுகளை இழந்து பரிதவிப்புடன் காணப்படுகின்றனர்.
பல வைத்தியசாலைகளில் இறந்தோரின் நூற்றுக் கணக்கான சடலங்கள் குவிந்து கிடக்கின்றன.
பல கடலோரக் கிராமங்கள் முற்றாக நீரில் மூழ்கிவிட்டது. பல்லாயிரக் கணக்கான மக்கள் உடுத்த உடையுடன் அகதிகளாக இடம் பெயர்ந்து உயர்வான பிரதேசங்களில் தஞ்சம டைந்துள்ளனர்.
பாடசாலைகள் மத வழிபாட்டுத் தலங்கள் பொதுக் கட்டிடங்களில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்தப் பேரழிவில் பெரும் பாதிப்புக்குள்ளான பிரதேசம் தமிழர் தாயகம் என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியது அவசியம்.
போர் அனர்த்தத்தினால் உயிர் உடமைகளை இழந்து அதன் மீட்சிக்கான தவிப்புடன் இருக்கும் மக்களை இந்தப் பேரழிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை மக்கள் கண்டிராத இந்த உலக அழிவிற்கு ள்ளாகியிருக்கும் மக்களுக்கு மனிதாபிமானப் பணிகள் அவசர அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
நிலத்தில்ää நீரில் புதையுண்டு கிடக்கும் சடலங்களை மீட்பதற்கும் வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோருக்கு வைத்திய வசதிகளை வழங்குவதற்கும் மற்;றும் உதவிகளை வழங்குவதற்கும் உடனடியாக சர்வதேச சமூகம் உதவ வேண்டும்.
நேற்றைய அனர்த்தத்தில் தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த அழிவுகளில் இன மத பேதங்களை கடந்து தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் உயிரிழந்தனர்.
இவர்களை மீட்கும் பணியிலும்ää அவசர உதவிகளை வழங்கும் பணிகளிலும் சகல தரப்பினரும் ஈடுபட்டனர்.
ஆயினும் தமிழர் பிரதேசத்தின் இயற்கை அழிவுகளை ஊடகங்கள் முழுமையாக வெளிக்காட்டவில்லை. தென்பகுதியில் நடந்தவற்றுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இன்றைய இந்த அவல நிலையில் எவ்வித பக்கச்சார்பும் இன்றி அவசர வசதிகள் வழங்கப்பட வேண்டும். அது நிற்க தற்போது ஏற்பட்டுள்ள கோர நிகழ்வு மீண்டும் ஏற்படுமா என்ற பீதி மக்கள் மனங்களிலே நிரம்பியிருக்கின்றது.
இயற்கை அனர்த்தத்தினை முன் கூட்டியே அறிய முடியாத நிலையில் இனிமேல் இப்படி ஒரு கடல் கொந்தளிப்புக்குள் சிக்குண்டு மனித உயிர்கள் அழிந்து விடக் கூடாது என்பதில் எச்சரிக்கையுடனும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.
அதேவேளை இவ்வாறான ஒரு கடல் கொந்தளிப்பு மீண்டும் ஏற்படக் கூடிய சாத்தியமிருப்பதாக வரும் செய்திகளை அடுத்து கடலோரக் கிராம மக்கள் வேறு இடங்களுக்கு சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம். அதே சமயம் இன்னல்களுக்குள்ளாகி உயிர் உடமைகளை இழந்து தவிக்கும் மக்களுடன் நாமும் துக்கத்தை பகிர்ந்து கொள்கின்றோம்.
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

