12-27-2004, 05:57 AM
கடல் கொந்தளிப்பால் கடற்படைக்குப் பாரிய சேதம்
நேற்றைய கடல் கொந்தளிப்புக் காரணமாக சிறிலங்கா கடற்படையிரின் பராக்கிரமபாகு போர்க்கப்பல் காலி துறைமுக கடற்பகுதியில் மூழ்கியுள்ளதாகவும் திருமலையில் கண்காணிப்பில் ஈடுபட்ட மூன்று கடற்படைக் கப்பல்களும் வேறு கலங்களும் நீரில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக திருகோணமலை சீனன்குடாவில் அமைந்துள்ள சிறிலங்காவின் வட-கிழக்குப் பிராந்தியக் கடற்படைத் தளத்துக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும் இது குறித்த விபரங்களை படைத்தரப்பு வெளியிடுவதை முற்றாகத் தவிர்த்துள்ளது.
அதேபோல் வடக்கில் காங்கேசன்துறைää காரைநகர்த் தளங்கள் பாரிய சேதம் அடைந்திருப்பதாகவும் பல கலங்கள் கடல் நீரினால் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.
இருந்த போதிலும் இந்தியாவிடம் தமது கடற்படையின் தேவைகளிற்காக உடனடியாக போர்க் கப்பல் ஒன்றை வழங்குமாறு சிறிலங்கா அரசு கோரியிருப்பதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவம் வெளியிட்ட தகவலின் படி அவர்களின் 51-1ம் 51-4ம் 51-5ம் பிரிகேட்டுகளிற்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. கிழக்கில் கல்குடாää கஜவத்தைää கல்லடி மாங்கேணி இராணுவ முகாம்களும் அறுகம்பைää பானமை உட்பட்ட அம்பாறை மாவட்டத்தின் நான்கு விசேட அதிரடிப்படை முகாம்களும் தரைமட்டமாகியுள்ளன.
அத்தோடு கரையோரப் பகுதிகளில் அமைந்திருந்த காவலரண்கள்ää கண்காணிப்பு முகாம்கள் என்பன கடல்நீரால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சுமார் 400க்கும் மேற்பட்ட படையினர் பலியானதாக தகவல்கள் கசிந்துள்ள போதும் இது பற்றிய உண்மை விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதேவேளை இப் பேரழிவில் கடற் புலிகளின் பலம் சிதைக்கப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கை சிங்கள இனவாதிகளை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளதாகவும் அதனை அவர்கள் சிங்கள ஊடகங்களிற்குப் பகிர்ந்து வருவதாகவும் கொழும்பு வானொலியொன்று தெரிவித்துள்ளது.
ஆனால் சிறிலங்காக் கடற்படையைப் போன்று கடற் புலிகள் எந் நேரமும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவதில்லை என்பதோடுää நடவடிக்கைகள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் தமது கலங்களை தரைப்பகுதியில் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துவதோடுää தேவையின் பொருட்டே தமது கலங்களை கடற் பகுதிக்கு கொண்டு செல்வதை வழமையான செயற்பாடாகக் கொண்டவர்கள் என்பதால் அவர்களிற்கு பெருமளவு சேதங்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டிருக்கும் என்றே தான் நம்புவதாக இராணுவ ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
http://www.eelampage.com/index.shtml?id=20...70716338613&in=
நேற்றைய கடல் கொந்தளிப்புக் காரணமாக சிறிலங்கா கடற்படையிரின் பராக்கிரமபாகு போர்க்கப்பல் காலி துறைமுக கடற்பகுதியில் மூழ்கியுள்ளதாகவும் திருமலையில் கண்காணிப்பில் ஈடுபட்ட மூன்று கடற்படைக் கப்பல்களும் வேறு கலங்களும் நீரில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக திருகோணமலை சீனன்குடாவில் அமைந்துள்ள சிறிலங்காவின் வட-கிழக்குப் பிராந்தியக் கடற்படைத் தளத்துக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும் இது குறித்த விபரங்களை படைத்தரப்பு வெளியிடுவதை முற்றாகத் தவிர்த்துள்ளது.
அதேபோல் வடக்கில் காங்கேசன்துறைää காரைநகர்த் தளங்கள் பாரிய சேதம் அடைந்திருப்பதாகவும் பல கலங்கள் கடல் நீரினால் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.
இருந்த போதிலும் இந்தியாவிடம் தமது கடற்படையின் தேவைகளிற்காக உடனடியாக போர்க் கப்பல் ஒன்றை வழங்குமாறு சிறிலங்கா அரசு கோரியிருப்பதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவம் வெளியிட்ட தகவலின் படி அவர்களின் 51-1ம் 51-4ம் 51-5ம் பிரிகேட்டுகளிற்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. கிழக்கில் கல்குடாää கஜவத்தைää கல்லடி மாங்கேணி இராணுவ முகாம்களும் அறுகம்பைää பானமை உட்பட்ட அம்பாறை மாவட்டத்தின் நான்கு விசேட அதிரடிப்படை முகாம்களும் தரைமட்டமாகியுள்ளன.
அத்தோடு கரையோரப் பகுதிகளில் அமைந்திருந்த காவலரண்கள்ää கண்காணிப்பு முகாம்கள் என்பன கடல்நீரால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சுமார் 400க்கும் மேற்பட்ட படையினர் பலியானதாக தகவல்கள் கசிந்துள்ள போதும் இது பற்றிய உண்மை விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதேவேளை இப் பேரழிவில் கடற் புலிகளின் பலம் சிதைக்கப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கை சிங்கள இனவாதிகளை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளதாகவும் அதனை அவர்கள் சிங்கள ஊடகங்களிற்குப் பகிர்ந்து வருவதாகவும் கொழும்பு வானொலியொன்று தெரிவித்துள்ளது.
ஆனால் சிறிலங்காக் கடற்படையைப் போன்று கடற் புலிகள் எந் நேரமும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவதில்லை என்பதோடுää நடவடிக்கைகள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் தமது கலங்களை தரைப்பகுதியில் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துவதோடுää தேவையின் பொருட்டே தமது கலங்களை கடற் பகுதிக்கு கொண்டு செல்வதை வழமையான செயற்பாடாகக் கொண்டவர்கள் என்பதால் அவர்களிற்கு பெருமளவு சேதங்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டிருக்கும் என்றே தான் நம்புவதாக இராணுவ ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
http://www.eelampage.com/index.shtml?id=20...70716338613&in=
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

