12-27-2004, 05:02 AM
கடல் கொந்தளிப்பின் பாதிப்புகள்
இந்த இந்தோனேஷிய நிலநடுக்கம் கடந்த 40 ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிகப்பெரியது என்று US Geological Servey அறிவித்துள்ளது.
காலையில் முதலில் வந்த செய்தி சென்னையில் லேசான நிலநடுக்கம் என்ற அளவில் மட்டுமே இருந்தது. காலை 8 மணி சன் செய்திகளில் கூட சேதம் பற்றிய தகவல் இல்லை. அதற்கு பிறகு தான் கடல் கொந்தளித்து ஊருக்குள் புகுந்துள்ளது. நேரம் சுமார் 8.30லிருந்து 8.45க்குள் இருக்கலாம் என்கிறார்கள்.
மெரினா பீச்சோரம் சுமார் 20 கார்கள் வெள்ளத்தில் சிக்கி, தாறுமாறான நிலையில் இருப்பதாக சன் செய்திகளில் கூறினார்கள். அதில் வந்து ஜாக்கிங் சென்றவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. மேலும் வழக்கத்தை விட ஞாயிறன்று கடற்கரையில் அதிக அளவில் சிறுவர்கள் கிரிக்கெட் ஆடுவார்களாம். அவர்களும் பலியாகி இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.
காலையில் சாப்பிட்டுக் கொண்டிருந்ததாகவும் அப்போது வெளியே 'ஹோ'வென ஒரு பேரிரைச்சல் கேட்டதகாவும், அதனைத் தொடர்ந்து 'ஓடுங்க' என்று கூக்குரல் கேட்டதகாவும் கையில் சிக்கிய ஒரு பிள்ளையை மட்டும் அள்ளிக் கொண்டு தான் ஓடியதாகவும், வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த இன்னொரு மகன் என்ன ஆனான் என்று தெரியவில்லை என்றும் கூறியபடி ஒரு பெண் கதறியது கல் நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது.
தமிழகம் முழுவதும் கடல் கொந்தளிப்பில் சுமார் 2500 பேர் பலி என்று செய்திகள் தெரிவிக்கின்றன. நாகப்பட்டினத்தில் மட்டும் 1500 பேர். அங்கே இரண்டு கடலோர கிராமங்கள் முற்றிலும் மூழ்கி விட்டன.
கன்னியாகுமரியில் விவேகானதர் பாறைக்கு சுற்றுலாச் சென்ற 500 பேர் கடல் நடுவே மாட்டியுள்ளதாகவும், மீட்கப்பட்டு வருவதாகவும் இன்னொரு செய்தி. புதுப்பட்டினம் என்னும் ஊரில் தேவாலயம் இடிந்து அதனுள் இருந்த 42 பேர் பலியாகி விட்டனர்.
கடலில் மீன் பிடிக்கச் சென்ற 5000 மீனவர்களின் நிலை பற்றிய தகவல் இல்லை. கிட்டத்தட்ட 10 மீ உயரத்துக்கு அலைகள் எழும்பியதாக சொல்கிறார்கள். இதனால் மீனவர்களில் பெரும்பாலானோர் இறந்திருக்கவே வாய்ப்பு அதிகம்.
செய்திகள் பெரும்பாலும் வதந்திகள் இன்றி கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருப்பதாக தெரிகிறது. சன் செய்திகளில் கூட இறந்தவர்களின் எண்ணிக்கையை குறிப்பிடும் போது "அதிகாரப்பூர்வமான செய்திகளின்படி" என்றே குறிப்பிட்டார்கள். என்றாலும் உண்மையான எண்ணிக்கைத் தெரிய இரண்டு நாள்களாவது ஆகலாம்.
நிலநடுக்கத்தின் வால் பகுதியிலேயே இத்தனை பாதிப்பு எனும் போது அது மையம் கொண்டிருந்த நாடுகளில் நேர்ந்திருக்க கூடிய பேரழிவு கவலையைத் தருகிறது. அந்தமான் நிகோபர் தீவுகளின் நிலவரம் தெரியவில்லை.
இந்த நிமிடம் வரை help line ஏற்படுத்தப்படவில்லை என்று சன் டி.வி குற்றம் சாட்டி வருகிறது. உதவிக்கு போலீஸ் கண்ட்ரோல் ரூமின் 100 ஐயே தொடர்பு கொள்ள சொல்கிறார்கள். ஜெயா டி.வியிலும் help line தொடர்பான அறிவிப்பு எதுவும் இல்லை.
மீட்பு நடவடிக்கைகளை ஜெயலலிதா பார்வையிட்டு வருகிறார். பிரதமர் தன்னிடம் தொலைபேசியில் நிலவரங்களைக் கேட்டறிந்ததாகவும், அப்போது 'என்ன உதவி வேண்டும்?' என்று கேட்டவரிடம் இனிமேல் இதுபோன்ற பேரழிவுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ள(seismological survey) ஏற்பாடு செய்யும்படி தான் கேட்டுக் கொண்டதாகவும் ஜெ. கூறினார்.
எனக்கும் இதே வருத்தம் தான். தென்கிழக்கு ஆசியாவின் கடற்கரை பகுதிகளை கிட்டத்தட்ட துடைத்தெறிந்து விட்ட இந்த பேரழிவை நம்மால் முன்கூட்டியே கணித்திருக்க/கணிக்க முடியாதா? இயற்கை சீற்றங்களைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள நாம் அனுப்பிய செயற்கைகோள்களும், நம் வானிலை நிலையங்களும் வெறும் மழையளவை அளக்கத்தானா?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
நன்றி - ராஜா
இந்த இந்தோனேஷிய நிலநடுக்கம் கடந்த 40 ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிகப்பெரியது என்று US Geological Servey அறிவித்துள்ளது.
காலையில் முதலில் வந்த செய்தி சென்னையில் லேசான நிலநடுக்கம் என்ற அளவில் மட்டுமே இருந்தது. காலை 8 மணி சன் செய்திகளில் கூட சேதம் பற்றிய தகவல் இல்லை. அதற்கு பிறகு தான் கடல் கொந்தளித்து ஊருக்குள் புகுந்துள்ளது. நேரம் சுமார் 8.30லிருந்து 8.45க்குள் இருக்கலாம் என்கிறார்கள்.
மெரினா பீச்சோரம் சுமார் 20 கார்கள் வெள்ளத்தில் சிக்கி, தாறுமாறான நிலையில் இருப்பதாக சன் செய்திகளில் கூறினார்கள். அதில் வந்து ஜாக்கிங் சென்றவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. மேலும் வழக்கத்தை விட ஞாயிறன்று கடற்கரையில் அதிக அளவில் சிறுவர்கள் கிரிக்கெட் ஆடுவார்களாம். அவர்களும் பலியாகி இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.
காலையில் சாப்பிட்டுக் கொண்டிருந்ததாகவும் அப்போது வெளியே 'ஹோ'வென ஒரு பேரிரைச்சல் கேட்டதகாவும், அதனைத் தொடர்ந்து 'ஓடுங்க' என்று கூக்குரல் கேட்டதகாவும் கையில் சிக்கிய ஒரு பிள்ளையை மட்டும் அள்ளிக் கொண்டு தான் ஓடியதாகவும், வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த இன்னொரு மகன் என்ன ஆனான் என்று தெரியவில்லை என்றும் கூறியபடி ஒரு பெண் கதறியது கல் நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது.
தமிழகம் முழுவதும் கடல் கொந்தளிப்பில் சுமார் 2500 பேர் பலி என்று செய்திகள் தெரிவிக்கின்றன. நாகப்பட்டினத்தில் மட்டும் 1500 பேர். அங்கே இரண்டு கடலோர கிராமங்கள் முற்றிலும் மூழ்கி விட்டன.
கன்னியாகுமரியில் விவேகானதர் பாறைக்கு சுற்றுலாச் சென்ற 500 பேர் கடல் நடுவே மாட்டியுள்ளதாகவும், மீட்கப்பட்டு வருவதாகவும் இன்னொரு செய்தி. புதுப்பட்டினம் என்னும் ஊரில் தேவாலயம் இடிந்து அதனுள் இருந்த 42 பேர் பலியாகி விட்டனர்.
கடலில் மீன் பிடிக்கச் சென்ற 5000 மீனவர்களின் நிலை பற்றிய தகவல் இல்லை. கிட்டத்தட்ட 10 மீ உயரத்துக்கு அலைகள் எழும்பியதாக சொல்கிறார்கள். இதனால் மீனவர்களில் பெரும்பாலானோர் இறந்திருக்கவே வாய்ப்பு அதிகம்.
செய்திகள் பெரும்பாலும் வதந்திகள் இன்றி கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருப்பதாக தெரிகிறது. சன் செய்திகளில் கூட இறந்தவர்களின் எண்ணிக்கையை குறிப்பிடும் போது "அதிகாரப்பூர்வமான செய்திகளின்படி" என்றே குறிப்பிட்டார்கள். என்றாலும் உண்மையான எண்ணிக்கைத் தெரிய இரண்டு நாள்களாவது ஆகலாம்.
நிலநடுக்கத்தின் வால் பகுதியிலேயே இத்தனை பாதிப்பு எனும் போது அது மையம் கொண்டிருந்த நாடுகளில் நேர்ந்திருக்க கூடிய பேரழிவு கவலையைத் தருகிறது. அந்தமான் நிகோபர் தீவுகளின் நிலவரம் தெரியவில்லை.
இந்த நிமிடம் வரை help line ஏற்படுத்தப்படவில்லை என்று சன் டி.வி குற்றம் சாட்டி வருகிறது. உதவிக்கு போலீஸ் கண்ட்ரோல் ரூமின் 100 ஐயே தொடர்பு கொள்ள சொல்கிறார்கள். ஜெயா டி.வியிலும் help line தொடர்பான அறிவிப்பு எதுவும் இல்லை.
மீட்பு நடவடிக்கைகளை ஜெயலலிதா பார்வையிட்டு வருகிறார். பிரதமர் தன்னிடம் தொலைபேசியில் நிலவரங்களைக் கேட்டறிந்ததாகவும், அப்போது 'என்ன உதவி வேண்டும்?' என்று கேட்டவரிடம் இனிமேல் இதுபோன்ற பேரழிவுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ள(seismological survey) ஏற்பாடு செய்யும்படி தான் கேட்டுக் கொண்டதாகவும் ஜெ. கூறினார்.
எனக்கும் இதே வருத்தம் தான். தென்கிழக்கு ஆசியாவின் கடற்கரை பகுதிகளை கிட்டத்தட்ட துடைத்தெறிந்து விட்ட இந்த பேரழிவை நம்மால் முன்கூட்டியே கணித்திருக்க/கணிக்க முடியாதா? இயற்கை சீற்றங்களைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள நாம் அனுப்பிய செயற்கைகோள்களும், நம் வானிலை நிலையங்களும் வெறும் மழையளவை அளக்கத்தானா?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->நன்றி - ராஜா
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

