Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கண்ணெதிரே கடல் அனர்த்தத்தினால் 1200 சிறுவர்கள் பலி.
#1
கண்ணெதிரே கடல் அனர்த்தத்தினால் 1200 சிறுவர்கள் பலி.
ஞாயிற்றுக்கிழமை 26 டிசெம்பர் 2004 நடேசன்
இயற்கையின் அனர்த்த்தினால் தமிழீழத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் சுமார் 1200 சிறுவர்கள் கொடுமையான முறையில் மரணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 5000 சிறுவர்கள் வரை பாதிக்கப்பட்டு அல்லது படுகாயங்களுக்கு உட்பட்டிருக்கலாமென்று தெரியவருகிறது. இன்று விடுமுறை தினமாகையால் சிறுவர்கள் வீடுகளில் இருந்ததாலும் அதிகாலை நேரம் என்பதனாலேயே இவ்வளவு இழப்புகள் எற்பட்டதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். அதேநேரம் அனைத்துச் செய்திகளும் இலங்கை அரச தரப்பால் இருட்டடிப்புப் செய்யப்பட்டுள்ளதுடன் தென்னிலங்கையில் இழப்புகளைக் குறைத்து வெளியிட்டு வருவதாகவும் அறியமுடிகிறது.

சிறுவர்கள் தொடர்பாக கரிசனையுடன் நடந்துகொள்வதாக சிறுவர் உரிமைகளில் கவனமுள்ளவர்களாகவும் அறிக்கைகளை வெளியிட்டு வரும் யுனிசெவ் மற்றும் யுஎன்;ஏச்சிஆர் போன்ற அமைப்புகள் தமிழீழப் பிரதேசங்களில் எந்தவித உதவிகளையும் இதுவரை வழங்கவும் இல்லை வழங்க முன்வரவுமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி: நிதர்சனம்
Reply


Messages In This Thread
கண்ணெதிரே கடல் அனர்த்தத்தினால் 1200 சிறுவர்கள் பலி. - by Vaanampaadi - 12-26-2004, 07:48 PM
[No subject] - by Mathivathanan - 12-26-2004, 08:16 PM
[No subject] - by Mathivathanan - 12-26-2004, 08:24 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)