12-24-2004, 02:24 PM
நடிகை நக்மாவுடன் கோவில் கோவிலாக செல்லும் சாமியார் - பக்தர்கள் வியப்பு
பழநி, டிச.24- நடிகை நக்மாவுடன் கோவில் கோவிலாக சாமியார் ஒருவர் உடன் செல்கிறார். இதனால் பக்தர்கள் வியப்படைந்துள்ளனர்.
விக்தி விகாஸ் கேண்ட்ரா நிறுவனர் பூஜ்யஸ்ரீ ஸ்ரீரவி சங்கர்ஜி கும்பகோணத்தை சேர்ந்தவர். இவர் இள வயதிலேயே யோகா முறைகளை கற்று பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் வாழும் கலை என்ற பெயரிலும் இந்தியாவின் பல இடங் களில் அந்தந்த மொழிகளில் மன்றங்கள் உள்பட உலகில் 146 நாடுகளில் தனது கிளைகளை அமைத்து தனது ஆசிரமத்தில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு ஒவ் வொரு ஊர்களிலும் பொது மக்களுக்கு கட்டண அடிப் படையில் ஒரு வாரம் யோகா பயிற்சி அளித்து வருகிறார். இவர் தற்போது தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இவர் கொலை வழக் கில் கைது செய்யப்பட்ட காஞ்சி ஜெயேந்திரருக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் வருகிறார்.
நடிகை நக்மாவுடன் பயணம்
இவர் நடிகை நக்மாவுடன் சேர்ந்து கோவில் கோவிலாக சென்று வருகிறார். நேற்று முன்தினம் இவர்கள் ராமேசுவரம் கோவிலுக்கு சென்றனர். நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும், மதியம் பழநி கோவிலுக்கும் சென்று சாமி கும்பிட் டனர். இவர் அந்தந்த ஊர்களில் பக்தர்களுக்கு அருளாசி உரை இன்னிசை நிகழ்ச்சி நடத்தினார்.
பழநி
நேற்று (வியாழன்) பழநி மலைக் கோவிலுக்கு வந்த இவர்கள் ரோப்காரில் சென்ற னர். அங்கு உச்சி கால பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ரவி சங்கர்ஜிக்கும், நடிகை நம்மா விற்கும் கோவில் பிரசாதங் கள் வழங்கப்பட்டது. பின்னர் ரோப் கார் மூலம் கீழே அடி வாரத்தில் இறங்கி சித்த னாதன் திருமண மகால் வளாகத்தில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருமண மண்டபத்திற்கு சென்றனர். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப் பட்டது. அதன் பின்பு அங்கு நடந்த கூட்டத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி உரையாற்றினார்.
வியப்பு
யோகா அமைப்பும் ஆன் மீகமும் கொண்டதாக கூறப் படும் ஸ்ரீரவிசங்கர்ஜியுடன் இப்போது சினிமாவில் புறக்கணிக்கப்பட்ட நடிகை நக்மா உடன் செல்வது வியப்பாக உள்ளது என்று பொதுமக்கள் பேசிக் கொண்டனர்.
நன்றி............தினகரன்
பழநி, டிச.24- நடிகை நக்மாவுடன் கோவில் கோவிலாக சாமியார் ஒருவர் உடன் செல்கிறார். இதனால் பக்தர்கள் வியப்படைந்துள்ளனர்.
விக்தி விகாஸ் கேண்ட்ரா நிறுவனர் பூஜ்யஸ்ரீ ஸ்ரீரவி சங்கர்ஜி கும்பகோணத்தை சேர்ந்தவர். இவர் இள வயதிலேயே யோகா முறைகளை கற்று பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் வாழும் கலை என்ற பெயரிலும் இந்தியாவின் பல இடங் களில் அந்தந்த மொழிகளில் மன்றங்கள் உள்பட உலகில் 146 நாடுகளில் தனது கிளைகளை அமைத்து தனது ஆசிரமத்தில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு ஒவ் வொரு ஊர்களிலும் பொது மக்களுக்கு கட்டண அடிப் படையில் ஒரு வாரம் யோகா பயிற்சி அளித்து வருகிறார். இவர் தற்போது தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இவர் கொலை வழக் கில் கைது செய்யப்பட்ட காஞ்சி ஜெயேந்திரருக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் வருகிறார்.
நடிகை நக்மாவுடன் பயணம்
இவர் நடிகை நக்மாவுடன் சேர்ந்து கோவில் கோவிலாக சென்று வருகிறார். நேற்று முன்தினம் இவர்கள் ராமேசுவரம் கோவிலுக்கு சென்றனர். நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும், மதியம் பழநி கோவிலுக்கும் சென்று சாமி கும்பிட் டனர். இவர் அந்தந்த ஊர்களில் பக்தர்களுக்கு அருளாசி உரை இன்னிசை நிகழ்ச்சி நடத்தினார்.
பழநி
நேற்று (வியாழன்) பழநி மலைக் கோவிலுக்கு வந்த இவர்கள் ரோப்காரில் சென்ற னர். அங்கு உச்சி கால பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ரவி சங்கர்ஜிக்கும், நடிகை நம்மா விற்கும் கோவில் பிரசாதங் கள் வழங்கப்பட்டது. பின்னர் ரோப் கார் மூலம் கீழே அடி வாரத்தில் இறங்கி சித்த னாதன் திருமண மகால் வளாகத்தில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருமண மண்டபத்திற்கு சென்றனர். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப் பட்டது. அதன் பின்பு அங்கு நடந்த கூட்டத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி உரையாற்றினார்.
வியப்பு
யோகா அமைப்பும் ஆன் மீகமும் கொண்டதாக கூறப் படும் ஸ்ரீரவிசங்கர்ஜியுடன் இப்போது சினிமாவில் புறக்கணிக்கப்பட்ட நடிகை நக்மா உடன் செல்வது வியப்பாக உள்ளது என்று பொதுமக்கள் பேசிக் கொண்டனர்.
நன்றி............தினகரன்

