12-20-2004, 09:07 AM
hari Wrote:இப்படி கும்பல்கள் உருவாகுவதன் நோக்கம் தான் என்ன? இதற்கான காரணங்கள் என்ன? இக்கும்பல்களால் உலக நாடுகளில் தமிழர்களுக்கு நற்பெயர் உண்டாகுமா?
ஐயோ...இப்படி எல்லாம் தாயகத்தில இருந்ததாம்....நாங்க புலி காலத்தில வாழ்ந்த படியால இவற்றைக் காணக் கிடைக்கல்ல... அப்பவே நாங்கள் தோன்றாக் காலத்திலையே...யாழ் நகருக்குள்ளேயே கொட்டடி குறூப்... அரியாலைக் குறூப்... ஆரிய குளக் குறூப்...நாவாந்துறை குறூப்... பாசையூர் குறூப் அங்கால ஒஸ்மேனியா குறூப்... அத்தியடி குறூப்....ஆத்தி சூடிக்...தாவடி குறூப்...இப்படிப் பல சண்டியர்கள் குறூப் இருந்தனவாம்...சிறீலங்கா பொலீஸுக்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டு...அதுக்குப் பின்னாடி உதுகளின்ர கிளைகள் தானாம்...ஒவ்வொரு தமிழ் இயக்கங்களின் உருவாக்கம்...ஒரே நோக்கத்திற்கு எத்தினை தமிழ் இயக்கம்....கிட்டத்தட்ட ஒரு 50....???! ஏன் இப்ப பாருங்கோ.. மாற்றுக் கருத்துக்களோட யார் அலையுறதெண்டு...மக்களோ இல்ல...உந்தக் கும்பல்களின் வாசிசுகள் தான்....! :twisted:
உதுகளிற்கு புலி பாடம் படிபிக்கத் தொடங்கத்தானாம் (86 இல இருந்து) துண்டக் காணம் துணியக் காணம் என்று தெற்குக்கும் புலத்துக்கும் பறந்ததுகளும் அதுகளின்ர பெறுமதி மிக்க வாரிசுகளும் தானாம்...உந்த ரகசிய இலாபம் தாற பரம்பரைத் தொழில செய்யினம்...!இப்ப மேற்கிலும் இப்படியான சேட்டைக் கும்பல்களுக்கு குறைவில்ல... சனம் சிசிரிவி அதுஇதெண்டு வீடுகளிலும் பூட்டி எல்லே கண்காணிக்க வெளிக்கிட்டுதுகள்... அந்தளவுக்கு உது கூடிக்கிடக்கு...அதில நம்ம இந்த வாரிசுகள் நல்ல விளைச்சல் கண்டுட்டினம்...! உதால ஒட்டுமொத்த தமிழருக்கும் என்னவோ பாதிப்புத்தான்...சிறிய சமூகம் பெரிய குழப்படி...எண்டு....! :twisted:
இப்ப லண்டனுக்க சாரசரி தினமும் கொலை கொள்ளை உதுக்குக் குறைச்சலில்ல...அதுபோல நியுயோர்க்...அது போல கொழும்பு...அதுபோல மும்பை...சென்னை.... இது வந்து உண்மையில உலகம் பூரான ஒரு சமூக வியாதி....உது போட வேண்டியவ மண்டைக்க போட தானா அடங்கும்....அதற்கு எங்கள் யாழ் நகர் (90 -இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின் - 95 - சிறீலங்கா இராணுவ ஆக்கிரமிப்புக்கு முன்) சாட்சி...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

